Friday, July 27, 2018

கவிதைத் தேறல்: கவிஞர் தணிகை

கவிதைத் தேறல்: கவிஞர் தணிகை


Related image


1967ல் காமராசரிடமிருந்து கடிதம் பெற்ற (அப்போது எனக்கு வயது வெறும் 5 ஆக இருந்திருக்கும்) திருவில்லிப் புத்தூர் இரத்தினவேல் அய்யா அவர்கள் மௌன அழுகை என்ற நூலை அனுப்பி மேலும் மேலும் நன்றிக் கடன் பட வைத்துக்கொண்டிருக்கிறார்.

அதை மு. கோபி சரபோஜி படைத்திருக்கிறார். இது இவரின் 3 ஆம் கவிதைத் தொகுப்பு என்றும் இது வரை 21 நூல்கள் படைத்திருப்பதாகவும் இது ஒரு அகநாழிகை பதிப்பக வெளியீடாகவும் இதன் விலை ரூபாய் 70 என்ற தகவல்களும் புத்தகத்தில் உள்ளன.

ஏற்கெனவே இருக்கும் மௌன அழுகை போதாதா இது வேறா என்ற காலக்கட்டத்தில் இந்த நூல் எனது கைகளில்.

80 பக்கம்...மேட்டூரிலிருந்து சேலம் பேருந்தில் செல்லும்போது படித்து முடித்து விட்டேன்.

60 பக்கம் நிறைய வெற்றிடங்கள் விட்டு கவிதைகள் அச்சாகியுள்ளன.

அவற்றில் எனக்குப் பிடித்த கவிதைகளில் சில:

சாமார்த்திய சதி:

பாசாங்குச் சொற்கள்
பரிசுப் பொருட்கள்
பக்குவ விளக்கங்கள்
பரம்பரைச் சாயங்கள் என‌
எந்நாளும்
உனக்கொரு கத்தி
கிடைத்து விடுகிறது

என்
சிறகுகளின் வளர்ச்சியை
வெட்டி எறிய...



புத்தகத்தின் உச்சமாய் நான் நினைக்கும் கவிதை

வசைச் சொல்

எவரிடமும் பறித்து உண்ணாது
எதன் பொருட்டும்

வாய்ச்சவடால் செய்யாது
துருத்தித் தெரியாத‌

பாவங்களைச் சுமக்காது
தன் சுகமென்பது கூட‌

தன்னை லயிப்பதே
என்றிருப்பவனை நோக்கி

எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம்
பைத்தியம் என்ற வசைச்சொல்லை.

பொய்யாகும் புலம்பல்கள்
‍‍‍__________________________
எதுவும் சாதகமாக இல்லை
எவரும் உதவிக்கரம் நீட்டவில்லை
விதியோ
விடாது சதிராடுகிறது

தோல்வியோ
அதன்போக்கில் விரட்டுகிறது

இப்படியானப் புலம்பல்களின்
செவியேறும் தருணங்களை
தகர்த்தெறிந்து மாயையாக்குக்றது.

மண்ணும்
நீரும்
உரமும்
எவரும் இடாமலே
கொழுகொம்பின்றி
உயிர் பிடித்து
பாறையிடுக்கில்
எழுந்து நிற்கும் அந்த சின்னச் செடி..

எனக்கு எனது:
முடியவே முடியாது என்ற களங்களில்தான் என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது
பூக்களை உதிர்த்து விட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது மறுபடியும் பூக்கும் என்ற எனது வரிகளை  பாறைகளிடையே இருந்து எட்டிப் பார்க்கும் இந்தச் சின்னச் செடி  ஏற்படுத்துகிறது.

பாடம்
8888888
உன்னிப்பாய் உற்று நோக்கியபடி
அமர்ந்திருந்தாள் இலக்கியா

என்னவென்று கேட்டேன்
உஷ் என உதடு கூட்டி
நேர்க்கோட்டில் ஊர்ந்து செல்லும்
எறும்புகளைக் காட்டினாள்

சலனமின்றி கடந்து சென்றேன்
அவ்விடத்தை விட்டு....பெரிய எண்ணம் சிறிய உருவங்களில்...நல்ல நடப்பு

நினைவுகள் குழைந்த தருணம்
______________________________
பெற்றோர் , மனைவி, பிள்ளைகள், நண்பர்கள்
என எல்லோருக்கும் ஏதோ ஒரு நினைவுகளைத் தருபவனாகவே
துயில் கொண்டிருந்தது..

சடங்கேந்தி வந்த உறவினர்கள்
பொணத்தை எப்ப தூக்கறாங்க ? என‌
விசாரிக்கும் வரை...

நிறைய தருணங்களில் அடுத்தவருடைய துக்கம் நமக்கு அன்றாட அலுவல்கள்களின் ஒரு சிறு கீற்றாய்  பிறையாய் மறைந்து விடுகிறது.

எதார்த்தம்:

வாங்கிப் போட்டதோ
இருவர் தூங்க‌
இடவசதியுள்ள கட்டில்.

நித்தம் தூங்குவதென்னவோ
நீயோ நானோ மட்டும்தான் என்ற எதார்த்தம் என்னை இப்படி எண்ண வைத்திருக்கிறது...

நீயும் நானும் தனித் தனியே தரையில் பாயில் தான்...

பேருந்தில் தெரிந்தவர் வரும்போது அவர் டிக்கட் எடுப்பாரா, அவருக்கு நாம் டிக்கட் எடுக்க வேண்டி வருமே என்று பார்த்தும் பாராமல் ...இல்லை இல்லை இப்போதெல்லாம் அப்படி எல்லாம் எண்ணமே இல்லை.

ஆக உண்மையை உண்மையாக உணர்தலை உணர்ந்ததை பதிவு செய்துள்ளார்.

வாழ்த்துகள்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.




No comments:

Post a Comment