Saturday, June 30, 2018

வாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தணிகை

  உஷார்
Image result for beautiful trees in the world

 நீ ஒரு சிறுமியாக‌
என் வீட்டுள் புகுந்தாய்!

அன்று முதல் என்னுள்
நான் உன்னுள்

பசுமையாக நினைவிருக்கிறது
அந்த நாள் நேற்று நீ வந்தது போல‌
ஆனால் 20 ஆண்டுக்கும் மேலா ஓடிவிட்டது?

இன்று அவர்கள்
உன்னுடன் இருக்கிறார்கள்

நான் இல்லை ஏன் எனில்
உள்ளிருப்பது
வெளியே தெரியாதென்பதால்
Image result for beautiful trees in the world
 நீ இன்று புது வாயில் முன் நிற்கிறாய்

அது நாங்கள் ஏற்கெனவே கண்டதுதான்
ஆனாலும் உனக்கிது புதிதே எனவே...
உடன் நாங்களும் இருந்து வழி அனுப்ப வேண்டிய
கடமை உள்ளதுதான்...

ஆனால் அதற்கு எனக்கு வழி இல்லை

"மனமிருந்தால் மார்க்கமுண்டு" என்பார்
இங்கு மனமிருக்கிறது
மார்க்கம் தான் இல்லை"
Image result for beautiful trees in the world
இன்று மணப்பெண்ணாய்
நாளை முதல் அவர்கள் குடும்ப விளக்காய்!

என்றாலும்
நீ
எங்கள்
"சுடராக"
குடும்ப விளக்காக குலம் விளங்க‌
வாழ்வின் தொடரில் வண்ண மிகு
காலப் பெட்டகம்
ஏந்த‌

பவன்குமார்
கரம் பற்றி
புவனமெங்கும் வாழ்த்த வாழும்

உன்னை என்றும் வாழ்த்தும்

எங்கள் வாழ்த்துகள்
Related image
அன்புடன்
கவிஞர் தணிகை
த.சண்முகவடிவு
த.க.ரா.சு. மணியம்.

02 07 18 ஜே.எஸ்.ஆர் கல்யாண மண்டபம்
ஜம்பகாதமா  சுவாமி கோயில் பேன்னர் கட்டா பெங்களூர்.













No comments:

Post a Comment