Tuesday, February 27, 2018

எனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிகை

எனது தொண்டு பள்ளியிலும் கல்லூரியிலும்: கவிஞர் தணிகை




உங்களுடன் என்னை சரியாக இப்போதெல்லாம் பகிர்ந்து கொள்வதேயில்லை.காரணம். வேலைப் பளு.காலம் அப்படிப்பட்டதாக ஓடிக் கொண்டிருக்கிறது. உலகெலாம் ஒரு மதுப்பிரியாவுக்காக ஊடக ஒப்பாரி ஒலிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது இது எனது பூபாளம்.

கடந்த வாரத்தில் ஒரு நாள் விருதாசம்பட்டியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்று அங்கு நடைபெற்ற பாலமுருகன் கலை அறிவியல் கல்லூரியின் தேசிய சேவை மாணவர் திட்டப் பணிகளில் உரையாற்றினேன். கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும் பெரிதும் பாராட்டினார்கள் பெரிதும் பயனுள்ள பேச்சாக அது அமைந்திருந்தது என்று மேலும் நேரம் கொடுத்துப் பேசச் சொன்னார்கள்.

இன்று கல்லூரி நிறுவனர் ஹாலில் நடைபெற்ற பல் மருத்துவர்களுக்கான சிறப்பு யோகப் பயிற்சி என்ற நிகழ்வில்  சித்த மருத்துவம் மற்றும் யோகா மாஸ்டரான டாக்டர் வெற்றி வேந்தனை கல்லூரிக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி நிகழ்வை ஒருங்கிணைத்தேன்.

அந்த நிகழ்வில் கல்லூரியின் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட‌ மருத்துவர்கள் பெரிதும் பயன்பெற்றனர். துறைத்தலைவர்கள் சுரேஷ்குமார், ரீனா ரேச்சல் ஜான், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வை கல்லூரி முதல்வர் பேபிஜான் தலைமையேற்று நடத்திக் கொடுத்தார்.

டாக்டர் வெற்றி வேந்தன் மிகவும் பயனுடைய யோகப்பயிற்சியை கலந்து கொண்டிருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் வழங்க நிகழ்வு மிகவும் திருப்தியுடன் அமைந்திருந்தது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



2 comments: