Friday, August 1, 2025

என் மனதை விட்டு அகலாத சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறேன் : கவிஞர் தணிகை

  என் மனதை விட்டு அகலாத சில செய்திகள்: கவிஞர் தணிகை



1. இது வரை பிரபஞ்சம் விரிந்து கொண்டே செல்வதையும், ஏன் மையமிலா விரிதலில் விரிந்து கொண்டே இருப்பதாகவுமே நமது விண்வெளி அறிவியல் சொல்லி வந்தது. ஆனால் தற்போது ஒரு செய்தி:அது 1.5 பில்லியன் ஆண்டுகள் அதாவது 1500 கோடி ஆண்டுகள் விரிந்து வருவதாகவும் மேலும் 2 பில்லியன் ஆண்டுகள் அதாவது 2000 கோடி ஆண்டுகளில் விரிவதும் அதன் பின் அது சுருங்கி இல்லாமல் போய்விடும் என்று வந்திருப்பது புதிது.


2. அமெரிக்காவில் என்றுதான் நினைக்கிறேன்: பிரசவத்தின் போது ஐந்தரை மாதமேயான உயிருள்ள குழந்தையை பெற்று எடுத்து அதை இப்போது ஓராண்டு  நிறைவுக்கு வந்த போதும் குழாய் வழியே தேவையானவற்றை செலுத்தி உயிருடன் வைத்திருப்பதாக செய்தி.


3. நீங்கள் அறிந்திருப்பீர்: கடந்த சில நாட்கள் முன் ஹைத்ராபாத் இறகுப் பந்து விளையாட்டு மைதானத்தில் 26 வயதான இளைஞர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே விளையாட்டு மைதானத்திலேயே கீழே விழுந்து இறந்ததை.


4. இரண்டு வயது சிறு குழந்தை ஒன்று 3 அடி நீளப் பாம்பைப் பார்த்ததும் ஒரு செங்கல்லை அதன் மேல் விட்டெறிந்ததும், அந்த பாம்பு அந்த சிறுவனின் கையை சுற்றிக் கொள்ள, சிறுவன் அந்த பாம்பின் தலையைக் கடித்துக் கொண்டிருக்க அதன் பின் பெரியவர்கள் வந்து பார்க்க பாம்பு இறந்திருக்க, அதைக் கடித்ததால் சிறுவனுக்கு விஷம் பரவ, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவன் உயிருடன் காப்பாற்றப் பட்டு பிழைத்துக் கொண்டான். மருத்துவர் விஷம் பாதிப்பு இருந்திருக்கிறது ஆனால் அது மரணம் வரும் வரை இல்லை அதற்குள் உரிய நேரத்தில் வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டதால் எனப் பாராட்டி இருக்கிறார்.


5. காலை 9 மணி முதலே கடும் வெயில் மாலை 4 மணி 5 மணிக்கும் கடும் வெயில்...பருவ நிலை மாறி குளிர் காலம் ஆரம்பிக்க வேண்டிய கட்டத்தில் புவிச் சூடு உயிர்களை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறது.


6. இந்த ஆடி 18 அணைகள் நிரம்பி உள்ளதால்  கூட்டம் நிறைய மகிழக் கூடும் நீர் நிலைகளில் சிறப்பு, மகிழ்ச்சி, நன்றி...

காவிரிக்கு நீர் அழகு, மேட்டூருக்கு அணை அழகு

இதுவே எமது சுவர் எழுத்துகளில்  இடம் பெற்றுள்ள வார்த்தைகள்...


அனைவர்க்கும் வாழ்த்துகளும் நன்றிகளும் வணக்கங்களும் உரித்தாகட்டும்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


1 comment: