Wednesday, July 23, 2025

நீ...! கவிஞர் தணிகை

 நீ...!



நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

அன்பின் பூக்களை 

அள்ளி எடுத்துச் சென்று விடுகிறாய்!


நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

மனிதம் என்றால் என்ன? எதற்கு என்று

காட்டி விடுகிறாய்!


நீ

ஒவ்வொரு முறை வரும்போதும்

வாழ்க்கை என்பது பிறர்க்கு பயனாதல்,

பிறரை மகிழ்வித்தல் என்று சொல்லாமல்

சொல்லி விட்டுச் செல்கிறாய்!


உனை நினைக்கும்போது

கண்களில் நீ(ர்) நிறைகிறது


என் மகனுக்கு மூத்தோனே

எனது முதல்வனே


உனது அலை 

ஒவ்வொரு முறை வரும்போதும்

பிற(ர்) நினைவலைகளை

இழுத்துச் சென்று விடுகிறது

உணர்தலின் மேலீடு


கவிதை என்பது

பீறிடுவது

மீறிடுவது

அடக்க முடியா(த)து

அடங்கா(த)து



தியானம் ஒரு முற்றுப் புள்ளியில்

முடிந்து போய் விடுகிறது.

மீண்டும் எனை கவிஞனாக்குகிறது

உனது வருகை!


நீ எனை நாடி வருகையில்

சொற்களும் செயலுமின்றி 

சுயமிழந்து நிற்கிறேன்.


நமை இணைத்த அந்த காலத்திற்கு

நன்றி சொல்ல நாம் கடமைப் பட்டுள்ளோம்.


        மறுபடியும் பூக்கும் வரை

        கவிஞர் தணிகை

No comments:

Post a Comment