Tuesday, November 6, 2018

தீபாவளி பற்றிய எனது நினைவலைகள்: கவிஞர் தணிகை

தீபாவளி பற்றிய எனது நினைவலைகள்: கவிஞர் தணிகை

Related image

காஞ்சி ஜெயேந்திரர் டி.வியில் பேசுவார், அவரைக் காணோம் அவர் இருக்கும்போதே காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கையும் ஒன்றும் இல்லாமல் செய்தார்கள் நீதி சரியான ஆதாரம் இல்லை என்று அந்தக் குடும்பத்தின் தலைவர் மறைந்ததை மிகவும் துச்சமாகத் தூக்கிப் போட்டுவிட்டது...அந்த குடும்பத்துக்கு அநீதி இழைக்கப்பட்டது பற்றி  எவருமே அதன் பின் பேசியதாகத் தெரியவில்லை..

அந்த ஜெயேந்திர சங்கராச்சாரியாரைப் பிடித்து ஜெ முதல்வராக இருக்கும்போது பிடித்து உள்ளே வைத்தார். அவரையும் காணோம். நிரந்தர முதல்வர் என்றார்கள்...

எனக்குத் தெரிந்த அனுராதா ரமணன் என்ற இரட்டை நாடிப் பெண் எழுத்தாளர் இவர் சொந்த ஊர் மேட்டூர், இவருடைய தந்தை பாலசுப்ரமணியம் எம்.ஜி.ஆர் காலத்தில் அவருடன் எல்லாம் சேர்ந்து நடித்தவர் ..அவர் இவர் எல்லாம் ஒரு காலத்தில் இங்கு மேட்டூரில் கெமிகல் காலனிக் ஃகுவார்ட்டர்ஸில் குடி இருந்தவர்கள் அனுராதா ரமணன் அவளும் வள்ளல்தான் என்ற ஒரு சிறு கதையின் மூலம் மார் மூடாத சினிமா போஸ்டர் பெண்ணுக்கு தனது தாவணியை எடுத்து மூடி மறைத்த பெண் பற்றி எழுதி பரிசு வாங்கி எழுத்து உலகில் நுழைந்த எழுத்தாளர்.
Related image
இவரை ஜெயேந்திரர் சீண்டியதாக அவரே தமது சொந்த பேட்டியில் சொல்லி எழுதி இருக்கிறார். அப்போதெல்லாம் எந்த மீ டூ வும் இல்லை...இருவரும் ஒரே இனம் வேறு.

இப்போது இந்த இருவருமே இல்லாத போதும் அந்த தீபாவளி நிகழ்வு பற்றிய நினைவு என்னுள் ...ஜெயேந்திரர் டி.வியில் எண்ணெய் ஸ்நானம் பற்றி ஸ்வீட் பற்றி, பட்டாசு பற்றி எல்லாம் பேசியது நினைவில் இன்னும் மறையவில்லை..

ஜக்கி இப்போது பேசுகிறார் இனி வாழ்வெங்கும் மனம் எங்கும் ஒளி பரவட்டும் அதுதான் இந்த தீபாவளி என்னும் தீபங்களின் வரிசை என்பது பற்றி...

தமிழர்களுக்கு என்றுமே பரந்த மனது...மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், இந்திக்காரர்கள், மார்வாடிகள் , பஞ்சாபிகள் இப்படி இனம் எல்லாம் பார்க்க மாட்டார்கள்...எல்லாரையுமே மனிதர்களாகவே பார்ப்பார்க்ள...அவர்களின் பொருளாதார தரம், அறிவின் மொழி, நிறம் இதை எல்லாம் பார்க்காமல் அவர்களின் குணத்தை மற்றுமே கொள்வார்கள்...

அப்படி எல்லா இனங்களுமே தம்மை மனித இனம் ஒன்று எனப் பார்த்தால் மற்ற உயிரினங்க்ள் யாவுமே அழிவிலிருந்து மீளும்..இராமலிங்க வள்ளலார், சித்தர்களின் பார்வை எல்லாமே அதுதான்...அது போன்ற பார்வையை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்ற தத்துவ மேதைகள்...இவர் ஒரு சீடரைக்கூட தமக்காக வைத்துக் கொள்ளாதவர், தமது தமக்கான அவையை கலைத்துவிட்ட பிறகும் தமது எண்ணங்களை உலகெங்கும் கேட்பார்க்கு பரப்பிச் சென்றவர்.
Related image
கலாம் கூட கணியன் பூங்குன்றனாரின்: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல் வரிகளை உலகெங்கும் கொண்டு செலுத்த ஐக்கிய நாடுகள் சபையில் எல்லம் பேசினார்...

இந்த தீப ஒளித் திருநாளில் அது போன்ற மாமேதைகளின் ஒளி மிக்க வார்த்தை பின் உள்ள பொருள் காண்போம்.

இருள் என்பது இயல்பான புவியின் ஒளி
வெளிச்சம் என்பது  புவியின் மேல் வீழும் கதிரின் எரிதழல் வெப்ப வீச்சு...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை


No comments:

Post a Comment