Sunday, June 25, 2017

கோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிகை

கோவிந்தா கோவிந்தா இராம் நாத் கோவிந்தா: கவிஞர் தணிகை

ஜெயது ஜெயது மந்திரம் ஜென்ம சாபல்ய மந்திரம்
ஜனன மரண விச்சேத பேத கிலேச மந்திரம்
சகல நிகம மந்திரம் சர்வ சாஸ்த்ரிக மந்திரம
இரகுபதி நிஜ மந்திரம் இராம ராமேதி மந்திரம்.


Image result for GOVINTHA...
என்ன இது என்கிறீர்களா? எல்லாம் உங்களை திசை திருப்பத்தான்.அடல் பிஹாரி வாஜ்பேயிக்கு அப்புறம் லால் பிஹாரி அத்வானி அட பேரையே மறக்கடித்து விட்டார்களே... லால் கிருஷ்ண அத்வானி நாட்டின் 9 ஆவது துணைப் பிரதமராக இருந்தவர் இன்று வயது 89வயதுடன் ஏமாந்து நிற்கிறார் இராமர் பாபர் மஜீது இடிபாட்டு வழக்கின் மூலம் இவருக்கு குடியரசுத் தலைவராக தகுதி இல்லையென. வாஜ்பேயிக்கு அடுத்து இதே கட்சீ வென்றிருந்தால் இவர்தான் பிரதமர் ஆகி இருக்க முடியும்...அதை அடுத்து காங்கிரஸ் 10 ஆண்டும், மன்மோகன் சிங் காலமும் மோடியை கேள்வி கேட்பாரற்ற தலைமையாக பிரதமராக்கி விட்ட காலத்தில் இவ்ர் தனக்குப் பிடித்தமாறு கட்சியை நகர்த்தி வருகிறார் அமித் ஷா , வெங்கய்யா போன்றோர் வலது இடது கையாக... எனவே எல்.கே. அத்வானிக்கு நோ சான்ஸ். அட இந்த ஸ்டாலினுக்கும் இவருக்கும் கொஞ்சம் கூட லக்கே இல்லையே....அதெற்கெல்லாம் ரிலையன்ஸ் மச்சம் வேண்டுமப்பா...குறைந்தது ஜியோ மிச்சமாவது வேண்டாமா..?

இந்த நாட்டில் குடியரசுத் தலிவர் தேர்தல் வர்ப்போகிறது என்ற உடன் இது போல சம்பவங்கள் அரங்கேறும் என எல்லாம் எதிர்பார்த்ததுதான். ஆனால் முதலில் ஒரு முன்னால் உச்ச நிதிமன்ற நீதிபதி சதாசிவம் என்றவர்கள், அதன் பின் திரௌபதி மர்மு என்றார்கள், அந்தப் பேருக்காகவே கொண்டு வந்தாலும் வருவார்கள் என எதிர்பார்த்தோம், ஆனால் அதை விட நல்ல பேர் இந்த இராம் நாத் கோவிந்த் என்பது உலகெங்கும் ஒரு இந்து நாமமாக எதிரொலிக்கட்டும் என கொண்டு வந்திருப்பார்களோ...
Image result for GOVINTHA...


சதா சிவம், திரௌபதி மர்மு, இராம் நாத் கோவிந்த், சிவ சிவா...இதெல்லாம் தான் இரம்ஜான் திருநாளின் முபாரக் வாழ்த்தாக நாம் தந்திருக்கிறோம்.

இவர் இதன் பின் வரும் பி.ஜே.பியின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் எந்த வகையான மசோதா சென்றாலும் கருத்து வேறுபாடில்லாமல் கையெழுத்திரும் ஒரு நல்ல எந்திரமாக பயன்படுவார் முப்படைத் தளபதியாக. அடுத்த மக்களாட்சி தேர்தல் மறுபடியும் யாரைக் கொண்டு வருமோ? எந்தக் கட்சி ஆளுமோ? என்னவெல்லாம் ஆகுமோ? மாறுமோ?

மேலும் இதை நமது சசிகலா, ஓ.பி.எஸ், இ.பி.எஸ். தினகரன், திவாகரன் எல்லாமே ஆதரித்து டெல்லியில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்ய கூடி நிற்பார்கள், மோடி வெளிநாடு வலம் செல்வார், ஜக்கி ஈஸா வாசுதேவ் நதிகளை காக்க நாடெங்கும் புறப்படுவார். இதில் எல்லாம் ஒரு உள் நீரோட்டம் இருப்பதை சிற்றறிவு படைத்தோர் கவனிக்கலாம்.

மீரா குமார் , ஜெகஜீவன் ராம் மகள் எதிர்க்கட்சிகள் நிறுத்தும் வேட்பாளர், இவர் சபாநாயகராக இருந்தபோது சபாநாயகருக்கு என அளித்த பரிசுப் பொருட்களை எல்லாம் தம் வீட்டுக்கு அந்த வீட்டை காலி செய்யும்போது பதவி முடிந்தபோது கொண்டு சென்று விட்டாராம் பத்திரிகை செய்தி படித்த எமது எம்.ஜி.ஆர் கட்சி அன்பரின் அங்கலாய்ப்பு அதனால்தான் அவரை ஆதரிக்கக் கூடாதாம். இராம் நாத் கோவிந்தா மறைமுகமாக தேர்வு செய்யப்படும் நாட்டின் தலைமைப்பதவிக்கு வழக்கம்போல் வருபவர்.

இதே எம்.ஜி.ஆர். கட்சி அன்பர் ஜெ அம்மையாரின் இன்னும் என்ன ஆயிற்று என்றே தெரியாத 10500 சேலைகள்,750 செருப்பு ஜோடிகள்,500 வைன் கிளாஸ்கள் பற்றி எல்லாம் மறந்து விட்டு அவரது நினைவிடத்தை கடவுளாக்கி மக்கள் ஈயாக மொய்க்கிறார்கள், அவருக்கு எல்லா அரசு அலுவலகங்களிலும் படம் மாட்டப்பட வேண்டும் ஓர் உண்மையான தீர்ப்பு அளிக்கப் பட்ட குற்றவாளிக்கு  என்ற உண்மையை எல்லாம் அப்படியே தம் வசதிக்காக மறந்து விட்டார்.

Image result for GOVINTHA...

இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும்.அப்போது அது சொல்லும் சொல்லட்டும் யாருக்கு அந்த வசதி வாய்ப்புகள் சென்று சேரவேண்டியதென்று...வேறு என்ன அதில் இருக்கிறது?

INDIA IS AN NON POLITICAL, NON RELIGIOUS, SECULAR COUNTRY...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments:

  1. இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் படல் வேண்டும்
    நன்று சொன்னீர் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. thanks sir for your comment and feedback on this post vanakkam.

      Delete
  2. what is this couponsrani...name ...anyhow thanks for your feedback on this post. vanakkam.please keep contact

    ReplyDelete