Thursday, June 1, 2017

திரௌபதி மர்மு: கவிஞர் தணிகை

திரௌபதி மர்மு: கவிஞர் தணிகை

மலைவாழ் மக்கள் பிரிவைச் சார்ந்த திரௌபதி மர்மு ஜூலை 25க்கும் பிறகு இந்த நாட்டின் குடியரசுத் தலைவி அல்லது தலைவர் ஆகலாம் என பேச்சு அடிபடுகிறது.
Image result for traubathi marmu sattiskar governor


இவர் சாதாரண கவுன்சிலர் பதவி முதல் ஜார்கண்ட் கவர்னர் பதவி வரை வகித்தவர், சிறந்த எம்.எல்.ஏ என ஒரிஸா அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஆனால் இவர் குடியரசுத் தலைவர் ஆனாலும் மலை வாழ் மக்களும், பழங்குடிகளும் என்ன பயன்பெறப் போகிறார்கள்? இவரும் இவரைச் சார்ந்த குடும்பம், உறவுகள், நட்பு ஆகியவை வேண்டுமானால் தனிப்பட்ட முறையில் அப்துல்கலாம் தமிழர்கள் என்றால் குடியரசுத் தலைவராய் குடியரசு மாளிகையில் பார்க்க அனுமதித்தது போல ஏதாவது பயன்பெறலாம். ஆனால் மற்றபடி இந்தப் பதவிக்கு வருவதால் இவர்களால் என்னதான் செய்ய முடிந்திருக்கிறது?

பிரதிபா பாடீல் சினிமா பார்க்க பல கோடி நாட்டின் பணத்தை மக்களின் பணத்தை செலவிட்டு மகிழ்ந்தது போல, பதவியில் இருக்கும் வரை 5 ஆண்டுகளிலும் கோட்டையில் கொடி ஏற்றுவது அரசு மரியாதை பெறுவது, முப்படைத் தளபதி என்று பேருக்கு இருப்பது  வெளி நாட்டு சுற்றுப் பயணங்கள், தனி விமானங்களில் பயணங்கள் இவை  போன்றவை தவிர வேறு என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள்?

ஆனானப் பட்ட அப்துல் கலாமே 2020 கனவு காலம் என்ற காலனின் காலடியில் பெரும் மதம் கொண்ட இந்திய அரசியல் யானையின் பிடியில் சிக்கி காணமல் போய் காலத்தால் மறவாத ஒரு மாமனிதர் ஆகியது  நமக்கெல்லாம் தெரியும். இவர் போன்றோரை அதாவது சிறுபான்மையினர் எனச் சொல்லப்படுவாரை,

கே.ஆர். நாராயணன் தாழ்த்தப் பட்ட இனத்தார், பக்ருதீன் அலி அகமத், ஜாகீர் ஹுசேன்அப்துல்கலாம் போன்றோர் முகமதியர்,ஜையில் சிங் சீக்கிய இனத்தார், இப்படி அந்த அந்தக் காலக் கட்டத்தில் பேர் கெட்டுப் போகாத தலைவர்கள் எவராவது இருந்தால் அவர்களும் இப்படி சிறுபான்மை இனத்தாராய் இருந்தால் அவர்களை எதிர்க்கட்சி எதிர்க்காமல் இருக்க, அப்படி எதிர்த்தாலும் ஜெயிக்காமல் இருக்க, மக்களிடம் அதனால் கெட்ட பேர் அவரை எதிர்த்ததனால் வாங்கிக் கொள்ள ஆளும் கட்சி செய்யும் குள்ள நரித் தந்திரம்.அப்படித்தான் இந்த திரௌபதி மர்மு மலைவாழ் கவர்னரும் வாய்ப்பளிக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆவதும், ஆனாலும்...

மற்றபடி இந்த பதவியினால்  குடியர்சுத் தலைவர் தேர்தலால் எந்தவித பெரிய மாற்றமும் நிகழ்ந்து விடப் போவதில்லை சாதாரண மக்களுக்கு. இந்தியாவில் இதெல்லாம் ஒரு அலங்காரப் பதவி. இடத்தை எவரை வைத்தாவது பிரச்சனை அதிகம் இன்றி தாம் விரும்புவாரை, தாம் சொல்வாரை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்து அவரையே தேர்ந்தெடுத்து பிற்காலத்தில் எந்தப் பிரச்சனை என்று நாடினாலும் கை எழுத்தை எளிதாக வாங்கி அரசியலில் எந்த நெருடலும் இல்லாதவாறும், இந்த வாய்ப்பை மேலும் தமது கட்சிக்கு எவ்வளவு சாதகமாக்கிக் கொள்ள முடியும் என்று போடும் கணக்கீட்டிற்கு இந்த தேர்தல் உதவும்.
Related image

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

4 comments: