Tuesday, June 27, 2017

நேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்:கவிஞர் தணிகை.



Related image

வலிமை உடையவரை விடப்
பொறுமை உடையவரே மேலானவர்.

உலகை அடக்குகிறவரை விட‌
தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்

வழக்கில் பிரதி வாதி குறுக்கிடும் வரை
வாதி கூறுவது நியாயமாகவேத் தோன்றும்
Related image


பணக்காரர் இறையருள் பெறுவது
ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது

தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்
ஆனால் என்றும் அவர்கள் அழிவுக்கு உரியவரே.

கடவுளின் சினம் வெளிப்படும் நாளில்
செல்வம் பயன்படாது

நேர்மையான நடத்தையே சாவுக்குத் தப்புவிக்கும்

குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும்
நேர்மையானவர் உலகில் இல்லை

பொருள் ஆசையே எல்லா தீமைகளுக்கும்
ஆணி வேர்.

Related image

கோழையாய் இருப்பதை விட‌
ஏழையாய் இருப்பதே மேல்.

....சில நல் மொழிகள், சில நல் வழிகள்

முன்னோரின் முன் மொழிகளும்
தணிகையின் மணி மொழிகளும்

நூலிலிருந்து இறக்குமதி....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

1 comment: