Wednesday, June 21, 2017

இந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்......கவிஞர் தணிகை

தமிழக இலட்சியக் குடும்பங்களுக்காக 02.10.2002ல் காவிரி நீர் வேண்டியும், நதிகளை தேசியமயமாக்கக் கோரியும் நதி நீர் இணைப்பு வேண்டியும் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நான் பேசிய பேச்சு சிறு கையேடாக வெளிவந்தது அனைவர்க்கும் வழங்கப் பட்டது.




உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை
தள்ளினும் தள்ளாமை நீர்த்து....

சுருக்கமாகச் சொன்னால் எண்ணியது கைகூடாவிட்டாலும் எண்ணுவதை மட்டும் கைவிடவே கூடாது...

நமது சுதந்திரப் போராட்டத்திற்கு எப்படி ஒரு 200 ஆண்டு கால மகத்துவம் உண்டோ அப்படி  நதிகளை தேசியமயமாக்கு, கங்கை காவிரியை இணை, நதிகளை இணை என்ற கோரிக்கைகளுக்கும் 200 ஆண்டு கால சரித்திரம் உண்டு. ஆனால் இன்னும் நாம் அந்த குறிக்கோளை எட்ட முடியவில்லை. என்றாவது ஓர் நாள் அந்த இலக்கு எட்டப்படும் என்பதற்கான ஒரு சிறிய முயற்சியே இந்த சொல் வீச்சு.எழுத்துப் பதிவு.

காவிரியில் கல்லணையை கட்டிய கரிகால் பெருவளத்தான் முதல் நூற்றாண்டிலேயே பெரும் நோக்கோடு அதைக் கட்டியுள்ளார். அந்த சோழ மன்னனின் அக்கறை இன்றும் பொறியியல் துறையின் வல்லமையை நின்று உலகுக்கே பறை சாற்றுகிறது தமிழரின் பெருமையை.

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயரே நமது இந்திய தேசத்த்ஹு நீர்ப்பாசனத் தந்தையாவார். அவர் முதல் விடுதலை இந்தியாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட விஞ்ஞானி விஸ்வேஸ்வரையா , மத்திய மின்சார மற்றும் நீர்ப்பாசனத் துறை மத்திய மந்திரியாய் இருந்த டாக்டர்.கே.எல்.ராவ், கேப்டன் தின்ஸா தஸ்தூர், சில்வர் டங் சீனிவாச அய்யங்கார் , சர் . சி.பி. இராமசாமி அய்யர் போன்றோர் இதன் முன்னோடிகளாவார்.

தற்காலத்தில் கூட பல்வேறு இயக்கங்களும் தலைவர்களும் இது பற்றிய முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தத் தலையாயப் பணிக்காக பேதமின்றி  இணைவதும் , பணியாற்ற வேண்டியதும் தாயகத்தின் கடமையாகும். மறைந்த‌ காந்திய நெறி சிந்தனையாளர் தொழிலதிபர் என். மகாலிங்கம் அவர்கள் கூட பல காலம் இதற்காக முயன்றது குறிப்பிடத்தக்கது.

100 ஆண்டுகளுக்கு முன்பே மகாக் கவி பாரதி
வங்கத்தின் ஓடி வரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்    என்றார். ஆனால் அது இன்னு ஓர் இலட்சியக் கனவே. ஆனால் அவர் எழுதிய சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்  என்ற பாடிய கூற்று நிதர்சனமாக நடந்து விட்டது. அவ்வளவு ஏன்? ஸ்டீபன் ‍ஹாக்கிங் என்ற அறிவியல் அறிஞர் தற்காலத்தில் கூட பூமி மனிதர் வாழத் தகுதியற்றுப் போய்க் கொண்டிருக்கிறது அதை மாற்ற முடியாது மாறாக வேறு கிரகத்திற்கு மனிதர்கள் குடி போவதுதான் நல்லது என்ற கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

வேறு கிரகத்திற்கு சென்று அதை மனிதர் வாழ ஏற்ற இடமாக மாற்றுவதை விடவா இந்த இந்திய நதி நீர் இணைப்பு மிகவும் பெரிதான கடினமான முயற்சியாய் இருந்து விடப் போகிறது? செவ்வாய்க் கிரகத்துக்கும் குடிபோக திட்ட முன்வடிவுகள் தயாராகிக் கொண்டுதானே இருக்கின்றன...

அவ்வாறெல்லாம் இருக்கும் போது கங்கை காவி இணைப்பு மட்டும் அப்படியே கனவாகவே உள்ளது ஏன்? ஏன் நதிகளை இணைக்க முடியாது?

கவிஞனின் தீர்க்க தரிசனம் பொய்யாகாது. இந்தக் கனவும் மெய்ப்படும். ஆனான் என்று?நம்மால் முடியாதென்றால் யாரால் முடியும்? இப்போது முடியாதென்றால் எப்போதுதான் முடியும்? நாம் வாழும் இந்தக் காலக்கட்டத்திலேயே இதை செய்து முடித்து புகழடையப்போகிறோமா? நமக்குப் பின் கலியுகத்தில் அறிவார்ந்து சிறந்து வரும் நம் இளைய தோள்களுக்குப் பொறுப்பை மாற்றிவிட்டு நமது முன்னோர்களைப் போல சென்று சேரப்போகிறோமா இதுவே நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.

1974ல் கேப்டன் தின்ஸா தஸ்தூர் கங்கை காவிரி இணைப்பின் மதிப்பீடு 7000 கோடி என்றார். கங்கை காவிரியை இணைத்து வைகை , தாமிர பரணி வரை 1200 மைல் நீளம் கொண்டு வரலாம் என ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார். தற்போது 3 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி வரை திட்ட மதிப்பீடு இருக்கும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு போன்றோர் குறிப்பிட்டிருந்தனர்.

நேரு காலத்ட்ல் " தனக்கு முழுப்பொறுப்பும் கொடுத்தால்" கங்கை காவிரி இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி வைப்பதாக இந்தியாவின் சிறந்த பொறியியல் விஞ்ஞானி விஸ்வேஸ்வரைய்யா  1962 ல் குறிப்பிட்டுள்ளார். இது போல எத்தனையோ வாய்ப்புகள் கை நழுவின.எனவே 5 இலட்சம்கோடி என்றாலும் கூட இந்தியா போன்ற ஓர் உபகண்டத்திற்கு அதுவும் இது போன்றதொரு உயிர் நாடியான இரத்த நாளமான திட்டத்திற்கு சேர்க்க முடியாத தொகையல்ல...சேர்த்து குவிக்க வேண்டியது போர்க்கால அடிப்படையிலான உயிர் காக்கும் முயற்சியாகும்.

1971ல் ஐக்கிய நாடுகள் சபையின் நீர்ப்பிரிவின் தலைவர் பொருளியல் நிபுணர் டாக்டர் பார்னியா என்பவரின் தலைமையில் இந்தியா வந்த திட்டக்குழுவும் இந்தத் திட்டம் எவ்வளவு பொருள் செலவுடையதாக இருப்பினும் எவ்வளவு பிரம்மாண்டமானதாக இருப்பினும் நிறைவேற்றப் பட வேண்டியது அவசியம் என்று மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அது மட்டுமின்றி இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லையெனில் 2000 ஆண்டுக்கும் மேல் இந்தியா நீர்ப்பற்றாக்குறையில் தவிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

நாம் தவிக்கிறோம்
தேவையை விட 10 மடங்கு தண்ணீர் அதிகம் உள்ல நம் தாய்த்திருநாட்டில்
குடி நீருக்காக. செந்நீர் சிந்தி நாம் தவித்துக் கொண்டுள்ளோம்.

சரி 5 இலட்சம் கோடியை எப்படிப் பெறலாம்? அல்லது திட்ட மதிப்பீடு எத்தனை இலட்சம் கோடியானாலும் அதை எப்படிப் பெறலாம் எனில்:

1. 100க்கு 66 கம்பெனிகளை குடும்பக் கம்பெனிகளாக நடத்தி வருபவரிடம் பெறலாம்.

2. 71% ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் சேர்களை (பங்குச் சந்தையில் பங்குகள்) வைத்திருக்கும்  சில குடும்பங்களிலிருந்து பெறலாம்

3. எது எதெற்கோ கையேந்தி ஐ.எம்.எப், (இண்டர் நேஷனல் மானிட்டரி பண்ட், உலக வங்கி ..சர்வ தேச நிதியம்   ஆகியவற்றிலிருந்து  பெற்ற பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறோமே அந்த நிறுவனங்களிடம் இந்த நல் காரணத்துக்காக கையேந்தலாம்.

4. அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, அரேபிய எண்ணெய் வள நாடுகளிடம் இந்த அற்புதத் திட்டத்திற்காக கையேந்தலாம்.

5. காந்தி விடுதலைப் போராட்டத்தில் நமது மக்களிடம் கையேந்திய போது தாலி முதல் கழட்டிக் கொடுத்தார்களே நம் தாய்மார்களை நம்பி அந்த நாணயம் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவோரிடமும் இருந்தால் நமது இந்திய தேசத்து குடிமக்கள் ஓவ்வொருவரிடமும் ஏதாவது பங்கீடு அளித்தேயாக வேண்டும் எனக் கையேந்தலாம்.

6. அவசியமில்லாது வேறும் ஆடம்பரத்துக்காக திட்டமென்றும், விழாவென்றும் விரயம் செய்யும் பணம் யாவற்றையும் மத்திய மாநில அரசுகள் வடிகட்டி மடைமாற்றம் செய்து பயனாக்கலாம்.

7. தேவையேற்பட்டால் தேர்தல் மேளா, மக்கள் கூத்து, புகை, மது, போதை போன்ற சராசரிப் பணிகளை எல்லாம் நிறுத்தி வைத்தும் கூட திட்டம் முடியும் வரை பயன்படுத்தலாம்.

8. மத்திய மாநில அரசுப்பணிகளின் அமைச்சகங்கள், செலவினங்கள், ராணுவத்தின் பயன்பாடு, பிற துறைகளின் உழைப்பு ஏன் இந்த நாட்டு மக்களின் எல்லாருடைய உழைப்பு மற்றும் மாத சம்பளம் வாங்குவோரின் ஒரு மாத சம்பளம் போன்றவற்றை அர்ப்பணிக்கலாம்.

9. வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம், பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களுக்காக ஆண்டுக்காண்டு செலவளிப்பதாக சொல்லிக் கொண்டு... சொல்லிக் கொள்ளும் பணத்தை திட்டம் முடிவு பெறும் வரை இதற்கே திருப்பி விடலாம்.(தென்பகுதி வறட்சியும் வடபகுதி வெள்ளமும் தீர்க்கும் அரு மருந்தாயிற்றே இந்தஹ்ட் திட்டம் என்பதால்)

10. தொழிலதிபர்கள், பெரும் முதலாளிகள், கார்ப்ரேட்கள் போன்றோரை குறிப்பிட்ட அளவு பணிகளை ஒப்படைத்து முடித்துக் கொடுத்தவர் பெயரை அந்த நீளம் வரை சூட்டிக் கொள்க என்றும் பயன்படுத்தலாம்

11. திருப்பதி, காஞ்சி, காசி, சிருங்கேரி போன்ற மடங்கள், தேவாலயங்கள், மசூதிகள்,கட்சிகள், பொது சேவை நிறுவனங்கள், மடாலயங்கள், கோவில்கள் ஈஷா,வேலூர் தங்கக் கோயில், வாழும் கலை, அமிர்தானந்த மயி, மேலமருவத்தூர், சத்ய சாயி போன்ற நாடெல்லாம் உள்ள ட்ரஸ்ட் என்னும் அறக்கட்டளைகள் அதில் வீரமணியின் மணியம்மை ட்ரஸ்ட் உட்பட அனைத்து பெரு நிதியையும் இதற்கு வர வழிவகுக்கலாம்.

12. விவசாயிகளிடம் பங்கு பத்திரங்கள் விற்பனை செய்யலாம்

13. இப்படி இலட்சோப இலட்சம் வழிகள் , சிந்தித்துப் பார்த்து செயல்படும்போது 130 கோடி மூளைகளிலிருந்து புறப்படும் அவற்றையெல்லாம் சீர்படுத்தி பயன்படுத்தினால் இந்தியாவில் கங்கை காவிரியை மட்டுமா இந்தியாவில் இணைக்க முடியும்? நிலவுக்கும் சூரியனுக்குமே  பாலம் கட்டிவிட முடியும். ஆனால் நமது மக்கள் யாவரும் உறங்கிக் கிடப்பதாக பாசாங்கு செய்து குப்புறப்படுத்துக் கிடக்கின்றனர். படுத்துக் கிடப்பாரை விழிக்க வைப்போம். விழித்தெழுந்து நாட்டை செழிக்க வைப்போம்

திட்டம் செயல்படுத்தப் பட்டால்?

1. அரேபிய நாட்டின் எண்ணெய்ச் செல்வத்தை விட நம் தண்ணீரால் அதிக செல்வம் பெற முடியும்.

2. பாலைகள் எலலம் சோலைகள் ஆகும்

3. 30 கோடி ஏக்கர் அடி கங்கை நீர் கடலில் வீணாவதில் பாதியை தடுத்தால் போதும் 2 காவிரிகளுக்கு முழு கொள்ளளவுக்கு சமமான நீர் பெறலாம்.

4. பல கோடி ஏக்கர் பாசன வசதி பெற முடியும்

5. நதி நீர் இணைப்புப் பணிக்காக பல்லாயிரம் பொறியாளர் மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பணி பெறுவார்கள்

6. ஏரி, குளம், குட்டை , கிணறு போன்றவற்றில் நிலத்தடி நீர் ஊற்றெடுக்கும்.

7. கோடிக்கணக்கான பேர் வேலை வாய்ப்பை நேர்முகமாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு  பெறுவர்.

8. நாட்டில் இரயில் பாதையை விட இணைப்புக் கால்வாய்கள் மூலம் நீர் வழித்துறை மேன்மை பெறும்.

9. 9 வகையான இணைப்பில் 10,000 மைல் நீளம் இணைப்புக் கால்வாய் பெறலாம்

10. ஏறத்தாழ எழுபது இலட்சம் கிலோவாட் மின்சாரம் குறைந்த பட்ச செலவில் அதிகபட்சம் தயாரிக்க முடியும்

11. போக்குவரத்துத் துறை, மின் துறை, நெடுஞ்சாலை, மீன் வளம் மேம்படும்

12. கால்வாய் வெட்டும்போது கிடைக்கும் கருங்கற்களின் மதிப்பு பல்லாயிரம் கோடிகள் இருக்கும்

13. விந்திய சாத்பூராக் காடுகள், ராயலசீமா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டி முழுப்பயனையும், பிற மாநிலங்கள் பெருமளவிலான பயனையும் பெறும்

14. இந்தியாவின் எல்லாப் பிரச்சனைக்கும் விடிவு வரும்

15. மொத்தத்தில் வறுமையற்ற பாரதம் உலக அரங்குக்கு உன்னத வழிகாட்டும். பாரதியின் கூற்றுப் படி.

பிறகு ஏன் இப்படிப்பட்ட காமதேனுவை , கற்பக விருட்சத்தை கையில் வைத்துக்கொண்டுள்ள இந்தியா திட்டத்தை செயல்படுத்தாமல் கையேந்தியப்டியே நிற்கிறது? பி.எஸ்.என்.எல்லை நலிவடையவிட்டு தனியாருக்கு 2ஜி, 3 ஜி, 4,ஜி, என அலைக்கற்றை அகன்ற அலைவரிசை யாவற்றையும் விற்று விட்டு நட்டப்பட்டுக் கிடப்பது போல...தனியார் போக்குவரத்தை தனியார் முதலாளிகளை வளரவிட்டு அரசு நிறுவனங்களை சைபர் ஆக்குவதும் அரசு புரிவோரின் கொள்கையாகிவிட்டது.

கங்கை, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி இருந்தும் பஞ்சம் என்றால் அது இயற்கையோ, விதியோ அல்ல , மனித சதியே..

முதலாம் நூற்றாண்டிலேயே கல்லணையைக் கட்டிக் கொண்ட தமிழகத்தில் அப்போதே 37ஆயிரம் ஏரிகள் இருந்ததாக சரித்திரம் சொல்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 11 வது நூற்றாண்டில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட 27 கி.மீ நீளமுள்ள குளம் இன்றும் பயன்படுகிறது.

ஆனால் மனித நாகரீகம் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு பின்னேறிவரும் சான்றுகளையே இப்போதும்  பார்க்கிறோம். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறையை வேண்டுமென்றே புறக்கணித்தார்கள் "ஒன்றும் செய்யாதே" பஞ்சம் வந்தாலும் மடியட்டும் என்பதே ஆங்கிலேய ஆட்சியின்ன் தாரக மந்திரமாக இருந்தது.

1834ல் சர் ஆர்தர் காட்டன் காவிர்யின் திருச்சி முக்கொம்பில் மேலணையக் கட்டினார். அதே 1834ல் மேட்டூர் அணையக் கட்டும் திட்டமும் வகுத்தார். ஆனால் ஒரு நூற்றாண்டு கழிந்து 1934ல் ஸ்டேன்லி என்பவர் அணையைக் கட்டி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1847ல் அந்திரத்து கோதாவரியில் அணைகட்டி 7 பிரிவுகளாகப் பிரித்து தற்போதைய கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்கள் வளங் கொழிக்கச் செய்தார். கிருஷ்ணா நதியிலும் அணைகட்ட திட்டம் கொடுத்தார். ஆனால் 1863ல் கேப்டன் ஓர் என்பவரால் திட்டம் துவங்கப்பட்டு 1953ல் நிறைவு பெற்றது.

சர். ஆர்தர் காட்டனின் சிலை கோதாவரி அணையில் உள்ள்து. சுமார் 4 இலட்சம் ‍ஹெக்டார் நிலப்பாசன  வசதிக்கு உதவிய அவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஆந்திர மக்கள் விழா எடுத்து மாலையணிவித்து மரியாதை செய்கின்றனர்.

பஞ்சாப் நதிகளை இணைக்கத் திட்டம் அளித்தவரும் 9 வகையான முறைகளில் கால்வாய்ப் போக்குவரத்தை ஏற்படுத்தினால் அது இரயில் போக்குவரத்தை வுட சிக்கனமாகும் எனத் திட்டமிட்ட இவரை ஆங்கிலேய அரசு பணியிலிருந்து இங்கிலாந்துக்கு திரும்ப அழைத்து, ஆங்கில அரசுக்கு அதிகம் செலவு வைத்தவர் என்றும், அரசோடு ஒத்துழையாதவர் என்றும் தண்டைனையும் அபராதமும் விதித்தது. இவற்றை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அவருக்கும் பின் வந்ஹ பலராலும் பல வகையான இணைப்பு மற்றும் கால்வாய்த் திட்டங்களும் பரிந்துரைக்கப்பட்டன அவற்றுள் சில:
1. டாக்டர் கே.எல். ராவ் அவர்களின் கங்கை பாட்னாவிலிருந்து பிரிக்கப்பட்டு நர்மதை வழியாக கோதாவரி, கோதாவரியிலிருந்து காவிரி மேட்டூர் அணை வரை கிட்டத்தட்ட 2200 மைல் அல்லது வேறு வழியாக 1600 மைல்...

2. கேப்டன் தின்ஸா தஸ்தூர் :
     1. மகா இமாலயக் கால்வாய்த் திட்டம்: கங்கையிலிருந்து யமுனை யமுனையிலிருந்து பிரம்ம புத்திரா...
      2. பூமாலைக் கால்வாய்த் திட்டம்: இணைப்புகளில் ஹெர்ரிங்க் போன் சிஸ்டம் எனப்படும் மீன் முள் அமைப்புடன்:  சிந்து மேற்குக் கடற்கரை வழியாக‌

3. எம்.ஏ. திருநாராயணன்: சேது கங்கா இணைப்பு

4. திரு மோகன கிருஷ்ணன் அறிக்கை: தீப கற்ப நதிகளின் மேம்பாடு போன்றவை மிக முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை.

மேலும்
1958 முதல் 1987 ல் 649 கி.மீ நீளமுள்ள  கால்வாய்கள் அமைத்து ராஜஸ்தானின் வறண்ட நிலத்டை வளமாக்கி இருப்பது கால்வாய்த்திட்டம் பலனளிக்கக் கூடியதே என்பதற்கான சான்றாகும்.

இப்போது சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் இரு பெரும் நதிகளான கோதாவரி கிருஷ்ணாவை இணைத்து பெரு வெற்றி பெற்றுள்ளார். மேற்கு கோதாவரி மாவட்டம், கிழக்கு கோதாவரி மாவட்டம் இன்னும் பல மாவட்டங்களில் நீர்ப்பாசனத் தடைகளை தகர்த்தெறிந்துள்ளார்.

ஆனால் மத்திய அரசு நதி நீர் இணைப்புத் திட்டத்தை கிடப்பில் போடக் காரணங்களாகக் காட்டுவது:

1. நிதி ஆதாரமின்மை மற்றும் செலவை தாக்குப் பிடிக்க முடியாமை

2. விந்திய சாத்பூரா மலை தடையாக உள்லதால் 1650 அடி நீரை உயரம் தள்ளத் தேவையான மின்சக்தியின்மை என்பதே.

இது போன்ற பதில்கள் 2000 ஆண்டுகளுக்கும் முன் கூட ஏற்புடையதாகக் கருதப்படவில்லை. இப்போது இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை, விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வானளவு உயர்ந்துள்ளன. ஏன் எனில்
1. அமெரிக்கா 3700 அடி நீரை உயரே ஏற்றித் தள்ளி மிசிசிபி நதியின் நீரை மேற்கு டெக்ஸாஸ் மற்றும் கிழக்கு மெக்ஸிகோ மாநிலங்கள் பயனுறச் செய்திருக்கிறது

2. ரசியாவில் வால்கா டான் 4000 அடிகளுக்கு மேல் நதி இணைப்பு இதை விடப் பெரிதாக நடந்தேறியிருக்கிறது.

3. ஐரோப்பிய நதிகள் இணைக்கப்பட்டு இன்று ஐரோப்பிய  பொருளாதாரச் சமூகம் ஏற்பட்டு ஈஈசி, பொதுவான பணத்தாளையும் நல்ல பொருளாதாரத் திட்டங்களையும் தக்க வைத்துள்ளது.

4. இந்தியாவை விட தட்பவெப்ப சூழலில், இயற்கை வளத்தில், மனித சக்தியில் மூளை முயற்சியில் தாழ்ந்த  தேசமெல்லாம் முன் நிற்க, நாம் ஏன் பின் நிற்கிறோம்?
நதிகளின் இணைப்பில்லாததால்தான்
நதிகளை தேசியமயமாக்காததால்தான்
கங்கை காவிரியை இணைக்காததால்தான்
அதற்கான முயற்சிகளை உதறித் தள்ளுவதால்தான்,
நதி நீரை கடலில் விரயமாக்குவதல்தான்.

உயர்வாக எண்ணு, வானமே இலக்கு என்ற சிந்தனையுடைய தானைத்தலைவர் , டாக்டர் அப்துலகலாம் இது பற்றி நிறைய அறிவுச் சேகரம் செய்துள்ளார். அவற்றை எல்லாம் பரப்ப படிக்க வேண்டும்.

தமிழகத்தில் 40% நிலம் நீர்ப்பாசனத்தை சார்ந்தது. 60% நிலம் வானம் பார்த்தது. மழை பொய்த்துவிட்டால் சுமார் 40,000 ஏரி, குளம், கண்மாய்கள் வறட்சியால் பாதிப்புற்று நிலத்தடி நீரும் இன்றி அதோகதியாகிவிடுகிறது.

அந்த 40% நீர்ப்பாசன நிலத்தில்80% கால்வாய்ப் பாசனத்துடன்  இறவைப்பாசனமாக உள்ளது. இதெல்லாம் பழைய புள்ளி விவரங்கள். இப்பபோது மாறியும் இருக்கலாம்...20 இலட்சம் கிணறுகளில் பாதி சுமார் 10.5 இலட்சம் கிணறுகள் பம்ப் செட்ட் இணைப்பில். இவற்றில் எல்லாம் சுமாரான வறட்சியின் போதே 2 மணி நேர நீர் இறைப்புக்குக் கூட நிலத்தடி நீர் இருப்பதில்லை. கடுமையான வறட்சி என்றால் சொல்லவே வேண்டாம். இதனிடையே ஏரிகள், குளங்கள், யாவும் பட்டா நிலங்களாகி வீடுகளாகி விடுவது வேறு அபாயகரமான வேடிக்கை. இரசாயன ஆக்ரமிப்பால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு கிணற்று நீரே பயன்படாது போவதும் அன்றாட வாழ்க்கை.

எனவே வரும் தலைமுறை வாழ வேண்டுமானால் நமது சங்கிலித் தொடர் சந்ததிகளுக்கு குடிக்க நீர் வேண்டுமானால் நதிகளை இணைப்பது தவிர வேறு மார்க்கம் இல்லை.வறுமையை ஒழிக்கப் பாடுபடுவது, சாதிமதம் ஒழிக்கப் பாடுபடுவது, கட்சிகள், அரசுகள், இயக்கங்கள், சேவை நிறுவனங்கள் இன்ன பிற சக்திகள் யாவுமே இணைந்து இந்த ஒரு மகத்தான பண்யை மட்டும் இந்தியாவில் நிறைவேற்றி விட்டால் மட்டும் போதும். இந்தியா அதன் பின் வரும் முதல் 10 ஆண்டிலேயே அமெரிக்காவை பின் தள்ளி உலகில் தனிப்பெரும் நாடாக சீனாவை எல்லாம் ஏன் என்று கேட்கும்.உலகை முதல் நாடாக நின்று வழி நடத்தும். இதில் எள்ளளவும் ஐயமில்லை. பாரதியின் கனவும், நேருவின் கனவும்,கலாமின் நினைவும் அற்புதமாக நிறைவேறும் மகாத்மாவின் பொற்பாதங்களில் உண்மையான சுதந்திரமும் அர்ப்பணமாகும்.

ஏதேதோ வழிகளில் நாட்டுக்கு உழைக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் கூட  இந்த ஒரு இணைப்புப் பணியில் இணைந்தால் பெருமையே மிகும்.


ல் பாராளுமன்றம், சட்ட மன்றங்களை எல்லாம் அஹிம்சை வழியில் உலுக்கி எடுத்து இந்த உன்னத அரிய அற்புதமான அமுதசுரபித் திட்டம் உருவாக செயலாக நிறைவேற உழைக்க வேண்டும்.
ஆம் உயிருள்ளவரை உழைக்க வேண்டும்.
அன்பர்களே வாருங்கள்!
விரயமாகும் நீரைத் திருப்பி திரவியமாக்குவோம்!.
வணக்கம். நன்றி...................கவிஞர் தணிகை.


...கவிஞர் தணிகை

ஆதாரஙகள்:
1. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்ட 1986ன் "கங்கை காவிரி இணைப்பு" கட்டுரைத் தொகுப்பு‍‍‍‍‍   திரு ஆர். நல்லகண்ணு.

2. விடுதலைப்போரும் திராவிட இயக்கமும். திரு பி. இராமமூர்த்தி

3. INDIA'S WATER WEALTH

4. தினமணி, இந்து, இல்லஸ்ட்ரேட் வீக்லி,பிளிட்ஸ் மற்றும் கிஸான் வேர்ல்ட் பத்திரிகைகள் 50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட குறிப்புகள்
5. NDTV
6. ETC...

7 comments:

  1. மிகவும் தெளிவான தகவல்கள். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. thanks for your expression on this post Sivagnana pandiyan sir. vanakkam.please keep contact

      Delete
  2. thanks for your feedback on this post veka nari. vanakkam

    ReplyDelete