Sunday, March 27, 2016

சன்னி லியோன் வைகோ ஒரு ஒப்பீடு: கவிஞர் தணிகை.

சன்னி லியோன் வைகோ ஒரு ஒப்பீடு: கவிஞர் தணிகை.




பட்டி மன்றப் பேச்சாளர் லியோனி அல்ல இவர் பாலியல் நடிகை பாலிவுட் நடிகை சன்னி லியோன். 35வயது சன்னி லியோனுக்கும் 70 வயது வைக்கோவுக்கும் சில ஒற்றுமை பாருங்கள்...இருவருக்குமே தொலைக்காட்சிப் பேட்டி நிருபர் கேள்விகள் பெரும் தொல்லையாகி விடுகின்றன.இருவருமே தாங்கள் செய்வதை செய்ததை நியாயம் என்றும் கேள்விதான் இப்படி எல்லாம் கேட்கக் கூடாது என்றும் நிருபர்களை மிரட்டுகிறார்கள். மல்லைய்யா செய்தி போய் வைக்கோ செய்தி வந்தது டும் டும் டும்....என்ன வைகோ எழுந்து ஓடி விட்டார் தமது தாயகம் கட்சி அலுவலகத்திலிருந்தே,சன்னி லியோனோ அறைந்து விட்டு இல்லை இல்லை அடிக்கவில்லை, அவர் பத்திரிகையாளரே இல்லை என்கிறார்.

தற்காலத்தில் டேனியல் வெப்பர் இந்த சன்னி லியோனிக்கு கணவர் .ஆனால் லியோன் 16 வயதிலேயே தன் பெண்மையை இழந்தவர், 18 வயதில் இருபால் உறவுமே தனக்குப் பிடிக்கிறது என்றவர் ஆனாலும் ஆண்களின் உறவும் அதிகம் பிடிக்கிறது என்ற கன‌டாவில் 1981ல் பிறந்த இந்திய வம்சாவளிக் குழந்தை.நீலப்படம், பாலியல் படங்களின் நாயகி உலகின்  இந்த விதமான பட நாயகிகளில் முதல் 12 பேரில் முன்னணியில் இருந்தவர். எண்ணிறந்த பணிகள் எண்ணிறந்த முறைகளில் எண்ணிறந்த படங்களில் எண்ணிறந்தவர்களுடன் செயல்புரிந்த வீராங்கனை... இப்போது அப்படி எல்லாம் இல்லையாம். பாலிவுட் பம்பாயின் நாயகியாம்.பழைய வாழ்க்கை பற்றி எவரும் பேசக் கூடாதாம், கேள்வி கேட்கக் கூடாதாம்.அவரும் அனைவருமே அதை மறக்க வேண்டுமாம்.

 இணைய தளங்களில் கூட அந்தப் படங்களை உலாவுவதை இவரும் இவரது கணவரும் தடை செய்து விடுவார்கள் என நம்புவோம். எனவே அது பற்றி ஒரு இரவுக்கு உங்களின் விலை எவ்வளவு என்று கேட்ட நிருபரை அடித்தார் என்றும் அடிக்க வில்லை என்றும், அவர் நிருபரோ பத்திரிகை சார்ந்தவரோ இல்லை என்றும் வடக்கே ஏக களேபரச் செய்திகள். இவரும் இவரது உதவியாளரும்   இது பற்றி செய்தி தருகிறார்கள் நிறைய முரண்பாடுகளுடன்.

பொதுவாகவே இது போன்ற மகளிர் தாம் குளித்து முடித்து வந்து விட்டால் இனி இது போன்ற தவற்றை செய்யக்கூடாது என சத்தியப் பிராமணம் எடுத்துக் கொள்வார்களாம் அடுத்து வாய்ப்பும் உடலும் சுகம் கேட்கும் போது அதில் என்ன தவறு இருக்கிறது? பிறர்க்கு எந்த தவறும் செய்யவில்லையே என தமக்குள் சொல்லிக் கொள்வார்களாம். அப்படிப்பட்ட இயல்புதான் உண்டாம்.செய்யும் போது அதில் என்ன தவறு என்றும் சமாதானப்படுத்திக் கொள்வாராம். எல்லாம் உள்ளேதானே மனசாட்சி எல்லாம்... இவர் தற்போதைய கணவர் டேனியல் வெப்பர் என்பாரும், அந்த நிருபருக்கு இவர் கொடுத்த பதில் சரியானதுதான் என்று கூறியிருக்கிறாராம்.நல்ல கணவர் நல்ல மனைவி.



இது போல விலை என்ன எவ்வளவு கட்டணம் என ரேட்,பேரம் பேசுவது கேட்பது எல்லாம் செய்து கொள்ள கொடுக்க ஒரு தனிச் சேனல் தனி வழி அனைவருக்கும் இருக்கிறது நமது அரசு அலுவலர்கள் இலஞ்சம் பெறுவது, மந்திரிகள் பெறுவது, கட்சித் தலைவர்கள் தேர்தல் கூட்டணி சேர்வது இதற்கெல்லாமே...எனவே இவர்கள் இதை எல்லாம் பகிரங்கமாக ஊடகத்தில் பேசவும் முடியுமா? அடுத்தவர்களைப் பற்றி வேண்டுமானால் பேசலாம் நமைப் பற்றி பேச விடலாமா என்பதுவே வைகோ லியோனின் கொள்கை.

திருந்துவதற்கு எல்லாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் அதில் மாறுபட்ட கருத்து இல்லை. உண்மையாக திருந்தினால் வாழ்த்துகள்தான் ஆனால் செய்த கர்மம் தொடராமல் இருக்குமா?




வைக்கோ (வை கோ) கள்ளத் தோணியில் சென்று பிரபாகரனை சந்தித்து தி.மு.கவுக்கு தலைவலியாகி பின் அந்தக் கட்சியில் இருந்த பழம் நினைவோடு வெளி வந்தது முதல்...

தடா பொடா சட்டத்தில் அம்மா அரசு உள்ளே 2 ஆண்டு இருந்து வந்து பின் அவருடனே கூட்டு சேர்ந்து அதன் பின் தேர்தலில் நிற்காமல் இருந்து இப்போது மல்லைய்யா செய்தியை தமிழகத்தில் பின் தள்ளி முன்னணியில் வைகோ.

இவர் பீமராம், திருமா அர்ஜினராம், இவர்கள்  தர்மர் விஜய்காந்துக்கு ஒரு இடறும் வர விடமாட்டார்களாம், இவர்களை மீறி அவருக்கு ஒன்றும் நேர்ந்து விடாதாம். இவர்களுக்கு வேண்டும்போது வேண்டுமானால் புராணம் மஹாபாரதம் இதிகாசம் எல்லாம்..அப்படியானால் கிருஷ்ணர் யார் எங்கே மறைந்திருக்கிறார்? 



கேட்கிறார்கள் 1500 கோடி பற்றி கேட்கிறார்கள் எனில் அதற்கு உண்டான விளக்கம் அளித்து வாய்ப்பை பயன்படுத்தி
தனது நிலையை வெளிப்படுத்துவதை விட்டு விட்டு ஏன் ஓடவேண்டும்.. வைகோ, ஏன் லியோன் நிருபரை அடிக்க வேண்டும்....?

பிணத்தை வைத்துக் கூட அரசியல் செய்ததாக வைகோ மீது குற்றச்சாட்டு உண்டு...சசி பெருமாள் மரணத்தின் சான்று....அதன் இறுதி சடங்கு சான்று..எப்படி நீர் ஒரு புறம் மதுவுக்கு எதிராக போராடுகிறேன் என போராடிவிட்டு மறுபுறம் ஒரு மதுக்குடியரைத் தலைவராக அதுவும் முதல்வர் வேட்பாளராக ஆக்குகிறீர்?மநகூ என்றிருந்ததை கேநகூ என... கலிங்கத்துப்பட்டியில் தாயை வைத்து கூட மதுவுக்கு எதிராக போராடிவிட்டு, சசி பெருமாள் இலட்சியத்தை விடவே மாட்டோம் என சொல்லி விட்டு இப்போது எப்படி ஒரு மதுமக்கள் மான்மியத்தோடு?



தி.மு.க மட்டும் ஆட்சிக்கு வரவே வரக்கூடாது என குரோதம் காட்டுகிறார் இந்த வைகோ கனிமொழியின் மேல் பாரத்தை பழியை போட்டுவிட்டு கலைஞர் குடும்பம் தப்பித்துக்கொண்டது என 2ஜி அலைக்கற்றை விஷியத்தில் ஸ்டாலின் தான் பின் இருந்து இயக்கிய வர் என்கிறார் கனிமொழி கலைஞர் குடும்பம் இல்லையா?

எப்படியோ மது அருந்தூவோர் வாக்குகள் சுமார் 2 கோடியும் வாக்குப் பட்டியலில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள் சுமார் 1 கோடி பேரும் இந்த தேர்தலை நிர்ணயிக்கப் போகிறார்கள் .ஆனால் எவர் ஜெயித்தாலும் எவர் தோற்றாலும் வைகோவின் பேர் ரிப்பேர் இந்த தேர்தலில். ஏன் எனில் இந்த மனிதரின் சுய ரூபம் சன்னி லியோனின் சுய ரூபம் போல் வெளிப்பட்டு விட்டது.



ஒரு பக்கம் தனது மகன் சிகரெட் விற்பதில் தவறில்லை என அன்று கேள்வி கேட்ட நிருபரை எகத்தாளமாக சாடுகிறார், மறுபுறம் மதுவிலக்கு தமது கூட்டணியின் இலட்சியம் அதை இந்த தமிழக மக்களுக்காக வென்று தி.மு.க, அ.இ.அ.தி.மு.க கட்சிகளையும் ஓரம் கட்டுவது தமது இலக்கு என்கிறார்.மதுவிலக்கு அரசை நிர்மாணிப்போம் என்கிறார் ஒரு பக்கம் ஆனால் அதற்காக சினிமா நடிகர் மதுப் பிடியிலிருந்து தப்ப முடியாத தலைவர் விஜய்காந்தை முதல்வர் வேட்பாளர் என்கிறார். சட்டம் படித்த வைகோ சட்டப்படி பார்த்துக்கொள்ளலாம் என எதெற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். உணர்ச்சி அதிக உணர்ச்சி அறிவைக் கெடுத்து விட...




சாதாரணமாக பார்க்கும்போதே தெரிகிறது வைகோவிடம் உள் மறைவில் தவறு இருக்கிறது. ஏனைய கட்சிக்காரர்களிடம் இருப்பது போல எனவே இந்த மநகூ அல்லது கேநகூ அல்லது விஜய்காந்த் அணி அமைப்பாளர் வைகோவும் சன்னி லியோனியும் ஒன்று போலவே காட்சி தருகிறார்கள்.வேறுபட்ட துறைகளில் சினிமா, பாலியல் படங்கள், விளம்பரம், அரசியல் என பல்வேறுபட்ட‌ தளங்களில் இருவரும் வாழ்க்கைப் பயணம் நடத்திய போதும்...

 இவர் நடத்திய மதுவிலக்கு நடைப் பயணத்தின் போது அம்மா ஜெயலலிதாவும் இவரும் சிரித்து பேசிக் கொண்டதை நாடு கண்டது. அம்மா தவிர வேறு யாருமே அந்தக் கட்சியின் பிரமுகர்கள் அம்மாவின் ஆணையின்றி வேறு எந்தக் கட்சிக்காரர்களுடனும் சிரித்துப் பேசுவது அனுமதிக்கப்படுவதேயில்லை என்பதும் யாவரும் அறிவோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

8 comments:

  1. மிகவும் சவாலான ஒப்பீடு ... ஆனால் யாராலும் மறுக்கமுடியாது சகோ...

    ReplyDelete
    Replies
    1. thanks Shanthy Babu for your feedback on this post. vanakkam. please keep contact.

      Delete
  2. கேந ( கேன )கூட்டணி என்றும் உச்சரிப்பு வருகிறதே

    ReplyDelete
    Replies
    1. yes you are right ponniyinselvan/karthikeyan it is captain welfare front in tamil captain nalak koottani..anyhow thanks for your feedback on this post. vanakkam.please keep contact.

      Delete
  3. வைகோ மிக அவலமான பேர்வழி. மக்களை உணர்ச்சி பேச்சு பேசி உருப்படியாக எதையும் செய்யாமல் இருப்பதில் வல்லவர். தேர்தல் நேரங்களில் மிக பெரிய கோடிகளில் கல்லா கட்டி வருவது மக்களுக்கு தெரிவதில்லை. சிறு கட்சிகளும் பல் கோடிகளில் பணம் பார்கிறார்கள். இதற்க்காகவே பலரும் கட்சி நடத்துகின்றனவோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. yes really you understood our TN and Indian politics very well ssk tpj.thanks for your feedback on this post. vanakkam. please keep contact with the addition of your comment on this post I am giving my link to your watch:
      http://thanigaihaiku.blogspot.in/2016/03/walking-cattle.html

      Delete
  4. //எவர் ஜெயித்தாலும் எவர் தோற்றாலும் வைகோவின் பேர் ரிப்பேர் இந்த தேர்தலில்.// உண்மை... ஒவ்வொரு தேர்தல் தோல்வியின் போதும் வை.கோ. மீது ஒரு அனுதாபம் அனைவருக்கும் உண்டாகும். (இவர் மட்டுமாவது வென்றிருக்கலாமே என்று) இந்த தேர்தலில் அதையும் இழப்பார்.

    ReplyDelete
    Replies
    1. thanks A.Rathinakumar for your feedback and comment on this post.vanakkam.well said. please keep contact.

      Delete