Saturday, March 19, 2016

தமிழக முதல்வரும் மே.வங்க முதல்வரும் சந்திக்கிறார்கள்(இது ஒரு நகைச்சுவைக் கற்பனை சந்திப்பு) கவிஞர் தணிகை

தமிழக முதல்வரும் மே.வங்க முதல்வரும் சந்திக்கிறார்கள்(இது ஒரு நகைச்சுவைக் கற்பனை சந்திப்பு) கவிஞர் தணிகை

அக்கா நல்லா இருக்கீங்களா? 
அக்கான்னு சொல்லாதே மமதா, மமதையில்,அம்மான்னு சொல்லு...CM of Tamil Nadu இல்லை தமிழ் நாட்டு சி.எம்னு சொல்லு அதென்ன அக்கா சொக்கானு அதெல்லாம் பிடிக்காது.

எனது தமிழ் வம்சத்தில் பிறந்த என் சம்பந்தி சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மன் பேனர்ஜி துரையை எப்படி வீரமாக எதிர் கொண்டார் என்று உனக்குத் தெரியாது..

 என்ன விட 7 வயசு சின்னவ  நீ. இருந்தாலும் நீ கூட முதல்வராயிட்டியே? 2 ஆம் முறை முதல்வராயிடுவியா? நிலை எப்படி?மே.வங்கத்தில்..

மறுபடியும் முதல்வர் ஆயிடுவேன்னுதான் நினைக்கிறேன், எங்க அதுக்குள்ள இந்த கம்யூனிஸ்ட் தொந்தரவும், நாரதர் தொந்தரவும் அதிகமா இருக்க,



எப்படி நீ தேர்தல் அறிவிச்ச ஒரு மணி நேரத்திலேயே வேட்பாளர் போட்டுட்டே எல்லாத் தொகுதிக்கும்?

எல்லாம் எதிர் கால தொலை நோக்குத்தான் அம்மா...

அதெல்லாம் சமாளிச்சிடுவேன் சுலபமா, ஆனால் எங்க ஆளுங்க வாங்கற கொஞ்ச இலஞ்சமும் வெளியே காண்பிக்கிறான், நீங்க எப்படித் தான் பல்லாயிரம்கோடி  வாங்கி விஷியம் வெளி வராத சமாளிக்கிறீங்களோ?

என்னது என்னது? ...



பல்லாயிரம் இலட்சம், கோடி என வாக்கு வாங்கி சமாளிக்கிறங்களோன்னு கேட்டேன்.. 

எல்லாம் அடிமைங்க செய்வாங்க...எல்லாமே அம்மா வரட்டுன்னு காத்திருப்பாங்க...என் பேர் எல்லாவற்றிலும் இருக்கும் என் படம் எல்லாவற்றிலும் சிரிக்கும். ஆனால் நான் சம்பளம் கூட வாங்குவதில்லை ஏழைக்காகவே வாழ்கிறேன். ஏழைகளின் குழந்தைகளின் பிஸ்கட் வாங்கத்தான் இப்போது கூட சம்பளம் வாங்குகிறேன். என் பேர் இலஞ்சம் ஊழல் எதிலுமே இருக்காது. உச்ச நீதிமன்றம் கூட விட்டு விடும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது..

உங்களை பிரதமராக இருக்கலாம் என அப்போதே வரவேற்றேன், 2014ல் ஆனா இந்த மோடி விடலை. என்னதான் இருந்தாலும் பெரியவங்க பெரியவங்கதானே?இப்போ நீங்க அடுத்த முதல்வராக வாய்ப்பிருக்கா?

அந்த டில்லி வழக்கும், அந்த உச்சிக் குடுமி நீதி(மன்ற) குமாரசாமிகளை எல்லாம் சும்மா கண்ணடிக்கும் நேரத்தில் விலைக்குவாங்கிடுவேன் ஆனா(ல்)  இந்த வீணாப்போற தமிழக குடிகார மக்களும் இந்த முறை என்ன செய்யுதுங்களோ?ஆனாலும் எல்லாக்கட்சிகளும்  தனித் தனியா நிக்கற நம்பிக்கை . ஸ்கோப் நிறைய இருக்கு பார்ப்போம் ...

நீ 
என்ன ஸ்லிப்பர் எல்லாம் போட்டுக்கிட்டு தினசரி மார்க்கெட்டுக்கு நீயே போறியாமே? எங்க‌ பேரையே கெடுத்து விடுவாய் போலிருக்கே?

நீங்க சென்னை வெள்ளம் வந்தப்பக் கூட கால் பதிக்கலையாமே?

எங்க போனாலும் எனக்கு ‍விமானம் வேண்டும், குறைந்தது ஒரு ‍ஹெலிகாப்டராவது வேணாமா?

எனக்கு அதெல்லாம் வேண்டாம், கம்யூனிஸ்ட் மட்டும் மறுபடியும் தலை எடுக்காமல் இருந்தால் போதும்...

உங்க பிரண்ட் விஜய் மல்லைய்யா பெரிய செய்தி ஆயிட்டாரே? 

உதிர்ந்த மறைந்த கிங்க் பிஷர், கிக் பிஷர் நியாயம் எல்லாம் வேண்டாம். மை பிபி வில் பீ ரெய்ஸ்ட்...(I am very concern about my health and BP)

உன் கட்சியில் இருந்த பிரணாப் குடியர‌சுத் தலைவராய் ஆயி பீரியட் முடியபோகுது, நீ வெறும் ரெயில்வே மந்திரி, முதன் மந்திரியோட சரியா? பெரிய ஆசையே இல்லையா?
நீ ஆதரித்த அப்துல் கலாம் "லோ எய்ம் இஸ் கிரைம்னு"(Low Aim is Crime) சொல்லலையா அதெல்லாம் உனக்கு சொல்லிக்கொடுக்கலையா?

இல்லம்மா அதெல்லாம் உங்களுக்குத்தான் சரிப்பட்டு வரும், எனக்கு இந்த மேற்கு வங்க முதல்வராகவே மறுபடியும் ஆனா போதும், நீங்க உங்க எம்.ஜி.ஆர் தலைவர் மாதிரி மறுபடியும் இந்த முறை தொடர்ந்து ஜெயிப்பீங்களா?

இந்த சென்னைக் கோட்டை இல்லைன்னா என்ன பெங்களூரு, டில்லின்னு இருக்கவே இருக்கு....

ஓகே பை டைம் ஓவர், வெயில் தாங்கலை
கொட நாடு எஸ்டேட் கிளம்பறேன்
இந்த முறை ஜெயிச்சவுடன் தமிழகத் தலைநகராக கொடநாடு எஸ்டேட் இருக்கற ஊட்டியை பண்ணிடறேன்...வெயில்காலத்துக்கும் எல்லாக்காலத்துக்கும் ஏற்றதா இருக்கும்

உங்களுக்கென்ன தமிழகத்துக்கே கடவுள் நீங்கதானே?எல்லாம் செய்யலாம். எங்கும் நிறைந்த ஏகாந்த சக்தி... எனக்கு நிறைய வேலை இருக்கு. நீங்க சுற்றுப்பயணம் போகமலே ஜெயிப்பீங்க,,, எனக்கு நிறைய தேர்தல் வேலை இருக்கு பம்பரமா 2 மாதம் சுற்றவேண்டும்... அதுவும் இந்தக் கோடையில...கொடையில இல்ல...

அக்கா சாரி அம்மா டில்லி வந்தா டார்ஜிலிங் வாங்க,பெங்களூர் வந்தா மைசூரு போற மாதிரி...
எல்லாம் வரலாம் தான் ஃபிரி(Free) ஆனா,இந்தமுறை தமிழக மக்கள் ஃபிரி(Free) பண்ணிடுவாங்கன்னுதான் நினைக்கிறேன்.

ஆனா இந்த சசி சரியா புரொகிராம்(program) பண்றதேயில்லை...பார்ப்போம்..பை..

பைம்மா..

அக்காவும் சாரி(Sorry) அம்மாவும் தங்கையும் சாரி (sorry)மகளும் ஆளுக்கொரு ஸ்டேட் கையிலிருக்கும் தெம்போடு பிரிந்து போகிறார்கள். மறுபடியும் மே..19க்கும் பின் எப்படி சந்திக்கிறார்கள்னு பார்ப்போம்.

Actually all conversation taken place in English only between them.. Both are well versed in English.We only translated all dialogues in our thaminglish for the sake of our post to read you.
thanks. vanakkam.

It is 100% imaginary.with no intention to indicate any leader with motive or  political credits. Author is non- political non-religious and secular.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

thanks: Narada news
facebook.com &
Sasikumar.





No comments:

Post a Comment