Saturday, December 16, 2017

நம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே? கவிஞர் தணிகை.

நம்பத்தான் முடிவதில்லை ஆனால் நடந்தது உண்மையாயிற்றே? கவிஞர் தணிகை.

Image result for tharamangalam kailasanathar kovil

அவர் 6 அடிக்கும் மேல்4 அங்குலம் உயரமாக‌ இருக்கும் மிகவும் பலமான எரக்டான தேக அமைப்புடன் இருப்பார்  மிலிட்டரியில் இருந்து ஓய்வு பெற்றவர் விக்னேஷ்வரன் என்றாலே எல்லா ஓய்வு பெற்ற ராணுவத்தார்க்கும் தெரியும்.அது மட்டுமல்லாமல் ஊரில் அனைவர்க்கும் தெரியும். சரியான உயரம் அதற்கேற்ற பருமன். ஸ்ட்ராங்கான தேகம். அவரைப் பார்ப்பார் மற்றொரு முறை பார்க்கும் அளவு மனிதர் இருப்பார். . எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.

அவர் மிலிட்டரி  சர்வீஸ் முடிந்த கையுடன்  தமது சொந்த ஊரில் ஒரு ஹோட்டலை நடத்த ஆரம்பித்தார். அதற்கு  மல்லிகை அதுதான் அவர் துணைவியின் பெயர் ...எல்லாவகையிலும் ஹோட்டல் தொழிலில் உறுதுணையாக இருந்தார். அவரின் வளர்ப்புத் தந்தை அண்ணாமலை என்பதாலும் அந்த ஊர் தி.மு.க , அ.தி.மு.கவுக்கு பெரும் பற்றுடன் அறிஞர் அண்ணா அங்கு வந்து தங்கி சென்ற பெருமை பெற்றதாலும் அந்த ஹோட்டலுக்கு அண்ணா ஓட்டல் என்றே பேர் வைத்தார். அது இப்போது மல்லிகை மளிகை என்று காலத்தால் மாறி இருக்கிறது. ஆனால் அது என்னதான் அண்ணா ஓட்டல் என்று பேர் இருந்தாலும் மிலிட்டரிக்காரர் ஓட்டல் என்றுதாம் அந்த ஊர் மக்களிடையே பிரபலம்.

 அந்த ஊர் பெரும்பாலும் நெசவுத் தொழிலை மையமாகவே வளர்ந்து வளர்த்த ஊர். மிகவும் பிரசித்த சிவத்தலமான கைலாய நாதர் ஆலயம் அங்குதான்  உள்ளது .தாரமங்களம் என்பது அந்த ஊரின் பேர்.அங்குள்ள மக்களுக்கு காலையில் தேநீர் அருந்த வில்லை எனில் நாள் விடிந்ததாகவே இருக்காது. ஆளொன்றும் தேநீர் வீட்டுக்கு வாங்குவதற்கு சொம்பு ஒன்றுமாகவே இருப்பார்கள். ஹோட்டல் மற்றும் தேநீர்க் கடைகளில் ஆண்கள் , பெண்கள், சிறுவர் கூட்டம் நிரம்பி வழியும்.

Related image

அந்த ஊரில் உள்ள கைலாய நாதர் ஆலயம் மிகவும் பெருமை உடையது.கெட்டி முதலியார் என்ற ஒரு சிற்றரசரால் கட்டப்பட்டது. அதில் உள்ள யாழி வாயில் கல், சுழலும் கல்லாலான விதானத்தின் உச்சியில் இருக்கும் ஆகயத் தாமரை, ரதி மன்மதன் சிலை, ஆயிரம் லிங்கேஸ்வரர், மாபெரும் வரவேற்கும் கல்லால் ஆன இரண்டு யானைகள், சூரியனின் கதி தை மாதத்தில் சிவலிங்கத்தின் மேல் விழும் ஒளிக் கீற்று மூலஸ்தானம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் அதல்லாமல் ஒரு எண் கோண வடிவ குளமும் அந்த ஊரின் பிரபலமான இடம்...அது மட்டுமல்லாமல் மற்றும் ஒரு காய்கறி மார்க்கெட் அருகே உள்ள அந்தக் காலத்தில் அனைவரும் காலைக்கடன் முடித்து விட்டு வந்து கால் அலம்பிச் செல்லும் இடமாக குளமாக இருந்த அந்தக் குளம் கூட மிகுந்த கற் சிலை வேலைப்பாடாகவே அமைந்திருந்தது.

அன்றைய சிற்பிகள் எல்லாம் எந்தக் கோவில் வேலைக்கு சென்றாலும் தாரமங்கலம், தாடிக்கொம்பு வேலை தவிர மற்ற எந்த சிறப்பான சிற்ப வேலைகளும் செய்து தரப்படும் என்ற ஒப்பந்தம் இட்டுத்தான் கோவில் திருப்பணிகளை ஆரம்பிப்பார்களாம். அப்படிப்பட்ட ஊர் ஆனால்  இங்கு நமது கதாநாயகர் பற்றி சொல்ல வந்து விட்டு ஊர் புராணம் பாட ஆரம்பித்து விட்டால் அது நல்லா இருக்காது அல்லவா?

விக்னேஸ்வர் தமது வளர்ப்புத் தந்தை கொடுத்த இடத்தை ஹோட்டல் தொழிலுக்கு பயன்படுத்த ஆரம்பித்தார் . மர பெஞ்ச்கள் மர டேபிள்கள்தான். ஒரு மர பீரோவும் கண்ணாடி இடப்பட்டு ஈ கொசு மொய்க்காமல் உணவுப் பொருளை வைக்க நடுவில் நிறுத்தப்பட்டு இருக்கும். டீ போடும் மேஜை முன்னால் இருக்கும் அதற்கும் பின்னால் மற்றும் இரு டேபுள்கள் அதன் மேல் காலையில் இடப்படும் வடை, தயிர் வடை போன்றவையும், பட்டானி சுண்டல் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். மலை போல சுட்டு வைத்திருப்பார்கள் மட மட வென காலி ஆகி விடும்.

அந்த பீரோவுக்கு பின் வரும் வாயில் வழியே பின்னால் வந்தால் பெரிய ஒரு உணவு தயாராகும் அடுப்படி.மாதேஸ் டீ மாஸ்டர், நாயர் சரக்கு மாஸ்டர், 4 அண்ணாமலை, பச்சையப்பன், படிமானம், இடிச்ச புளி அதல்லாமல் அப்போதெல்லாம் அரிசி , உளுந்து ஆட்ட என்ற பெரிய உரல்களில் மாவு ஆட்ட இரண்டு பெண்கள், அவர்களுக்கு உதவ கமலா என்ற சிறுமி இதுதான் இவர்கள் ஓட்டல் டீம் . அதன் பின் கொஞ்ச காலத்தில் கோவையிலிருந்து அரிசி உளுந்து ஆட்ட பெரிய இரண்டு கிரைண்டர்களை தருவித்துக் கொண்டார் . அந்த பணிக்கூடத்தை அடுத்து ஒரு ஸ்டோர் ரூம். சரக்கு மூட்டை மூட்டையாக அடுக்கப்பட்டிருக்கும்.அதுதான் பெரும்பாலும் அந்தக் குடும்பத்தின் படுக்கை அறையும். அவரும் அவரது மனைவி மல்லிகையும், ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண்குழந்தையும் அதுதான் அவரது குடும்பம். மற்றபடி உற்றார் ஊரார்க்கு எல்லாம் குறைவே இல்லை. அவர்களுடன் அவ்வப்போது பள்ளி விடுமுறையில் எல்லாம் மல்லிகையின் தம்பி பேரரசு வந்து அவரகளுக்கு உதவுதலும் உண்டு.

திடீர் திடீர் என டீ மாஸ்டர் வர மாட்டான், உடனே இவரே சைக்கிள் எடுத்துக் கொண்டு போய் அவன் இருககானா வருவானா வரமாட்டான என்று பார்த்துவிட்டு வந்து டீ போட ஆரம்பித்து விடுவார். அவ்வளவு பெரிய ஜெய் ஜாண்டிக்காக இருப்பார் சைக்கிளில் போவது பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் அவர் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படவே மாட்டார். 10 மணியாகிவிடும்  கடையை 8 மணிக்கெல்லாம் மூடிவிட்டாலும் காலை 3 மணிக்கே எழுந்து பாய்லர் வைத்து நெருப்பு போட ஆரம்பித்து விடுவார். சமையலரையில் முக்கியமான வேலைகள் எல்லாம் நடக்க ஆரம்பித்து விடும். 

புதன் , வியாழன் , ஞாயிறு  ஆகிய நாட்களில் அசைவ உணவும் உண்டு. அது ரொம்ப ஃபேமஸ். காரணம் அந்த அசைவ உணவை மட்டனை  குழம்பை மல்லிகையே தமது கை வண்ணத்தில் சமைத்துக் கொடுப்பார். மதியம் 2 மணிக்கெல்லாம் 12 மணிக்கு ஆரம்பிக்கும் அசைவக் கறி விற்பனை எல்லாம் முடிந்து தீர்ந்து விடும். அதன் பின் வருவார்க்கு இலவசமாக குழம்பு மட்டும் கிடைக்கும்.

அந்த சரக்கு மாஸ்டர் நாயர் கூட திடீர் திடீர் என லீவு எடுத்துக் கொள்வார் அப்போதெல்லாம் இவரது துணைவி மல்லிகையே கமலா போன்ற பெண்களின் உதவியோடு சமைத்தும், முன்னால் உள்ள சப்ளையர், மாஸ்டர்கள் உதவியுடன் சாப்பாடு, டிபன், எல்லாம் தயார் செய்து கொடுத்து விடுவார். ஆனியன், முட்டை ரோஸ்ட், ரோஸ்ட், தோசை, இட்லி , ஆம்லெட் எல்லாமே பறக்கும் நிற்காது...

அந்த ஊரில் உயர் நிலைப்பள்ளி, அங்கு நடக்கும் என்.சி.சி. மாணவர்களுக்கான பரேட் நடக்கும்போது உணவு எல்லாமே மிலிட்டரிக்காரர் கடையிலிருந்துதான் சப்ளை. ஊரில் எந்த விஷேசம் நடந்தாலும், எந்தக்கட்சிக்காரர் வந்தாலும் முகம் கோணாமல் நன்கொடை கொடுப்பதும் வேலை செய்வார்க்கு கொடுத்து விடுவதும் இவரது நற்பண்புகள்....என்னங்க இப்படி என இவரது மனைவி தடுத்தாலும் அப்பதான் வேலை செய்ய வருவாங்க அதற்கெல்லாம் தயங்கவே கூடாது என்பார்.

எப்போதும் லீ பஜார், செவ்வாய்ப்பேட்டை எல்லாம் சென்றுதான் சரக்கு எடுத்து வருவார். ஆர்டர் கொடுத்து வந்து விட்டால் மூட்டை மூட்டையாக அப்போதெல்லாம் மாட்டு வண்டியில் வந்து இறங்கும், அதன் பின் கொஞ்ச காலத்தில் மாட்டு வண்டிப் பழக்கம் குறைந்து லாரிகள் அந்த வேலையை செய்ய ஆரம்பித்தன. அந்த மூட்டை தூக்குவார் எல்லாம் கூட இவரது கடையில் தான் சாப்பிடுவார்கள், மேலும் போர்வெல் போடுவார் வன இலாகாவினர் இப்படி எல்லாமே. அங்குதான் அக்கவுண்ட் எல்லாம் வைத்துக் கொள்வார்கள்.Image result for tharamangalam kailasanathar kovil



இப்படி சென்று கொண்டு இருக்கும் காலத்தில்  ஒரு நாள் ரூபாய் தொண்ணூறு ஆயிரத்துடன் சரக்கு எடுக்க லிங்கன் வண்டியில் சேலம் சென்றவர் மறுபடியும் வீடு, கடைக்குத் திரும்பவேயில்லை...காரணம் எவருக்கும் தெரியவுமில்லை.

நாட்களும் நேரமும் செல்வது பெரும்பாடாக இருந்தாலும் மல்லிகை கடை நடத்துவதை மட்டும் விடாமல், பள்ளிகளுக்கு பிள்ளையை அனுப்புவதும் இடைப் படாமல் தமது தம்பிகளை அழைத்து பிரச்சனையை அணுகச் சொல்ல  முதலில் காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கப்பட்டது அதன் பின் தினசரிகளில் படம் கொடுக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டது.

ஒரு நாள் சென்னைத் தொலைக்காட்சியில் தூர்தர்ஷனில் அவரது படத்தை வெளியிட்டு காணாதார் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட அந்த நேரத்தில் எங்கோ சென்றிருந்த அவர் தாமாகவே வீடு வந்து சேர்ந்து அந்த விளம்பரத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.

இடையில் ஏற்பட்டது என்ன என்பது தெரியவில்லை என்றும், அவருக்கு சுய நினைவு வந்தபோது அவர் டில்லி அருகே ரெயிலில் சென்று கொண்டிருந்ததாகவும் அதன் பின் எல்லாம் சுய நினைவு வர அங்கிருந்து மிலிட்டரிக்காரர் என்பதாலும் மொழிப்பிரச்சனை இல்லை என்பதாலும் சுலபமாக வீடு திரும்பி விட்டார் என்றும் அவர் சொன்னார். ஆனால் அவர் கொண்டு சென்ற பணம் 90 ஆயிரம் போனது போனதுதான்.

இடையில் சேலம் காவல் நிலையம், நாலு ரோடு, அன்டர் கிரவுண்ட் வோர்ல்ட் , பிக் பாக்கெட் நபர்கள் கூட்டம் அனைவரிடமும் தொடர்பு கொண்டு இவரைப்பற்றி அலசி அலசிப் பார்த்தும் இவரைப்பற்றி துப்பு ஏதுமே கிடைக்காமல் போயிருந்தது. பக்கத்தில் உள்ள பூக்கடைக்காரர்கள், சைக்கிள் கடைக்காரர்கள் எல்லாம் கூட இவரது மைத்துனர் பேரரசுவின் யமஹா பைக் ஓய்வில்லாமல் அலைந்தது பற்றி மலைத்துப் போனார்கள். ஆனால் அவரது போட்டிக் கடைக்காரர் எல்லாம் மனதுள் மகிழ்ந்தாலும் மிலிட்டரிக்காரர் பற்றி நல்ல எண்ணமே வைத்திருந்ததால் வருத்தப்படுவதாகவே காணப்பட்டார்கள்.

ஆனால் அந்தக் கட்டத்தை மிகவும் துணிச்சலுடன் சமாளித்த அவரது துணைவியார் மல்லிகையை எவருமே பாராட்ட அவர் இடம் கொடுக்கவில்லை என்றாலும் ஆண்கள் பலமிழக்கும்போது குடும்பத்தை பலத்துடன் கட்டிக் காக்க வேண்டியவர்கள் பெண்கள்தாம் என்பதை ஒரு வீரமங்கையாக தைரியத்துடன் அந்தப் பெண் கையாண்டிருக்கிறார் அந்த ஒரு ஆபத்தான கட்டத்தை.Image result for tharamangalam kailasanathar kovil



ஆனாலும் அது எப்படி நடந்தது? அவருக்கு அன்று என்ன நடந்தது என்பது எவருக்குமே தெரியவில்லை.

மறுபடியும் பூக்கும் வரை.

கவிஞர் தணிகை



Thursday, December 14, 2017

நம்பினால் நம்புங்கள்: கவிஞர் தணிகை

நம்பினா நம்புங்கள்: கவிஞர் தணிகை


ஒரு மனிதருக்கு 31 யானைகள் செலுத்திய அஞ்சலி! #FeelGoodStory

உன்னை அறிந்தால்
சில நினைவுகள் மறக்க முடியாதவை; எப்போது நினைத்தாலும் உயிர்ப்போடு இருப்பவை; இதயத்தைத் தொடுபவை’ என்கிறார் அமெரிக்காவின் பிரபல பிசினஸ்மேன் ஜோசப் பி வ்ரித்லின் (Joseph B. Wirthlin). அதுபோன்ற நினைவுகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும். ஒரு பெரிய பிரச்னை, ‘தலை மேல் கத்தி’ என்பார்களே... அதுபோன்ற ஆபத்து... நம்மை அதிலிருந்து காப்பாற்றுகிறார் ஒருவர். அவரை, அந்த உதவியை நம்மால் மறக்க முடியுமா? அதற்காகக் காலம் பூராவும் அவருக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருப்போம். `நன்றி செலுத்துதல்’ குணம் நமக்கு மட்டுமானதல்ல... எல்லா உயிரினங்களுக்கும் இருக்கும் பொதுவான ஒன்று. ஒரு பேராபத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிய மனிதருக்கு நன்றி செலுத்த, யானைகள் கூட்டமாக நடந்துசென்ற கதை கொஞ்சம் நெகிழ்ச்சியானது. பார்க்கலாமா?
யானை
அது, 2012-ம் ஆண்டு. அந்த அபூர்வமான நிகழ்வு நடந்தது, தென்னாப்பிரிக்காவில்! ஒன்று, இரண்டல்ல... மொத்தம் 31 யானைகள். எல்லாம் சேர்ந்து ஒரு பயணம் நடத்தின. விஷயம் வேறு ஒன்றுமில்லை. அந்த யானைகளுக்குப் பிரியமான ஒரு மனிதர் இறந்துபோனார். அவருக்கு நன்றி செலுத்துவதாக யானைகள் எல்லாம் ஒரு பெண் யானையின் தலைமையில் ஒன்று சேர்ந்தன. சரி... அவற்றுக்கு எப்படி அவர் இறந்துபோன விவரம் தெரியும்? இதற்கு இயற்கையைக் கையைக் காட்டுவதைத் தவிர வேறு பதிலில்லை. மனிதர்களைவிட யானைகளுக்கு கூர்மையான அறிவும் புலனுணர்வும் உண்டு. தங்களையும் பல விலங்குகளையும் காப்பாற்றிய ஹீரோ அவர் என்று யானைகள் நம்பிக்கை கொண்டிருந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கைதான், லாரன்ஸ் அந்தோணி (Lawerence Anthony) என்ற பிரியத்துக்குரிய அந்த மனிதர் இறந்துபோனதை அவற்றுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.
லாரன்ஸ் அந்தோணி, எழுத்தாளர், சூழலியலாளர், யாத்ரீகர். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் 1950-ம் ஆண்டு பிறந்தார். அவருடைய தாத்தா காலத்தில் அவரின் குடும்பம் இங்கிலாந்திலிருந்து சுரங்க வேலையின் பொருட்டு ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்திருந்தது. லாரன்ஸ் அந்தோணியின் தந்தை இன்ஷூரன்ஸ் வேலை செய்துகொண்டிருந்தார். அந்தோணி, ஜாம்பியா, மாலாவி, ஜூலுலேண்ட்... என ஆப்பிரிக்காவின் பல ஊர்களில் வளர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவைப்போலவே இன்ஷூரன்ஸ் வேலை செய்தார். கூடவே ரியல் எஸ்டேட் பிசினஸும் செய்துகொண்டிருந்தார்.
அவர் இருந்தது அடர்ந்த காட்டுப்பகுதி. ஒருமுறை ஒன்பது யானைகள் கொண்ட குழுவை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றி, பத்திரமாகக் காட்டுக்குள் அனுப்பிவைக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அது மட்டும் நடக்கவில்லையென்றால், அவை வேட்டையாடப்பட்டு, இறந்துபோயிருக்கும். அதுதான் அவர் வாழ்க்கையில் மிக முக்கியமான புள்ளி. அன்றைக்கு யானைகளை காட்டுக்குள் போகச் சொல்ல, தன் உடல்மொழியையும் குரலையும் பயன்படுத்தினார். அந்த அனுபவத்தை மையமாக வைத்துத்தான் பின்னாளில் `எலிஃபென்ட் விஸ்பரர்’ (Elephant Whisperer) என்ற நூலாக எழுதினார். அது விற்பனையில் சக்கைபோடுபோட்ட `பெஸ்ட் செல்லர்’ புத்தகம்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யானைகளுக்கு, மனிதர்களால் எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்க ஆரம்பித்தார். பல யானைகளையும், விலங்குகளையும் காப்பாற்றினார். யானைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கச் செய்தார். அவற்றில் முக்கியமான ஒரு சம்பவமும் உண்டு. 2003-ம் ஆண்டு அமெரிக்கா, ஈராக்மீது படையெடுத்தபோது, பாக்தாத் நகரில் இருந்த ஜூ-வில் இருந்த விலங்குகளைக் காப்பாற்ற ஓடினார். அந்த ஜூ, மத்தியக் கிழக்கு நாடுகளிலேயே மிகப் பெரியது. அங்கே சுமார் 700 விலங்குகள் இருந்தன. அமெரிக்கா குண்டு வீசியதில், 35 மட்டுமே உயிர்பிழைத்திருந்தன. கூண்டுகளில் தண்ணீரும் உணவும் இல்லாமல் கிடந்த அந்த விலங்குகளில் சிங்கம், புலி, கரடி போன்றவையும் அடக்கம். அமெரிக்க எதிர்ப்பையும் மீறி, தைரியமாக அவற்றைக் காப்பாற்றினார். 2012, மார்ச் மாதம் லாரன்ஸ் அந்தோணி இறந்துபோனார்.
லாரன்ஸ் அந்தோணி
காட்டில் இரண்டு குழுக்களாக அந்த யானைகள் பிரிந்திருந்தன. தாங்கள் நேசித்த, தங்களை நேசித்த ஒரு மனிதரின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவை அமைதியாக, அந்த மனிதரின் வீடு நோக்கி நடந்தன. தென்னாப்பிரிக்காவில் இருந்த லாரன்ஸ் அந்தோணியின் வீட்டுக்கு அவை 12 மைல் தூரம் நடந்தே சென்றன. வழியில் எந்த மனிதரையும் அவை கவனிக்கவில்லை. மனிதர்கள்தான் இவற்றைக் கவனித்தார்கள். கூட்டமாக, துளிச் சத்தமில்லாமல் இவை எங்கே போகின்றன என்று ஆச்சர்யப்பட்டார்கள்; சிலர் பின்தொடர்ந்தார்கள்.
31 யானைகளும் வரிசையாக, ஒரே சீராக நடந்தன. தங்கள் நண்பருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்கிற ஒரே எண்ணம் மட்டும்தான் அவற்றுக்கு இருந்திருக்க வேண்டும். அந்தோணியின் வீட்டை அடைந்ததும், அமைதியாகச் சுற்றி நின்றுகொண்டன. அந்த யானைகள் வீட்டை ஏதாவது செய்துவிடுமோ, தங்களைத் தாக்கிவிடுமோ என்று அங்கிருந்த சிலர் பயந்தார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. இரண்டு பகல், இரண்டு இரவுப் பொழுதுகள்... அந்த யானைகள் துளி புல்லைக்கூடச் சாப்பிடாமல் அங்கேயே இருந்தன. பிறகு, மிக அமைதியாக தங்கள் காடு நோக்கித் திரும்பிச் சென்றன.
அவை போன பிறகு, அந்தோணியின் மனைவி, ஃபிரான்கோய்ஸ் மால்பி (Francoilse Malby) சொன்னார்... “இதுக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு எந்த யானையும் வந்ததில்லை. இதுங்களுக்கு எங்க வீடு எப்படித் தெரியும்னு ஆச்சர்யமா இருக்கு.”



இன்றைய சேதி:

ராதா கிருஷ்ணன் நகர்

ஜனநாயக கேலிக்கூத்து இந்த ஆர்.கே நகர் தேர்தல். தேர்தலை நிறுங்க, அல்லது இப்படிப் பட்ட ஜனநாயகத்துக்கு மாறாக மாற்று வழி என்ன என யோசியுங்க, செயல்படுத்த...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Wednesday, December 13, 2017

இராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா? கவிஞர் தணிகை

இராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தடை நோக்கியா? கவிஞர் தணிகை



Image result for rajanayagam loyola college
லயோலாவின்  இராஜநாயகம் தினகரன் வெல்வார் என்றும் 33.5 சதம் வாக்கு அவருக்கு என்றும் அடுத்து தி.மு.க வேட்பாளர் இரண்டாம் இடத்திலும், அ.இ.அ.தி.மு.கவின் மதுசூதனன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்போவதாகவும் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

கருத்து கணிப்பில் 91.6 சதம் மக்கள் தினகரனின் குக்கர் சின்னத்தை அடையாளம் கண்டதாகவும் மற்ற கட்சிகளின் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டது சுமார் சற்றேறக் குறைய 80 சதமாகவே இருந்தது என்கிறது.

இதனிடையே ஆளும் எடப்பாடி அணியினர் குறைகளை சொல்ல ஒரு புதிய ஏற்பாடாக தொலைபேசி எண்ணையும், ஒரு வெப்சைட்டையும் ஆர்கேநகர் என்ற பேரில் ஏற்படுத்தி உள்ளனர்.

அது மட்டுமல்லாமல் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு இருபது இலட்சம் வாரிக் கொடுப்பதும், இராஜஸ்தானில் கொல்லப்பட்ட எ.ஸ்.ஐக்கு கோடிக்கணக்கில் நிவாரணமும், மீனவர் குடும்பத்துக்கு வீட்டுக்கொருவர்க்கு அரசுப் பணி என்றும் வாரி வழங்குவது ஆர். கே நகர் தேர்தல் பயத்தாலா? என்பது அறிய முடியவில்லை ஆனால் ஊகித்தறிய முடிகிறது. தெரிய முடிகிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு தவறாக இருந்து தி.மு.கவே கூட வெற்றி வாகை சூடலாம் என்றாலும் அப்போதும் எடப்பாடி அரசுக்கு அது அதிர்வேட்டுதான்.

பேசாமல் யாருக்கும் இன்றி இந்த முறையும் பணம் பட்டுவடாவை கண்காணிக்க முடியவில்லை என எக்கச் சக்கமாக புழங்குவதைக் காரணம் காட்டி தேர்தலை நிறுத்தி வீடுவது எடப்பாடி அணியினர்க்கும், பாரதிய ஜந்தா கட்சியினர்க்கும் நல்ல முடிவாயிருக்கும்.

ஆனால் எப்போதும் போல தி.மு.க தலையை தொங்கப்போட்டுக் கொண்டே போக வேண்டியதுதான். ஆனால் எல்லாக் கட்சியினருமே வாக்குக்கு பெரும்பணத்தை வாரி இறைத்து வருகின்றனர் என்பது அனைவர்க்கும் தெரியும் தேர்தல் ஆணையத்துக்கே தெரியும். இதை எல்லாம் சொல்லப்போனால் நம்மை ஆதாரம் கொண்டு வா என்று சொன்னாலும் சொல்வார்கள்...

Related image

இதுவரை எந்தக் கட்சியும், எந்த நபரும் என்னிடம் வந்து எந்தத் தேர்தலுக்குமே பணமோ பொருளோ கொடுத்ததே இல்லை....ஏன் எனில் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் எங்கு கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும் , எப்போது கொடுக்க வேண்டும் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதெல்லாம்...

எனவே இப்போதும் அப்படித்தான் நடக்கிறது. இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில் தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கும்...அதற்குள் தேர்தல் நிறுத்தச் செய்தியை எதிர்பார்க்கலாமா? அதற்குள் ஆளும் கட்சி நிலையை மாற்றி விட்டாலும் விடும் அதையும் சொல்வதற்கில்லை. எதையும்ம் சொல்வதற்கில்லை. ...அதனால்தாம் அரசியல் பற்றி எல்லாம் இப்போது யாம் எழுத தலைப்படுவதேயில்லை . அங்கே மோடீ மாடி என...இங்கே அம்மா சும்மா எனவும் எல்லா காலமும் மலையேறியே ஆக வேண்டும்.

அதற்காக இராஜநாயகம் லயோலா கல்லூரி டீம் தந்த செய்தி அப்படியே நடந்து விடும் என்றெல்லாம் சொல்வதற்குமில்லை..


இந்நிலையில் வாக்களிக்கும் எந்திரம் வைத்து தேர்தல் நடத்தினால் ஆளும் கட்சியே வெல்கிறது. பழையபடி பேல்லட் பேப்பர் முறை வரவேண்டும் என்றும் கருத்துகள் நிலவுவதையும் நாம் கவனிக்க வேண்டும்..


மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.

Tuesday, December 12, 2017

ஆண்டு தோறும் மேட்டூரில் கார்த்திகைத் திருவிழா: கவிஞர் தணிகை

ஆண்டு தோறும் மேட்டூரில் கார்த்திகைத் திருவிழா: கவிஞர் தணிகை
Related image



பாஹு பலியைப் போல, கோமதீஸ்வரர் போல இரண்டும் ஒன்றுதானே? அது போல அண்ணாமலை திப்பு சுல்தான் கரட்டின் உச்சியில் நின்று எரிந்து கொண்டே நின்ற தினமான கார்த்திகைத் தீபத்தன்று ஆண்டுக்கு ஆண்டு தவறாமல் இலட்சக்கணக்கான கூட்டம் சென்று விளக்கேற்றி வழிபடுகிறது.

நினைத்த வேண்டுதல் அப்படியே அடுத்த ஆண்டுக்குள் நிறைவேறிவிடுவதாக திருமணமான ஆண்களும் பெண்களும் மகிழ்ந்து குலாவி இந்த செய்தியை பரப்பி வருகிறார்கள். கட்சிக்காரர்களும் பணக்காரர்களும் அங்கே ஒரு மண்டபம் எழுப்பத் திட்டமிட்டு மாபெரும் ஒரு மண்டபத்தை எழுப்பியும் விட்டார்கள். அதில் தங்கள் பெயர்களை விளம்பரப்படுத்திக் கொண்டார்கள். இதில் என்ன ஒரு வேடிக்கை எனில் அண்ணாமலை நன்கொடை கேட்டபோது இல்லை என மறுத்தவர்கள் எல்லாம் கூட அவனை கடவுளாக நினைத்து பேர்களை இணைத்துப் போட்டுக் கொண்டார்கள் அவன் சேவைக்கு இவர்கள் அடிமையாகி. இலவச‌ நீர் மோர், தண்ணீர்ப் பந்தல்கள், அன்ன தானக் கூடங்கள், குளிர்பான விற்பனைகள் என ஆண்டுக்கு ஆண்டு கடைகள் போட ஆரம்பித்து விட்டனர். மினி அண்ணாமலையாக சில ஆண்டுகளில் எழுந்த அது திருவண்ணாமலையின் கூட்டத்தை ஒரு நாள் மிஞ்சும் எனப் பேசிக்கொண்டார்கள்.

திருவண்ணாமலையில் கிரி வலம் போய் வருவது போல இங்கு அணையைச் சுற்றி ஒரு வலம் வந்து வேண்டுகோளை வைத்து இந்த அண்ணாமலை மறைந்து எரிந்த பாறையருகே வந்து பெரிதும் பிரார்த்தனை செய்தார்கள் ...அவர்களுக்கு இங்கு கேட்டதெல்லாம் கிடைத்தது என புகழ் பரவ ஆரம்பிக்க மாநில முதல்வர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட தனிப்பட்ட பயணம் வந்து செல்ல ஆரம்பித்தனர். இதை அரசு சார் விழாவாக மாற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என இதற்காக அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்திய மேட்டூர் தொகுதி உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினரும், மந்திரிகளும் கட்டியம் கூறினார்கள்.


Related image

ஆனால் இது ஆரம்பித்த கதை என்ன வென்றால் அண்ணாமலை எரிந்து நின்றுபோன மறு ஆண்டில் அவரது நண்பர்கள் கார்த்தி, பார்த்தி, பாரதி போன்ற விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே அங்கு வந்து ஒரு தீப்பந்தத்தை ஏற்றி விட்டு இரவு முழுதும் அங்கேயே தங்கி இருந்து அது என்ன காற்றடித்தாலும் அணையாமல் நிறைய எண்ணெய் விட்டு திகு திகு என எரிய பார்த்தபடி அந்த நாளை நினைத்தபடி அன்றைய இரவு முழுதும் அங்கேயே கழித்தனர்.

மறு ஆண்டில் ஒரு அண்டாவை எடுத்து வந்து அதில் நெய்விட்டு சீலைத் துணியை நினைத்து பற்ற வைக்க ஆரம்பித்தார்கள்...இவர்கள் ஏற்றிய தீபம் மேட்டூரைச் சுற்றி சுமார் 35 கி.மீ தெரிவதாக பேச்சுகள் பரவி பல மாவட்டஙக்ளில் இருந்தும் மக்கள் கூட ஆரம்பித்தனர், திருவண்ணாமலைக்கு அவ்வளவு தூரம் செல்ல முடியாதார் எல்லாம் இங்கு வர ஆரம்பித்துவிட்டு அதை விட இதே நன்றாக இருக்கிறது. கேட்டதெல்லாம் நிறைவேறுகிறது என வாய் ஓயாமல் பேசிக் கொண்டார்கள்.

Related image

அவர்களின் உறவு, நட்பு என வட்டம் மிகவும் குறைந்த காலத்தில் விரிவடைந்தது

அடுத்த வருடம் இந்தத் திருவிழா நடக்கும்போது வந்து பாருங்கள். உங்களுக்கும் தேனும் தினைமாவும் தவறாமல் கிடைக்கும். இந்த விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவர்க்கும் திருவிழாக்குழு தேனும் தினைமாவையும் தவறாமல் கொடுக்க ஏற்பாட்டை விரிவாக விரிவாக்கி ஆண்டுக்கு ஆண்டு செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நிறைய காடு தோட்டம் எல்லாம் வாங்கி தினையரிசி மட்டுமே பயிரிட்டு வருகிறது. தேன் மட்டும் இதற்கு கொல்லிம்லையிலிருந்து தவறாமல் வந்து சேர்ந்து கொள்கிறாது. பக்கத்திலேயே காவிரி நதி தீரம் இருப்பதால் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு ஓடம், பரிசல் போக்குவரத்தும் பௌர்ணமி இரவு முழுதும் நிற்காமல் நடக்கிறது.

Image result for mettur karthigai deepam


கேரளாவுக்கு அய்யப்பான் , திருவனந்தபுரம், ஆந்திராவுக்கு திருப்பதி போல தமிழகத்துக்கு பழனியோ, திருவண்ணாமலையோ திருவரங்கமோ அல்லாமல் மேட்டூர் கார்த்திகை எல்லாவற்றையும் மிஞ்சத்தான் போகிறது...

அட நீங்களும் தாம் வந்து கலந்து கொண்டு வேண்டித்தான் பாருங்களேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, December 10, 2017

சத்யாவும் ரிச்சியும்: கவிஞர் தணிகை.

சத்யாவும் ரிச்சியும்: கவிஞர் தணிகை.

Image result for sathya movie


மஹேஸ்வரி சத்யராஜ் தயாரிப்பில் தமது மகனுக்காக தயாரித்தளித்திருக்கும் படம். நல்ல முயற்சிதான். நல்ல கதைதான் ஆனால் இவ்வளவு நேரம் பொறுமையாக அமர்ந்து பார்க்க முடியுமா என பிற்பகுதியில் தோன்றுகிறது.

ஒரு குழந்தை காணாமல் போய்விடுகிறது அது பற்றிய எந்த தடயங்களுமே இல்லை. முன்னால் காதலனை காதலி தற்போது இன்னொருவன் மனைவியானவர் அழைத்து தம் குழந்தையை தேடப் பணிக்கிறாள்.

தேடும்போது அவளுக்கு குழந்தையே இல்லை என்கிறார்கள் அனைவரும். காவல் துறை உட்பட. அவளுக்கு கோமா நிலைக்கு விபத்தின் காரணமாக சென்றது முதல் நினைவு இல்லை. மனநிலை சரி இல்லை என்கிறார் அவர் கணவரே. அக்கம் பக்கத்தில் உள்ளாரையும் அவர் வேண்டி அப்படியே சொல்ல வைக்கிறார்.

ரெம்யா வா ரம்யா நம்பீசனா அவருக்கு நல்ல வாய்ப்பு நன்றாக செய்திருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் போலீஸ் ஆபிசர். போலீஸ் ஆபிசராக இருந்தால் வாயைத் திறந்து கூட பேசமாட்டார்களா என்ன? இன்னும் நன்றாக செய்திருக்கும் வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறார். அருமையான வில்லி வேடம். சொதப்பி விட்டார்.

ஆனந்த் ராஜ் நீண்ட நாளுக்கும் பின் கல கலக்க வைக்கிறார் அளவான நேரம்ம் தமக்கு கொடுக்கப்பட்டிருந்தும் கூட.

சதீஷ் பாபு கானாக வந்து பாதி வில்லனாகி மீத கதாநாயகனுக்கு துணையாகி இறந்தும் தமக்கு கொடுத்த பாத்திரத்தை நிறைவேற்றி இருக்கிறார். நிழல்கள் ரவியும் வழக்கமான  அப்பா ரோல்.

சிபிராஜ் ஒரே தாடி மீசை அதே கெட் அப். ஆனால் நன்றாக நடித்திருக்கிறார். இவருக்கு தந்தை நல்ல படங்களைக் கொடுத்து நிலை நிறுத்த முயல்கிறார். நல்ல முயற்சிதான். ஆனால் இன்னும் அதிக முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன் வந்த நாய் தோழனாயிருக்கும் படம் இதை விட இவருக்கு நன்கு பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்தது அந்தப்படம் ஆனாலும் இந்தப்படத்தை பார்க்கலாம்.

ரிச்சி:
Image result for richi.


வேறு ஆளே தமிழில் இல்லை நிவின் பாலி என்னும் பிரேமம் படத்தில் நடித்த  மலையாள நடிகர். ஒரே மாதிரியான முகமும் தோற்றமும். கிறிஸ்மஸ் வருகிறதை நினைவூட்ட. இந்தப் படம் கடற்கரை மீனவ சமுதாயம் சர்ச் பாதர். என்று வலம் வருகிறது.

சிறுவர்களாக இருக்கும்போது ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் குத்தி விட்டு தப்பி விடுகிறான். இந்த சகாயம் என்னும் ரிச்சி மாட்டிக்கொள்கிறான். அதிலிருந்து தந்தை பாதார் பிரகாஷ் ராஜ் இவனை தம் மகனாக சொல்வதில்லை. ஆனால் இவன் சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தண்டனை முடிந்து வந்து அந்தக் கிராமத்தின் மீனவர்களை அடக்கி ஆளும் ஒருவருக்கு தலைமை அடியாளாக வேலை பார்த்து அனைவர்க்கும் அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறான் தமது முரட்டுக் குணத்தால் அடிதடியால் கொலை  போன்ற வன்முறைகளால்...

இவனது நண்பன் செய்த குற்றத்திற்கு இவன் அனுபவிக்கும் தண்டனையை மனதில் வைத்துக் கொண்டு அனைவரையும் தண்டிக்கிறான். கடைசியில் அப்படிஓடிய நண்பனையும் கொன்று, தாமும் செத்து இப்படி போகிறது படம்.

ஆனால் அதற்குள் பட ஆரம்பத்தில் இமாலய பில்ட் அப்... அப்படி இப்படி என பத்திரிகை வெளியீடு, உலகையே உலுக்கப் போவதாக..உலைகையே அழிக்கப்போவதாக உலகையே திரும்பிப் பார்க்க வைக்கப் போவதாக, பிரமிக்க வைக்கப் போவதாக எல்லாம் புஸ்....

தேவையில்லாத தோரணங்கள் ...ரிச்சி சாதாரண ஒரு சினிமாத் திரைக்குச்சி. ஒரு பூச்சி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

கொடிவீரனா முடி வீரனா? சசிக்குமாரும் அசோக்குமாரும்: கவிஞர் தணிகை

கொடிவீரனா முடி வீரனா?
சசிக்குமாரும் அசோக்குமாரும்: கவிஞர் தணிகை

Related image


படம் வெளியீடான அன்றே இணையத்தில் வெளி வந்துவிட்டது இந்தப் படம்.
எடுத்த உடனே ஒரு பெண் புளியமரத்தில் தூக்குப் போட்டுக்கொள்ள அவளிடமிருந்த குழந்தை கீழே பிறந்து வீழ்கிறது.

ஒரு பெண் மொட்டை அடித்துக் கொள்கிறாள் அண்ணன் பழி வாங்க வேண்டி சூளுரைக்கிறாள்..அதுதான் பூர்ணா கேரக்டர்.

பழிக்குப் பழி இரத்தத்துக்கு இரத்தம்...சசிகுமார் அதே தாரை தப்பட்டை மூஞ்சி. அதே முடிவீரனாக சாரி கொடி வீர்னாக...இவர் யாருன்னு நினைச்சீங்க என்ற உடன் அடுத்தநாள் சாமியாடியாக வருகிறார்.

பசுபதிக்கு ஒரு வில்லன் சமமாக சசிக்குமாருக்கு இணையாக.

இந்த இயக்குனரின் கொம்பன் தேறி விட்ட படம். ஆனால் இந்த சசிக்குமார் தயாரிப்பில் அசோக்குமா நிதிப் பிரச்சனையில் மாட்டி உயிரை விடக் காரணமாக இருந்த படம். சசிக்குமார் மாபெரும் ஆளாக மதிக்கப்பட வேண்டும் என்ற  சினிமா கிளாமருக்கு பலியாகிக் கொண்டிருக்கிறார்.

படம் படுதோல்வி. இவர் எல்லாம் தாமெடுத்த படத்தை முதலில் தாம் பார்த்துவிட்டுத்தான் வெளியுலகுக்கு கொண்டு வருகிறாரா என்பது தெரியவில்லை.

வன்முறையும், கொடுமையும் எல்லையில்லாமல் காட்டிவிட்டு அதற்கு பழிவாங்குவது போல கதாநாயகர்கள் நடிப்பதை எத்தனை முறைதான் பார்ப்பது சசிக்குமாரிடம்...கிடாவும் இப்படித்தான்...

மஹிமா நம்பியார், விதார்த்,சனுசா, பால சரவணன், பூர்ணா என்ற ஒரு பட்டாளமே இருந்து கடன் பண்ணி அசோக்குமார் பைனான்சியரை டிஸ்ட்ரிப்யூட்டரை தற்கொலைக்கு கொண்டு சென்றிருக்கும் படம்.

அசோக்குமாரை சொந்த மாமன் மச்சானாக இருந்தும் ஏன் இந்த ஹீரோ சசிக்குமாரால் காப்பாற்ற முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான கேள்வி.

அண்ணன் தம்பி அண்ணன் தங்கை சென்டிமென்ட் எதிரும் புதிருமாக‌ படம் எல்லாம் அதுதான்.

அந்தக் காலத்தில் எந்தப் படமானாலும் எதிர்மறையான கருத்துகளை பக்குவமாக சொல்வார்கள் காட்சிகளை துக்கத்திலிருந்து ஆரம்பிக்கவே மாட்டார்கள். இந்தப்படத்தில் எல்லாம் பொணம், ஒரே பொணம், ஒப்பாரி அழுகை , என அசோக்குமாரை கொள்ளை கொண்டு போனது போல..

சுபம் என கடைசியிலும், முதலில் சுபமான காட்சிகளுடன் மட்டுமே ஆரம்பிப்பார்கள் இதில் எல்லாமே இறப்பு அதன் எல்லைக்கப்பால் சென்றுவிட்டது.

எம்.ஜி.ஆர் படங்கள் வென்றதும், அவர் நாட்டை ஆண்டதற்கும் கூட இந்த நேர்மறைக் காட்சி அமைப்புகளே காரணம்.

சிவாஜி என்னதான் நடிப்புலக மேதையான போதும் தோற்றது எதிரான சோகமயமான காட்சிகளைக் கொண்டதுதான்.

அதே போல ரஜினிக்கடுத்து கமலை சொல்வதும் கூட இதன் அடிப்படையில்தாம்

மக்கள் இருக்கும் பிரச்சனையை மறுபடியும் திரையிலும் பார்க்க சகிக்காமல் அதில் கொஞ்ச நேரம் கவலை மறந்து கலகலப்பாக இருப்பதற்குமே நகைச்சுவை காட்சி எல்லாம் வைப்பார்கள்...அப்படி எல்லாம் இதில் ஏதும் இல்லாதது பெரும் குறை.

இந்தப் படத்தை கணக்கு காண்பிக்க பெரும் செலவு எனக் காட்டி எடுத்திருக்கலாம் ஆனால் இப்படி கடன் வாங்கி உயிரை விட்டு எல்லாம் எடுக்க அவசியமே இல்லை. அதை நீங்கள் பார்க்க வேண்டிய  அளவு இதில் எதுவுமே இல்லை.

தம்மை திரையுலகில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும், தாமும் ஒரு ஹீரோதாம் என்றும் புகழ் ஆசையில் சறுக்கி விழுந்தார் நிறைய பேர் அதில் சசிக்குமார் பேரும் இப்படியே போனால் நிச்சயம் இடம்பெறும்.

மன்சூர் அலிகான் படத்தை ஆரம்பித்த கதை எல்லாம் அனைவரும் அறிவர்.அதே போல மிக நீண்ட டைட்டில் வைப்பதாகவும் அவர் பெருமப்பட்டுக் கொண்டார். ஆனால் அவர் எல்லாம் எங்கிருக்கிறார் என்பதை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். புகழ் ஒரு போதை புதைகுழி.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

சுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணிகை.

சுடர் விட்டு நின்றெரியும் விளக்கானாய்:= கவிஞர் தணிகை.

Image result for andhra pradesh cold in winter early morning


எழில் வேந்தனுக்கு அது 23 வயது . ஆந்திரப் பிரதேசம்  அப்போது தெலுங்கானாவாகவும் ஆந்திராவாகவும் பிரியவில்லை. 1985 ஜனவரிக் குளிர் காலை 4 அல்லது 5 மணிக்குள் நிலவொளியில் பெரும் பெரும் பானைகளில் இருக்கும் ஜில்லென்ற நீரை எடுத்து குளிக்க வேண்டும். சுறு சுறுப்பு உதடு பல் எல்லாம் உதற காலிலிருந்து தலைவரை பரவும்.

அதன் பின் தியான வகுப்பு, அங்கு தான் ஓம் பூர்புவஸ்ஸுவ‍ஹ் தத்ஸ விதுர் வ்ரேண்யம் பர்ஹோ தேவஸ்ய தீமஹு த்யோயந  ப்ரஸோயாதாயாத் என்ற பாடல் சொல்ல வருவது காயத்ரி ஜெபம் என்றும், ஓம் ஸகனாவவது ஸகனோபுனத்து சகவீரியம் கருவாவஹே.. என்ற பாடல்களையும் பொருள் தெரிந்து சொல்லக் கற்றுக் கொண்டான்.  ஆனால் சந்திரசேகரேந்திரர்  சங்கராச்சாரியார்தான் தமிழை நீச மொழி என்றதால் சமஸ்கிருதம் மட்டுமே கடவுளுக்குத் தெரிந்த மொழியாக ஒருபோதும் விளங்கமுடியும் என்பதை எப்போதுமே அவன் ஏற்றுக் கொண்டதே இல்லை.

முதலில் கம்யூனிச மேடைகளில் முழங்கித் திரிந்து இரவு நள்ளிரவில் எல்லாம் எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்த அவனுக்கு அது எட்டிக்காயாகவே தெரிந்தது.

கம்பயூனிசமும் காந்தியிசமும் ஒன்னுதான் என அங்கு அவனுக்கு ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார் எல்லாமே எல்லா மனிதர்களுக்கு நன்மை செய்யத்தானே சொன்னது. அதில் மேல் இருக்கும் சிலர்தானே எல்லாவற்றையும் எல்லாருக்கும் செல்வதை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றுதானே இரண்டும் சொல்கிறது ஆனால் ஒன்றில் அஹிம்சை மற்றொன்றில் நீ எந்த ஆய்தம் ஏந்த வேண்டுமென்பதை உன் எதிரிதான் தீர்மானிக்கிறான் என்றது.

இந்த சமஸ்கிரத ஸ்லோகங்களை எல்லாம் மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கிற பஜனை எல்லாம் வேண்டாம் என்று இருந்தான் . எதுவானாலும் பொருள் தெரிந்து மற்றவர்க்கும் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான். பொருள் தெரியாமல் ஒரு பாடலை பாடவே கூடாது.  ஒரு நாள் இங்கு கடவுள் மறுப்பு சிந்தனையாளர் யாரெல்லாம் என சபையில் கேள்வி எழுப்பப் பட்டபோது இவன் ஒருவன் மட்டுமே எழுந்து நின்றான் அந்த எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்து கலந்து கொண்டிருந்த 150 பேரில்.

அவர்கள் மேற்கொண்டு வேறு ஏதும் கேட்கவில்லை. வகுப்புகள் சுமார் ஒன்னரை மாத காலம் அப்படியே சென்றது . நிலவொளிக்குளியல், தியான வகுப்பு, முடிந்ததும் எளிய உணவு நிலக்கடலை எல்லாம் போடப்பட்ட தாழித்த உணவு...மதியம் முழுச் சாப்பாடு, இரவு சில ரொட்டிகள் அல்லது சாப்பாடு எளிய உணவு. அரிஜன சமையல்காரர்கள் மூலம் செய்தது. சுவை எல்லாம் எதிர்பார்க்க முடியாது, சுகாதாரம் கூட சற்று குறைவாகவே இருப்பதுதான் ...அது அப்படி இப்படித்தான் இருக்கும்.

Related image

காலையும் மதியமும் வகுப்புகள் நடந்தன பல்வேறு நாட்டு முன்னேற்றம், கிராமிய முன்னேற்றம் பற்றி. பல்கலைக் கழக கோல்டு மெடல் வாங்கிய நபர்களிலிருந்து நிறைய பிரிவு பாடங்களைத் தேர்ந்து படித்தார் எல்லாம் அங்கே குழுமியிருந்தனர். பயிற்சிக்காகவும் பணிக்காகவும்.

எழில் வேந்தனுக்கு இரண்டாண்டு தேசிய அளவிலான பயிற்சி, இவனை போல 15 பேர்தாம் மாநிலத்துக்கு ஒருவராக. மற்றவர் யாவரும் ஒன்னரை மாதத்தில் பயிற்சி முடித்து சுமார் 20 கிராமங்களுக்கும் மேல் சென்று கிளஸ்டர் டெவலப்மென்ட் ஆபிசர் என்ற பணிப் பொறுப்பை ஏற்றாகவேண்டும்.

அதில் ஒரு மதுரைக்கார சௌராஸ்ட்ரா நண்பன் தமிழ் பேசியவன் கிடைத்தான் அவன் பேர் கணேஷ் சந்திரா. சரியாக கண் தெரியாது. கண்ணாடியைக் கழட்டி விட்டால். நல்ல மொத்தமான ப்ரேம் மற்றும் கண்ணாடி. அவன் முதுகலை பட்டம் பெற்றிருந்தான்.

அவன் ஒன்னரை மாதப் பயிற்சி முடித்து ஜங்காரெட்டி கூடம் என்ற பகுதிக்கு அலுவலராக நியமிக்கப்பட்டான். அந்தப் பகுதி யாவும் ஒன்று காடு அல்லது காட்டைச் சார்ந்த பகுதி, அல்லது மலை அல்லது மலை சார்ந்த பகுதி அல்லது சமவெளியாய் இருந்தால் அது ஹரிஜனப் பிரிவினர் அன்று அது அவர்கள் பேர் அதுதான் இன்று தலித் என்று சொல்லப்படுகிறார்கள்.அங்கே கூட்டத்தில் ஹரிஜன் கிரிஜன மஹிலா மண்டலாரா என்றெல்லாம் பேசுவார்கள்... அங்கே நக்ஸலைட்கள் எல்லாம் கூட பாடலைப் பாடிக்கொண்டு வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

பயிற்சியின் போது ஆங்காங்கே களப்பயிற்சிக்கு செல்லும்போதே உணவு தயாராகும் வரை அங்குள்ள புதர் அல்லது காலி இடங்களில் கற்ற பயிற்சியை பயன்படுத்திப் பார்க்கலாம் என எழில் அமர்ந்து பார்த்து வந்தான்.அப்போது எல்லாம் நீண்ட நேரம் நாள் முழுதும் நடக்க வேண்டும் காடுகளிடை செல்லும் அடவிப் பகுதிகளில். மிகவும் தள்ளித் தள்ளித்தான் கிராமங்கள் இருக்கும் அதுவும் மரத்தில் மூங்கிலால் மட்டுமே கட்டப்பட்டு இருக்கும்.  எங்காவது சென்று தங்கும் இடத்தில் உணவு தயாரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

Related image

அப்படி செல்லும்போது உடன் அழைத்து வரும் ஆர்கனைசர் எனப்ப்படும்  அமைப்பாளர்கள் அவர்கள் விருப்பப்படி எல்லாம் செய்து வந்தார்கள். கொடுத்திருந்த பணத்தை என்ன செய்தார்கள் எப்படி செய்தார்கள் என்றே தெரியாது ஆனால் அந்தக் கிராமத்தாரின் வீடுகளில் உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும். அது எந்நிலையிலிருந்தாலும் உண்ண வேண்டும். அப்படித்தான் குடல் புண் வந்திருக்கும். மாங்கா வடுவும் மிளகாய் சாரமும் அடங்கிய சாரத்தில் அரிசிச் சோற்றை கலந்து உண்ண வேண்டும். அது மிகவும் ருசியாக இருக்கும்.ஏன் எனில் நாளெல்லாம் பசியுடன் இருந்தால் எதுவுமே தின்னக் கிடைத்தால் ருசிக்கத்தானே செய்யும்.

கொர்ரய்யா என்ற அமைப்பாளர் ஒரு முறை கொர் கொர் என தூங்கிக் கொண்டே, எழில் வேந்தனுக்கு ஒரு கோரைப்பாய் கூட கொடுக்க விடாமல் கீழே படுக்க வைத்தான் கொஞ்சம் நகர்ந்து படுத்திருந்தாலும் கோழிகளின் எச்சம் தலை முழுதும் பூசிக் கொள்ள வேண்டியதுதான், கோழிகளுடன் உறக்கம்.அப்படி அங்கே அனுபவம் எல்லாம் கிடைத்ததால் தான் இவனுக்கு இவனேத் திட்ட அலுவலராகத் திட்டத்தை துவங்க ஆரம்பிக்கும்போது கிராம மக்கள் நம்பாமல் கொடுத்த ஆட்டுக் கொட்டிலும் மாட்டுக் கொட்டிலும் மலைக்கிராமங்களில் இவனுக்கு இரவு தங்க இடமானபோதும் அதைப்பற்றி எல்லாம் துளியும் கவலை ஏற்படவே இல்லை. வசதியாகவேத் தெரிந்தது.

இதை எல்லாம் விட ஒரிஸ்ஸாவின் மல்க்கங்கிரி, காளி மேளா கோராபுட் மாவட்டம் செல்லும்போது சாலையின் ஓரம் எல்லாம் படுத்துறங்கி ஓய்வெடுத்து அடுத்த பேருந்து வரும் வரை தூங்கவும் அதில் எல்லாம் ஒன்றும் இல்லை எல்லாம் நாடோடி வாழ்வில் சகஜமாகிப் போனது.

பாலமலை கழிப்பறைகளை சுத்தம் செய்து மக்களைப் பயன்படுத்த பழக்கப்படுத்திய கதையை தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தேர்வு நிலையில் இதைப் பற்றி எல்லாம் சொல்லும்போது பாஸ்கரராஜ் என்னும் தொலைக்காட்சி காட்சி இயக்குனர் அது ஏழரை சனியாக காலம் இருந்திருக்கும். இதை எல்லாம் சொல்லுங்கள் நமது பெண்கள் அதை எல்லாம் பெரிதாக‌ எண்ணாமல் அவரவர் வீட்டுக்கு கழிப்பறையைக் கழுவ கூப்பிட்டுவிடுவார்கள் என்றார். அவரே அவனது புத்தகம் ஒன்றைப் படித்து விட்டு தமது வாழ்விலும் அதைப் பயன்படுத்த வேண்டும் இவை எல்லாம் உண்மைதானா என பாலியல் விழிப்புணர்வு நூலை ஒன்றைப் படித்து விட்டு பயன்படுத்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

இப்படி எல்லாம் அவனுக்கு கிடைத்த அனுபவமே பிற்காலத்தில் எவ்வளவு விடியலில் 4 மணிக்கே எழுந்தாலும் அவனுக்கு அதெல்லாம் பயிற்சி கொடுத்த பாடமாகவே இருந்தது பயன்பட்டது.

இதையெல்லாம் விட பயிற்சியின் போது கற்ற தியான வகுப்பு பற்றி எல்லாம் தொடர்பை விட்டு விடலாம் என இருக்கும்போது ஒரு நாள் ஜங்காரெட்டி கூடம் சென்றான் அவனது நண்பர் கணேஷ் சந்திராவைக் காண. கதவைத் தட்டி காத்திருந்தான், கணேஷ் சந்திரா கதவைத் திறக்க அங்கே ஒரு வேட்டி விரிப்பு கிடந்தது, என்னடா கணேஷ் என்ன செய்றே,? தியானம்...

ஆக இவன் எல்லாம் செய்யும் போது நாம் எல்லாம் செய்ய முடியாதா என்ற உந்தல் ஏற்பட அந்த 1985 ஜனவரியில் ஏற்பட்ட வழக்கத்தை வாழ்வில் மனதை எரிக்க தியானத்தையும், அதற்கு முன்பே கைக்கொண்டிருந்த உடலுக்கான நடைப்பயிற்சியையும் வாழ்க்கையில் பின்னிப் பிணைய ஒன்றிணைய எடுத்துக்கொண்டு 33 வருடங்களாக பயணம் சென்று கொண்டே இருக்கிறான் சுடர் விட்டு நின்றெரியும் விளக்காக... பத்தாயிரம் மணி நேரம் ஈடுபட்டிருந்தால் எந்த செயலுமே அது அப்படி செய்தாரை மேதையாக்கி அவருக்கு புகழ் சேர்க்குமாம் அந்த அறிவியல் உண்மையை தாமும் மேடையெங்கும் சொல்வதும் பிறர்க்கும் சொல்வதும் வழக்கமான அவனுக்கு அப்போது அவை பற்றி ஏதும் தெரியாது...ஆனால் இப்போது கணக்கிட்டிருந்தால் அவை சுமார் 12000 மணி கூட வந்திருக்கும்...

Image result for andhra pradesh cold in winter early morning

ஆனால் அதற்குள் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் தாம் எத்தகையது? எப்படிப்பட்ட மாந்தர்கள் எல்லாம் அவனது வாழ்வுடன்? 20க்கும் மேற்பட்டோர் அவனிடமிருந்து அந்தப் பயிற்சியை கற்றுக் கொண்டார்களாக உலகெங்கும் பிரிந்து கிடந்து பயணம் செய்து கொண்டிருக்க...

தியானத்துக்கும் முன், தியானத்துக்கும் பின் என இரண்டு வாழ்வு இருக்கிறது என அவனுக்கு தெரிந்ததை அனைவர்க்கும் சொன்னான். ஆனாலும் யாவர்க்கும் நன்மை செய்தே தீரும் மார்க்கம் காணும் முயற்சியும் அவனை விட்டு சென்ற பாடில்லை. அது ஒரு தாகம். இது ஒரு வேகம் கட்டுப்படுத்தும் முயற்சி.

இவனுக்கு இப்போது கடவுள் இருப்பு பற்றி எல்லாம் கேள்வி எல்லாம் இல்லை அது தேவையுமில்லை. எங்கும் இருப்பான் ஏகாந்த மூர்த்தி என இந்து எல்லாவற்றிலும் கடவுளைப் பார்ப்பதாயிருக்கும் சிந்தனையும், அடுத்தவரை உன்னைப் போல் நேசி என்னும் கிறித்தவ சிந்தனையும், அல்லா கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது என்னும் முகமதிய சிந்தனையும், ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்னும் புத்தம், ஆற்றல் மாறாக் கோட்பாடான : ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது அது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித்தோன்றும் என்ற அறிவியல் பார்வையுடன் இணைந்திருக்கிறது என்ற புரிதலுடன், வள்ளலாரின் வாடிய பயிரைக் கண்டபோதெலாம் மனம் மிக வாடினேன் என்ற காருண்யத்துடன், மஹாவீரர் காட்டிய பிற உயிர்க்கெலாம் தீங்கு செய்யா துன்புறுத்தல் இலா வாழ்வு பற்றிய ஜைன மதம் பற்றியும் இப்படி உலகுக்கு உவந்த எவைபற்றியுமே பெரிய மாறுபாடு இருப்பதாகவோ அல்லது எந்த ஒன்றில் மட்டுமே மிகவும் முழுமையடைந்த நிலை உள்ளதாகவோ எண்ணுகிற நிலை எல்லாம் போய் விட...

ஒரு வீட்டில் மொட்டை அடித்து குழந்தைக்கு காது குத்தும் நிகழ்வும், அடுத்த வீட்டிலேயே சவமாய் ஒரு மரணம் சடலம் எடுக்கும் நிகழ்வையும் ஒரு சேர பார்த்தபடியான ஞானம்... சித்தர் வழிப்பாடலாய் இறங்கியபடியே இருக்க...

எல்லா மனிதருமே வயது முதிர்ந்து மூப்படைந்து தாமாக உதிரும் வெள்ளரிப்பழமாகவே இருக்க வேண்டும் என்பதுவே அவனது விருப்பமும் பிரார்த்தனையாகவும் இருக்கிறது... ஆனால் அவை எல்லாம் சாத்தியமா"

உயிர் வழங்கும் மந்திரம் என்பது : ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் உர்வாருஹ மிவபந்தனாத் ம்ருத்யுர் முச்ய மாம்ருதாத்...என்பது என்ன வெனில் எந்த ஒரு விபத்திலும், இடி,மின்னல், போன்ற இயற்கை அல்லது செயற்கை விபத்திலும் உயிர் போகாமல் ஒரு வெள்ளரிக் கொடியிலிருந்து பழுத்த வெள்ளரிப்பழமானது இயல்பாக உதிர்ந்து நிற்குமோ அது போல இயல்பாக போகவேண்டும் அதற்கு சிவபெருமானே அதற்கு நீ அருள் புரிய வேண்டும் என்பது அந்தப் பாடலின் பொருள்...ஆனால் அந்த சிவ பெருமானுக்கு பதிலாக எந்த இறைச் சக்தி அல்லது இயற்கைச் சக்தியின் பேரை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். அதுபோலவே காயத்ரி ஜெபம் என்பதும் கூட பிரபஞ்சத்தைப் படைத்த பரம்பொருளான உங்களை தியானிக்கிறேன் என் உள்ளத்திலிருந்து என்னை ஒளிரச் செய்வீராக என்பதுதான்...

நிதமும் பத்மாசனத்தில் குதம் குய்யம் இரண்டிடையே இடது குதி காலை வைத்து அமர்ந்தபடி இருந்து சின் முத்திரை இட்டு  நெற்றிப் பொட்டில் நினைவை நிறுத்தி இமையும் விழி விளம்புகளும்  அசையாமல் கண்கள் பாதி திறந்த நிலையில்  மூக்கின் நுனியைப் பார்த்தபடி அமர்ந்து

சுடர் விட்டு நின்று எரியும் விளக்காக இருக்கிறான்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.