Wednesday, October 26, 2016

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு குழந்தைகள் தினம் நவம்பர் 14ல்: கவிஞர் தணிகை

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு குழந்தைகள் தினம் நவம்பர் 14ல்: கவிஞர் தணிகை


Image result for november 14 childrens day

விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி வரும் நவம்பர் 14 அன்று அன்றைய தினம் பல்மருத்துவ சிறார் தினமாகவும் இருக்கிறபடியால் மிகவும் அரியதொரு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.

அது சமயம்:பல போட்டிகளை பள்ளிப் பிள்ளைகளுக்கு முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்துகிறது.

சேலம் மாவட்டம் சேலம் அருகே உள்ள அரியானூரில் உள்ள விநாயாகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் இந்த விழா நடைபெறுகிறது.

ஆர்வமுள்ள பள்ளிகளின் பிள்ளைகள் , பள்ளிகள் வழியாகவும், தாமாகவும், தமது பெற்றோர் உடனும் வந்து கலந்து கொள்ளலாம்.

1. சிறந்த சிரிப்புக்கான பரிசு

2. பேச்சுப் போட்டி

3. வினாடி வினா

4. ஓவியம் வரைதல்

5. பொருத்தமான விடையைத் தேர்வு செய்தல்

போன்ற அறிவு சார் மற்றும் உடல் திறன் சார் போட்டிகளும் நடத்த உள்ளது. அது சமயம் அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிப் பிள்ளைகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு சிறப்பான பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கலந்து கொள்வோர் அனைவர்க்கும் பல் பரிசோதனை, பராமரிப்பு, பாதுகாப்பு ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும் என்பதை கல்லூரி நிர்வாகம் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Image result for father of dental science

நிகழ்ச்சி கல்லூரியின் சிறார் பல் மருத்துவத் துறை சார்பாக கல்லூரி முதல்வர் பேபி ஜான் அவர்களின் சீரிய அனுமதியுடன் துறைத்தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களின் வழிகாட்டுதலுடன்
நடைபெறுகிறது. நிகழ்ச்சியை மருத்துவப் பேராசிரியர் ரமேஷ் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்த மருத்துவ ஆசிரியர் ஸ்டீபன், மற்றும் பேராசிரியர் வினோலா, ஆகியோருடன் டாக்டர்: ராஜ்குமார்,டாக்டர்கள் பிரதீப் டேனியல், சூரஜ், மல்லிகா, மற்றுமுள்ள மருத்துவர்கள் குழு போட்டிகளை நடத்துகிறது.

நீங்கள் அந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியருடன் கல்லூரியின் தொடர்பு எண்: 04298‍ ~ 247773 என்ற எண்ணிலும் ராஜ்குமார் : 9894855919 என்ற எண்ணிலும் 8015584566  என்ற எனது எண்ணிலும் கூட தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்:


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, October 25, 2016

இளம்பிள்ளை,பெருமாக் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை.

இளம்பிள்ளை,பெருமாக் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை.

Displaying IMG_20161025_103831.jpg

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை முகாம் அக்டோபர் 20,25 ஆகிய நாட்களில் இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், பெருமாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் சிறப்பாக நடைபெற்றது.766 சிறுவர் சிறுமியரும் மற்றும் பல ஆசிரியர்களும் பலனடைந்தனர்.
Displaying IMG_20161025_111740.jpg


தமிழக அரசின் அரசுப்பள்ளிகளில் அதுவும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் 455,311 பிள்ளைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இடம் பெற்று காணப் படுவதென்பது மிகவும் அரிது இக்காலத்தில்.

அப்படிப்பட்ட பெருமையை உடையதாக இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும், பெருமாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் விளங்குகிறது.

ஏற்கெனவே நாங்கள் ஒரு முறை இந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்காக பற்களின் பரிசோதனை முகாம் நடத்த திட்டமிட்டோம். ஆனால் சில காரணங்களால் அது ஒத்தி வைக்கப் பட்டது. ஒத்தி வைக்கப் படுகிறது என்றாலே நமது அகராதியில் அது மேலும் சிறப்பாக, செம்மையாக, ஆழமாக ஊடுருவி செய்யப் படும் என்பதே.

Displaying IMG-20161021-WA0002.jpg

இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி , பெருமாக்கவுண்டம்பட்டி தலைமை ஆசிரியர் கலாராணி மற்றும் அங்கிருந்த கணினி ஆசிரியர் முதற்கொண்டு அனைத்து ஆசிரியப் பெருமக்களும் நன்கு ஒத்துழைத்தனர்

எமது விநாயகா பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபிஜான் அவர்கள் அனுமதித்ததன் பேரில், சமுதாயத் துறைத் தலைவர் டாக்டர்.என்.சரவணன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நாங்கள் சிறந்த 15 மருத்துவர்கள் கொண்ட குழுவினருடன்  அந்தப் பள்ளிகளுக்கு 2 நாள் சென்று இந்த முகாமை நிறைவு செய்தோம்.


Displaying IMG_20161025_103902.jpg

பள்ளிப் பிள்ளைகளுக்கு பற்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் சிறுவர் சிறுமியர்க்கு:டாக்டர் துர்கா, டாக்டர் துளசிமணி மற்றும் டாக்டர்கள் அஜின்ஸ், வீரமணிகண்டன்,விநீஸ்,கீர்த்தனா,அனுபமா,அபிதா, அனிதா, அஞ்சலி,மற்றும் சிறுவர் பிரிவை சார்ந்த 2 மருத்துவர்கள் ஆகியோர் அக்கறையுடன் சேவைப்பணி செய்தனர்.

Displaying IMG_20161025_103843.jpg

டாக்டர் அபிதா, டாக்டர் துளஸிமணி ஆகியோர் பிள்ளைகளுக்கு பற் பாதுகாப்பு பராமரிப்பு ஆலோசனைகளும் வழங்கினர்.மேலும் சுமார் 125 குழந்தைகளை தேர்வு செய்து உடனடி மருத்துவம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெருமாக்கவுண்டம்பட்டி பள்ளியில் வரும் குழந்தைகள் தினத்தன்று கல்லூரி, அழகான சிரிப்பு, வினாடிவினா, பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல்,பொருத்தமான விடை தேர்வு செய்தல் இன்னபிற போட்டிகளை நடத்துகிறது அதில் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பும் விடுக்கப்பட்டது முகாம் அலுவலர் மூலம்.
Displaying IMG_20161025_103851.jpg



மேலும் இது போன்ற சேவைப் பணி தொடர ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வரும் முதல்வரைப் பற்றியும் , துறைத்தலைவர் பற்றியும் மற்றும் கலந்து கொண்ட அத்தனை மருத்துவர்களின் சேவைப்பணி பற்றியும் பாராட்டி நிகழ்வை ஒருங்கிணைத்தேன் வாய்ப்பளித்த ஆசிரியர்களுக்கு சில சொற்களில் நன்றி செய்தும்...


Displaying IMG-20161021-WA0001.jpg

முகாம் அறிக்கையாக இந்தப் பதிவு இருக்கிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எப்போதோ எழுதியதன் மீட்சி

ஒரு ஆசை:
‍‍‍‍____________
மருத்துவ மனைகள்

மதுபானக் கடைகள்

சினிமாக் கொட்டகைகள்

காவல் நிலையங்கள்

காலி செய்யப்பட வேண்டுமென்று!


Image result for want

ஒரு கனா:
___________

செலவின்றி
தாமதமின்றி
நீதிமன்றங்களில்
ஏழைக்கு
நீதி நியாயம்
கிடைக்குமென்று!

Image result for dream


ஒரு வினா:
_______________

இந்தியாவில்
எப்போது
ஊழலற்ற‌
மக்களாட்சி மலருமென!
Image result for dream

ஒரே பதில்
___________

வீண் கற்பனை
போதும் நிறுத்து.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எப்போதோ எழுதியதன் மீட்சி


Image result for dream




Sunday, October 23, 2016

மைக்கேல் டி ஜோசப் குன்ஹாவிற்கு இழைக்கப் பட்ட அநீதி: கவிஞர் தணிகை

மைக்கேல் டி ஜோசப் குன்ஹாவிற்கு இழைக்கப் பட்ட அநீதி: கவிஞர் தணிகை

Image result for kunha

மிகவும் அரிதான உழைப்புடன் ஒரு தீர்ப்பை முன் வைத்தார். அது சில வாரங்களில் முறிந்து போனது ஒரு 2 நிமிட தீர்ப்பால். குமாரசாமி என்ற நீதிபதி எனச் சொல்லிக் கொண்ட நபரால் , அவருக்கும் அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நட்பூ இருந்தது என அன்று ஊடகங்கள் எழுதின.

இந்த தீர்ப்பு முரண்கள் உச்ச நீதிமன்றத்திடம் இறுதிக்காக வைக்கப் பட்டன. இதோ இதோ என்றார்கள், என்கிறார்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலான பின்னும் இன்னும் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கவில்லை. பன்னாட்டு நீதிமன்றம் தி ஹேக் இடம் விடப்பட்டிருந்தாலும் கூட ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மாண்பு மிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் ஒரு மாதத்துக்கும் மேல் அப்பல்லோவில் இருக்கிறார் உடல்நிலை 95 சதவீதம் தேறிய நிலையில். என செய்திகள்.இந்தப் பதிவு அம்மாவின் உடல் நிலைக்கு எந்த வகையிலும் தொடர்புடையதாக கருதி விடாதீர். இது முற்றிலும் இந்திய நீதி பரிபாலனம் பற்றியதே.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலீவர் அம்மையாரின் ஒரு வானொலிப் பேட்டி காதில் விழுந்தது. இந்த நாட்டின் தீண்டாமை இன்னும் நிலவ காங்கிரஸ் அரசே காரணம் , அது சுதந்திரம் அடைந்த பின் 70 ஆண்டுகளில் பெரும்பாலும் அதுவே ஆட்சியில் இருந்தது என்றும், ஸ்டாலின் தி.மு.க கூட்டும் காவிரி நீர் பிரச்சனை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் உறுதி பட அறிவித்திருக்கிறார்.

கர்நாடகாவின் ஒற்றுமையும், தமிழ் நாட்டின் வேற்றுமையும் இதிலிருந்து தெரிந்து கொள்க.

இவர்களின் தற்கால  மத்திய அரசின் ஆட்சியில் எப்போது எப்படி இந்த தீர்ப்பு வரும் என எவரும் கேட்கப் போவதில்லை. இந்த கருத்துக்குள் புகவே போவதில்லை. ஏழைக்கும் பாளைக்கும் சட்டம் , நீதி எல்லாம் கயிற்று சுருக்காகும். ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும் இவை கழட்டிய செருப்பாகும்.

Image result for kunha

எல்லாவற்றையும் ஆம் எல்லாவற்றையுமே நிதியால் வாங்கிட முடியும் நிரந்தர முதல்வர்களால்...காலத்தை வாங்கிட முடியுமோ? எல்லாம் மனித உயிர்கள்தானே? உயிருள்ள எல்லாவற்றுக்குமே முடிவு ஒன்று என்பது உண்டுதானே? இந்திய சரித நீதியை விட இயற்கை நீதியும், நியதியும் சீற்றமுடையவை.எப்போதும் போல் இருக்க முடியுமா? திரும்பவும் நாம் சராசரி நாட்களுக்கு திரும்ப முடியுமா? திரும்பவும் சிறுவர் சிறுமியாக ஓடி ஆடத்தான் முடியுமா? அல்லது பாடத்தான் முடியுமா? எனவேதான் சித்தர் சொல்லியபடி நாடாறுமாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்த தோண்டியை கவனமாக கையாண்டு சற்று இந்த பூவுலகில் உடல் நலச் சிறப்புடன் புன்னகை விரிப்புடன் சற்றே நீட்சி பெற்று சென்று சேர வேண்டுமாய், பதினாறும் பெற்று பெரு வாழ்வு பெரு வியாதி வாழ்வல்ல, வாழ வேண்டுமாய் இந்தப் பதிவு அனைவரிடமும் பிரார்த்திக்கிறது.

நல்ல மனிதர் செய்யும் உழைப்பை சிறப்பிக்காவிட்டாலும், சிறுமைப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறது. அந்த மனிதர் செய்த உழைப்பை இந்த நாடு அவமானப்படுத்தி இருக்கிறது. உழைப்பை நேசிப்பவர்க்குத்தான் தெரியும் அந்த அவமானத்தின் வலி எத்தகையதென்று. சகாயத்தைக் கேட்டுப்பார்த்தாலும் அவருக்கும் அந்த வலி தெரியும். ஆயிரம் வழிகள் அனைவர்க்கும் தெரியும் அழிந்து போக.., உழைப்பு என்ற ஒரே வழிதான் உண்டு உயர்ந்து போக...

Image result for kunha

what about the apex court's verdict? regarding with all political related cases dealt with all political parties in India....?

Image result for kunha

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, October 22, 2016

பெர்முடா முக்கோணப்புதிர் கூட தெரிந்து விட்டது எங்க அம்மா உடல் நிலை புதிர் புதிராகவே: கவிஞர் தணிகை.

தமிழக முதல்வர் உடல்நிலை குறித்த செய்திகளில் ஏன் இத்தனை முரண்கள்: கவிஞர் தணிகை
Image result for bermuda triangle


டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் கவர்னர் வித்யாசாகர் ராவ் முதல்வர் இருக்கும் வார்டுக்கே சென்று பார்த்ததாகவும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அதன் பின் வழக்கப்படி மந்திரி பிரதானிகளை சந்தித்ததாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது

Image result for bermuda triangle


சமயம் என்ற ஒரு கேள்விப்படாத நாளேட்டில் : வார்டுக்கே சென்று பார்த்தேன் நன்றாக பேசி வருகிறார்,அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாதத்துக்கும் மேலான நிலையில் தினமணி என்ன சொல்லி இருக்கிறது எனில்: சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் சுமார் 25 நிமிடம் சந்தித்துப் பேசியதாகவும், உடல் நிலை பற்றி கேட்டறிந்ததாகவும் ஆனால் செய்தியாளர்களை சந்திக்கவில்லை இது அவரின் 2 ஆம் வருகை என்று மட்டுமே குறிப்பிடுகிறது

தினத்தந்தி: ஒய்.எஸ். சவுத்ரி என்ற மத்திய மந்திரி சந்திர பாபு நாயுடு சார்பில் முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிக்க வந்ததாகவும் அப்பல்லோகாருவையும், தம்பிதுரையுடன் பேசியதாகவும் 95 சதம் உடல் நிலை தேறிவிட்டதாகவும் சொல்லி உள்ளார்.

இப்படியாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

செய்திகள் வழியே ஊடகத்தின் வழியே ஒன்றும் புரிந்து கொள்ளவோ விளங்கவோ இல்லையே...தானைத் தமிழகமே...
Image result for bermuda triangle

பெர்முடா முக்கோணப்புதிர் கூட தெரிந்து விட்டது எங்க அம்மா உடல் நிலை புதிர் புதிராகவே: கவிஞர் தணிகை.

Friday, October 21, 2016

ஒன்னுமே புரியலைன்ன புதிர் பெர்முடா மர்மம் 170கி.மீ வேக காற்று வெடிப்பினாலாம்: கவிஞர் தணிகை

மேகமே மேகமே  பெர்முடா மர்மம் விலகியதாம்...மேகமாய் மேகமாய் அறிவொளி வீசுதாம்,
 நன்றி : தினத் தந்தி



பெர்முடா பகுதி அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா பகுதி  உள்ள ஒரு மர்ம பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை  பல  கப்பல்களும் ஆகாய மார்க்கமாக பறக்கும் விமானங்களும் அப்பகுதியில் தடம் தெரியாமல் மறைந்துள்ளன. சுமார் 5 50 லட்சம் கிலோமீட்டர் சதுரடி  பரப்பளவு கொண்டது ஆகும் 

இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012 ல் கண்டுபிடித்தனர். அது நவீன அறிவியல் சாதனங்களின் ஆய்வில் பிடிபடாத ஒரு தன்மையுடையதாக இருக்கிறது என்பதையும் விளக்கினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடலின் அடியில் இருப்பது உயிரோட்டமான எரிமலைதான் அதுதான் கப்பல்களை சிதைத்து மூழ்கடிக்கிறது என்ற கருத்தும் வெளியானது. எரிமலையாக மட்டும் இருக்கும் நிலையில், ஆகாயத்தில் செல்லும் விமானங்களும் மறைவது எப்படி? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

மேலும், 2012 ல் அமெரிக்க மற்றும் பிரஞ்சு அறிவியலாளர்கள் குழு சென்றபோது, கடல் படுகையிலிருந்து உயர்ந்த ஒரு நிலத்தடி அமைப்பு உலுக்கி தடுமாறச் செய்துள்ளது.

ஆனால், அதற்கு எந்தவிதமான வீடியோ புகைப்பட ஆதரமும் இல்லை ஜோடிக்கப்பட்ட ஆவணப்படங்கள் மூலம் மட்டுமே அவர்களால் விளக்க முடிந்துள்ளது. இந்த சம்பவம் உலக விஞ்ஞானிகளையே உலுக்கி இருக்கிறது.

இந்நிலையில், பஹாமாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் டாக்டர் வெர்லேக்  கூறியதாவது, பெர்முடா பகுதியில் பிரமிட் வடிவிலான புதிரான படிகம் உள்ளது. அதன் அகலம் 300 மீட்டர். அதன் உயரம் 200 மீட்டர்.

அது ஏற்படுத்தும் நீர்சுழற்சி மற்றும் ஈர்ப்பினால்தான் கப்பல் மற்றும் விமானங்கள் அழிகின்றன. அதிலிருந்து வெளிப்படும் சக்தி எத்தன்மையுடையது என்பது ஆராயப்பட வேண்டியது என்கிறார்.

ஆனால், அது இருப்பதற்கான சாட்சியோ ஆதாரமோ இல்லை. இது வேற்றுக்கிரகவாசிகளின் வேலையாகவும் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தி வந்த  இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை அவிழ்த்து உள்ளனர். இந்த் பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில்  நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர். 

கொலராடோ மாநிலம் பல்கலைக்கழகத்தில் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் டாக்டர் ஸ்டீவ் மில்லர் கூறியதாவது:-

பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட  மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது.பெரும்பாலான நேரம் மேகங்கள் தங்கள் பங்கீட்டு முறையில்  சீரற்ற நிலையில் உள்ளன.ரேடார் செயற்கை  கோளை பயன்படுத்தி மேகங்கலூக்கு கீழ் என்ன நடக்கிரது என ஆய்வு செய்யபட்டது. அப்போது  கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோமீட்டர் வேகத்தில் இருப்பது கண்டறியபட்டது.

இதனால் சக்திவாய்ந்த  45 அடி அலைகள் உருவாகி மேல் எழும்பி விமானத்தில் இருந்து எறியப்படும் வெடி  வெடிகுண்டுகள் போல் மீண்டும் கடலில் விழுகிறது. 
இத்தகைய பெரிய மேகங்கள் மேற்கு முனையில்  20 முதல் 55 மைல் தூரங்களுக்கு காணப்பட்டதாக கூறி உள்ளார்.

வானியல் ஆய்வாளர் ராண்டு செர்வனி கூறியதாவது:-

இந்த அறுங்கோண  வடிவங்கள்  கடல் மட்டத்தில் இந்த சராமாறியாக இந்த விமான குண்டுகளாக செய்ல்பட வைக்கின்றன.கப்பல்களை  கவிழ்க்கவும் விமானங்களை கீழே தள்ளவும்   இந்த காற்று வெடிப்பு 170 மைல் வேகத்தில் வெளிப்புறமாக பரவுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Thursday, October 20, 2016

சேலம் நகராட்சி சேலம் நரகாட்சி அழுக்கு மூட்டை உலக முட்டையில் நான்: கவிஞர் தணிகை

 சேலம் நகராட்சி சேலம் நரகாட்சி அழுக்கு மூட்டை உலக முட்டையில் நான்: கவிஞர் தணிகை

சட்டத்தில் வரும் பாதி மக்களிடம் வரவேண்டும் மீதி

Image result for salem city dust and dirty in tamil nadu

இந்தியாவில் தூய்மையாக  இருப்பதில் 9 ஆம் இடத்தில் சேலம் ரெயில்வே நிலையம் என செய்தி.எனக்கு பொறுக்க மாட்டாமல் வயிற்றைப் புரட்டுகிறது. ஒரு பெண் பரத்திக் கொண்டு நடைமேடைக்கு ஏறும் படியிலும், நடைமேடையிலும் அழுக்கு மூட்டை விரிந்தது போல படுத்துக் கிடக்கிறாள் அருகே 2 வயதுக்குள்ளான ஒரு கீழாடை அணியாத பெண்குழந்தை அமர்ந்தபடி இருக்க... இந்தப் பெண் பேசும் பேச்சும், செய்யும் செய்கையும் மாநரகம்...பொது இடத்தில் பரத்தி படுத்திக் கொண்டு பிறப்புறுப்பில் கை வைத்து ....

ஏன் இப்படி என என்னன்னவோ நாம் எண்ணுகிறோம்.ஒரு சிறுவர் பாதுகாப்புப் பணி செய்யும் நிறுவன இளைஞர் ஒருவர் பேச்சு கொடுத்துப் பார்க்கிறார் .தொடர்வண்டியை சுத்தம் செய்யும் பணியாளர் அவளை எழுப்ப முயல்கின்றனர். அதன் பின் ஒரு பெண்  காவலரும் அவர் பங்குக்கு தம் கடமையை செய்கிறார். ஆனால் இந்தப் பெண்ணை அடிக்கடி நாம் பார்க்க வேண்டியதாகிறது சேலத்து ரெயில் நிலையத்தில்.

ஒருநாள் வாயில் சுவற்றிலேயே ஒரு அநாகரீகமான பெண் சிறு நீர் கழித்தபடி இருக்கிறாள். எவருமே சொல்லுமளவு அங்கில்லை.அது வழிந்தோடிக் கொண்டிருக்கிறது நடை மேடையில் அனைவரும் நடந்து செல்லும் பயன்படுத்தும் பொது இடத்தில். அவளை முதிய வயதினள் என்றுதான் சொல்ல முடியும்.

Image result for salem city dust and dirty in tamil nadu

நின்று கொண்டிருக்கும் தொடர் வண்டியில் கழிப்பறையில் அசுத்தம் செய்ய வேண்டாம், அதாவது சிறு நீர் கழிப்பது, மலம் கழிப்பது வேண்டாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது நடந்தபடிதான் இருக்கிறது.

ரெயில்வே என்றாலே முடம், கூன், குருடு, நொண்டி, அழுக்கு மூட்டை, பிச்சை, ஊன்றுகோல் என்ற நெடி அதிகமாகவே நிலவுகிறது சில சமயம் தாக்குப் பிடிக்க முடியாமல். ஒரு டிக்கட் வாங்காப் பயணி கடைசிப் பெட்டியில் நடுவில் ஏறி அமர்ந்து கொண்டார் . அவரைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு அழுக்கிலிருந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். கால் கைகள் எல்லாம் நகம் வளர்ந்து கிடக்க, ஆடையெல்லாம் , உடல் எல்லாம், முடி எல்லாம் ...முடை நாற்றம் எடுக்க...இவர்களுக்கு எல்லாம் உறவு, நட்பு, குடும்பம், என மனித உறவுகள் எல்லாம் இருக்கிறதா?
புத்தர் ஆக சிந்திக்க வேண்டியுள்ளது.

சேலத்தில் இது போன்றோர்க்கு உணவு தருவதாக ஒரு செய்தி படித்தேன். ஆனால் 5 ரோட்டில் ரத்னா காம்ப்லக்ஸ் முன் உள்ள பெரும் சாக்கடை இன்னும் பிளாஸ்டிக் மலையால் நிரம்பியே கிடக்க...மாநகராட்சி மாநரகாட்சி சேலத்தில் முதலில் பிளாஸ்டிக் பைகளும், பொருட்களும் தடை செய்யப் பட வேண்டும். செய்வார்களா நகராட்சியனர். இல்லை என்றால் அந்த பெரும் சாக்கடையருகே அவர்கள் சில நிமிடங்கள் வந்து நின்று செல்லட்டும்.

திருப்பதி போன 2000க்கும் முன் ஆண்டுகளில் அறையில் தங்க முன் பணம் வாங்கி  அதை திரும்பி வரும்போது திருப்பி கொடுப்பதாக சொல்லி நிறைய ஏமாற்றி ஊழல் புரிவோருக்கு எதிராக சண்டையிடுவது என் வழக்கம் என் வீட்டாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டபோதும்...ஆனால் நேற்று ஒரு செய்தி: இனி அறைகளில் தங்கிச் செல்வோருக்கு முன் பணம் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது அந்த 17 அறைகளும் மூடப்பட்டு அதில் பணி செய்த அத்தனை பணியாளரையும் வேறு பணியில் அமர்த்தி விட்டதாம் தேவஸ்தானம். நல்ல முடிவு. வருவாய் இரண்டு மாநிலமும் பிரித்துக் கொள்வது ஒரு பக்கம் தொடர... இந்த ஊழல் பெருச்சாளிகள் கோவிலுக்கும், அரசுக்கும் தேவஸ்தானத்துக்கும் பொதுவுக்கும் சேராமல் இவர்கள் பாக்கெட்டுக்கு இத்தனை நாள் திருப்பதிக்கு வரும் பயணிகளின் பணத்தை உண்டு பெருத்தபடி இருந்திருக்கின்றனர்.

Image result for salem city dust and dirty in tamil nadu

இதுவும் ஒரு நீக்கப் பட வேண்டிய அழுக்கே. இது போல எத்தனை விதமான அழுக்குகள். பாரதிக்கு சாப்பிடவே குடும்பத்துக்கு உதவா இந்த தேசம் அவரை மகாக் கவி எனக் கொண்டாடுவது போல எல்லாம் காலம். சிலபேர் முன் பிறந்து விடுகின்றனர். காலம் அவர்களை விழுங்கிய பல காலத்துக்கும் பிறகு அவர்கள் சொன்னபடி நடக்கிறது.

Image result for salem city dust and dirty in tamil nadu

ஆமாம் இந்த நதி நீர் இணைப்பை இந்தியாவில் செய்யப் போவது யார்? எப்போது? உடனே சாத்தியமில்லை என்பார் தமது வாதம் செய வருவார் சாத்தியம் இல்லை என்பது ஏதுமே இல்லை என்பதை அவர் உணரார்.

 .பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடாதே. மத்தாப்பு போதும்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.