Friday, October 21, 2016

ஒன்னுமே புரியலைன்ன புதிர் பெர்முடா மர்மம் 170கி.மீ வேக காற்று வெடிப்பினாலாம்: கவிஞர் தணிகை

மேகமே மேகமே  பெர்முடா மர்மம் விலகியதாம்...மேகமாய் மேகமாய் அறிவொளி வீசுதாம்,
 நன்றி : தினத் தந்தி



பெர்முடா பகுதி அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடா பகுதி  உள்ள ஒரு மர்ம பகுதியாக இருந்து வருகிறது. இதுவரை  பல  கப்பல்களும் ஆகாய மார்க்கமாக பறக்கும் விமானங்களும் அப்பகுதியில் தடம் தெரியாமல் மறைந்துள்ளன. சுமார் 5 50 லட்சம் கிலோமீட்டர் சதுரடி  பரப்பளவு கொண்டது ஆகும் 

இதற்கெல்லாம் என்ன காரணம் என்ற ஆராய்ச்சி பல காலமாகவே நடந்து வருகிறது. ஆராய்ந்த விஞ்ஞானிகள் பெர்முடா முக்கோணப் பகுதியில் கடலின் ஆழத்தில் புதிரான ஒரு அமைப்பு உள்ளது என, 2012 ல் கண்டுபிடித்தனர். அது நவீன அறிவியல் சாதனங்களின் ஆய்வில் பிடிபடாத ஒரு தன்மையுடையதாக இருக்கிறது என்பதையும் விளக்கினர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கடலின் அடியில் இருப்பது உயிரோட்டமான எரிமலைதான் அதுதான் கப்பல்களை சிதைத்து மூழ்கடிக்கிறது என்ற கருத்தும் வெளியானது. எரிமலையாக மட்டும் இருக்கும் நிலையில், ஆகாயத்தில் செல்லும் விமானங்களும் மறைவது எப்படி? என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

மேலும், 2012 ல் அமெரிக்க மற்றும் பிரஞ்சு அறிவியலாளர்கள் குழு சென்றபோது, கடல் படுகையிலிருந்து உயர்ந்த ஒரு நிலத்தடி அமைப்பு உலுக்கி தடுமாறச் செய்துள்ளது.

ஆனால், அதற்கு எந்தவிதமான வீடியோ புகைப்பட ஆதரமும் இல்லை ஜோடிக்கப்பட்ட ஆவணப்படங்கள் மூலம் மட்டுமே அவர்களால் விளக்க முடிந்துள்ளது. இந்த சம்பவம் உலக விஞ்ஞானிகளையே உலுக்கி இருக்கிறது.

இந்நிலையில், பஹாமாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் மாநாட்டில் டாக்டர் வெர்லேக்  கூறியதாவது, பெர்முடா பகுதியில் பிரமிட் வடிவிலான புதிரான படிகம் உள்ளது. அதன் அகலம் 300 மீட்டர். அதன் உயரம் 200 மீட்டர்.

அது ஏற்படுத்தும் நீர்சுழற்சி மற்றும் ஈர்ப்பினால்தான் கப்பல் மற்றும் விமானங்கள் அழிகின்றன. அதிலிருந்து வெளிப்படும் சக்தி எத்தன்மையுடையது என்பது ஆராயப்பட வேண்டியது என்கிறார்.

ஆனால், அது இருப்பதற்கான சாட்சியோ ஆதாரமோ இல்லை. இது வேற்றுக்கிரகவாசிகளின் வேலையாகவும் இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து ஆய்வு நடத்தி வந்த  இங்கிலாந்து விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக இருந்து வந்த மர்ம முடிச்சை அவிழ்த்து உள்ளனர். இந்த் பெர்முடா பகுதியில் அறுங்கோண மேகங்கள் காணப்படுவதாகவும் அதனால் அந்த பகுதியில்  நீர் சுழற்சி ஏற்படுவதாகவும் கூறி உள்ளனர். 

கொலராடோ மாநிலம் பல்கலைக்கழகத்தில் வானியல் செயற்கைக்கோள் ஆய்வாளர் டாக்டர் ஸ்டீவ் மில்லர் கூறியதாவது:-

பொதுவாக நேரான விளிம்புகள் கொண்ட  மேகங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது.பெரும்பாலான நேரம் மேகங்கள் தங்கள் பங்கீட்டு முறையில்  சீரற்ற நிலையில் உள்ளன.ரேடார் செயற்கை  கோளை பயன்படுத்தி மேகங்கலூக்கு கீழ் என்ன நடக்கிரது என ஆய்வு செய்யபட்டது. அப்போது  கடல் மட்டத்தில் உள்ள காற்று 170 கிலோமீட்டர் வேகத்தில் இருப்பது கண்டறியபட்டது.

இதனால் சக்திவாய்ந்த  45 அடி அலைகள் உருவாகி மேல் எழும்பி விமானத்தில் இருந்து எறியப்படும் வெடி  வெடிகுண்டுகள் போல் மீண்டும் கடலில் விழுகிறது. 
இத்தகைய பெரிய மேகங்கள் மேற்கு முனையில்  20 முதல் 55 மைல் தூரங்களுக்கு காணப்பட்டதாக கூறி உள்ளார்.

வானியல் ஆய்வாளர் ராண்டு செர்வனி கூறியதாவது:-

இந்த அறுங்கோண  வடிவங்கள்  கடல் மட்டத்தில் இந்த சராமாறியாக இந்த விமான குண்டுகளாக செய்ல்பட வைக்கின்றன.கப்பல்களை  கவிழ்க்கவும் விமானங்களை கீழே தள்ளவும்   இந்த காற்று வெடிப்பு 170 மைல் வேகத்தில் வெளிப்புறமாக பரவுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

Thursday, October 20, 2016

சேலம் நகராட்சி சேலம் நரகாட்சி அழுக்கு மூட்டை உலக முட்டையில் நான்: கவிஞர் தணிகை

 சேலம் நகராட்சி சேலம் நரகாட்சி அழுக்கு மூட்டை உலக முட்டையில் நான்: கவிஞர் தணிகை

சட்டத்தில் வரும் பாதி மக்களிடம் வரவேண்டும் மீதி

Image result for salem city dust and dirty in tamil nadu

இந்தியாவில் தூய்மையாக  இருப்பதில் 9 ஆம் இடத்தில் சேலம் ரெயில்வே நிலையம் என செய்தி.எனக்கு பொறுக்க மாட்டாமல் வயிற்றைப் புரட்டுகிறது. ஒரு பெண் பரத்திக் கொண்டு நடைமேடைக்கு ஏறும் படியிலும், நடைமேடையிலும் அழுக்கு மூட்டை விரிந்தது போல படுத்துக் கிடக்கிறாள் அருகே 2 வயதுக்குள்ளான ஒரு கீழாடை அணியாத பெண்குழந்தை அமர்ந்தபடி இருக்க... இந்தப் பெண் பேசும் பேச்சும், செய்யும் செய்கையும் மாநரகம்...பொது இடத்தில் பரத்தி படுத்திக் கொண்டு பிறப்புறுப்பில் கை வைத்து ....

ஏன் இப்படி என என்னன்னவோ நாம் எண்ணுகிறோம்.ஒரு சிறுவர் பாதுகாப்புப் பணி செய்யும் நிறுவன இளைஞர் ஒருவர் பேச்சு கொடுத்துப் பார்க்கிறார் .தொடர்வண்டியை சுத்தம் செய்யும் பணியாளர் அவளை எழுப்ப முயல்கின்றனர். அதன் பின் ஒரு பெண்  காவலரும் அவர் பங்குக்கு தம் கடமையை செய்கிறார். ஆனால் இந்தப் பெண்ணை அடிக்கடி நாம் பார்க்க வேண்டியதாகிறது சேலத்து ரெயில் நிலையத்தில்.

ஒருநாள் வாயில் சுவற்றிலேயே ஒரு அநாகரீகமான பெண் சிறு நீர் கழித்தபடி இருக்கிறாள். எவருமே சொல்லுமளவு அங்கில்லை.அது வழிந்தோடிக் கொண்டிருக்கிறது நடை மேடையில் அனைவரும் நடந்து செல்லும் பயன்படுத்தும் பொது இடத்தில். அவளை முதிய வயதினள் என்றுதான் சொல்ல முடியும்.

Image result for salem city dust and dirty in tamil nadu

நின்று கொண்டிருக்கும் தொடர் வண்டியில் கழிப்பறையில் அசுத்தம் செய்ய வேண்டாம், அதாவது சிறு நீர் கழிப்பது, மலம் கழிப்பது வேண்டாம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அது நடந்தபடிதான் இருக்கிறது.

ரெயில்வே என்றாலே முடம், கூன், குருடு, நொண்டி, அழுக்கு மூட்டை, பிச்சை, ஊன்றுகோல் என்ற நெடி அதிகமாகவே நிலவுகிறது சில சமயம் தாக்குப் பிடிக்க முடியாமல். ஒரு டிக்கட் வாங்காப் பயணி கடைசிப் பெட்டியில் நடுவில் ஏறி அமர்ந்து கொண்டார் . அவரைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு அழுக்கிலிருந்து அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். கால் கைகள் எல்லாம் நகம் வளர்ந்து கிடக்க, ஆடையெல்லாம் , உடல் எல்லாம், முடி எல்லாம் ...முடை நாற்றம் எடுக்க...இவர்களுக்கு எல்லாம் உறவு, நட்பு, குடும்பம், என மனித உறவுகள் எல்லாம் இருக்கிறதா?
புத்தர் ஆக சிந்திக்க வேண்டியுள்ளது.

சேலத்தில் இது போன்றோர்க்கு உணவு தருவதாக ஒரு செய்தி படித்தேன். ஆனால் 5 ரோட்டில் ரத்னா காம்ப்லக்ஸ் முன் உள்ள பெரும் சாக்கடை இன்னும் பிளாஸ்டிக் மலையால் நிரம்பியே கிடக்க...மாநகராட்சி மாநரகாட்சி சேலத்தில் முதலில் பிளாஸ்டிக் பைகளும், பொருட்களும் தடை செய்யப் பட வேண்டும். செய்வார்களா நகராட்சியனர். இல்லை என்றால் அந்த பெரும் சாக்கடையருகே அவர்கள் சில நிமிடங்கள் வந்து நின்று செல்லட்டும்.

திருப்பதி போன 2000க்கும் முன் ஆண்டுகளில் அறையில் தங்க முன் பணம் வாங்கி  அதை திரும்பி வரும்போது திருப்பி கொடுப்பதாக சொல்லி நிறைய ஏமாற்றி ஊழல் புரிவோருக்கு எதிராக சண்டையிடுவது என் வழக்கம் என் வீட்டாரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டபோதும்...ஆனால் நேற்று ஒரு செய்தி: இனி அறைகளில் தங்கிச் செல்வோருக்கு முன் பணம் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது அந்த 17 அறைகளும் மூடப்பட்டு அதில் பணி செய்த அத்தனை பணியாளரையும் வேறு பணியில் அமர்த்தி விட்டதாம் தேவஸ்தானம். நல்ல முடிவு. வருவாய் இரண்டு மாநிலமும் பிரித்துக் கொள்வது ஒரு பக்கம் தொடர... இந்த ஊழல் பெருச்சாளிகள் கோவிலுக்கும், அரசுக்கும் தேவஸ்தானத்துக்கும் பொதுவுக்கும் சேராமல் இவர்கள் பாக்கெட்டுக்கு இத்தனை நாள் திருப்பதிக்கு வரும் பயணிகளின் பணத்தை உண்டு பெருத்தபடி இருந்திருக்கின்றனர்.

Image result for salem city dust and dirty in tamil nadu

இதுவும் ஒரு நீக்கப் பட வேண்டிய அழுக்கே. இது போல எத்தனை விதமான அழுக்குகள். பாரதிக்கு சாப்பிடவே குடும்பத்துக்கு உதவா இந்த தேசம் அவரை மகாக் கவி எனக் கொண்டாடுவது போல எல்லாம் காலம். சிலபேர் முன் பிறந்து விடுகின்றனர். காலம் அவர்களை விழுங்கிய பல காலத்துக்கும் பிறகு அவர்கள் சொன்னபடி நடக்கிறது.

Image result for salem city dust and dirty in tamil nadu

ஆமாம் இந்த நதி நீர் இணைப்பை இந்தியாவில் செய்யப் போவது யார்? எப்போது? உடனே சாத்தியமில்லை என்பார் தமது வாதம் செய வருவார் சாத்தியம் இல்லை என்பது ஏதுமே இல்லை என்பதை அவர் உணரார்.

 .பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடாதே. மத்தாப்பு போதும்.


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 16, 2016

டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.அந்த நாள் நேற்று போல...கவிஞர் தணிகை.

கலாம் போல் யாமறிந்த மனிதரிலே இனிதாவது ஒருவர் எங்கும் காணோம்: கவிஞர் தணிகை

Image result for apj abdul kalam


விரும்பியவாறே நீ இறந்தாய் தலைவா!
யமனையும் உன் செயல் அழகால்
மயங்கச் செய்தாய்!

1931 அக்.15 முதல் 2015 ஜூலை 27 வரை
ஏகப்பட்ட சம்பவங்கள்
உன் வாழ்வில் விதம் விதமாய்
விதை விதையாய்...
வகைப்படுத்த...

என்றாலும் ஒன்று சொல்லலாம்...

நீ மறுபடியும்
நிற்க மாட்டேன்
என தமிழ்க் கலைஞரால்,
இந்தியக் கட்சிகளால்
இடறி விழுந்ததை சொல்லலாம்.

மேடையிலேயே கைத்தடி
தடுக்கி கீழே விழுந்தாற்போல...

உழைப்பில் அந்த உடல்
ஓய்ந்தது அய்யா!
பிற பிரபலங்கள் போல
நீ பிழைக்க அது ஓயவில்லை

நீ மண்ணில் நிலைக்க
அது உனை ஊன்றி சாய்த்து
என்றும் நீ இருக்க உதவியது...

நீ பள்ளி கல்லூரிகளை நேசித்தாய்.
நீ செய்ததை
சட்டத்துக்கு மீறிய புரட்சி அல்ல
 என்பார் எல்லாம்
உனை புரிந்து கொள்ளாமல்...

எங்கிருந்து அது ஆரம்பிக்க வேண்டும்
தெள்ளத் தெளிவாக தெரிந்ததால்;-அது
அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் -என
புதிய விதைகளை  அங்கே விதைத்தாய்
எண்ணத்தை அள்ளி அங்கே தெளித்தாய்,
புரட்சிக்காரர் பற்றி கவலைப்படாமல்..

நீ வாசித்த வீணை
படித்த நூல்கள்
பிடித்த குறள்கள்
பேசிய சொற்கள்
எழுதிய எழுத்துகள்
எல்லாம் ஒளி பெற...

85th birth day 
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






Thursday, October 13, 2016

முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாமே அங்கு அப்படித்தான்: கவிஞர் தணிகை

முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாமே அங்கு அப்படித்தான்: கவிஞர் தணிகை

சாதாரணமாக எளிமையான‌ முதல்வராக இருந்தவர் வரிசையில் காமராசர், அறிஞர் அண்ணா,ஜோதிபாசு,இப்படி நிறைய பேர் இந்தியாவில். அதில் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி போன்றோர் கேரளாவில் பெயர் பெறுகிறார்கள். அதைப் பற்றிய செய்தி அடிக்கடி வருகிறது. அச்சுதானந்தன் ரெயில்நிலையத்தில் சாதரணமாக காத்திருந்தது, உம்மன் சாண்டி பேருந்திலும் , ரயிலிலும் போவது என...

சாதாரண பயணியைப் போல் ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி


கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ரெயிலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 160 கி.மீ தூரம் சாதாரண பயணியைப் போல் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ரெயிலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 160 கி.மீ தூரம் சாதாரண பயணியைப் போல் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே உம்மன் சாண்டி தான் ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புவதாகவும், இது போன்ற பயணங்களின் போது தான் மக்களிடையே நெருக்கமாக பழக முடியும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு முன் கடந்த மே மாதம் ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று பஸ்ஸில் பயணம் செய்து ஒரு முக்கியமான அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டவர் சாண்டி.



இவர்கள் முதல்வர்கள்:முதல்வராக இருக்கத் தகுதி படைத்தவர்கள். நமது முதல்வரைப் பற்றி நான் ஏதும் சொல்லவில்லை.அவர் நிரந்தரமுதல்வராகவே இருக்கட்டும். வாழ்த்துகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி : மாலை மலர்

Wednesday, October 12, 2016

தேவி ரெமோ றெக்க: கவிஞர் தணிகை

தேவி ரெமோ றெக்க: கவிஞர் தணிகை

7 ஆம் தேதி வெளியான இந்த 3 படங்களையும் 8 அல்லது 9 ஆம் தேதிக்குள் பார்த்து முடித்து விட்டேன் உங்களுக்காக. ஆனால் அதை எழுதி பதிவிடத் தான் இன்று தான் நேரம் கிடைத்தது. இந்த 3 படங்களிலுமே முன் வரிசையில் சொன்னபடி தேவி முதலாம் இடம், ரெமோ இரண்டாம் இடம் றெக்க மூன்றாம் இடம் எனத் தெளிவாகச் சொல்லலாம்.

தேவி:
ஜென்டில்மேன் சிக்கு புக்கு ரயிலே பாடல் நினைவூட்ட அதே போல் ரயில் காடி, சல்மார் எனப் பாடல்கள் இன்றைய கல்லூரி மாணவர்கள் பாடித்திரிகிறார்கள்.

Image result for devi film prabhu deva


நல்ல மாடர்னான மனைவி வேண்டும் என்னும் மும்பையில் பணிபுரியும் கிருஷ்ணாவுக்கு தந்தை சொல்லை மீற தைரியம் எப்போதும் இல்லாததுடன் நிரம்ப‌ மரியாதை வேறு . விளைவு. கிராமத்துப் பெண்ணை தேவியை மணந்து ஆவிப் பெண்ணான ரூபியுடன் இணைந்து நன்றாக ஆடுகிறார். இரு ரோலும் தமன்னாவுக்கு நன்றாகவே இருக்கிறது.

படம் படு லைட்டாக இருப்பதாலும் இப்படி ஆவி அறைகளில் , வீடுகளில்,விடுதிகளில் இருப்பதை எல்லாம் மறுக்க முடியாத கருத்துகள் உள்ளதாலும் எதையும் போலி,பொய் என்று சொல்ல முடியாமல் சினிமாடிக்காக விளையாடி இருக்கிறார்கள். நடிகர்கள் நமக்கு இயல்பான பாத்திரங்களாக மாறாமலே.ஆமாம் ஆனாலும் இரசிக்க முடிகிறது.

நகைச்சுவையுடன் தமன்னாவும் பிரபுதேவாவும் நன்றாக செய்துள்ளார்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழித் தயாரிப்பு.ஆவிகள் நல்லதும் செய்யும் அதைப் பேய், பிசாசு என ஒதுக்கத் தேவையில்லை. பிரபு தேவா கிருஷ்ணா ரூபி ஆவியுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம், உறுதி மொழி நன்றாக உள்ளது. ஆனால் பொதுவாகவே ஆவிகள் நிறைய ஏமாற்றம் இயல்பு கொண்டவை. நல்ல ஆத்மாக்கள் சிலவே நன்மை செய்து மனிதர்க்கு வழிகாட்டுபவை. அப்படிப் பார்த்தால் ரூபி தனது இச்சையை தேவியை வைத்து நிறைவேற்றியும் கொள்கிறார் யாருக்கும் பெரிதான தீமை செய்யாமலே.

ஜாலியாக என்டர்டெய்ன்மென்டுக்காக பார்க்கலாம் வேறு சில பழைய படங்களை நினைவூட்டினாலும். பழைய கள் புதிய மொந்தையில்.

ரெமோ: ரெஜினா மோத்வானி:

Image result for remo

அடிப்படையில் எந்த வாழ்க்கை ஏணிகளையும் எட்டாத ஒரு இளைஞராக இருக்கும் எஸ்கே, ரெமோவாக , முதியவராக எல்லாம் செய்து டாக்டர் காவ்யாவை மணமுடிக்கத் தீர்மானிக்கும் கதை. காதல் அஸ்திரம் பயன்படுத்தி. இந்த டாக்டர் காவ்யாவுக்கு ஏற்கெனவே மணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இல்லாத தகிடுதத்தம் எல்லாம் செய்து கடைசியில் குறிக்கோளை எட்டுவதாக கதை. நன்றாக வசூல் செய்வதாகவும் செய்தி. ஆனால் போலித்தனமான நம்பிக்கை ஏற்படுத்தும் சினிமா.

இது போன்ற சினிமாக்கள் இன்றைய இளைஞர்களை தவறான பாதைக்கே வழிகாட்டும். எதுவுமே இல்லாமலே எதுவுமே செய்யாமலே எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அடைந்து விடலாம் வேஷம் போட்டு என்பதான கதை. அதற்கு குரல் மாற்றிப் பேசுவதை வேண்டுமானால் உழைப்பு என்று சொல்லிக் கொள்ளலாமா? பொருளாதார பலத்தில் படு வீக்காக இருக்கும் இந்த ரெமோவுக்கு காதலிக்கு பிறந்த நாளுக்கு மட்டும் செலவு செய்து ஊரே வியப்படைய வைக்குமளவு வாண வேடிக்கை வான வேடிக்கையாக செய்ய முடிவதும் , குழந்தைகளுக்கு பெரிய மருத்துவ ஆறுதலாக இருப்பதும், நர்ஸ் பயிற்சி இல்லாமலே பிரதாப் போத்தன் என்னும் மருத்துவ மனையின் நிர்வாகியை ஏமாற்றி வேலைக்கு சேர்வதும் எல்லாமே அபத்தமாக இந்தக் கால இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதான தவறான நம்பிக்கை ஏமாற்றம் கொடுக்கும் என்ற சிற்றறிவுக்கு கூட எட்டாமல் பொழுது போக்கு என்ற பேரில் அவ்வை சண்முகி, (அதுவே ஆங்கில படத்தின் தழுவல் அது போல இது ஒன்று)

டாக்டர் காவ்யா எப்படி இந்த ரெமோ நர்ஸின் பேச்சைக் கேட்டு தமது வாழ்க்கையில் தடுமாறுகிறார். பேசி முடிக்கப் பட்ட திருமணத்திலிருந்து வெளியே வந்து காதல் என்ற ஒரே பிடிப்பல்லாத மரக்கலம் ஏறுகிறார் என்பதை நகைச்சுவையாக பொழுது போக்காக சொல்லி இருக்கின்றனர். சினிமாவாக பார்க்கலாம். துளியும் வாழ்க்கைக்கு அருகே வர முடியாத படம்.

பெண் வேடம் ரெமோவாக சிவகார்த்திகேயனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதே போல எல்லா நடிகர்களும் பெண்ணாக நடிப்பதும், எல்லா நடிகைகளும் ஆணாக நடிப்பதும், பேய்க்கதைகள் தொடர்ந்து வருவதும் தமிழ் சினிமாவின் சுழற்சி முறையை காட்டுகிறது.

றெக்க:
விஜய் சேதுபதியை மக்கள் நாயகனாக ரஜினிகாந்தாக‌ பார்க்க மக்கள் ஆவலாக இருப்பதாக எண்ணி எடுக்கப் பட்ட சண்டைப்படம். காதலன் காதலியை சேர்த்து வைக்க திருமணத்தை நிறுத்தி கூட எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளும் பாத்திரம் சிவா என்னும் விஜய் சேதுபதிக்கு. அது அவருக்கு பெரும் எதிரிகளையும் பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி கடைசியில் மந்திரி மகள் பாரதி என்னும் லெட்சுமி மேனனையும் தூக்கி வரச் செய்து விடுகிறது. வழக்கம் போல நிறைய உள் கதைகள் தனித் தனிக் கதைகளாக பல படங்கள் எடுக்குமளவு.


Image result for rekka movie

செல்வமாக கிஷோர், சிஜா ரோஸ் என்னும் சினேகாவாக ஒரு நடிகை,சிவாவின் இளம்பருவ பள்ளிப் பருவத்தின் கதை,கண்ணம்மா என்னும் பாடல் 2 இடங்களில் இமான் இசையில் நெஞ்சுருக வைக்கிறது.நன்றாக இருக்கிறது.

கடைசியில் ஒரு கிரிக்கெட் பேட்டுடன் நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிவா அடித்து வீழ்த்த வருவதுடன் படம் நிறைகிறது. அதற்கும் முன்பே....எவ்வளவோ சொல்ல முடியாத சண்டைக்காட்சிகள். இதில் இருந்து நடிகர்களும் தமிழ் சினிமாவும் என்று வெளிவருவார்களோ என்று தர்ம சங்கடத்தை ஏற்படுத்துமளவு.

இலட்சுமி மேனன் அதாங்க நம்ம கும்கி நாயகி உடல் எடையில் கவனிக்க வில்லை. நன்றாக புசு புசு வென ஊதி இருக்கிறார். அதில் வேறு இவருக்கு நவீன உடை எல்லாம் பொருத்தமே இல்லாமல் ஏற்கெனவே நமது சினிமா உலகு இவரை நாட்டுப்புற அழகியாகவே வெளிக்காட்டி விட்டதால் எடுபடவில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



In our tamil Cinema industry Diwali films releases are waiting for that moment on 28th.Oct.

Tuesday, October 4, 2016

ஊடகங்களின் கேடு கெட்ட ஊமைத்தனமும் ட்ராபிக் இராமசாமியின் துணிச்சலும்: கவிஞர் தணிகை

ஊடகங்களின் கேடு கெட்ட ஊமைத்தனமும் ட்ராபிக் இராமசாமியின் துணிச்சலும்: கவிஞர் தணிகை

Image result for media fails


இந்த பி.பி.சி, என்.டி.டி.வி, போன்ற சிறந்த ஊடகங்கள் கூட வாய் மூடி ஊமையாக தமிழக முதல்வரின் உடல் நிலையை தெளிவு படுத்தாமல் இருப்பது ஊடகங்களின் பெரும் வெட்கக் கேடு.இந்த அப்பல்லோ மருத்துவமனையை ஊடுருவி செய்தி தராத ஊடகங்களான சன் டிவி, புதிய தலைமுறை, இன்ன பிற தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம் முதுகெலும்பற்றவை.

Image result for traffic ramaswamy


ஆட்சி என்றால் மக்களாட்சி என்றால், ஜனநாயக நாடு என்றால் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும். செயல்பட விட வேண்டும்.இங்கு உடல் நிலை கெட்ட தமிழக முதல்வரின் ஒரு படமோ காட்சிப் பேழையோ 13 நாட்களாகியும் ஒன்றுமே வெளிவரவில்லை.

எம்.ஜி.ஆரை விட பெரும் புகழ் படைத்தவரல்ல இந்த அம்மா. ஆனால் எதற்காக இப்படி இவரது உடல் நலம் கெட்ட‌ செய்தியை வராமல் தடைப்படுத்த வேண்டும் என மக்கள் ஐயப்பட்டுக் கொண்டு வெளியில் நடமாடவே யோசித்து வருகிறார்கள்.

உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை டிசம்பருக்கு ஒத்தி வைத்திருப்பது ஒரு நல்ல செய்தி. தமிழக ஆளும் கட்சிக்கும், தமிழக ஆட்சிக்கும் ஒரு பின்னடைவு.

Image result for media fails


இந்நிலையில் உச்ச நீதிமன்ற சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு அருகாமைக்கு வந்து விட்டது ( அது வரும் 7 ஆம் தேதியாக இருக்கலாம் என்றும் பேச்சு இருக்கிறது .இந்தியாவில் தமிழகத்தில் எதுவும் நடக்கலாம், எதுவும் நடக்காமலும் இருக்கலாம், எதுவும் நடந்தால்தான் நிஜம்.) போலியாக செய்தி பரப்பியே உண்மை பிரச்சனையை சென்னை கடலூர் வெள்ளப் பிரச்சனைகளை மறக்கடித்தார்களே அப்படி  இப்படி என அந்த தீர்ப்புக்காகத்தான், அதற்காகத் தான் நாடகம் என அவர்கள் கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்கள். இது மத்திய உள் துறை அமைச்சரின் இரகசிய பேச்சு வார்த்தையால் விளைந்தது என்றும் வதந்திகள் நிலவுகின்ற நிலையில் பெரும்பாலானோர் இவர் வென்டிலேட்டர் ‍ செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ மனை தெரிவித்த நிலையில், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் நிலவுகின்றன.
Image result for traffic ramaswamy


எப்படி இருந்தாலும் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் அப்பல்லோ சென்னை மருத்துவமனைக்கு ஒர் கண்டம் இருக்கிறது. இவர்களின் பாதுகாப்பை உடைத்து சென்று செய்தி கொடுக்காத, சசிகலாவின் காப்பு வளையத்தை உடைத்து உள் புகாத தொலைக்காட்சிகளும், செய்தி ஊடகங்களும் வேஸ்ட்.

மேலை நாடாக இருந்திருந்தால் இந்த வேலையை விடாமல் செய்திருப்பார்கள் தனிமனிதராக அல்லாமல் அமைப்பு ரீதியாகவும்.

இந்நிலையில் ட்ராபிக் இராமசாமி ஒருவர்தான் முதல்வர் நிலை என்ன? முதல்வருக்கு பணி செய்ய மாற்று ஏற்பாடு செய்து வேறு ஒருவரை நியமியுங்கள் என நீதிமன்றம் வரை சென்றுள்ளார். இவர்தான் ஒரு ஜனநாயக நாட்டின் உண்மையான துணிச்சலான மனிதராகத் தெரிகிறார். வேறு அனைவரும் என்னையும் சேர்த்துத்தான் செய்ய வேண்டியதை செய்யாதவர்கள் பட்டியலில்தாம் இருக்கிறோம்

Image result for traffic ramaswamy



முதல்வர் அம்மா, அறிஞர் அண்ணா, காமராசர், கக்கன் போல அரசு மருத்துவ மனையில் அல்லவா இருக்க வேண்டும் எதற்கு இந்த அப்பல்லோ அப்பாலோ என...எல்லாமே இந்த அம்மாவின் வாழ்வில்  மர்ம முடிச்சுகளே. ஸ்டேட் பேங்க் பணம் பிடிபட்டதும், இந்த அம்மா இருப்பிடத்துக்கு கன்டெய்னர் லாரிகள் இரவில் இருந்து பகலில் போன இடம் தெரியாமல் மறைந்து விட்டதும்...சசிகலாவின் வீடியோக் கடை விவகாரங்கள் முற்றி தமிழ்நாட்டிற்கே ஒரு முக்கிய கரும்புள்ளியாக மாறியதுமாக...

இப்படியாக நிலை இருக்கும்போது முதல்வருக்கு அடுத்த முதல்வர் யார் என மக்கள் பேசி விவாதித்து வருகிறார்கள். தற்போது ஷீலா பாலகிருஷ்ணன் வயது 62 ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற்றவர்தான் நாட்டை ஆண்டு வருகிறார் அங்கே மத்திய அரசே திடீர் பல்டி அடித்து கர்நாடகாவுக்கு சாதகமாக மேலாண்மை வாரியம் அமைக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் ஓடிக் கொண்டிருக்க‌


Image result for media fails


கவர்னருக்கு இல்லாத சக்தி இந்த தமிழ்நாட்டில் சசிகலா என்ற எந்தவகையிலும் அரசுக்கு அரசு பதவிக்கு சாராத ஒரு பெண்ணுக்கு இருக்கிறது என்பதுதான் பெரும் வேடிக்கையான வெட்கக் கேடு.

இந்நிலையில் உயர் நீதிமன்றமே வியழனுக்கும் முதல்வர் பற்றி அறிக்கை தரவேண்டும் என தமிழக அரசைக் கோரியிருக்கிறது. நிலை எப்படி எனப் பார்க்கலாம்...

Image result for traffic ramaswamy

வழக்கு தீர்ப்புக்காக ஒளிந்து கொண்டதா இந்த நண்டு அல்லது இது போய் பல நாள் ஆகிவிட்டதா என பொறுத்திருந்து பார்ப்போம்...தமிழச்சி சொல்லியபடி மத்திய ஆளும் கட்சியின் பிடிக்குள் முடங்கி விட்டதா இந்த வாழ்வு, அல்லது பதுங்கி பாயுமா என்பது எல்லாம் சில நாளில் வெளிச்சம். பூஜா ‍ஹாலிடேஸ் நல்ல முறையில் தமிழகத்தில் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.


Image result for traffic ramaswamy

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 2, 2016

காந்தி ஜெயந்தி கொண்டாட்டமா திண்டாட்டமா? கவிஞர் தணிகை

காந்தி ஜெயந்தி கொண்டாட்டமா திண்டாட்டமா? கவிஞர் தணிகை


Image result for mahatma gandhi
மகாத்மாவின் 148 வது பிறந்த தினம். மை லைப் ஈஸ் மை மெசேஜ், பாவர்ட்டி ஈஸ் ஒர்ஸ்ட் பார்ம் ஆஃப்  வாய்லன்ஸ்: எனது வாழ்வுதான் நான் தரும் செய்தி, ஏழ்மை என்பதுவே வன்முறைகளில் மிகவும் கீழ்த்தரமானது.என்றெல்லாம் சொல்லியவர் எந்த செயலும் கீழ்த் தட்டு மனிதர்க்கு பயனிளிக்கிறதா என்ற கவனத்துடன் செய்யப்பட வேண்டும் என்ற மகான்.

இந்தியாவில் பணத் தாள்களில் மட்டுமே மகாத்மா இருக்கிறார்.எதுக்கு இந்த சாங்கியம் சடங்கு என்பதுதான் தெரியவில்லை. இன்று கிராம சபைக் கூட்டம் கலந்து கொள்ளுங்கள் என பிரதமர் அலுவலகத்திலிருந்து, கிராம அபிவிருத்தி அமைச்சகத்திலிருந்து செல்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப் பட்டு உள்ளது.

ஒரு முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இப்படித்தான் நானும் எனது நண்பர்களில் சிலரும் சென்றோம். பங்கெடுத்துக் கொண்டு எங்களது கருத்துகளை தெரிவித்து வந்தோம். பயனில்லை.

நாடு குடிமக்களை தட்டி விடுகிற கடமையை சரிவரச் செய்கிறது.ஆனால் பொதுமக்களாகிய நாம்தான் எதற்குமே அதற்கெலாம் தயாராகவில்லை.

ஏன் எனில் எதற்கும் தயாராக இருக்க வேண்டியவர்கள்தாம் ஒரு இடத்திற்கு சென்று துணிச்சலுடன் தமது கருத்துகளை சொல்லி வர முடிகிறது. ஏன் எனில் எல்லாமே கட்சிகளுடன், ஆளும் கட்சியுடன்
பிணைந்தபடி இருக்கிறது. ஒரு கருத்து துணிச்சலுடன் வெளிப்படையாக தெரியப்படுத்த ஆரம்பித்தால் அவர் சமுதாயத்தில் எதிரியாக சித்தரிக்கப் படுகிறார். முரண்பாடுகள் வேறுபாடுகள் இருப்பார் கூட நண்பராக இருக்க முடியும் என்ற சிறிதளவுடனான நாகரீகம் கூட இங்கு நிலவாத போது, இங்கு என்ன செய்ய முடியும்?



ஒரு நாட்டின் பிரதமராக இருந்த தூங்கு மூஞ்சி பிரதேச உணர்வுடையாரை எல்லாம் சேர்த்துக் கொண்டு உண்ணாநோன்பு என்ற பேரில் நடிக்கிறது காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக...மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எவருமே அந்த மாநிலத்தில் மதிக்கவில்லை.

Image result for mahatma gandhi

இந்நிலையில் எமது முதல்வர் செயலற்று இருக்கிறார். இவர் உண்மயிலேயே இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் பேச்சு நிலவுகிறது. 1,உச்ச நீதிமன்ற சொத்து சேர்த்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஒரு புறம், 2, உள்ளாட்சி தேர்தல் மறுபுறம், 3. காவிரி பிரச்சனை ஒரு புறம் என பலவாரியான பிரச்சனை அனைத்துக்கும் ஒரே தீர்வாக உடல் நிலை சரியில்லை என்ற காரணம் பதிலாக இவை எல்லாம் ஒரு வழியான பின்னே ஆமாம் ஒரு வழியான பின்னே நாட்டின் நிலை திரும்பும். எல்லாம் ஒரு வழிப்பாதைதானே? எல்லாருக்கும் மரணம் வரும்தானே...

Image result for mahatma gandhi



வேறு நாளில் இந்த அக்.2, தியாகிகள் தினம் வந்திருந்தால் ஒரு நாளாவது விடுமுறையாவது கிடைத்திருக்கும் என ஒரு அலுவலக தோழர்கள் சலித்துக் கொள்வதும் காதில் விழாமல் இல்லை.

ஒரு மாநிலத்திலிருந்து பக்கத்து மாநிலத்துக்கு எவரும் சென்று வரமுடியவில்லை இந்த சுதந்திர நாட்டில்.கட்டுப் படுத்த முடியாது இனியும் என வெள்ளையர் ஆட்சியை கொடுத்து விட்டு சென்ற நிலையில் பக்குவத்துக்கு வரா மனிதர்களால் நாடு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது ஒழுக்கம் இல்லாமலிருப்பார் எல்லாம் வெற்றி வாகை சூட எத்தகைய சூட்சுமங்கள் எல்லாம் கையளலாம் என  திட்டமிட்டு மக்கள் ஆட்சியை கட்சிகள் என்ற பேரில் கைப்பற்றிக் கொள்கிறார்கள்


Image result for mahatma gandhi

ஜனநாயகம் கேலிக் கூத்தாக இருக்கிறது .இதைப்பற்றி எல்லாம் நேர்மையாக எழுதவும் பேசவும் முடிவதில்லை.வெறும் சடங்காக இருக்கும் மக்களாட்சியில் வாக்குகள் விலைக்கு அல்லது கட்சி சார்ப்பாக போய் நல்லாட்சி வழங்கும் எவருக்கும் வாக்குகள் கிடைப்பதில்லை ஏன் அப்படிப் பட்டார் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் நிலையே இல்லை.

இந்நிலையில் இந்த சடங்குகள் எல்லாம் சலித்து அலுத்துப் போய்விட்டன.

அடுத்து கலாமின் 85 வது பிறந்த தினம் அக்டோபர் 15ல் வருகிறது உலக மாணவர் தினமாக ஐ.நா குறிப்பிட்டபடி...

எல்லாமே சடங்காக மாறும் முன் ஏதாவது செய்தாக வேண்டும்...ஆனால் எங்கள் ஈனஸ்வரம் வெறும் வயிற்றுக்காக , அல்லது குடும்பம் பேண அடங்கி வருகிறது...

எனவே இந்த காந்தியம் வெளி நாடுகளில் கூட சற்று கவனிப்பில் இருக்கிறது . இந்த நாட்டில் சிறு துளியிலும் கவனிப்பில் இல்லை என்பதுதான் கவலைக்குரிய நிலை.
Image result for mahatma gandhi


தொடர்பற்று போன ஒரு தத்துவத்துக்கு இனி தங்குமிடம் தேவையா? விழாக்கள் அவசியமா என்பதுதான் எமது கேள்விகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.