Sunday, October 8, 2023

விசித்ராவும் பவா செல்லத்துரையும் பிக்பாஸ் நடப்பில் : கவிஞர் தணிகை

விசித்ராவும் பவா செல்லத்துரையும் பிக்பாஸ் நடப்பில் : கவிஞர் தணிகை.



 பவாவை ஒரு அறிவு ஜீவி என்று நினைக்கும்படி ஊடகவழி செய்திகள் இருந்தது இப்போது பிக்பாஸ் வழியே அந்த பிம்பங்கள் உடைய சாதாரண மனிதரை விட கீழ் இறக்கப் பட்டுள்ளார் எச்சில் துப்புவதை திருத்திக் கொள்ள மாட்டேன் என்றதன் மூலம். இவரது துணைவியாரே மலையாள மொழி நூலை தமிழ்படுத்தியவர் சரி அது படிக்காதவராக இருந்தால் எப்படி நடந்திருக்கும்?

 படிப்பு அவசியமில்லை, கையெழுத்து தெரிந்தார் நாட்டில் 30 சதம்தான் இருப்பர் அதனால் தவறில்லை என பொறுப்பில்லாமல் பேசி இருக்கிறார். மேலும் பாரதியாரும், புதுமைப் பித்தனும் கூட மெத்தப் படித்தாரில்லை ஆனால் அவர்களை தமிழ் கூறும் உலகம் தவிர்க்கவே முடியாது என்றார். ஆனால் பவா ஒன்றை மறந்து விட்டார் அவர்களை படிக்க வேண்டுமானாலும் பொதுவான படிப்பறிவு தேவைதான் என்பதை.அது முறையான கல்வியானாலும் சரி முறைசாராக் கல்வியானாலும் சரி. ஆர்வம் + முயற்சி இருந்தால்மட்டுமே அவர்களை அல்லது இலக்கியத்தை அனுபவிக்க முடியும். கதை சொல்லிகளுக்கு வேலையே இல்லை. அவரவர் படிக்க ஆரம்பிக்கும் போது.

 மேலும் விசித்ரா போன்ற முனைவர் பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கானவர்(5000அ15000) பேர் முன் கதை சொல்லி இருக்கிறேன். என எள்ளி நகையாட முயற்சிக்கிறார். படிக்க வேண்டும் என்று சொன்ன ஒரு கருத்தை எதிர்ப்பதாக எண்ணி. கதை படிப்பதும் கேட்பதும் அவரவர் விருப்பம். ஆனால் அவை யாவுமே உணவு உடை உறையுள் தேவைக்கடுத்துதான் . இலக்கியம் இன்னும் தமிழ் சார்ந்து சோறு போடுவதில்லை.முயற்சி நடந்தபடி உள்ளது அவற்றுக்கு முக்கியத்துவம் வேண்டி.

அதே பாரதியும் புதுமைப் பித்தனும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள் எப்படி துயரப்பட்டு வீழ்ந்தார்கள் என்பதையும் கதைசொல்வார் கவனிக்க வேண்டும். விசித்ராவை அவரது நிலையை அனைவரும் பாராட்ட வேண்டிய அவசியம் உள்ளது. படிக்க வேண்டும் என்று சொன்னதில் தவறு ஏதுமில்லை. தலைமுறை இடைவெளி என்பதெல்லாம் இல்லை. தாத்தாவின் மகன் அப்பாவின் மகன் மகன், அப்பத்தா,அம்மம்மா, பாட்டி மகள் அம்மா மகள் மகள் என்ற மனிதத் தொடர் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அது மறுபடியும் எண்ணும் எழுத்தும் இல்லாத நாகரீகமில்லாத காட்டு மிராண்டித் தனத்திற்கே திரும்பி சென்று விட முடியாது. கூடாது. 

கமல் ஏதோ இருதரப்பையும் இணைத்தபடி பேசி ஒட்டும் வேலையை செய்ய முயல்கிறார். ஆனால் அப்பட்டமாகத் தெரிந்தது பவாவின் தோல்வியும் அழுதபடி இருந்தாலும் விசித்ராவின் வெற்றியும்.

 படிக்காமலே ஒரு பட்டறையில் சேர்ந்த படிக்காத பையன் ஒருவன் கூட மெக்கானிக் வேலை கற்றுக் கொண்டு சோத்துக்கு வழி தேடிக் கொள்ள முடியும் ஆனால் அந்த நிலையைத்தான் உலகம் எப்போதும் ஆதரிக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி. சமுதாய அக்கறை உள்ளோரை எல்லாம் இதே போல அவமானப் படுத்திக் கொண்டே இருங்கள் விளங்கிடும்....மேலும் காட்சி ஊடகம் தான் வாழ்க்கை என்ற போக்கை வாழவேண்டிய நெறியுடனான சமுதாயத்தில் ஊற்றி ஊற்றி கெடுத்துக் கொண்டே இருக்காதீர்கள். 

 உண்மைதான்: நன்ற்றாற்றலுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந்தாற்றாக் கடை. 
 மறுபடியும் பூக்கும் வரை 
கவிஞர் தணிகை.

hamas and Israel problem, 
cauvery water issue
iran life losses
russia and ukrain war everything is after this only
so our opinion also necessary to add with it.

No comments:

Post a Comment