Monday, October 30, 2023

அம்பத்தூர் முதல் அமெரிக்கா வரை: கவிஞர் தணிகை

 கடந்த சில நாட்களாக நாட்டில் அல்லது உலகில் நடந்தேறி வரும் சம்பவங்கள் மிகவும் உற்று நோக்கி கவனிக்க‌த் தக்கவை சாதாரணமாக எல்லா செய்திகளையும் போல புறந் தள்ளி விட்டு செல்லக் கூடியவனவாய் இல்லை. அமைதியாக இருக்க முடியவில்லை.



1. அம்பத்தூரில் ஆய்த பூஜைக்காக இரு சார இந்திய வட மாநில இளைஞர் கூட்டம் மோதிக் கொள்வதும் அதைத் தடுக்கச் சென்ற அல்லது சமாதனம் செய்யச் சென்ற காவல் துறையினரை அந்தக் கூட்டத்தினர் ஓட ஓடத் துரத்தி அடித்ததும் அதன் பின் உடனே அல்லது விரைவாக 33 பேர் காவல் துறையினரின் கட்டுப் பாட்டில் எடுத்ததும்...


ஒவ்வொரு தனி மனிதச் செயலும் நாட்டின் அல்லது உலகின் ஒட்டு மொத்த நன்மை தீமைகளுக்கு வித்தாகிறது 


மகாத்மா காவலரையும், இராணுவத்தினரையும் அவரவர் கடமையைச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


மக்களின் எண்ணமே அரசு , அரசின் எண்ணமே காவல் துறை அந்தத் துறைக்கே இது போன்ற நிலை என்றால் பிற துறைகள் பற்றி சொல்லவே வேண்டாம்.


மகாத்மாவின் இராமராஜ்ஜியக் கனவிலும், கம்யூனிலும் காவல் துறைக்கு வேலை இல்லை. ஆனால் அது போன்ற வானமே தொடு தூர ஆட்சி வரும் வரை காவல் துறை இருந்து தான் ஆக வேண்டும்.


2. கேரளத்தின் வழிபாட்டுத் தலத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்தவர் தமது பக்க நியாயம் பற்றி விளக்குவதான காணொலி...இழந்து போன ஒரு மனித உயிர்க்கும்,காயம் பட்ட பலருக்கும் நீதியாக அமைந்து விடப் போவதில்லை.


3. இஸ்ரேல் பாலஸ்தீனிய யுத்தம், ரஷ்யா உக்ரைன் போன்ற போர்கள் சொல்லொணா மனித குலத்தின் மேல் நடத்தப் படும் தாக்குதல்கள் உயிர்சேதங்கள், பொருட் சேதங்கள், பெட்ரோலியப் பொருட்கள் மேல் தாக்க அதன் விலை ஏற்றம்


4. அமெரிக்காவிலும் ஒரு துப்பாக்கிச் சூடு நடத்திய ஒரு மனிதர் பலரைக் கொன்ற பின் பிணமாகக் கிடந்ததாகச் செய்தி.


பொதுவாக உலகும் மாந்தர்களும் முக்கியமாக அதிக மக்கள் தொகை உடைய இந்தியா போன்ற நாட்டு மக்களும் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி மிக விரைவாக நகர்ந்து வருகிறார்கள் அதன் விளைவுகளே யாவும்.அப்படி செல்லும் போது 3 தலைமுறைகளில் குலம் அழிந்து விடும் என்று விவேகனந்தா போன்ற ஆன்ம நேயர்கள் கருதி எச்சரித்துள்ளனர்.


இவற்றை எல்லாம் அபாயச் சின்னங்களாகவே கருத வேண்டும், இவை சில சம்பவங்களே பெரும்பாலும் நாடும் மக்களும் உலகும் அமைதியாகத் தானே சென்று கொண்டிருக்கிறது....சேலம் கோட்டை மாரியம்மன் குட முழுக்குத் திருவிழாவில் முகமதிய நண்பர்கள் குடிநீர் போத்தல்களை அனைவர்க்கும் வழங்கி நெஞ்சை நெகிழ வைத்தார்களே அதுவும் சம்பவம் தானே செய்திதானே என சமாதானப் படுத்திக் கொள்ளக் கூடாது. சமாதனப் படுத்திக் கொள்ளவும் முடியாது.


இதில் மாநிலம், மத்தி, உலகு என்றவாறெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வழி இல்லை. ஆட்சி முறைகளில் சரியான அணுகுமுறை இல்லை என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. சாதாரண மனித உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற கருத்தே நிலைப்படுகிறது. விசாகப் பட்டினம்  ரயில் விபத்து உட்பட... காவல்துறையினரும் குடும்பம் என்ற அமைப்பின் அங்கங்கள் தானே, ஆட்சி அமைப்பின் கருவிகள் தாமே. BE PEACE DON'T BE AS A PIECE

what is the use of UNO ...?

கருத்துகள் வெளிப்பட‌

எண்ணங்கள் தெளிவாக‌

தியானம்




மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

கொசுக்களும் உயிர்கள்தாம் ஆனால் அவற்றை....


No comments:

Post a Comment