Monday, October 16, 2023

மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்: கவிஞர் தணிகை(எ)தணிகாசலம் சுவாமிகள்.

 மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்: கவிஞர் தணிகை



இல்லை என்றும் சொல்லலாம் இருக்கிறது என்றும் எண்ணிச் சொல்லலாம் எண்ணிக் கொள்ளலாம் அது எல்லா இடங்களிலும் வியாபித்து நீக்கமற நிறைந்து கிடக்கிறது என்பார் .


பொங்கு பல சமயமெனும் நதிகளெலாம் புகுந்து கலந்திட நிறைவாய்ப்... பொங்கி ஓங்கும் கங்கு கரை காணாத கடலே...எங்கும் கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர் தங்க நிழல் பரப்பி மயற் சோடை எல்லாம் தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச் செங்குமுதம் மலர வரு மதியே எல்லாம் செய வல்ல கடவுளே தேவ தேவே என்பார் இராமலிங்கர்


அத்தேவர் தேவர் அவர் தேவர் என்று இங்ஙன் பொய்த் தேவுப் பேசி புலம்புகின்ற பூதலத்தே பத்தேதும் இல்லாது பற்றற நான் பற்றி நின்ற மெய்த் தேவர் தேவுக்கே சென்றூதாய் கோத்தும்பி...


விவேகானந்தர் சொல்லியபடி கிணற்றுத் தவளை உவமைகளுடன்,எல்லா மதங்களும் நதிகளே...


வறுமையும். பிணிகளும், பஞ்சமும், பசியும் பட்டினியும் இன்னும் தீராமலே இருக்கையில் இயற்கையில் இயல்பில்


தானாக சாகும் வாய்ப்பு தவறாத உயிர்களை மின்சாரம், குடி நீர் உணவின்றி தவிக்க விடுவதும், இரக்கமின்றி கொன்று குவிப்பதுமாக மனித இனம் மல்லுக் கட்டிக் கொண்டு மனித குலம் அபாயகரமாக சென்று கொண்டிருக்கும் காலக் கட்டம்.


இன்றும் நோபெல்தான் உயர்ந்த மனிதகுலப் பரிசென்கிறார், அதை நிறுவிய ஆல்ப்ரட் நோபெல் தாம் டைனமைட் வெடிமருந்தைக் கண்டறிந்த போது அது பாறைகளைத் தகர்க்கும் வெடிமருந்து அது பலனளிக்கும் உயிர்களுக்கு என்றே கருத்துப் பதிவு செய்தார்.


ஆனால் சொல்லொணா கொடுமைகள்,,, பார்க்கவும் முடியா காட்சிகள்...நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்...


எந்நிலையில் இருந்தாலும் எவர் செய்தாலும் எவர் காரணமாக இருந்த போதும் வன்முறை தீர்வாகாது. எனவே தான் காந்தி மகாத்மா போன்றோர் தமிழர் நெறியில் வள்ளுவத்தில் சுட்டிய படி இன்னா செய்தாரை ஒறுத்தல்....என்று தனி மனித வாழ்வுக்கும்  வழி காட்டினார்....ஆனால் இன்று இனங்கள் ஒன்றுக்கொன்று அழித்துக் கொள்வதும், நாடு ஒன்றுக்கொன்று  அழித்துக் கொள்வதுமாக  சொல்லத் தரமன்று. சொல்வதில் தர்மம் என்று....


சமயத் தலைவர்களும், நாட்டின் தலைவர்களும் இதை எல்லாம் தடுக்கும் கடமையில் உள்ளார் அனைவரும் வாளாவிருக்கின்றனர். ஐ.நா சபை  என்பது வெறும் பேருடன் குறுகிக் கிடக்கிறது.


இந்த நேரத்தில் ஈனஸ்வரத்துடன் பிராத்தனை செய்வதன்றி என்போன்றோர்க்கு வழி இல்லை...மனித குலம்  இது போன்ற அழிவு அத்தனைக்கும் ஆணி வேராக விளங்கும் (அதிலிருந்து ஆரம்பிக்கும்) மதம், இன பேதம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ இயற்கையை பிரார்த்திப்போம்.


எம் மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்

அம்மதம் என்றருள்வாய் அருட் பெருஞ்ஜோதி...


சாதியும் மதமும் சமயமும் பொய்யென

ஆதியில் உணர்த்திய அருட் பெருஞ்ஜோதி....


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை. என்கிற தணிகாசல சுவாமிகள்.


No comments:

Post a Comment