Thursday, October 5, 2023

இராமலிங்க வள்ளலார்: கவிஞர் தணிகை

 இராமலிங்க வள்ளலார்: கவிஞர் தணிகை



200 ஆம் ஆண்டு வருவிக்கை நாள் இன்று என்று இராமலிங்க வள்ளலார் பற்றிய பிறந்த நாளைக் குறிப்பிடுகிறார்கள்.


தனிப்பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி.


ஜீவகாருண்யம் பசி தீர்த்தல் மனிதநேயத்தின் கடமை என வடலூர் அணையா அடுப்பும் ஜோதியும்.


நாம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மகாத்மா காந்தி, இரவீந்த்ர நாத் தாகூர்,அம்பேத்கார் போன்றோரை கொண்டாடும் அளவுக்கு அவர்கள் அதாவது வடக்கு மாநிலத்தார் மகாக் கவி பாரதியையும்,இராமலிங்க வள்ளலாரையும், பெரியாரையும் கொண்டாடுகிறார்களா என்று வடக்கே நகர்ந்து பாருங்கள் ஏன் யாம் இதைக் குறிப்பிடுகிறேன் எனத் தெளிவாகத் தெரியும்.எனது இளமையில் ஆந்திரா(பிரிவு படாத போது) கர்நாடகா, ம.பி,ஒரிஸ்ஸா, தலைநகர் புது டில்லி வரை வாழ்ந்ததன் அடிப்படையில்  இதை மொழிந்துள்ளேன்.


தினமும் எனது நினைவகத்தில் உள்ள சில வரிகளை அவர் தந்ததை இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.


அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே

அன்பெனும் குடில் புகும் அரசே

அன்பெனும் வலைக்குட்படும் பொருளே

அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே

அன்பெனும் கரத்தமர்ந்த அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிய கடலே

அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே

அம்பெனும் பர சிவமே!


பெற்ற தாய் தனை மகமறந்தாலும்

பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

உயிரை மேவிய உடல் மறந்தாலும்

கற்ற நெஞ்சகங் கலை மறந்தாலும்

கண்கள் நின்றிமைப்பதுவே மறந்தாலும்

நற்றவத்துள்ளிருந்தோங்கும் நமசிவாயத்தை

நான் மறவேனே.


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 

உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமை மிகு நினது புகழ் பேச வேண்டும்

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்

மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும்

உனை மறவாதிருக்க வேண்டும்

மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும்

நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்...


சாதியும் மதமும் சமயமும் பொய் என‌

ஆதியில் உணர்த்திய‌ அருட் பெருஞ்ஜோதி

எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள்

அம் மதம் என்றருள் அருட் பெருஞ் ஜோதி

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட் பெருஞ் ஜோதி.


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி

உள்ளே ஒத்துரிமையாய்  உடையவராய் உவக்கின்றார் யாவரவர்

உளம்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம்

எனத் தேர்ந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட‌

என் சிந்தை மிக விழைந்ததாலோ!.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

2 comments:

  1. வள்ளலார் ஓர் உலகப் புரட்சியாளர். ஜீவகாருண்யம், சமரச சுத்த சன்மார்க்கம் ஆகியவற்றுக்காக அரும்பாடுபட்ட மகான்.

    ReplyDelete
    Replies
    1. thanks for your feedback karthikeyan on this post. vanakkam. please keep contact

      Delete