Tuesday, February 19, 2019

ஸ்நேகா மும்தாஸ் ஜென்னிஃபர்: கவிஞர் தணிகை

ஸ்நேகா மும்தாஸ் ஜென்னிஃபர்: கவிஞர் தணிகை

Image result for sneha mumtaj jennifer


இந்தியாவில் முதன் முதலாக சாதி மதமற்ற மனிதர் என சான்றிதழ் பெற்ற ஸ்நேகா வழியை எவ்வளவு பேர் தொடர்கிறீர்கள் என அரசுகள் கேட்க வேண்டும்  அவரை முன்னோடியாகக் கொண்ட ஒரு நல்ல சமுதாய  அமைவுக்கு இட்டுச் செல்ல ஆரம்ப அரிச்சுவடியின் சிறு கை விளம்பலாக இதை கொண்டாலும் சரியே.

சான்றிதழ் இல்லாமலேயே நாமெல்லாம் அப்படித்தான் இருக்கிறோம் என்பதெல்லாம் வேறு. குரான், பைபிள், கீதை, புத்தம், ஜைனம் எல்லாம் படிப்பதும் வைத்து மேற்கோள் காட்டி வாழ்வது வேறு. ஆனால் இப்படி அரசு, சட்டம், நீதி யாவற்றுக்கும் அத்தாட்சி நல்குவதாய் அமைந்த வேறுபட்ட‌ இந்த செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கமல் இந்த விஷயத்தில் அனைவரையும் முந்திக் கொண்டு பார்த்திபராஜா ஸ்நேகா அவர்களை பாராட்டியுள்ளார். பாராட்டுவதோடு மட்டுமல்லாது இவருக்கு மக்கள் அங்கீகாரம் பெற தேர்தலிலும் இவரை நிற்க வைத்து ஒரு ஜனநாயகப் பெருமை பெற்றுத் தரலாம். ஆனால் மக்கள் வாக்களிப்பாரா என்பதுதான் விளங்காத புதிர்.

இவருடைய கணவர், குடும்பம், பெற்றோர் பிள்ளைகள் யாவரையுமே நாம் பாராட்டவேண்டும்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

No comments:

Post a Comment