Saturday, July 29, 2017

சேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞர் தணிகை


சேலம் ரெயில்வே நிலையத் திருடன்: 27.07.2017. : கவிஞர் தணிகை
Related image
3 காவலர்கள் எங்கிருந்தார்கள்? எப்படி வந்தார்கள் என்றே தெரியவில்லை அந்த 15 வயதுக்குள் இருக்கலாம் என மதிப்பிடும் அந்த திருடனை கையும் களவுமாக நான் பிடித்தபோது ...

காலம் என்னை சேலத்து ரயில் சந்திப்பில் நடைப்பயிற்சியை சுமார் 1 மணி நேரம் செய்ய வைத்து அதன் பின் மாலையில் வீடு நோக்கி கொண்டு வந்து சேர்த்து வருகிறது.

நான் ரயில் சந்திப்பை அடையும்போது என்றுமே மாலை 4.30 அல்லது 4.40 மணியில் கடிகார முள் அல்லது சிவப்பு விளக்கு நேரம் காட்டிக் கொண்ட்ருக்கும்.

27. 07 .17 அன்றும் அப்படித்தான் நேரத்துடன் சென்று விட்டேன் இப்படித்தான்  ஓராண்டுக்கும் மேல் மாதாந்திர அனுமதிச் சீட்டு பெற்று மாலை வேளை மட்டும் அதை பயன்படுத்தி வீடு வந்து சேர்ந்து வருகிறேன்.

மேட்டூர் ரயில் எப்போதுமே 5. 30 மணிக்கு மாலையில் புறப்படுவதாக இருக்கும் அப்படியே குறித்த நேரத்தில் எடுக்காமலும் இருந்ததில்லை. கரூர் ரயிலும் இதுவும் ஒரே நேரத்தில் எடுத்து நான் பார்த்ததும் உண்டு. ஆனால் எப்போதும் கரூர் ரயில் குறித்த நேரத்தில் கிளம்பி விடும். இந்த மேட்டூர் ரயில் மட்டும் ரயில் சந்திப்புக்குக் காவலாக அங்கேயே இருக்கும். கோவை விரைவு வண்டி சென்னை வரை செல்வது இந்த நேரத்தில் குறுக்கிட்டு அதே 5. 30 நேரத்தில் சென்றவுடன் அதிலிருந்து 10 நிமிடம் கழித்தே இந்த மேட்டூர் ரயில் புறப்படும். சதாப்தி கூட ரயில் நிலையம் வந்து சேர்ந்து விடும் கோவைக்குப் பின் சென்னை செல்லும் ரயில்.

அது கடைசிப் பெட்டி அப்போதுதான் எங்கள் ஊரில் ரயில் மெதுவாக சிக்னலுக்காக மெதுவாகச் செல்லும்போது ஆபத்தின்றி இறங்கிக் கொள்வதும் நடந்து வருகிறது. குடியரசுத் தலைவர், பிரதமர், ரெயில்வே மந்திரி, தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் மேலாளர் அனைவரிடமுமே எங்கள் ஊரில் அதிக எண்ணிக்கையினர் இறங்குவதால் ஒரு நிமிடம் நிறுத்தி எடுத்துக் கொள்ளவும் என ஆயிரம் பிரதிநிதித்துவம், குரல் கொடுத்தும் அது நடக்காத கதை எல்லாம் வேறு...

எனவே மிக்க நேரம் இருப்பதால் நான் எனது முதுகில் தூக்கும் பையை உள்ளே கடைசிப் பெட்டியில் இறங்குவதற்கு வசதியாக வைத்து இடம் போட்டு விட்டு வெளி வந்து நடந்து வருவது வழக்கம்.

இந்த முறை சரியானதில்லை என ஏற்கனவே ஒரு காவலர் சொல்லியிருந்தபோதும் வேறு வழியில்லாமல் அப்படி செய்து வந்தேன. ஒரு  முனைவர் பட்டம் பெறும் நோக்கத்தில் உள்ள ஆய்வுப் படிப்பு படித்து வரும் ஒரு பெண்மணி அவரிடம் பார்க்கச் சொல்லி வைத்திருந்த தோள் பையை சொல்லாமல் கொள்ளாமல் விட்டுச் சென்றதிலிருந்து இப்படித்தான் செய்து வருகிறேன். அங்கே நடைப்பயிற்சித் தோழர் எல்லாம் எனக்கு உண்டு.

ஆனாலும் என்ன செய்தாலும், பை மேல் ஒரு கண் இருக்கும். பையில் பெரிய மதிப்புடைய பொருள் எதுவுமிருக்காது எனினும் ரயில் பயண மாதாந்திர அனுமதிச்சீட்டு, சில அலுவலகக் குறிப்புகள் தொலைபேசி எண்கள் குறித்த நோட்டு, சாப்பிட்டு விட்டு கழுவி வைத்த இரண்டு டப்பாக்கள் அதில் ஒன்று எனக்கு மேடையில் பேசியதற்கு பரிசாக அளித்த  உணவை சூடு குறையாமல் வைத்திருக்கும் டப்பா, டப்பர் வேர் குடி நீர் பாட்டில், அப்துல் கலாம் கடிதம் அதன் பின் எனது ஒரு பக்க வாழ்க்கைச் சுருக்க அறிமுக விவரங்கள், ஒரு துண்டு அவ்வளவுதான். அத்துடன் அலுவலக என் மேஜையின் லாக்கர் சாவிகள்...

இதற்கே ஒரு திருடன் வந்து விட்டான் பாருங்கள். நான் சற்று வெளி வந்து சில முறை கூட நடந்திருக்க மாட்டேன், அதே பெட்டியில் வடநாட்டை சேர்ந்த ஒரு கணவன் மனைவி...அந்தப் பெட்டியின் அடுத்த வாயிலின் அருகே..

இந்தப் பையன் அல்லது இளைஞன் சில முறை நடந்து பார்த்தான் ,நானும் அவனைப் பார்த்தேன் .ஆனால் அந்த வேலையை செய்வான் என எதிர்பார்க்கவில்லை. பொதுவாகவே எவரும் சந்தேகப்படும்படி இருந்தால் பையை கவனத்தில் இருந்து சிதற விடாத எனக்கு...

அவன் என் ரயில் கடைசிபெட்டியில் கடைசி இருக்கையில் இருந்த எனது தோள் பை அருகே அமர்ந்து பைக்குள் கையை விட்டு துழவிக் கொண்டிருந்த  காட்சி கண்ணில் பட, இது யார் பை, என்னடா பண்றே என நான் கேட்டுக் கொண்டே சென்று அவனைப் பிடிக்க ,அவனோ பை திறந்திருந்தது, சாவிதான் இருந்தது எனச் சொல்லிக் கொண்டே தப்பி ஓடி ரயில் பெட்டியின் வாயிலருகே ஓடி இறங்க முனைந்தான் அந்த வட நாட்டு ஆணும் அருகே வந்தார், நான் அவரை இவன் உங்க சொந்தம் என்றல்லவா நினைத்து விட்டேன் எனச் சொல்ல அவர்கள் அறிந்திருந்த தமிழில் இல்லை என மறுத்தனர்...

அவனைப் பிடித்து இழுத்தபடி போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கப் போறேன் எனச் சொல்ல அவனோ ஒரு சீட்டின் அருகே உள்ள கம்பியை இழுத்து பிடித்தபடி நான் இழுத்த இழுப்புக்கு வராமல் நகராமல் அடம் பிடிக்க எங்கிருந்தனரோ , எப்படி வந்தனரோ, 3 காவலர்கள் உடனே அங்கு வந்து சேர்ந்தனர், அவர்களில் ஒருவர் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர், அவர் அந்த பையை அப்படி எல்லாம் வைக்காதீர்கள் என ஏற்கனவே ஒரு முறை அறிவுறுத்தியவரும் கூட.

அதை அடுத்து வேறு எங்கிருந்தோ இரு இளைஞர்கள், அவனை விட சற்று வயதில் உருவத்தில் பெரியவர்கள் வந்து விட்டு விடுங்கள் எனக் கெஞ்ச ஆரம்பிக்க, காவலர் வந்து விட்டனர், அவர்களாச்சு, இனி இவன் ஆச்சி, என்ன வேண்டுமானாலும் அவர்கள் செய்து கொள்ளட்டும் என விட்டு விட்டேன்.


அவர்களில் ஒருவர் என் பொருள் யாவும் இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். பார்த்தேன் எல்லாம் இருந்தது. அதில் சாவிகள் இருந்தது உனக்கு எப்படிடா தெரியும், திருடலைன்னா, ஏன்டா ஓடறே,என்று கேட்டு விட்டு விட்டு விட்டேன்.

காவலர்கள்: எங்கு போகிறீர் என விசாரித்து , அனுமதிச் சீட்டு இருக்கிறதா எனக் கேட்டுக் கொண்டு அவர்களை கூட்டிக் கொண்டு 3 ஆம் எண் நடைமேடைக்கு கொண்டு சென்று விட்டனர்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Image result for THIEVES AND POLITICAL THIEVES

THIS MAIL I RECEIVED FROM 
LAKSHMANAN MARIMUTHU
HE GAVE TRANSLATION ALSO.
JUST I AM POSTED HERE
IF IT IS RELEVANT ....



Image result for THIEVES AND POLITICAL THIEVES







Lakshmanan Marimuthu

Jul 27 (2 days ago)
to Chinnu, bcc: me
   
Translate message
Turn off for: Tamil
விக்கி லீக்ஸ் (WIKI LEAKS) வெளியிட்டு உள்ள இந்திய கருப்பு பண முதலைகளின் முதல் 30 பேர் கொண்ட முதல் பட்டியல்... (பணம் கோடி கணக்கில்)
1. அம்பானி ₹5,68,000
2. அதானி ₹7,800
3. அமித்ஷா ₹1,58,000
4. ராஜ்நாத்சிங் ₹82,000
5. அருண்ஜெட்லி ₹15,040
6. சுமித்ரிதி இரானி ₹28,900
7. எடியூரப்பா ₹9,000
8 . ரவிசங்கர் குருஜி ₹15,000
9. பாபா ராம்தேவ் ₹75,000
10. ஜனார்த்தன ரெட்டி ₹50,000
11. நளின் கோலி ₹5900
12. தேவேந்தர ஃப்ட்னாவிஸ் ₹2,20,000
13. லலித் மோடி ₹76,888
14. சுஷ்மா சுராஜ் ₹5,82,114
15. நரேந்திர மோடி ₹19,800
16. ஷர்ஷத் மேத்தா ₹1,35,800
17. கத்தான் பாரத் ₹8,200
18. கட்டா சுப்ரமணிய நாயுடு ₹14,500
19. லாலு பிரசாத் யாதவ் ₹28,900
20. ஜேஎம்.சிந்தியா ₹9,000
21. கலாநிதி மாறன் ₹15,000
22. வையாபுரி கோபாலசாமி ₹35,000
23. வசுந்திரா ராஜ் ₹5,900
24. ராஜ் ஃபவுண்டேசன் ₹1,89,008
25. என்.சந்திரபாபு ₹1,68,009
26. ஜெ.ஜெயலலிதா ₹2,57,500
27. சோனியா காந்தி ₹3,00,089
28. சுப்ரமணிய சுவாமி ₹2,20,060
29. சசிக்கலா ₹1,54,700
30. டிடிவி.தினகரன் ₹12,870
இந்தியர்களின் கருப்பு பணம் மட்டும் சுவிஸ் வங்கியில் இருப்பது ₹358,679,863,300,000 (1.3 ட்ரிலியன் டாலர்; ரூபாயில் போட தெரிந்தவங்க போடுங்க!) இந்த பணம் 10 அமெரிக்காவுக்கு சமம். அடுத்த 100 வருடங்களுக்கு உலகில் சக்தி வாய்ந்த முதல் நாடாக இந்தியா இருக்கலாம்.
ஊழலுக்கு எதிரான போருக்கான ஆயுதம் இதோ..! இதுபோல் 2,000 இந்தியர்கள் இதுமாதிரி வரி ஏய்ப்பு நடத்தி திருட்டுத்தனமாக சுவிஸ் வங்கியில் பணம் வைத்துள்ளனர்!
இதை விட்டுபுட்டு ஜிஎஸ்டியாம்; பண மதிப்பு இழப்பு நடவடிக்கையாம்; என்னடா கூத்து இது! யாரை ஏமாத்த இந்த டுமீல்!
(புதுச்சேரி சப்தர் ஹஸ்மி கலைக்குழு நிர்வாகி தோழர் அன்பு வாடஸ்அப் மூலம் பெறப்பட்டது சங்கதி இது; ஆங்கில மூலத்தின் அடியேனின் தமிழாக்கம்!)

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

3 comments: