Sunday, April 3, 2016

சிலர் சிலராகவே... பெரும்போக்கு பயணத்தில்.;- கவிஞர் தணிகை.

 யாமறிந்த மனிதரிலே இனிதாவது ஒருவர் எங்கும் காணோம்: கவிஞர் தணிகை

விரும்பியவாறே நீ இறந்தாய் தலைவா!
யமனையும் உன் செயல் அழகால்
மயங்கச் செய்தாய்!

1931 அக்.15 முதல் 2015 ஜூலை 27 வரை
ஏகப்பட்ட சம்பவங்கள்
உன் வாழ்வில் விதம் விதமாய்
விதை விதையாய்...
வகைப்படுத்த...



என்றாலும் ஒன்று சொல்லலாம்...

நீ மறுபடியும்
நிற்க மாட்டேன்
என தமிழ்க் கலைஞரால்,
இந்தியக் கட்சிகளால்
இடறி விழுந்ததை சொல்லலாம்.

மேடையிலேயே கைத்தடி
தடுக்கி கீழே விழுந்தாற்போல...

உழைப்பில் அந்த உடல்
ஓய்ந்தது அய்யா!
பிற பிரபலங்கள் போல
நீ பிழைக்க அது ஓயவில்லை

நீ மண்ணில் நிலைக்க
அது உனை ஊன்றி சாய்த்து
என்றும் நீ இருக்க உதவியது...

நீ பள்ளி கல்லூரிகளை நேசித்தாய்.
நீ செய்ததை
சட்டத்துக்கு மீறிய புரட்சி அல்ல
 என்பார் எல்லாம்
உனை புரிந்து கொள்ளாமல்...

எங்கிருந்து அது ஆரம்பிக்க வேண்டும்
தெள்ளத் தெளிவாக தெரிந்ததால்;-அது
அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் -என
புதிய விதைகளை  அங்கே விதைத்தாய்
எண்ணத்தை அள்ளி அங்கே தெளித்தாய்,
புரட்சிக்காரர் பற்றி கவலைப்படாமல்..

நீ வாசித்த வீணை
படித்த நூல்கள்
பிடித்த குறள்கள்
பேசிய சொற்கள்
எழுதிய எழுத்துகள்
எல்லாம் ஒளி பெற...

அட இந்த வரம் கூட
வாய்க்காமல் சிலர் சிலராகவே...
பெரும்போக்கு பயணத்தில்.



பெரு நோக்கை தொலைத்தபடி
ஒரு நோக்கில் அலைந்தபடி
ஒரு நோக்கம் அலைந்து படிக்க‌
பெரு நீர்த்தேக்கம் ஒரு வடிகாலாக‌
ஒரு சிறு வாய்க் காலாக கால் வாயாக...

யாமறிந்த மனிதரிலே கலாம் போல‌
காந்தி போல‌
தெரஸா போல ஒருவரும் காணோம்
எனவே அவர்களோடு போனோம்
வெகு காலம்....

வருவாய்  வரும் வாய்
ஒரு வாய் மூடிப் போக‌
புத்தரை மனைவி கேட்டது போல‌
காலம் கை நீட்டிக் கேட்டது

மறுபடியும் 
சோற்றுப் பையை
எடுத்துக்கொண்டேன்


எல்லாம் மறு உற்பத்தி
மண்ணில் வெற்று விதையாய்
வீழ்ந்து விடக்கூடாதென்று....


‍‍‍ கவிஞர் தணிகை.

மறுபடியும் பூக்கும் வரை





Thursday, March 31, 2016

தமிழ் இந்துவே நீயே இப்படிச் செய்யலாமா? ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு: கவிஞர் தணிகை.

தமிழ் இந்துவே நீயே இப்படிச் செய்யலாமா? ஊடகங்களின் பொறுப்பற்ற போக்கு: கவிஞர் தணிகை.




ஒரே நாள் நாளிதழில் 31.03.16 தமிழ் இந்துவில் ஜெ. சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு என்றும் அடுத்து இன்னொரு பக்கத்தில் , ஜெயலலிதா தரப்பு ஆட்சேபணையை நிரா‍‍கரித்து, திமுக பொதுச்செயலாள‌ர் அன்பழகன் தரப்பு சுருக்கமாக இறுதிவாதத்தை முன் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது என்றும் வெளியிட்டுள்ளது.முரண்பாடாக இருக்கிறது.

மாறாக ஆரம்பம் முதல் மறுபடியும் உங்கள் தரப்பை தெரிவிக்க வேண்டியதில்லை புதிதாக ஏதாவது கருத்துகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றுஅன்பழகன் தரப்புக்கு நீதிபதிகள் சொன்னதை எடுப்பாக போட்டிருந்தால் போதுமே

ஒரு செய்தி காலை 9.33க்கு மற்றொரு செய்தி 12.32இந்திய நேரப்படி வெளியிடப்பட்டு 2.47(14.47) பி.எம் மணிக்கு தகவல் உறுதி செய்யப்பட்டது. மேலும் இதை எழுதிய  வினோத் தம் கருத்தாக‌ கருதப்படுகிறது என:ஜெயலலிதாவுக்கு சாதகம்:

இதற்கிடையில், சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது, வழக்கில் ஜெயலலிதாவுக்கு சாதகமான போக்கே என்று கருதப்படுகிறது.என்றும் தமது கருத்தாக வெளிப்படுத்துகிறார்.

கிரிக்கெட் வர்ணனையின் போது நடப்பதை அப்படியே சொல்லாமல் இவர்களாக சேர்த்து இந்த நேரத்தில் இன்னும் சில விக்கெட் விழ வேண்டியது அவசியம் என வீணாய்ப் போன வர்ணனையாளர்கள் சேர்த்து சொல்வது போல...

தமிழ் இந்து ஆசிரியர் அசோகன் மிக நல்ல ஆசிரியராக காட்சியளிக்கிறார். தங்கர் பச்சான் போன்றோர் தமிழ் இந்துவை புகழ்ந்து தள்ளுகிறார்கள். கேட்டால் இது ஆசிரியர் கருத்தல்ல, எழுதிய கட்டுரையாளர் கருத்து என சொல்லி விட்டுப் போவது சுலபம்.

பொதுவாகவே நாளாக காலம் செல்லச் செல்ல இந்த ஊடகவியலாளர்கள் நெறிகெட்டுப் போவதை சில பதிவுகள் அப்பட்டமாக காண்பிக்கின்றன.ஹர்திக் பாண்டியா ஒரு மாடல் அழகியை துரத்துகிறார் என்று போடுகிறார்கள் . செய்தி பார்த்தால் இருவரும் காதலர்கள் ஒன்று சேர்ந்து பொது இடங்களுக்கு செல்கிறார்களாம் அதன் மொழிதான் இது...

அன்பழகன் வாதத்தை எழுதி முன் வையுங்கள் என சொல்லியதை எப்படி எல்லாம் திருப்புகிறார்கள் பாருங்கள்.



 ஒரு கேள்விக்குறியை, ஒரு ஆச்சரியத்தை, ஒரு வியப்பை, ஒரு திடீர் செய்தியை கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்க எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என முயற்சி செய்து வருவது கேலிக்குரியதாகிவிட்ட ஊடகங்களின் போக்கு மாற்றப்பட வேண்டியது.

ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சில ஊடகங்கள் யுவராஜ் விஜய்காந்த் மறைவிலிருந்து யாரோலோ இயக்கப்படுகிறார் என்று சொன்னதையும் சிறுதாவூர் பங்களாவுக்கு 10 லாரிகள் சென்றதையும் மறு நாளில் அவை காணாமல் போனதாகவும் செய்திகளைச் சொல்லி அவை தேர்தல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருப்பதும் முக நூல் போன்ற ஊடகங்கள் தமிழ் முரசு என்னும் பத்திரிகை செய்தியாக மன்னார்குடி பள்ளியில் பெரும் எண்ணிக்கையிலான இந்திய பண நோட்டுக்கட்டுகள் எல்லாம் 500, 1000 இருந்ததை படங்களுடன் வெளியிட்டிருந்ததையும் பாராட்ட வேண்டும்.



தமிழகத் தேர்தல் தலைமை அலுவலர் ராஜேஷ் லக்கானி சொல்வது போல உண்மையிலேயே முதல்வர் தொடர்புடைய பங்களாக்களை சோதித்து அறிந்து செய்திகளை நாடெங்கும் கொண்டுவருவாரா என்பதை எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.



ஊடகம் சரியாக இருந்தால் இருந்திருந்தால் இந்த நாட்டில் இலஞ்சம், ஊழல், மது போன்ற பெரும்பிரச்சனைகளுக்கு முடிவு கட்டப்பட்டு குடிநீர், மருத்துவம், போன்ற தேவையான வசதிகள் நாடெங்கும் கிடைத்திருக்கும். ஊடகம் அரசுடனும், அரசின் கைப்பாவைகளான அரசுஅலுவலர்களுடன் கூட்டு சதியில் பெரும்பாலும் அமுங்கிக் கிடக்கிறது என்பதும் உண்மைதான்.

மறுபடியும் பூக்கும் வரை
 கவிஞர் தணிகை.





Wednesday, March 30, 2016

மதமல்ல தீவிர வாதம் நெறியல்ல வெறிதான்:ஸ்பீட் பிரேக் 3.கவிஞர் தணிகை

மதமல்ல தீவிர வாதம் நெறியல்ல வெறிதான்:ஸ்பீட் பிரேக் 3.கவிஞர் தணிகை



ஈஸ்டர் கிறிஸ்து உயிரித்தெழுதல் நாளை லாகூரில் பூங்காவில் கொண்டாடிய கிறித்தவ மக்கள் மீது பாகிஸ்தான் தாலிபான் மனித வெடிகுண்டு இன வெறித் தாக்குதல் 72 பேரை பலி கொண்டு 250 பேரை படுகாயமடையச் செய்த சம்பவம் ஒரு உலகின் மதவெறி சோகம். இறந்தது பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும்.மார்க்ஸ் சொன்ன அபின் என்ற மத போதையை விட இது எந்த கணக்கிலுமே சேராத காட்டுமிராண்டித்தனம். வார்த்தையில் வடிக்க முடியாத கொடூரம். சோகம்.

இதன் பொறுப்பை ஏற்ற பாகிஸ்தான் தாலிபான் குழு இதுமுடிவல்ல ஆரம்பம்தான் இனி இது நிறைய தொடரும் என பாகிஸ்தான் அரசை மிரட்டியுள்ளது.

பிறர் மகிழ்வில் நாமும் சேர்ந்து மகிழ்வது ஒரு விதம், பிறர் மகிழ நாம் செயல்படுவது ஒரு விதம், பிறர் மகிழ்வதை பார்ப்பதில் சுகம் ஒருவிதம் இவை எல்லாவற்றையும் விட்டு விட்டு பிறர் துன்பத்தில் எப்படி இந்த குரூர மனங்கள் மகிழ்கின்றன? உண்மையிலேயே அவை மகிழ முடியுமா?

அதுவும் ஒரு திருநாளில் ஒரு விழாவில் இப்படி இனத் துவேசத்துடன் ஆவலுடன் இது போன்ற சம்பவத்துக்காக காத்திருந்ததாக சொல்லி இருப்பது கொடுமையிலும் கொடுமை.



இந்த தீவிரவாதத்துக்கு ஒரு முடிவே இல்லையா? இந்த தீவிரவாதிகளை அடக்க, அழிக்க ஒழிக்கவே உலகுக்கு வழியில்லையா? சொல்லி விட்டால் ஒரு சில நண்பர்கள் கச்சை கட்டிக் கொண்டு கிறித்தவர்கள் ஜப்பானில் குண்டு போடவில்லையா? கிறித்தவ அமெரிக்கர், ஆங்கிலேயர் உலகெங்கும் கொடுங்கோல் செய்யவில்லையா? முகமதியரைத் தாக்கவில்லையா? இஸ்ரேல் பாலஸ்தீனியரை படுகொலை செய்யவில்லையா? என்றெல்லாம் வக்காலத்து வாங்க வந்து விடுகிறார்கள்.அவ்வப்போது நடக்கும் சம்பவத்துக்கு இது போன்ற முகமதிய இயக்கங்கள் காரணமாகி விடுகின்றனவே அதை மட்டும் தண்டிக்க திருத்த முடியவில்லை எனிலும் நாம் கண்டிக்க, நமது கருத்தை சொல்லவும் ஒரு நேர்மை, தூய்மை, துணிவு வேண்டுமே. அதில் நீங்கள் உங்களைப் போன்றோர் எப்படி தவறு காண்கிறீர் என்பதுதான் புரியவே இல்லை.

மதங்களை விமர்சிப்பது வேறு. உயிர்களை பறிப்பது வேறு. இப்படிச் செய்ய எந்த மனிதமும், எந்த உலக விதியுமே இவர்களை அனுமதிக்காது. இது ஒருமன நிலை கடந்த சைக்கோத்தனம். இந்த மனநோயாளிகள் உளவியல் ரீதியாக குணப்படுத்த வேண்டியவர்கள்.




வரலாறை காலத்தை திருப்ப முடியாது. என்றோ நடந்த நிகழ்வுகளுக்காக என்றுமே அப்பாவிகள் உயிர் போவதும் உடல் சிதைப்பதும் தொடர்ந்திடக் கூடாது. இதெல்லாம் மனிதமா? இப்படி உலகில் நடக்கலாமா?

ஜெயலலிதா சிறுதாவூர் பங்களாவிலிருந்து 10 லாரிகள் இரவோடிரவாக காணாமல் போனாலும், வைகோ தமிழக அரசியல் என ஒரு புறம் பேசபட்டு தேர்தல் நாள் நெருங்கி வந்தாலும், மல்லையா தமது கடனில் 4000 கோடியை முதல் தவணையாக திருப்பிக் கொடுத்து விடுகிறேன் எனச் சொன்னாலும் செய்திகள் எவ்வளவு உருண்டோடினாலும்,தேமுதிக விஜய்காந்த் மச்சான் சுதிஷ் வைகோவுக்கு துணை முதல்வர், கம்யூனிஸ்ட்களுக்கு உள்ளாட்சி, நிதி, திருமாவுக்கு கல்வி மந்திரி பதவிகள் விஜய்காந்த் முதல்வரானால் உண்டு என்றாலும் சில நாட்களாக இந்த உயிர்கள்  பாகிஸ்தானி லாகூர் பூங்காவில் பூக்களைப் போல பறிக்கப்பட்டது இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தப்பட்டது மனதிலிருந்து அகலவில்லை.



இதை எல்லாம் எழுதி என்ன ஆகப் போகிறது? ஏற்கெனவே எங்களுக்குத் தெரிந்த செய்தியை எழுதி என்ன ஆகப் போகிறது? என்று எனது ஒரு நண்பர் கேட்பார் வழக்கமாக...அவருக்கு புதிதாக செய்திகளை உருவாக்க முடியாது. நடப்பதை தெரியப்படுத்துவது செய்தி ஆகி விடுகிறது. ஆனால் இது போன்ற செய்திகளில் நமதுகருத்துகளை பதியவைப்பது நாம் யார் எனக் காட்டுகிறது.

நாம் பிறரை மகிழவைப்பதில் மகிழும் இனம். பிறரை மகிழ வைப்பதையே இலட்சியமாக கொண்டு இருக்கும் இனம். எனவே மதத்தின் பேரால் இப்படி ஒரு கொடூரம் உலகில் நடப்பதை பதிவிடுவது எமதுகருத்தை தெரிவிப்பது ஒரு வடிகால். நாம் எங்கிருக்கிறோம் எனக் காட்டி நமது உயிர்ப்பை உறுதி செய்துகொள்வது.

எந்த மதமானாலும் எதன் அடிப்படையின் மேல் அது அமைந்திருந்தாலும் ஒரு சமரசப் போக்கும் மனிதாபிமனமே எல்லா மதங்களையும் விட உயர்ந்த மதம் என்ற மனோபாவம் இருந்தால் மட்டுமே இந்த உயிர்ப்பலிகள் தடுக்கப்படும். அதுவரை ...என்ன செய்வது துக்கப்படுவதையன்றி...


கொஞ்சம் கீதை கொஞ்சம் பைபிள் கொஞ்சம் குரான்:- கவிஞர் தணிகை.
கொஞ்சம் கீதை,கொஞ்சம் பைபிள்,கொஞ்சம் குரான் என்று  மூன்று பிரதானமான மதங்களின் சிறு துளிகள் உங்கள் பார்வைக்கு.இதை நேர்மறையாக பார்ப்பதும், எதிர்மறையாக பார்ப்பதும் அவரவர் அறிதல் புரிதல்,தெளிதல் உணர்தல் அகம் புறம் சார்ந்தது.



கீதை:

எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததும் விளைவில் அமிர்தம் ஒப்ப மாறுவதோ,அந்த இன்பமே சாத்விகம் ஆகும். அது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.

 விஷியங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசம் எனப்படும்.

தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்,உறக்கத்தினின்றும் சோம்பரினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசம் என்று கருதப்படும்.

இயற்கையில் தோன்றும் இம் மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலும் இல்லை. வானுலகத்திலும்  இல்லை.

குரான்:

பாகம் 10.ஸுரத்துத் தவ்பா அத்தியாயம்:9 ருகூஃ 10.

77. அல்லாஹ்வுக்கு - அவனுக்கு வாக்களித்ததில் - அவர்கள்  மாறு செய்த காரணத்தினாலும், அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருந்த காரணத்தாலும் ; அவனை அவர்கள் சந்திக்கின்ற (கியாமத்து) நாள் வரை அவர்களுடைய நெஞ்சங்களில் நிபாக்கை (நயவஞ்சகத் தன்மையை)அவர்களுக்கு இறுதி முடிவாக ஆக்கிவிட்டான்.

78. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய இரகசியத்தையும், அவர்களின் இரகசிய ஆலோசனையையும் அறிவான் என்பதையும்,நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை எல்லாம் மிக்க அறிந்தவன் என்பதையும் அவர்கள் அறியவில்லயா?

79. (ம்முனாபிக்கான)வர்கள் எத்தகையோரென்றால்,முஃமின்களில் தாரளமாக தருமங்கள் செய்கிறவர்களையும்,இன்னும் தங்களுடைய உழைப்பைத் தவிர (வேறு எதனையும் தானம் செய்வதற்குக்) காணமாட்டார்களே (அதாவது இயலாது இருக்கின்றார்களே)அத்தகைய (எளிய)வர்களையும் குறைகூறி,அவர்களைப் பரிகாசம் செய்கின்றனர்.அல்லாஹ் அவர்களைப் பரிகசிக்கிறான் - மேலும் ,நோவினைத் தரும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.

பைபிள்:

லூக்கா 8.இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதல்
மத்9:18 - 26; மாற் 5: 21 - 43

40. இயேசு திரும்பி வந்தபோது (கெரசேனர் பகுதியில் இருந்து கலிலேயாவுக்கு) அங்கே  திரண்டு காத்திருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.41.அப்போது தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்தார். அவர் பெயர் யாயிர். அவர் இயேசுவின் காலில் விழுந்து  தம்முடைய  வீட்டிற்கு வருமாறு வேண்டினார். 42.ஏனெனில் பன்னிரண்டு வயதுடைய அவருடைய ஒரே மகள் சாகும் தருவாயில் இருந்தாள் இயேசு அங்குச் செல்லும் வழியில் மக்கள் கூட்டம் அவரை நெருக்கிக்  கொண்டிருந்தது. 43. பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் தம் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் எவராலும் அவரைக் குணமாக்க இயலவில்லை.

44. அப்பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்உடனே அவரது இரத்தப்போக்கு நின்று போயிற்று...45.என்னைத் தொட்டவர் யார்? என்று இயேசு கேட்டார். அனைவரும் மறுத்தனர்., பேதுரு,ஆண்டவரே,மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறதே என்றார்...46. அதற்கு இயேசு "யாரோ ஒருவர் என்னைத் தொட்டார்;என்னிடம் இருந்து வல்லமை வெளியேறியதை உணர்ந்தேன்" என்றார்.47. அப்பெண் தாம் இனியும் மறைந்திருக்க முடியாதென்று கண்டு நடுங்கிக் கொண்டே வந்து  அவர்முன் விழுந்து,தாம் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தமது பிணி நீங்கியதையும் பற்றி மக்கள் அனவரின் முன்னிலையிலும் அறிவித்தார்..  48. இயேசு அவரிடம் "மகளே உனது நம்பிக்கை உன்னை நலமாக்கியது. அமைதியுடன் போ" என்றார்.

கவிஞர் தணிகை

மறுபடியும் பூக்கும் வரை.


Tuesday, March 29, 2016

சொல்லத் தோணுது தங்கர் பச்சான்:கவிஞர் தணிகை

சொல்லத் தோணுது தங்கர் பச்சான்:கவிஞர் தணிகை
சொல்லத் தோணுது நூல் வெளியீட்டு விழாவின் 7 காணொளிகளையும் கண்டு வியந்தேன். முனைவர் வெங்கடாஜலம், முன்னால் நீதிபதி சந்துரு,பழனி பெரியசாமி,இந்து அசோகன்,சகாயம் ஐ.ஏ.எஸ் மற்றும் தங்கர் பச்சான் ஆகியோரின் உரை ஒரு அரிய விருந்து.

மேட்டூர் குறிஞ்சி வந்திருந்தபோது நாம் பார்க்க முடியவில்லையே என்ற குறையை இந்த கணினி இணைய வசதிகள் போக்கி விட்டன.இந்த புத்தகத்தின் இடம் பெற்ற பல கட்டுரைகளுக்கு இந்து நாளிதழில் வந்த போதே எனது கருத்துப் பின்னோட்டங்களை இட்டு வந்துள்ளேன்.

ஒத்த கருத்துடன் உங்கள் குழுவினர் அனைவருடனும் அடியேனும் ஒன்று படுவதை உணர முடிகிறது. அதன் சான்றாக நேற்று எமது பதிவில் இடம் பெற்ற தராதரமில்லாத மக்கள்,கட்சி, அரசியல் நாடு நிர்வாகம் என்ற பதிவையும் உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.அது உங்கள் நிகழ்வை பார்க்கும் முன் எழுதிய பதிவு.எனவே நாட்டு அக்கறை உள்ளோர் அனைவருமே ஒரே அலை நீளத்தில் சிந்திக்கிறோம் என்று புரிகிறது. எல்லாரிடமும் அந்த தாக்கம் இருக்கிறது. ஆனால் இணைதல் வேண்டும்.

பார்க்காதார் இருந்தால் இந்த காணொளிகளை காணுங்கள் அவசியம் இந்த நூலையும் வாங்கி படியுங்கள். அது தமிழ் மண்ணுக்கு நல்லது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை:- ஒரு உலகளாவிய பார்வை- கவிஞர் தணிகை

சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை:- ஒரு உலகளாவிய பார்வை- கவிஞர் தணிகை



காடும் மலையும் குறையக் குறைய நாடும் நகரும் பெருகப் பெருக
பனிப்படலம் உருக உருக கடல் சீற்றங்கள் உயர உயர
ஓசோன் மண்டலம் கிழியக் கிழிய இரசாயன மழை பொழியப் பொழிய
பூமிப்பந்து அதிர அதிர  உயிரினங்கள் உதிர உதிர காற்றும் நீரும் கலங்க
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை..

எல்லைக் கோடுகளின் வெறி ஏற ஏற கொள்கைக் கோடுகள் கேடுகள் மாற  மாற
வேளாண் நிலங்கள் தரிசாய்ப் போக மனிதக் கூடாக தனிமைப் பரிசாக
கூட்டுக் குடும்பம் என்ற பேச்சே போச்சு, மூச்சுக் காற்றும் விஷமாகி--
தற்கொலை எண்ணிக்கை கூடலாச்சு
ஏரி குளங்கள் நீர் நிலைகள் காயலாச்சு, காணாமல் போச்சு, சோற்றுக்கும் நீருக்கும் சிக்கலாச்சு
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை

மறுபடியும் சாலைகள் போடப் போட, இலஞ்ச ஊழல் கூடக் கூட
இலட்சக்கணக்கான கோடிகள் இலட்சியம் இல்லாத கேடிகளிடம் சேர
அரசியல் என்றாலே முதல் இல்லாத வியாபாரம் என்றாச்சு
காந்தி வழித் தியாகமும் பகத், சுபாஷ் மொழி வீரமும் போச்சு;- அவை
இந்த மண்ணிலா விளைந்தது? என்ற வியப்பு விரியலாச்சு
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை.

குற்றவாளிகளே நாட்டை ஆளுகிறார் சட்டமும் நீதியும் மீறுகிறார்
மற்ற மக்களோ கை ஏந்துகிறார் துன்பத் துயருடன் மாளுகிறார்
கையில் காசு, வாயில் கோஷம் கொடுத்தா மொத்தம் ஜெயிக்கிற வாக்கு
சுரண்டல் அடியிலிருந்தும் ஆரம்பம் ஆள்வோர் (மணி)முடியிலிருந்தும் ஆரம்பம் முடிவின்றி
மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி, மக்கள் எவ்வழி மன்னர் அவ்வழி
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை, தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை

விலங்குகளும் பறவைகளும் பூச்சிகளும் பூமியில் குற்றுயிராச்சு
விளங்காமல் போன மனிதர்களின் மனமோ குரூரமாச்சு
எண்ணெய்க் கிணறும் ஆய்த வியாபாரமும் முதல் என்றாச்சு
மருந்துப் பொருளும் கலப்படமாக உயிர்விடும் மூச்சு;- எல்லாம்
சுரண்டும் அரசியலால் திண்டாடும் இயற்கை ,தனி மனித வேட்கையால் கொண்டாடும் சேர்க்கை.

உலகெலாம் குண்டுகள் வெடிக்கத் தயார் நிலையில்
கலகமெலாம் கட்சித் துண்டுகள் ஓர் கறை நிற வழியில் சாதி மதமென
சந்திர செவ்வாய்க்கும் சென்றடைந்தது மனித அறிவு!
பூமியின் கல்,மண்,புல்,பூண்டு, தாவரம், உயிர் யாவும் சுரண்டும் மனிதா
அரசியல் என்ற பேரில் அவற்றையும் சுட்டு விடாதே! விட்டு விடு!
சுரண்டாதே அரசியலால் திண்டாடவிடாதே இயற்கையை!
அளவான தனிமனித வேட்கையோடு வாழு! வாழ விடு!

 மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகையின் மகன்
த.க.ரா.சு.மணியம்
இரண்டு  ஆண்டுகளுக்கும் முன் எழுதிய கவிதை.



பி.கு: ஜெயலலிதா வீட்டுக்கு கன்டெய்னர் மற்றும் லாரிகள் மூலம் 500 ரூ 1000 ரூ கட்டுகள் கொண்டு சென்று சிறுதாவூர் பங்களாவில் நிலவறை செய்யப்பட்டு அமுக்கி வைத்து வருகிறார்கள் என்று வைகோ தேர்தல் ஆணையத்துக்கு சோதனை செய்யச் சொல்லி புகார் தந்த செய்தியை தினமணி வழியே கண்ட நிலையில், நேபாளத்தின்  நிலநடுக்கம் எவரெஸ்ட் சிகரத்தில் ஓட்டைகளையும், விரிசல்களையும் உண்டாக்கி விட்டதாக செய்தி கண்ட நிலையில் இந்த கவிதை எழுதிய தாள் வேறு ஒரு தகவலைத் தேடிக்கொண்டிருக்கும்போது கையில் கிடைத்தது அது உங்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Monday, March 28, 2016

தராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.

தராதரமில்லா மக்கள்,கட்சிகள்,நிர்வாகம் அரசு,அரசியல்: கவிஞர் தணிகை.




வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையதாம் உயர்வு என்ற குறள் நெறிக்கேற்ப மக்களின் தரத்தைப் பொறுத்தே கட்சிகள், அரசியல், அரசுகள்,தேர்தல், வெற்றிகள் நிர்வாகம் எல்லாம் .ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட‌ கட்சிகளில்,நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியாவில் குறிப்பிடும்படியான‌ கட்சிகளாக‌(136),தமிழகத்தில் 76 கட்சிகள் இருந்தாலும் 8 பிரிவில் இவை அடங்க...

தி.மு.க, பா.ம.க,தே.மு.தி.க இவை குடும்பங்களை மையமாக வைத்தவை, அ.இ.அ.தி.மு.க சர்வாதிகார ஒரே சுப்ரீம் மையம், மத்திய மந்திரியால் கூட ஆண்டுக்கணக்காய் சந்திக்க முடியா கடவுள் நிலை என மத்திய மந்திரியே தமிழக முதல்வர் பற்றி பத்திரிகையிலேயே செய்தி தருகிறார்,சி.பி.ஐ,சி.பி.ஐ(எம்)சில மாநிலங்களில் இருந்தும் மறைய ஆரம்பித்து அவ்வப்போது வேர் வெளித் தெரியும் கட்சிகள் ஆனாலும் மிகவும் நலிந்த கட்சிகள் ஏன் வலுப்பெறவில்லை ஆய்வுக்கு அவசியம்




பாரதிய ஜனதா கட்சி மத, காவி வண்ணத்தில் சிக்கிக் கொண்டது, காங்கிரஸ்(கள்) பழம் பெருமை பேசி மக்களிடையே இருக்கும் கொஞ்சம் நஞ்சம் செல்வாக்கையும் இழந்து வருபவை.

இப்படிப் பார்த்தால் எந்தக் கட்சியுமே ஒரு நேர்மையான ஒழுக்கமான தொண்டரை, அல்லது செயல்வீரரை, அல்லது நாட்டுக்கு சேவையாற்ற கட்சி வேண்டும் என நினைக்கும் ஒரு இந்தியரை, தமிழரை ஒரு மனிதரை சாதி மத பேதமற்று வழிகாட்டி நல்ல மனிதரை கவர்பவையாக ஆர்வமூட்டும் நிலையில் இல்லை.



சகாயம், நல்லகண்ணு, போன்ற அரிய‌ மனிதர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் போல பரிமளிக்கவில்லை. இன்று உலகில் உள்ள 50 தலைவர்களில் ஒருவராக ஃபார்ச்சூன் என்னும் ஒரு அமெரிக்க ஆங்கில நாளேட்டால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் அர்விந்த்.

தலைவர் என்றால் ஒரு நல்ல குணமாவது வேண்டும் அவரை நாம் பின் தொடர...காமராஜை எடுத்துக்கொண்டால் சுயநலமில்லா எளிமை,அப்பழுக்கற்ற ஊழலின்மை, மக்கள் நலம் ஒன்றே குறிக்கோள்,

அண்ணாவை எடுத்துக்கொண்டால் அறிவுடமை, ஆங்கிலப்பேச்சு வன்மை, இன்னும் முறியடிக்க முடியாத சாதனையான‌ இறுதி யாத்திரையில் கலந்து கொண்ட மனிதர்களின் எண்ணிக்கையில் அண்ணாவின் இறுதி ஊர்வலம் ,இப்படி சொல்லலாம்,




எம்.ஜி.ஆரை எடுத்துக் கொண்டால் அவரின் வள்ளல் தன்மை, சிறுவனாக இருக்கும்போது தன்னை அமர்ந்த சாப்பாட்டு இலையில் இருந்து சாப்பிடவிடாமல் எழ வைத்த மனிதர் பற்றி குரோதம் பாராட்டாமல் சாப்பாட்டுக்காக நேர்ந்த அவமானத்தை மனதில் கொண்டு எல்லாரும் சாப்பிட வேண்டும் என தன்னால் முடிந்த அளவு பசி போக்க நினைத்த மனம்,

இப்படி ஏதாவது ஒரு குணம் அவர்கள் சுயநல வாழ்வையும் மீறி மேல் ஏறி நிற்கும், ஆனால் முன் நாம் சொன்ன கட்சித்தலைவர்கள் யாவரும் ஏதாவது சில நல்ல குணம் இருந்தாலும் சுயநலம்,ஊழல், மது, ஒழுக்கமின்மை  விளம்பரம்.போன்ற குணங்களால் சூழப்பட்டவர்கள்.



எனவேதான் எம் போன்றோர் காந்தி, தெரஸா, அப்துல்கலாம் போன்றவரை மட்டுமே முன் மாதிரிகளாக கொள்ள முடிகிறது அவர்கள் வாழ்வும் திறந்த புத்தகமாகவே இருக்கிறது.
ஆனால் அவர்கள் ஏதும் கட்சி ஆரம்பிக்காமல் சேவையே பிரதானம் என்று வாழ்வை போக்கி விட்டார்கள்.



 ஏன் தீவிர வாதம் எனச் சொல்லப்பட்ட தலைவர்கள், போஸ்,பகத், சட்ட மேதை அம்பேத்கர் போன்றவர்களும் நல்ல தலைவர்களே. பொதுவாக இது போன்ற திருப்பூர் குமரன் போன்ற நாட்டுக்கு இன்னுயிரை ஈந்த தியாகசீலர்களை எல்லாம் சுதந்திரத்திற்கு முன் இந்த நாடு கண்டது. சுதந்திரத்துக்கும்  பின் சொல்லவே வேண்டாம்...

பா.ம.க வை எடுத்துக் கொண்டாலும் மக்கள் அவர்கள் முற்காலத்து மரம் வெட்டி கல் கொண்டு தாக்கிய போராட்டம், பொதுச் சொத்து கலவரம், போன்றவற்றை விழுப்புண்களாக பெற்றிருப்பதாலும்,மக்கள் அடையாளம் மறவாமல் இருக்கிறார்கள்.

 தமது குடும்பத்தில் இருந்து எவர் அரசியலுக்கு வந்து பதவிக்கு வந்தாலும் சாலை நடுவே மரத்தில் கட்டி சவுக்கால் எவரும் வெளுக்கலாம் தன்னை எனச் சொன்ன மருத்துவர் அய்யாவின் வாரிசு இன்று தனிப்பட்ட முறையில் நல்ல திட்டங்களை எல்லாம் குறிப்பிட்டு பேசியபோதும்,வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என்றபோதும், மதுவிலக்கு என்ற போதும் கூட நம்பிக்கையின்றி மக்கள் இருக்கிறார்கள்.அவர்களின் சாதிய நெடியை அவர்கள் விட்டு விட்டதாக சொன்னாலும் அது அவர்களை விடுவதாக இல்லை.

தி.மு.க மு.க, ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ,செல்வி, தயாளு அம்மாள், தயாநிதி மாறன் இப்படியே போக... தே.மு.தி.க விஜய்காந்த், பிரேமலதா, சுதீப், இப்படி போக, பாமக மருத்துவர், அவர் மருத்துவர் மகன் இப்படியாக...ஆனால் இவை தான் மக்கள் அதிகம் சேர்ந்த கட்சிகள் ஆளும் கட்சிக்கு அடுத்து...

ஆளும் கட்சியின் வரலாறே தனி அது ஒரு தி.மு.கவின் கிளை வரலாறு ம.தி.மு.க போல...

தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க இவை எல்லாம் பிரதான கட்சிகள் இவை மூன்றுமே குடும்பத்தின் பிடியில். ஆளும் கட்சி பற்றி சொல்லவே வேண்டாம்...

ஆக கட்சிகள், அரசியல் இவற்றில் எல்லாம் இந்தியாவிலும், தமிழகத்திலும் தூய்மை நேர்மை நிலவ வில்லை. அதற்கான வழிகளும் இல்லை. கட்சி நடத்திட பெரும் செல்வம் தேவைப்படுகிறது. நல்லவேளை கலாம் பேரில் கட்சி என்ற பொன்ராஜ் 234 தொகுதிகளிலும் இலட்சிய கலாம் கட்சி வேட்பாளர் என்றெல்லாம் சொல்லியவர் அடங்கிவிட்டார்.

டெல்லியின் கணக்கு வேறாகவே ஒரு அர்விந்த் கெஜ்ரிவாலை பார்க்க முடிகிறது. ஆனால் அவராலும் சுயமாக ஆள இயலாத சிக்கல்கள். திட்டத்தின் கடைசிப் பயணப்புள்ளி மத்திய ஆளும் அரசையே சாரவேண்டியதாயிருக்கிறது.

ஆக இப்படி இருக்கும் கட்சிகள் அவரவர் கட்சிகளுக்குரிய ஒரு வாக்கு வங்கியை ஏதோ ஒரு காரணம்பற்றி வைத்திருக்கிறது . அதில் தனி மனிதர் ஒவ்வொருவரும் அந்த ஏதோ ஒரு காரணம் அடிப்படையாக‌ மதம், சாதி, ஒரு பிடிப்பு, ஒரு கவர்ச்சி, ஒரு சினிமா கற்பனை, ஒரு பயன்பாட்டால் விளைந்த நன்றியுணர்வு, அல்லது ஒரு விருப்பம் ஆகியவற்றால் வெளிவராமல் ஏன் மது , சிகரெட், விருப்பப் படி இயங்குதல், இப்படி ஏதோ ஒரு மீறல் அல்லது பாது காப்பு, அல்லது காரணம்பற்றி அந்த கட்சிகளில் தொண்டராக ஆர்வமுள்ளவராக இயங்குகிறார், இருக்கிறார்.

தேர்தல் எல்லா தில்லுமுல்லுகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. என்னதான் தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு நேர்மையாக இயங்கியபோதும் நடுநிலையோடு முயன்றபோதும் அரசின் எந்திரங்கள் ஆளும் கட்சி சார்பாகவே இருக்கின்றன.

30000ஆயிரம் கோடியை முதல்வர் மையம் தமது துணை மந்திரி மையங்களிலிருந்து பெறுவதை பெரும் செய்தியாக ஊடகம் மக்கள் கையில் எடுக்க விடாமல் 500 கோடி கூட்டணி பேரம், 1500 கோடி நிலவரம் என செய்திகள் பீப், இளையராஜா,ஈ.வி.கே.எஸ்,தியேட்டர் வரலாறு போன்றவை, நாஞ்சில் சம்பத் போன்ற தொடர் செய்தி ஆக்கங்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட கெட்ட பேரை மறைக்கும் மக்கள் மறக்கும் முயற்சியாக ஆளும் கட்சி ஊடகத்தை கையில் வைத்திருப்பதாக செய்திகள் வராமலுமில்லை.

இன்னும் குடியரசு ஆட்சி இருக்கிறது இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மலரவில்லை.இந்நிலையில் தேர்தல் ஒரு விழா.இதில் எல்லா விளையாட்டுமே உண்டு பிரித்தாள்தல், சூழ்ச்சி, சேர்ந்திருந்தே கெடுத்தல், வெளித்தெரியாமல் பணியாற்றல், வெளியே எதிரி உள்ளே நட்பு இப்படி எல்லாமே உண்டு. ஆனால் இதன் மூலம் கீழ் தட்டு மக்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள்.

வாக்குகளுக்கு ஒரு விலை. இல்லையெனில் வேலையை விட்டு ஒரு நாள் வந்து கியூ வரிசையில் நின்று வாக்களிக்க என்ன கிடைக்கிறது? மேல் தட்டு மக்களும், அரசு நிர்வாக அமைப்பில் உள்ளார்க்கும் அன்று சம்பளம், சம்பளத்துடன் வேலை, சம்பளத்துடன் விடுமுறை எல்லாம் கிடைக்கிறதா இல்லையா எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.அதற்கு கட்சிகள் பணம் சேர்க்க வேண்டிய நிலை. விட்ட பணத்தை தேர்தலுக்கும் பின் ஆட்சியில் பதவியில் அமர்ந்தவுடன் பல்லாயிரம் மடங்கு செலவு செய்ததை விட கொள்ளையடிக்கும் நிலை எல்லாம் உண்டு இந்த ஆட்சி அமைப்பில்.இப்போது தாம்புக்கயிறாக காசை வாங்கிக் கொண்டு ஆட்சி என்னும் மாட்டைப் பிடித்துக் கட்ட முடியாமல் இந்திய வாக்களன் தவிக்கிறான். காஞ்ச மாடு கம்பில் புகுந்து விளையாடி வருகிறது.பதவிக்கு அமர்ந்த பின் அப்போது தப்பித் தவறி ஏதாவது வாக்களன் கேட்டால் "நீ என்ன சும்மாவாடா? போட்ட? காசு அவுக்கல? காசு வாங்காமலா போட்ட , ஒன் ஓட்டு எல்லாம் ஒரு கேடா போடா போ " என நக்கலாகிற ஜனநாயகமும் வாக்காளனும்.




இன்னும் ஜனநாயக அமைப்பு, குடியுரிமை, சட்டம் நீதி நிர்வாகம், அரசு, கட்சிகள், அரசியல் மேல் எல்லாம் போதிய விழிப்புணர்வு அடையா நிலை. மறுபக்கம் தெரிந்து இருந்தாலும் மீறல் நிலை. காரணம் நாட்டின் நிலவும் அவலங்கள். மல்லையா, லலித் மோடிகள், நாட்டின் செல்வ நிலை, பொருளாதார நிலை, சமூக அமைப்பு, ஏழை படும்பாடு. கடன் சுமை ஏழைக்கும், நாட்டின் வங்கிகள் பணக்கார அரசியல் வாதிகள் கைகோர்ப்பிலுமாக செல்லுதல்

ஆக எல்லாவற்றுக்கும் அடிப்படை மக்கள் மன நிலை. இந்த மக்கள் பெருவாரியாக கட்சி என்ற பேரில் பிரிந்து கிடப்பது. ஒரு வாக்கு வெற்றியாளரையும் தோல்வியாளரையும் வேறு படுத்துவது,

வெற்றி பெற்றவர் பெற்ற வாக்குகளை விட அவருக்கு எதிராக விழுந்த மற்ற வேட்பாளர்களின் மொத்த வாக்குகள் பயனிழந்து போய் விடுவது... மக்கள் இந்த சுழியிலிருந்து வெளிவரவே வழி இல்லை.

 எல்லா மக்களுமே நியாயம், நீதி, நேர்மை , தூய்மை எனப் பார்த்து சிறந்த ஆட்சி முறைக்காக இது போன்ற கட்சிகளில் இருந்து வெளியேற ஆரம்பித்தால் கட்சிகள் வெறும் கூடாரமாகிவிட்டால் இவர்களுக்கு எல்லாம் வேலை இல்லை.அப்படி ஒரு கோடிக்கணக்கான மக்கள் திரண்டால் அப்படி திரள்வதை மாற்றம் எனவும். ......எனவும் சொல்லலாம்.ஆனால் அது எல்லாம் கனா. அப்துல் கலாம் கண்டது போன்ற கனா. ஆனால் இப்போதைக்கு...




1.பெருவாரியாக நோட்டாவுக்கு வாக்களிப்பது அல்லது எவரும் வாக்களிக்காமல் தேர்தல் முறைகளில் பெருமாற்றம் செய்ய அடிப்படையாக இருந்தால் ஒரு மாற்றம் வரலாம்.

2.பெறும் வாக்குகள் சதவீத அடிப்படையில் பதவியும் ஆட்சி பங்கீடும் இருக்கலாம்.எல்லாக் கட்சிகளுக்குமே.

3.வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்காக அவர்தம் வாழ்வின் முன்னேற்றத்துக்காக செயல்பட வில்லையெனில் அவர் திரும்ப அழைக்கும் முறை வரலாம்..

 இவை எல்லாம் நம் முன் வரவேண்டிய உடனடியான தேர்தல் சீர்திருத்தங்கள் அல்லது மாற்றங்கள். இவை அல்லாமல் நிரந்தர நல்லாட்சிக்கு நீண்ட கால முறைக்கான செயல்பாடுகள் எல்லாம் நிறைய உள்ளன. இப்போது சொன்ன இவை ஒரு சிறு கை அளாவிய கைப்பிடிக்கூழ் (பெற்றவர்க்கு அளித்தல்) போல.

இதற்கு மேல் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியாளர்கள் ஊழல் இலஞ்சம் விசாரிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பொது வாழ்க்கைக்கே வராமல் எந்த தேர்தல் முறைகளிலும் நிற்க விடாத சட்ட சீர்திருத்தம் போன்றவை எல்லாம் வேண்டும்...அந்த சட்ட அடிப்படை ஒரு ஆண்டுக்குள் விசாரணை முடித்து தீர்ப்பு அளிக்கப் பட்டதாயும் மேல் முறையீடு இல்லாததாகவும் இருத்தல் வேண்டும்.20 ஆண்டுகள் எல்லாம் வழக்கு நடக்கவே கூடாது.

அதற்கான நீதிபதிகள் தவறு செய்யும் பட்சத்தில் அது கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் போன்ற சிறியதாக இருந்தாலும், பெரும் தொகை மாறுதல் ஆக இருந்தாலும் அந்த நீதிபதியும் அந்த நீதி அமைப்பும் எவருமே அந்த அமைப்பு அந்த நீதிபதி போல் ஒரு நாளும் ஆகி விடக்கூடாது என்ற தண்டனை முறைகள் வரவேண்டும்.

ஆக வாக்களர் ஆட்சியை நிர்வாகத்தை ஏற்படுத்துவார் பற்றி முழு விழிப்புணர்வும், அவர்களுக்கு அவர்கள் எந்த பிரதி உபகாரமும் வாக்களிக்க பெறாமல் இருக்க ஆட்சியும் நிர்வாகமும் பார்த்துக் கொண்டு தேர்தல்நடத்தி நிர்வாகம் சீர் செய்யப் பட்டால் கட்சி ,ஆட்சி, அரசியல், மக்கள் , தேர்தல் வாக்குக்கான விலைபெறுதல் இவை எல்லாமே தூய்மை நேர்மை வழி வரலாம்.

எனவே மக்கள் எவ்வழி கட்சிகள் அவ்வழி கட்சிகள் எவ்வழி ஆட்சி அவ்வழி ஆட்சி எவ்வழி அரசியல் அவ்வழி...

அப்படி ஒரு வேளை நல்ல நிரந்தர மாறுதல் வந்தால்

அப்படி நிரந்தர மாறுதல் வந்தால் ஒரு வேளை நதி நீர் இணைப்பு நடக்கலாம் இந்த நாட்டிலும் நல்ல தலைமையின் பேர் லெனின், பிடல், ஹோசிமின், காந்தி, மாவோ போல் இடம் பெறலாம்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






Sunday, March 27, 2016

சன்னி லியோன் வைகோ ஒரு ஒப்பீடு: கவிஞர் தணிகை.

சன்னி லியோன் வைகோ ஒரு ஒப்பீடு: கவிஞர் தணிகை.




பட்டி மன்றப் பேச்சாளர் லியோனி அல்ல இவர் பாலியல் நடிகை பாலிவுட் நடிகை சன்னி லியோன். 35வயது சன்னி லியோனுக்கும் 70 வயது வைக்கோவுக்கும் சில ஒற்றுமை பாருங்கள்...இருவருக்குமே தொலைக்காட்சிப் பேட்டி நிருபர் கேள்விகள் பெரும் தொல்லையாகி விடுகின்றன.இருவருமே தாங்கள் செய்வதை செய்ததை நியாயம் என்றும் கேள்விதான் இப்படி எல்லாம் கேட்கக் கூடாது என்றும் நிருபர்களை மிரட்டுகிறார்கள். மல்லைய்யா செய்தி போய் வைக்கோ செய்தி வந்தது டும் டும் டும்....என்ன வைகோ எழுந்து ஓடி விட்டார் தமது தாயகம் கட்சி அலுவலகத்திலிருந்தே,சன்னி லியோனோ அறைந்து விட்டு இல்லை இல்லை அடிக்கவில்லை, அவர் பத்திரிகையாளரே இல்லை என்கிறார்.

தற்காலத்தில் டேனியல் வெப்பர் இந்த சன்னி லியோனிக்கு கணவர் .ஆனால் லியோன் 16 வயதிலேயே தன் பெண்மையை இழந்தவர், 18 வயதில் இருபால் உறவுமே தனக்குப் பிடிக்கிறது என்றவர் ஆனாலும் ஆண்களின் உறவும் அதிகம் பிடிக்கிறது என்ற கன‌டாவில் 1981ல் பிறந்த இந்திய வம்சாவளிக் குழந்தை.நீலப்படம், பாலியல் படங்களின் நாயகி உலகின்  இந்த விதமான பட நாயகிகளில் முதல் 12 பேரில் முன்னணியில் இருந்தவர். எண்ணிறந்த பணிகள் எண்ணிறந்த முறைகளில் எண்ணிறந்த படங்களில் எண்ணிறந்தவர்களுடன் செயல்புரிந்த வீராங்கனை... இப்போது அப்படி எல்லாம் இல்லையாம். பாலிவுட் பம்பாயின் நாயகியாம்.பழைய வாழ்க்கை பற்றி எவரும் பேசக் கூடாதாம், கேள்வி கேட்கக் கூடாதாம்.அவரும் அனைவருமே அதை மறக்க வேண்டுமாம்.

 இணைய தளங்களில் கூட அந்தப் படங்களை உலாவுவதை இவரும் இவரது கணவரும் தடை செய்து விடுவார்கள் என நம்புவோம். எனவே அது பற்றி ஒரு இரவுக்கு உங்களின் விலை எவ்வளவு என்று கேட்ட நிருபரை அடித்தார் என்றும் அடிக்க வில்லை என்றும், அவர் நிருபரோ பத்திரிகை சார்ந்தவரோ இல்லை என்றும் வடக்கே ஏக களேபரச் செய்திகள். இவரும் இவரது உதவியாளரும்   இது பற்றி செய்தி தருகிறார்கள் நிறைய முரண்பாடுகளுடன்.

பொதுவாகவே இது போன்ற மகளிர் தாம் குளித்து முடித்து வந்து விட்டால் இனி இது போன்ற தவற்றை செய்யக்கூடாது என சத்தியப் பிராமணம் எடுத்துக் கொள்வார்களாம் அடுத்து வாய்ப்பும் உடலும் சுகம் கேட்கும் போது அதில் என்ன தவறு இருக்கிறது? பிறர்க்கு எந்த தவறும் செய்யவில்லையே என தமக்குள் சொல்லிக் கொள்வார்களாம். அப்படிப்பட்ட இயல்புதான் உண்டாம்.செய்யும் போது அதில் என்ன தவறு என்றும் சமாதானப்படுத்திக் கொள்வாராம். எல்லாம் உள்ளேதானே மனசாட்சி எல்லாம்... இவர் தற்போதைய கணவர் டேனியல் வெப்பர் என்பாரும், அந்த நிருபருக்கு இவர் கொடுத்த பதில் சரியானதுதான் என்று கூறியிருக்கிறாராம்.நல்ல கணவர் நல்ல மனைவி.



இது போல விலை என்ன எவ்வளவு கட்டணம் என ரேட்,பேரம் பேசுவது கேட்பது எல்லாம் செய்து கொள்ள கொடுக்க ஒரு தனிச் சேனல் தனி வழி அனைவருக்கும் இருக்கிறது நமது அரசு அலுவலர்கள் இலஞ்சம் பெறுவது, மந்திரிகள் பெறுவது, கட்சித் தலைவர்கள் தேர்தல் கூட்டணி சேர்வது இதற்கெல்லாமே...எனவே இவர்கள் இதை எல்லாம் பகிரங்கமாக ஊடகத்தில் பேசவும் முடியுமா? அடுத்தவர்களைப் பற்றி வேண்டுமானால் பேசலாம் நமைப் பற்றி பேச விடலாமா என்பதுவே வைகோ லியோனின் கொள்கை.

திருந்துவதற்கு எல்லாருக்குமே வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் அதில் மாறுபட்ட கருத்து இல்லை. உண்மையாக திருந்தினால் வாழ்த்துகள்தான் ஆனால் செய்த கர்மம் தொடராமல் இருக்குமா?




வைக்கோ (வை கோ) கள்ளத் தோணியில் சென்று பிரபாகரனை சந்தித்து தி.மு.கவுக்கு தலைவலியாகி பின் அந்தக் கட்சியில் இருந்த பழம் நினைவோடு வெளி வந்தது முதல்...

தடா பொடா சட்டத்தில் அம்மா அரசு உள்ளே 2 ஆண்டு இருந்து வந்து பின் அவருடனே கூட்டு சேர்ந்து அதன் பின் தேர்தலில் நிற்காமல் இருந்து இப்போது மல்லைய்யா செய்தியை தமிழகத்தில் பின் தள்ளி முன்னணியில் வைகோ.

இவர் பீமராம், திருமா அர்ஜினராம், இவர்கள்  தர்மர் விஜய்காந்துக்கு ஒரு இடறும் வர விடமாட்டார்களாம், இவர்களை மீறி அவருக்கு ஒன்றும் நேர்ந்து விடாதாம். இவர்களுக்கு வேண்டும்போது வேண்டுமானால் புராணம் மஹாபாரதம் இதிகாசம் எல்லாம்..அப்படியானால் கிருஷ்ணர் யார் எங்கே மறைந்திருக்கிறார்? 



கேட்கிறார்கள் 1500 கோடி பற்றி கேட்கிறார்கள் எனில் அதற்கு உண்டான விளக்கம் அளித்து வாய்ப்பை பயன்படுத்தி
தனது நிலையை வெளிப்படுத்துவதை விட்டு விட்டு ஏன் ஓடவேண்டும்.. வைகோ, ஏன் லியோன் நிருபரை அடிக்க வேண்டும்....?

பிணத்தை வைத்துக் கூட அரசியல் செய்ததாக வைகோ மீது குற்றச்சாட்டு உண்டு...சசி பெருமாள் மரணத்தின் சான்று....அதன் இறுதி சடங்கு சான்று..எப்படி நீர் ஒரு புறம் மதுவுக்கு எதிராக போராடுகிறேன் என போராடிவிட்டு மறுபுறம் ஒரு மதுக்குடியரைத் தலைவராக அதுவும் முதல்வர் வேட்பாளராக ஆக்குகிறீர்?மநகூ என்றிருந்ததை கேநகூ என... கலிங்கத்துப்பட்டியில் தாயை வைத்து கூட மதுவுக்கு எதிராக போராடிவிட்டு, சசி பெருமாள் இலட்சியத்தை விடவே மாட்டோம் என சொல்லி விட்டு இப்போது எப்படி ஒரு மதுமக்கள் மான்மியத்தோடு?



தி.மு.க மட்டும் ஆட்சிக்கு வரவே வரக்கூடாது என குரோதம் காட்டுகிறார் இந்த வைகோ கனிமொழியின் மேல் பாரத்தை பழியை போட்டுவிட்டு கலைஞர் குடும்பம் தப்பித்துக்கொண்டது என 2ஜி அலைக்கற்றை விஷியத்தில் ஸ்டாலின் தான் பின் இருந்து இயக்கிய வர் என்கிறார் கனிமொழி கலைஞர் குடும்பம் இல்லையா?

எப்படியோ மது அருந்தூவோர் வாக்குகள் சுமார் 2 கோடியும் வாக்குப் பட்டியலில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள் சுமார் 1 கோடி பேரும் இந்த தேர்தலை நிர்ணயிக்கப் போகிறார்கள் .ஆனால் எவர் ஜெயித்தாலும் எவர் தோற்றாலும் வைகோவின் பேர் ரிப்பேர் இந்த தேர்தலில். ஏன் எனில் இந்த மனிதரின் சுய ரூபம் சன்னி லியோனின் சுய ரூபம் போல் வெளிப்பட்டு விட்டது.



ஒரு பக்கம் தனது மகன் சிகரெட் விற்பதில் தவறில்லை என அன்று கேள்வி கேட்ட நிருபரை எகத்தாளமாக சாடுகிறார், மறுபுறம் மதுவிலக்கு தமது கூட்டணியின் இலட்சியம் அதை இந்த தமிழக மக்களுக்காக வென்று தி.மு.க, அ.இ.அ.தி.மு.க கட்சிகளையும் ஓரம் கட்டுவது தமது இலக்கு என்கிறார்.மதுவிலக்கு அரசை நிர்மாணிப்போம் என்கிறார் ஒரு பக்கம் ஆனால் அதற்காக சினிமா நடிகர் மதுப் பிடியிலிருந்து தப்ப முடியாத தலைவர் விஜய்காந்தை முதல்வர் வேட்பாளர் என்கிறார். சட்டம் படித்த வைகோ சட்டப்படி பார்த்துக்கொள்ளலாம் என எதெற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். உணர்ச்சி அதிக உணர்ச்சி அறிவைக் கெடுத்து விட...




சாதாரணமாக பார்க்கும்போதே தெரிகிறது வைகோவிடம் உள் மறைவில் தவறு இருக்கிறது. ஏனைய கட்சிக்காரர்களிடம் இருப்பது போல எனவே இந்த மநகூ அல்லது கேநகூ அல்லது விஜய்காந்த் அணி அமைப்பாளர் வைகோவும் சன்னி லியோனியும் ஒன்று போலவே காட்சி தருகிறார்கள்.வேறுபட்ட துறைகளில் சினிமா, பாலியல் படங்கள், விளம்பரம், அரசியல் என பல்வேறுபட்ட‌ தளங்களில் இருவரும் வாழ்க்கைப் பயணம் நடத்திய போதும்...

 இவர் நடத்திய மதுவிலக்கு நடைப் பயணத்தின் போது அம்மா ஜெயலலிதாவும் இவரும் சிரித்து பேசிக் கொண்டதை நாடு கண்டது. அம்மா தவிர வேறு யாருமே அந்தக் கட்சியின் பிரமுகர்கள் அம்மாவின் ஆணையின்றி வேறு எந்தக் கட்சிக்காரர்களுடனும் சிரித்துப் பேசுவது அனுமதிக்கப்படுவதேயில்லை என்பதும் யாவரும் அறிவோம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.