மானாத்தாள் ஏரியில் நல்ல கூட்டம்: கவிஞர் தணிகை
காவிரி உபரி நீர் வீணாவதை ஏரிகளுக்கு நிரப்பும் முகமாக இந்த ஏரி நிரம்பி வழிகிறது.சேலம், ஓமலூர், தாரமங்களம் ஆகிய ஊர்களுக்கு ஏறத்தாழ சம அளவு தூரத்தில் இருப்பது இதன் சிறப்பு. இங்கு உயிர் ஆபத்து நிகழ்த்துமளவு நீர் வன்மை இல்லை. படிகளில் நீர் இறங்கி வழிவதில் குளிப்பதால் எந்த ஆபத்தும் இல்லை.
எனவே ஆடி 18 அன்று ஏகக் கூட்டம். ஆம்புலன்ஸ் முதற்கொண்டு ரெடியாக நிற்க, காவல் துறை சிறப்பு ஏற்பாடுகளை கவனிக்க, எல்லா வகையான உணவுகளும் கிடைக்க, கடைகள் நிறைய எல்லாத் தேவைகளுக்கும் மக்களுக்கு ஏற்பட்டிருக்க, அருகாமையில் உள்ள காடுகளில் நிறுத்தும் வாகனங்களுக்கு அனுமதிக் கட்டணம் பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கி பாதுகாப்பு இருக்கிறது.
ஆங்கிலேயர் கால்த்திலேயே இந்த ஏரி அமைக்கப் பெற்று படிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன். நிறைய பேர் சாப்பிடுவதும் நீர் விளையாட்டுகள் விளையாடுவதுமாக காலம் கழித்து மகிழ்கிறார்கள். நீர் நிரம்பி இருக்க,ஆடி 18 அங்கே அமோகம். முத்தம்பட்டி, குட்டப் பட்டி மாதநாயக்கன் பட்டி ஆகிய ஊர்கள் அருகே உள்ளன.மானாத்தாள் என்பது கிராமம் பெயர். இந்த ஏரிக்கு அதனால் ஆகு பெயர். மானத்துடன் வாழ்ந்தாள் அந்த ஆத்தாள் என்று இருக்கலாம், அல்லது மான்கள் நிறைய இருந்திருக்கலாம் நீர் பருக அங்கே கூட்டம் கூட்டமாக வந்திருக்கலாம். அதெல்லாம் காரணப் பெயர்களாக இருக்கலாம். மொத்தத்தில் தாரமங்களம் என்ற புகழ் பெற்ற கைலாய நாதர் ஆலயம் அமைந்துள்ள ஊருக்கு இது அருகாமையில் இருப்பதால் இன்னும் சிறப்பு கூடுகிறது.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.
பி.கு:
நேர்காணலில் அங்கு சென்று வந்த இருவர் வாய் வழி மொழிகளுடன்