உழைப்பாளிகள் தினம்: கவிஞர் தணிகை
ஆண்டுக்கொரு முறை ஏதோ ஒரு பெயர்க்காரணத்தோடு நிறைய தினங்கள் கொண்டாடப் பட்டாலும், இந்த உழைப்பாளர் தினம் என்பது தமிழர் திருநாளாம் பொங்கல் திரு நாள் போல் உலகெங்கும் உயர்வுடன் உணர்வுடன் கொண்டாடப் பட வேண்டிய கொண்டாடப் படுகின்ற ஒரு அரிய நாள்.
மேதினம், உழைப்பவர் சீதனம் என்றார் ஒரு கவிஞர். அப்படியானால் அவர் சொல்வது ஒரு விடுமுறை நாள் என்பதை மட்டும் தானா என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
உழைப்பாளர்களுக்கு தமது உரிமைகளை பெற்றுத் தந்த நாள். உலகெங்கும் 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வுக்கானது, 8 மணி நேரம் தங்கள் குடும்ப மேன்மைக்காக மற்றும் குடும்பம் குழந்தை ஆகியோருடன் ஒட்டி உறவாட வேண்டியதான நாளின் முப்பெரும் பிரிவாக வாழ்வை உழைப்பாளர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என கட்டம் கட்டிய நாள்.
உழைத்து முடித்தவுடன் அந்த ஆயிரத்தில் மதுவுக்கு கொடுக்கும் உழைப்பாளர் பற்றியோ, குழந்தை இறந்தது கூடத் தெரியாமல் 3 ஆண்களுடன் உடல் மல்லாத்திக் கிடந்த பெண் பற்றிய சிந்தனையோ வராத சமுதாயப் பற்றியது இந்த சிந்தனை.
இந்தப் பதிவை மேட்டூர் பியர்ட்செல் என்னும் ஒரு மாபெரும் ஆலையில் இரவும் பகலும் ஓயாமல் (அல்லும் பகலும்) 4 விசைத்தறி பார்த்து எங்களை எல்லாம் உருவாக்கிய எனது தந்தை கந்தசாமி சுப்ரமணியம் என்ற ஒரு உண்மையான உழைப்பாளிக்கு காணிக்கையாக்குகிறேன்.
எங்கள் பெரிய குடும்பம் பற்றி நிறைய உண்டு சொல்ல. ஆனால் இந்தப் பதிவு அதற்கானதல்ல.ஒன்று மட்டும் சொல்லலாம். அப்போதெல்லாம் ஒரு வாரம் முழுமைக்கும் ஒரே மாதிரியான பணிச் சுற்று இருக்கும். அதாவது இரவுப் பணி என்றால் அது ஒரு வாரம் முழுதும். மனிதரை அவர் உடல் நலத்தை உறிஞ்சிக் குடிக்கும் நிலை. ஆனாலும் அத்தனைக்கும் ஈடு கொடுத்து தமது பிள்ளைகளுக்காக அந்த தந்தைகள் உழைப்பார்கள். அதில் ஒரு தூய மாமணி என் தந்தை. அந்த உழைப்பின் சிரமம் உணராமல் அதிகம் அவர் உறக்கம் கெட அடியேன் சிறுவனாக அறுந்த வாலாக இருந்து நிறைய தொந்தரவு தந்தது உண்டு. கண்ணீர் மல்க அது போன்ற வீட்டை நாட்டை உருவாக்க தமது உடலை உழைப்பை உயிரை ஈந்து கொண்டிருக்கும் அத்தனை உழைப்பாளர் திலகங்களுக்கும் இந்தப் பதிவு .
மறுபடியும் பூக்கும் வரை:
கவிஞர் தணிகை
உலகத்தை செதுக்கிய சிற்பிகளில் அவரும் ஒருவர்.
ReplyDeletethanks for your comment on this post Lahar,vanakkam.Please keep contact
Delete