எல்லாமே பாவந்தான்: கவிஞர் தணிகை
ஒட்டடை அடிப்பது/ சிலந்தி வலையை, சிலந்திக் கூட்டை வீட்டில் ஒதுக்கி எடுப்பதும்
எறும்பு குழிகளுக்கு மருந்திடுவதும், இரசாயன சாக்கட்டி கொண்டு கோடு இடுவதும்
செடி கொடிகளை , களைகளை, பதர்களை, முட்புதர்களை அகற்றி எடுப்பதும்
களைக் கொல்லி அடிப்பதும்
குருவி முட்டைகளை அப்புறப் படுத்த நினைப்பதும்,
வீட்டின் சுவற்றைப் பறித்து(வீட்டுள், சுவற்றுள் பதுங்கி பறிக்கும்) மண் குவியலைக் குவிக்கும் பெருச்சாளி, எலிகளைக் கொல்வதும்
தீண்ட வரும் பாம்பை அடித்துக் கொல்வதும், அடித்துக் கொல்ல நினைப்பதும்
கொசுக்களை கொல்வதும்(மலேரியா, டெங்கு ஏடிஸ் போன்ற(வற்றை) நோய் பரப்பும் வல்லமையுள்ளதான)
மனிதர்க்குத் துன்பம் தர விழையும் புழு, பூச்சிகள்,( தேனி உட்பட) , பூரான் போன்றவற்றை தப்பிக்க விடாமல் கொல்வதும் ( தேனி கடித்து இறப்புகளும் நிகழ்கின்றன)
மரங்களை வெட்டி இரசாயன ஆலைகளில் எரிப்பதும்,
ஏன்
உணவை உட்கொள்வதும், பயிரழித்து செய்வதால் வரும் இலாபம் பர்க்கும் உழவும் பாவந்தான்
எனவே
உயிராய் இருப்பதும்
அதற்காக உயிரை விட நினைத்து தற்கொலை செய்து கொண்டு பேய், பிசாசாக அலைவதும்,
ஆக எல்லாமே பாவந்தான்.
வாழ்வதென்பதே பாவந்தான்
அதில் இச்சைகளை தீர்த்தபடி உயிரென உழன்று வருவதென்பதும்...
எனவே என்ன செய்யலாம்?
எப்படி சுழலிலிருந்து விடுபடலாம்?
பாஹுபலி போல் அசைவற்று நின்று விடலாமா?
புத்தரைப் போல் நித்திரை நேரத்தில் சென்று விடலாமா?
சென்று பின் மீண்டு வந்து உண்டு, உறங்கி உணர்வலைகளிலிருந்து மீண்டு
இருப்பதும் இல்லாதிருப்பதாக வென்று விடலாமா?
சமணச் சாமி போல ஆடை களைந்து அம்மணமாகத் திரியலாமா?
மூச்சுக் காற்று கூட மூலக்கூறு அழித்து விடுவதை தடுக்க முனையலாமா?
வாய்க்கு,நாசிக்கு, ஏன் முகத்துக்கே கவசம் இட்டுக் கொள்ளலாமா? அடையாளமின்றித் திரியலாமா? அலையலாமா?
நடக்கும் பாதை எங்கும் பதாகை ஏந்தி பாத யாத்திரையில் எறும்புக்கும் ஊறின்றி மெல்லிறகால்
பெருக்கிச் செல்லலாமா?
ஒவ்வொரு தலைமயிராய் பிடுங்கி எடுத்து மொட்டையாகலாமா? (தலை மயிர் மட்டுமின்றி...)
பிறர்க்காக வாழ்ந்து பார்க்கும் உயிர் உறையும் உடலுக்கும் தாகம், பசி எடுக்கிறது, உடலுக்குள் இருந்து
வரும் எச்சம் இருக்கிறது
எச்சரிக்கையாக இல்லாவிடில் உயிர் போகும் அவசிய(ம்) அவசரம் இருக்கிறது
ஆக எல்லாமே பாவந்தான் ...
அட்சய திருதியையாம்...தங்கம் வாங்க வேண்டுமாம்...
ஹலோ குட்மார்னிங்.,GOOD MORNING காலை நினைவலைகளுடன்
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
அதிகமாக சிந்தித்தாலும் பிரச்சனைதான். குழந்தை மனதோடு இருக்க வேண்டியதுதான். சிந்தனையாளர்கள் இவ்வுலகில் புறக்கணிக்க படுகிறார்கள்.
ReplyDeletethanks for your comment on this post Lahar.please keep contact, yes you are True
Delete