Saturday, May 17, 2025

டூரிஸ்ட் பேமிலி: கவிஞர் தணிகை

 டூரிஸ்ட் பேமிலி: கவிஞர் தணிகை



தயவு செய்து பார்க்காமல் இருந்தால் பார்த்து விடுங்கள்.இதைப் பற்றி நிறைய எழுதிச் சொல்லப் போவதில்லை அது நீங்கள் பார்க்க முனையும் போது ருசியைக் கெடுத்து விடக் கூடும் என்பதால். 

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் என்ற தகுதியுடைய படம்.


எனது பாலைவன நாட்களில் இந்த 2 மணி நேரம் ஒரு பசுஞ்சோலையானது

கையைக் காலை ஆட்ட முடியாத நடிகர் படங்களுக்கு எல்லாம் நூற்றுக் கணக்கான கோடிகள் கொட்டிக் கொடுக்கும் இந்த சினிமா உலகில் இப்படியும் ஓரு சில படங்கள் குறுகிய பொருட் செலவில் வரங்களாக வந்து நேர்ந்து விடுகின்ற‌ன எனவே தான் மே1 ஆம் தேதி வந்த படம் பற்றி இப்போது எழுத நேரிட்டிருக்கிறது.


சில நண்பர்கள் அதிலும் குறிப்பாக கிறித்தவம் சார்ந்த நண்பர்கள் சினிமா பார்க்கும் நேரம் கூட கால விரயம் என்று பார்க்கும் பழக்கம் இல்லாதிருப்பதை அறிவேன் அவர்களும் கூட இது போன்ற படங்களை கண்டு கலந்து அனுபவிக்கலாம் என்பதற்கான பதிவே இது.


யார்ரா சொன்னா நீ அகதின்னு?!


என்ற ஒற்றை சொற்றொடரில்  சிகரத்தை தொட்டு விட்டார் இதன் இயக்குனர்: அபிஷன் ஜீவிந்த்.


எல்லாம் பாராட்டுகிறார்களே அப்படி என்ன இதில் சிறப்பு என்பதற்காகவே பார்க்க நேர்ந்தது, இப்போதெல்லாம் சினிமா எல்லாம் கூட பார்ப்பதை நிறுத்தி ஆகிவிட்டது. 


மெதுவாக படிகளில் ஏறி உச்சத்தை தொட்டு பார்ப்பார் கண்களில் கண்ணீரை துளிர்க்கச் செய்யும் ஒரு மெஸ்மரிஸம் இந்த படத்தில் ஒரு நகைச்சுவை கலந்த மகிழ்வுடன் இழையோடிக் கொண்டே இருக்கிறது சாதாரண காட்சிகளாக இருந்தவாறே.


மிசன் இம்பாசிபிள்MISSION IMPOSSIBLE  THE FINAL REKONING என்ற சினிமாக்களுடன் இது போன்ற குடும்பம் சார்ந்த நேயமிக்க, அன்புதான் மானிடத்தின் அடி நாதம் இதை மொழியோ, மதமோ, மற்ற பிரிவினைகளோ தடுப்பதற்கில்லை என்ற அரிய பாடம் இந்த படத்தின்மூலம் ....வில்லத்தனம் ஏதும் வில்லங்கம் இல்லாமல்...

பிற உயிரையும் நேசிக்கக் கற்றுக்  கொள்ளுங்கள் அது உங்கள் வாழ்வில் இருக்கும் ஊனங்களையும் அகற்றிவிடும் நல்ல விதை இது.


இந்த அதிகாலையில் இப்படியே நான் நெக்குருகி, நெகிழ்ந்து நெகிழ்ந்து நிறைய இந்த படம் பற்றி சொல்லிக் கொண்டே மழைத்துளிகளுடன் பேச முனைவது போல பேசிக் கொண்டே இருக்க முடியும். உங்கள் காலம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். பாருங்கள் பார்த்துவிட்டு பகிர்ந்து கொள்ளுங்கள். மகிழ்ந்து செல்லுங்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.


* அட நாம எல்லாமே பூமிக்கு வந்த ஒரு டூரிஸ்ட் பேமிலிதாமே...முடிந்தவுடன் புறப்பட வேண்டியதுதானே என்ற நோக்கத்தில் பார்த்தாலும் இந்த டைட்டில் பொருந்துகிறது.


No comments:

Post a Comment