Saturday, September 28, 2024

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா: கவிஞர் தணிகை

 திருப்பதி ஏழுமலை வெங்கடேசா: கவிஞர் தணிகை



 பல்லாண்டுகளுக்கும் முன்பு நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கிணங்க அவருடன் திருப்பதி சென்றேன். இலவச விடுதி என்றார்கள் குறிப்பிட்ட தொகையை இருப்புத் தொகையாக வாங்கிக் கொண்டு.திரும்பி அறையைக் காலி செய்து கொண்டு வரும்போது சில்லறை நோட்டுகளாக கொடுத்து அதை அவர்களுக்கே கட்டணம் செலுத்தும் இடத்தில் வாங்கிக் கொள்ள நிர்பந்தம் செய்தார்கள்.( தூய்மையாக ஏதும் அப்போது இருந்ததாக எனக்கு நினைவில்லை அறை வசதிகள்தாம்).


எனக்குத் தெரிந்த தெலுங்கு மொழியில் பேசி எதற்கு உங்களுக்குத் தரவேண்டும்? இலவசம் என்றுதானே சொல்லப் பட்டுள்ளது என்று மள மள வென்று காசு தராமலேயே வெளியேறிவிட்டேன் கூட்டமும், வரிசையில் நின்றவர்களும் காட்சிப் பொருளாக எனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.ஆட்டு மந்தைக் கூட்டத்தில் இருந்து வெளியேறி தப்பிப்பது போல.


எங்கே பின்னால் தொடர்ந்து வந்து விடுவார்களோ ஆள் பலத்துடன் என்ற சந்தேகம் வேறு எனை அப்போது தொற்றி இருந்ததை சற்று தொலைவு வந்தவுடன் கழட்டிப் போட்டேன்.


இருள் பிரமை


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment