Tuesday, September 10, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் மூன்று

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் மூன்று



தேசிய உடைமையாக நாட்டின் பேரிலேயே இருக்கும் வங்கி மால்கோ வளாகத்தில்.1987 வாக்கில் ஒரு வரைவோலை எடுக்கச் செல்கிறான் அவன். வெகு நேரம் காத்திருக்கிறான். தீபாவளி சில மாதங்கள் இருக்கையில் முன் இருக்கையில் அமர்ந்து பணி புரிந்து வருவதாக பாவனை காட்டிக் கொண்டிருந்த பெண் வங்கி ஊழியர்கள் புதுப் புடவை, அதன் அழகமைவு வடிவமைப்பு பற்றி மிகவும் மகிழ்வுடன் பேசுவதில் கவனம் அதிகம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.


எவ்வளவு பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எவ்வளவு நேரம் காத்துக் கொண்டிருக்கிறார்கள், வரவு செலவு முடித்து வாடிக்கையாளர்கள் விரைந்து இருப்பிடம் திரும்ப வேண்டுமே  என்பது பற்றிய கவலை எல்லாம் அவர்களுக்கு இல்லை. நம் நாட்டில் மக்கள் முனையத்தில் அல்லது மக்கள் முக சந்திப்பில் பணி புரிவோர் மட்டுமல்ல, ஒரு நிரந்தர அரசுப் பணிக்கு நியமனம் பெற்று விட்டாலே போதும் அவர்கள் மக்கள் எனும் கோட்டிலிருந்து பிரிக்கப் பட்டு  வாழ்வில் மிக மேல் தளத்துக்கு சென்று விடுகிறார்கள். அதற்கு அரசுப் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள்,ஆசிரியர்கள் இப்படி எந்தப் பிரிவும் விதி விலக்கில்லை பல பிரிவுகளிலும் இப்படிப் பட்டார் உள்ளார். சிலர் மட்டுமே விதிவிலக்காக மனிதாபிமானத்தை இழக்காமல் இருக்க பெரும்பான்மையோர் மாறித்தான் போகின்றனர்.


வங்கியில் உள்ள  சில அறிவிப்புகள் ஒவ்வொரு பணிக்கும் அதிக பட்சம் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் காலம் பற்றிய அட்டவணையுடன் புகார் தெரிவிக்க விலாசமும் கொடுக்கப் பட்டிருக்க பிராந்திய மேலாளர் ஆர். எம். சுப்ரமணியம் அவர்களுக்கு புகார் தகவல் தெரிவித்து விட்டான். அப்போது பிராந்திய மேலாளர் அலுவலகம் சேலம் டி.எம்.எஸ் கண் மருத்துவமனை அருகே இருந்தது..அவர் பேரையே ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் அவர் அவ்வளவு நேர்மையாக நடந்தபடியால் அவர் பேர் பதிவில் இருக்கட்டுமே என்பதால்தான்.


நல்ல நடவடிக்கை. அவனது அக்கா வீட்டு மாடியில் உள்ள ஒரு அறைக்குள் பேச்சு வார்த்தை நடந்தது அனைவரும் வந்து விசாரித்து உண்மை நிலை அறிந்து சிறப்பு பணி புரிந்தனர். அப்போது அவர்களை எல்லாம் அமர்ந்து பேச வைக்கவும் கூட அவனது வீடு போதா நிலை ஓலை வீடு இடம் பற்றாக்குறை என்று இருந்த படியால் அவனது அக்கா வீடு இடம் அளித்தது. இப்போதும் கூட அவன் அந்த அக்கா வீட்டின் முன் புறச் சுவற்றில் தாம் சில வாசகங்களை அவ்வபோது எழுதி வருகிறான். அந்த அக்கா வீடுகளைக் கூட அவனது வீடாக சிலர் நினைத்ததுண்டு. 


கீழ் தட்டு மக்களை கவனத்தில் வைத்து வங்கியின் கிளை இயங்க வேண்டும் என்ற நிலைக்கு தங்களால் ஆனதை செய்தனர். 


பணி புரிந்த பலருக்கும் இவன் மேல் கடுப்பு. ஏக எரிச்சல்.ஒரு அலுவலர்க்கு வியப்பு. வேறோர் சூழ்நிலையில் வேறோர் வங்கிக் கிளையில் ஏதுமறியாதவன் போலிருந்த இவன் இவ்வளவு எல்லாம் செய்வானா என.  உள்ளூரிலிருந்து வங்கிப் பணிக்கு செல்லும் ஒருவருடன் சிலர் வந்து  யார் இவன், இவன் வீடு எங்கே என்ன செய்கிறான் என்றெல்லாம் பார்த்து பூச்சாண்டி காட்டிச் சென்றார்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


No comments:

Post a Comment