Thursday, September 26, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் ஏழு

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் ஏழு



ஊர் பெரிய ஊர்தான். சாதி பாகுபாடு உள்ள ஊர்தான். ஆனால் பொது என்று வந்து விட்டால் எவரும் எதையுமே கண்டு கொள்ள மாட்டார்கள்.


அந்த ஊருக்கு என்று ஒரு கிளை பகுதி நேர அஞ்சலகம் இருந்ததும்.இருப்பதுமான செய்திகள் இன்றும் உண்டுஆனால் பெரிய அளவில் வரவு செலவெல்லாம் இருப்பதாகச் சொல்ல வழி இல்லை. ஏதாவது முக்கியமாக கேட்டால் சில கிலோமீட்டர் தள்ளி முக்கிய தபால் குறியீட்டு எண் உள்ள தபால் அலுவலகங்களையே நாட வேண்டும்.


ஆனால் அங்கு அந்த அஞ்சலகத்தில் தவிர‌ வேறு எங்கும் அப்போது அஞ்சல் பெட்டி கிடையாது. கால நேரத்தை தவற விட்டால் முக்கிய நகர் வழிச் சாலை தாண்டி அந்த தனியார் கம்பெனி வாசலில் மட்டுமே மதியம் 3.30 மணி சுமாருக்கு தபால்கள் எடுக்கப் படும் .


அவன் இவ்வளவு பெரிய ஊரின் மக்களுக்காக ஒரு தபால் பெட்டியை வைக்கக் கூடாதா என்று அஞ்சலக அலுவலகங்களில் முறையிட்டு கோரிக்கை செய்து தபால் பெட்டியை வரவழைத்து வைக்கச் செய்தான். அதில் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்ற பேரில் பட்டாசை உள்ளே போட்டு அதன் வாயைக் கிழித்து விட்டார்கள்.


அதன் பின் அதை வேறு இடத்திற்கும் மாற்றி செயல் பட வைத்தான். அதெல்லாம் மின்னஞ்சல் இல்லா அந்தக் காலம் அதெல்லாம் கூரியர் சேவை , ஆன்லைன் சேவை எல்லாம் இல்லா அந்தக் காலம்.


காலம் புவியின் வேகத்தை விட அதிக வேகமெடுத்தபடி சென்று கொண்டே இருக்கிறது...பூமியின் வேகம் நொடிக்கு சுமார் 30 கி.மீ என்கிறார்கள்... தன்னைத் தானே சுற்றும் வேகம்  நொடிக்கு (460மீட்டர்)சுமார் அரை கி.மீ என்கிறார்கள்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

பி.கு: பின் பக்கம் அரைக்கால் சட்டை தேய்ந்து ஓட்டையாக இருக்கும் குந்து புறம் தெரியும் சிறுவர்களை போஸ்ட் பாக்ஸ் என்பார்கள் கேலியாக. அப்படிப் பட்ட அரைக்கால் சட்டைகளை அவனும் அணிந்ததுண்டு.


No comments:

Post a Comment