Tuesday, September 17, 2024

இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் :ஐந்து

 இந்தியன் ~ ரியல்: அத்தியாயம் :ஐந்து



 இது ஒரு சிக்கலான பதிவு. ஏன் எனில் இதில் அவன் எதிர்த்து செயல்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி இப்போது அவனுடைய‌ ந‌ண்பராகவும் இருக்கிறார். அவன் அந்த உள்ளாட்சிப் பகுதியின் பிரதிநிதியை ஏன் எதிர்த்தான் எனில் அப்போது அவர் அரசுப் பணியிலும் தொடர்ந்தபடி மக்கள் பிரதிநிதியாகவும் தொடர்ந்து இருந்த‌படியால்.


கட்சி பேதமின்றி அந்த சட்டத்திற்கு புறம்பான நிகழ்வை ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேரூராட்சியில் அங்கீகரித்து வாய் மூடி மௌனத்துடன் இருந்த போது இவன் ஒருவனே அதை வெளிப்படுத்தி அரசைக் கேள்வி கேட்ட போது, அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளரான அமைச்சரின்  மகனும் (அவர் இப்போது இல்லை ஏன் சொல்லப் போனால் அவர் குடும்பத்தில் இப்போது சொல்லிக் கொள்ளுமளவு தந்தை, 2 மகன்கள் இப்படி எவருமே இல்லை).  அவன் சொல்வது நியாயம் தானே அப்படி ஏன் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கட்சியின் பெயரை மக்களிடையே கெடுத்து வருகிறீர். விலகிக் கொள்ளுங்கள் என அறிவுரை செய்த பின் தாம் இந்த மக்கள் பிரதிநிதி தம் பொறுப்பில் இருந்து விலகி அரசுப் பணியை தொடர்ந்தார். தொடர்கிறார்.


அரசுப் பணியில் ஊதியத்துடன் இருந்தபடி மக்கள் பிரதிநிதியாகவும் இருக்க சட்டத்தில் இடம் இல்லையாமே.ஆனால் இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதுவும் குற்றம் என‌ ஏட்டில் சொல்லில் சட்டத்தில் இருந்தாலும் நடைமுறையிலும் இலஞ்சம் இருக்கலாமோ?


அதன் பின் மற்ற சில‌ கோடாரிக் காம்புகள் இடைத் தேர்தலில் மற்றும் தேர்தல்களில் வெற்றி பெற்று அதுவும் பகையான கதை எல்லாம் வேறு.


அந்தக் காலக் கட்டத்திற்கும் பின் அவ‌ரது துணைவியாரைக் கூட சில முறை அவர் மக்கள் பிரதிநிதியாக்கி வெற்றி ஈட்டி செயல்பட்டார்.


நல்லது போனால் தெரியும் என்பார் கெட்டது வந்தால் தெரியும் என்பார். அந்த சொல் இன்றைய அரசியலுக்குத் தான் எத்தனை பொருத்தம்.


இதை அவனால் பூடகமாக சொல்ல முடிகிறது ஆனால் அனுபவித்த போது ஒவ்வொரு கட்டமும் போட்டியும், போராட்டமும், பொறாமையுமான கதை சொல்ல மாளாது.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




  

No comments:

Post a Comment