Thursday, May 2, 2019

SC 57+2என்பது சீட் கெப்பாசிட்டிதானா? கவிஞர் தணிகை

57+2 என்பது சீட் கெப்பாசிட்டிதானா? கவிஞர் தணிகை


Image result for Standing overload buses in salem to mettur buses

57 + 1 இது சிட்டிங், 57+ 1 இது ஸ்டேண்டிங் என்றும் இருக்கலாம் அல்லது 57 டு த பவர் ஆப் ஸ்கொயர் டூ... என்பதும் சரியாக இருக்கும். இந்தியன் cinema சீனியர் கமலும்  ஜூனியர் கமலுமாக நினைவாட... கார்ல் மார்க்ஸ் கம்ப்ய்யூனிசம் எல்லாம் கனவிலாட இந்த அரசுகள் பற்றி எல்லாம் மனதில் திட்டியபடியே பயணம்...

சாலை போக்குவரத்து அலுவலகங்கள் எல்லாம் எப்பவுமே மிகவும் பிஸியாகவே இருக்கும். எல்லாம் ஆன்லைனிலேயே செய்யலாம் என்பார்கள் அதில் சாலை போக்குவரத்து அலுவலகமும் அடக்கம்.

ஆனால் இவர்கள் பேருந்துக்கு கொடுக்கும் அனுமதி பற்றி அலச வேண்டுமென்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல...

எங்கள் ரூட்டில் ஒரு தனியார் பேருந்து கம்பெனியின் வண்டிகள் எப்போதும் தாங்க முடியாத கூட்டத்துடன் சென்று கொண்டிருக்கின்றன. இன்னொரு தனியார் பேருந்தின் கம்பெனியின் இரண்டு பேருந்துகள் அடுத்தடுத்த ஒரே நேரத்தில் பயணிகளை நெருக்கி அடித்தபடி சென்று கொண்டிருக்கின்றன.

அரசு பேருந்திற்கு ஏன் இல்லை இந்த நிலை...

எல்லாம் திட்டமிடப்பட்ட பணிகள்.

இவ்வளவு கூட்டம் ஏற்றப்படும் என்று தெரிந்திருந்தால் நான் அந்த பேருந்தில் ஏறியிருக்கவே மாட்டேன்.

கல்லூரி இரண்டு மணிக்கே 20 ஆம் தேதி வரை எனச் சொல்லி விட்டது எனக்குப் பிரச்சனைதான். அப்போது கூட்டம் இருக்காது என்று நினைத்தது எவ்வளவு மடத்தனம் என்பதை இன்று முதல் நாளே தெரிந்து கொண்டேன்

பேருந்தில் பேருந்து நிலையத்தில் ஏறும்போதே இரண்டு பேருந்துகளை விட்டு விட்டால் தான் நமக்கு இருக்கை  கிடைக்கிறது. அதல்லாமல்  5 ரோடு, குரங்குச் சாவடி போன்ற இடங்களில் ஏறினால் நிச்சயம் மேச்சேரி வந்தால் தான் இடம் கிடைக்கிறது...

நமக்குத்தான் வேலைக்குச் செல்ல வேண்டும் இவர்களுக்கு எல்லாம் என்ன வந்தது இந்த விடுமுறைக் கோடைக்காலத்தில் என்னும்படியாக குடும்பமும் குழந்தைகளுமாக இடமே இல்லா பேருந்துகளில் எதற்கு இப்படி வேறு பேருந்தே இல்லாதமாதிரி ஏறுகிறார்கள்...

நான் பொதுவாகவே இருக்கை இருக்கும் பேருந்தையே தேடி காத்திருந்து பேருந்து நிலையத்துக்கே சென்று ஏறி அமர்வது வழக்கம். பெரும்பாலும் அரசு பேருந்தாக இருந்தால் இன்னும் மகிழ்வே...

ஆனால் இந்த ஜே.என்.பி போன்ற பேருந்து நடத்துனர்கள் அடுத்து அரை மணிக்கு பேருந்து ஏதுமே இல்லை என்று சொல்லி எல்லாம் பேருந்து நிலையத்திலேயே 57+ 57 எல்லாமாக ஏற்றிச் செல்வதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் உண்மையில் 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருப்பது உண்மை. அப்படியே இருந்தாலும் மதிய உணவு இடைவேளை சமயத்தி பத்து பதினைந்து நிமிட இடைவெளி இருக்கலாம். நள்ளிரவில் கூட அரை மணி ஒரு மணி கழிந்ததும் போக்குவரத்து இடைவிடாமல் தொடர்கிறது

மேலு தொடர் வண்டியை இல்லாமல் செய்த நிலையில் அனைவரும் பேருந்தையே நம்பி இருக்கும் சூழலில் இந்த பேருந்து இயக்கங்கள் எப்படி எல்லாமோ இயங்குவது பற்றி அரசுக்கும், ஏன் நகரப் பேருந்தில் ஏறும் ஏற வேண்டிய பயணிகள் கூட இது போன்ற பேருந்துகளில் ஏறி தொல்லையாக பெரும் பெரும் உருவங்களுடன், சுத்த ஆரோக்யமற்ற நிலையில் எப்படி எலாம் இருக்கக் கூடாதோ அப்படி எல்லாம் இருந்தபடி

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பேருந்து பயணத்தை கெடுத்து தனியாருக்கு மேலும் மேலும் இலாபத்தை பெருக்கிக் கொண்டே இருக்க நாம் எனைப்போன்றோர் எல்லாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment