Sunday, December 24, 2017

வேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை

வேலைக்காரன் சக்கை போடு போடு ராஜா: கவிஞர் தணிகை
Image result for velaikkaran full movie wikipedia


தினகரனின் குக்கர் வெற்றி பெற்றதாக அறிவிப்புகள் வந்திருக்கும் ஊடகங்களின் செய்திகளின் ஊடாக இந்த சினிமா பற்றி ஏன் எழுதுகிறேன் எனில் இது என்னதான் வியாபார நோக்கில் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் அதில் கொஞ்சம் நுகர்வோர் விழிப்புணர்வை தந்திருப்பதாலும், நுகர்வோர் என்போர் நாம் தான் பல் வேறு களங்களில் தொழில் முனைகளில் பணி செய்யும் வேலை செய்வோராகிய நாம் தாம் என்று கொலைகாரன் பேட்டை அல்லது கூலிக்காரன் பேட்டையிலிருது வித்தியாசமாக கதை நகர ஆரம்பிக்கிறது.

ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து, வாக்குகள் பணத்துக்காக விற்கப்படும் என்ற ஒரு இந்திய நாட்டில் இலஞ்ச ஊழல் இலாவண்யங்கள் செய்யும் அரசுகள் இருக்கும் வரை இந்த வாக்குகளுக்கு பணம் பெறுவதும் இருக்கும் இதில் தவறு ஏதுமில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதை இந்த இடைத்தேர்தல் காண்பித்து விட்டது. மேலும் வாக்குகளுக்கு இவ்வளவு பணப் பரிமாற்றம் நடப்பது தெரிந்திருந்தும் இந்த தேர்தலை நடத்தி முடித்திருப்பது எவ்வளவு கேவலமான செயல் இந்த தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய மாநில அரசுகள் என்பதும் எல்லாம் அசை போட வேண்டிய விஷயங்கள்.

சிவ கார்த்திகேயன் போடி அப்பன் சொன்னான் ஆட்டுக்குட்டி சொன்னான் என பேசித் திரிந்தவர்க்கு ஒரு நல்ல மெச்சூர்டான கேரக்டர். பாராட்டலாம். அமைச்சூராக கம்யூனிட்டி ரேடியோ என்று சொல்லித் திரிந்தவர் வேலை என்று கார்ப்ரேட் கம்பெனிக்கு அடிமையாகிறார். அதன் பின் பிரகாஷ் ராஜ் என்ற கசாப்புக்கடைக்கார போதிமரத்திடம் ஞானம் பெற்று வேலைக்காரர் என்று சொல்லப்படும் நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஊட்டப் போராடுகிறார்.

ஸ்னேகா நல்ல நடிகை என நீண்ட நாள் கழித்து மறுபடியும் நிரூபத்திருக்கிறார். அதிபன் மாதவ் என ஆதி என்றும் ஃபாஹத் பாசில் என்னும்  நடிகர் தனி ஒருவன் அரவிந்த் சாமியை நினைவூட்டி இருக்கிறார். மிகவும் நல்ல இயல்பான போட்டி நெகடிவ்வான கேரக்டரில் நல்ல நடிப்பு. ஒரு நல்ல நடிகர் கிடைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

Related image

அவர் சூபர் மார்க்கெட், டிபார்ட்மென்டல் ஸ்டோர் பற்றி சொல்வது எல்லாம் மிகவும் அற்புதம். இதுபோன்ற தூண்டல்களுக்கு எல்லாம் அடி பணிந்து விடுவார் ஆனால் நான் இன்னும் ரிலையன்ஸ் போன்ற சேலத்து மால் களுக்கு செல்லும் போதும் எனக்குத் தேவையான வேறு எங்கும் எளிதில் கிடைக்காத டாட்டா சோடியம் சால்ட் போன்ற எனக்குத் தேவயான பொருட்களை மட்டுமே வாங்கி வருவேன் என்பது எனக்கு நானே அளித்துக் கொள்ளும் சான்று. இந்தப் படத்தின் மூலம் எனக்கு நினைவில் தோன்றியது.

நிறைய நடிகர்கள் கூட்டம். 40 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளார்கள். சவ்வரான் என்ற கம்பெனி என்ற நுகர்வோர் பொருளை மையமாக வைத்து. நயந்தாரா, இராமைய்யா , ரோகினி, சார்லி போன்றோர் அளவாக தேவையான அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அதில் ரோகினி நன்றாக செய்திருக்கிறார்

உண்மையாகவே மோகன் ராஜா என்பவர் இயக்கி எழுதி இருக்கிறார். அதை நாம் அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும். சுபா பாஸ்கரன் என்ற இருவருக்கும் அந்தக் கதை உண்டு பண்ணியதில் உதவியிருக்கிறார்.

நல்ல கதை அமைப்பு. நல்ல தயாரிப்பு, நல்ல திட்டமிட்ட சோடை போகாத நல்ல மக்களுக்குத் தேவையான கருத்தை வியாபார நோக்கத்திலும் கூட சொல்லி வென்றிருக்கிறார்கள்.

Related image

உலகத்தின் மாபெரும் சொல் செயல்
நல்ல வார்த்தை.

Image result for sakka podu podu raja

அடுத்து சக்கை போடு போடு இராஜா சந்தாவுக்கு ஒரு படம் அவ்வளவுதான். எதற்கு இவ்வளவு செலவு செய்து ஒரு லௌக்யா என்ற படம் அது தெலுங்கு படத்தை ரீ மேக் செய்ய வேண்டிய புதிய கதையா...எப்படியோ சன்டா ஒரு கதாநாயகனக ஆள் வேண்டுமானால் நன்றாகவே ஹீரோவாக தெரிகிறார் ஆனால் படம் ஜீரோதான். நல்ல கட்டான தேகத்தோடு கதாநாயகி நடிகை

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments: