Saturday, December 2, 2017

திருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.

திருட்டுப் பயலே 2. சினிமா: கவிஞர் தணிகை.

Image result for thiruttu payale 2

2006ல் ஜீவன், அப்பாஸ், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோரை வைத்து திருட்டுப் பயலே என்ற படத்தை எடுத்து வெற்றிப் படமாக்கிய அதே சுசி கணேசன் அகோரம் படத்தயாரிப்பு நிறுவனம் இம்முறை பாபி சிம்ஹா, பிரசன்னா , அமலா பால் ஆகியோரை வைத்து அதே போன்ற கதையை இந்தக் காலத்துக்கு ஏற்ற செல்பேசிக் கலாச்சாரத்துடன் போலீஸ் ஸ்டோரியுடன் செய்திருக்கும் படம்.

ப்ரசன்னா வில்லன் வேடம் கனகச்சிதமாக செய்யப்பட்டிருக்கிறது.நன்றாக செதுக்கி இருக்கிறார்.ஸ்னேகா மெச்சிக்கொள்வாரா என்றுதான் தெரியவில்லை. அஞ்சாதே படத்திலிருந்து இவர் இது போன்ற கதாபாத்திரங்களை ஜமாய்க்கிறார். நிபுணன், துப்பறிவாளன் போன்ற படங்களில் நல்ல சப்போர்ட்டிங் ரோல் கதாநாயக நடிகர்களான அர்ஜுன் மற்றும் விஷாலுடன்.

பாபி சிம்ஹா நல்ல கம்பீரமான போலீஸ்காரர் என்ற வேடத்தில், இரகசியமாக ஒட்டுக் கேட்கும் பணியில் நிறைய வீடு, கார் என பிறரிடமிருந்து பிடுங்கியதை பினாமி பேரில் வைத்திருந்ததை அனுபவிக்காமலே கடைசியில் குடும்பம், குழந்தைக் கருவில் என ஏமாற்றத்தில் நிறைவடைகிறார்.

அமலா பால் ஆட்டம் பாட்டம் கொண்டட்டம், காதல், ப்ரசன்னாவிடாம் இரகசியமாக மீன் தூண்டிலில் மாட்டிக் கொண்ட புழுவாக நன்றாக துடித்திருக்கிறார் நடித்திருக்கிறார்.

அடித்து அடித்து காயப்படுத்தப்பட்ட பால்கி என்னும் பாலகிருஷ்ணன் என்னும் ப்ரசன்னா கடைசியில் 3 வயது மூளை வளர்ச்சியுடைய சிறுவனாக கை கால் இயங்காமல் சக்கர நாற்காலியில் வைத்து அவரது தந்தையால் தள்ளிச் செல்லப்படுவது போன்ற கதை இது போல் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவார்க்கு பாடமாக சொல்லப்பட்டிருக்கிறது.

அநியாயமாக ஈட்டும் ஊதியமும் பயன்படாது என்ற நீதியும் சொல்லப்பட்டிருக்கிறது. நமது அம்மா நிரந்தர முதல்வர் ஜெ வழக்கை விடவா இதெல்லாம் பிரமாதம்?

சிறிய சிறிய சம்பவங்கள் வழியாக மேலும் மேலும் கதை நகர்த்தப்பட்டு பார்ப்பவரை மேலும் மேலும் த்ரில்லிங் மன நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறது இரகசிய உலகம். நிழல் உலகம், நிஜத்தில் கலகம் ஏற்படக் காரணம் என படம் சமூக வலைதளம், போலீஸ் ஸ்டோரி, பினாமி, நல்ல குடும்பங்கள், தினவு எடுத்துத் திரியும் அறிவார்ந்த கணினி உலகு சார்ந்த இளைஞர்கள் அவர்களுக்கு பகடைக்காய்களாகும் திருமணமான அத்தை மாமி பெண்டிர்.... இப்படியாக இந்தக் கதை...


அனேகமாக வேறு படம் இந்தப் படத்தை வந்து அழுத்தவில்லை எனில் பெண்களைக் கவரும் படமாக, பெண்களுக்கு எதை எல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லித் தரும் படமாக இருப்பதால் இப்படம் பேசப்படும். வசூலைக் கூட எடுக்கும். நன்றாகக் கூட ஓடலாம். ஆனால் லென்ஸ், போன்ற படங்கள் இதற்கும் முன்பே இதை விட வலுவானதாக இதே கதை அமைப்புடன் அடிப்படையில் வந்து விட்டாலும் கிரிமினல், சைபர் கிரிமினல் மற்றும் குடும்பம் என இந்தப் படம் வலுவடைகிறது . அனைவரும் பார்க்க வேண்டிய படமாகவும் மாறுகிறது. அமலா பாலும் ப்ரசன்னாவும் படத்தில் வலு சேர்ப்பார்களாகத் தெரிகிறார்கள்.

மறுபடியும் பூக்கும் தளம் இந்தக் காலத்துக்கு வேண்டிய படம் என்பதால் இந்தப் படத்திற்கு நூற்றுக்கு 55 மதிப்பெண் கொடுக்கலாம் என்று கருதுகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



1 comment: