Friday, April 28, 2017

இந்தியாவில் வாய்ப் புற்று நோயால் ஒர் மணி நேரத்துக்கு 14 இறப்புகள்: கவிஞர் தணிகை.

இந்தியாவில் வாய்ப் புற்று நோயால் ஒர் மணி நேரத்துக்கு 14 இறப்புகள்: கவிஞர் தணிகை.




விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி,அன்ன பூர்ணா மருத்துவக் கல்லூரிகள் வழியாக  சென்னை அப்போலோ கேன்சர் இன்ஸ்ட்டிடியூட், சேலம் மாநகர பல் சிகிச்சை,காது, மூக்கு , தொண்டை பொது பல் மருத்துவர்களுக்காகவும் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்காகவும் வாய்ப் புற்று நோய்க்கான‌ அறுவை சிகிச்சை நேரடி செய்முறை விளக்கம், மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு நாள் பயிலரங்கை கடந்த 22.04.1017ல் நடத்தியது.



இந்த பயிலரங்கில் முக்கிய விருந்தாளியாக சென்னை அப்போலோ கேன்சர் இன்ஸ்டிடிடியூட்டின் முது நிலை புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.எஸ்.மணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்.

ஏழை மனிதனின் புற்று நோய் என்றாலே அது வாய்ப்புற்று நோய் என்றும் உலக அளவில்  வாய்ப்புற்று நோய் புற்று நோய்களில் 11 ஆம் இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் அது முதலிடத்தில் இருந்து வருவதுடன் மணிக்கு 14 இறப்புகள் நிகழவும் காரணமாயிருக்கிறது. மேலும் இந்தியாவில் 10 பேருக்கு புற்று நோய் இருக்கிறது என்று கண்டறிந்தால் அதில் 4 பேர் வாய்ப்புற்று நோய் உடையவராகவே இருக்கின்றனர் என்பதும் புகைப்பார், மதுபான அடிமைகள் போன்றோர்க்கு ஒரு அபாய அறிவிப்பாகும். போன்ற செய்திகள் இதன் தலையாய பொருளாக எடுத்து சொல்லப்பட்டன.



புகையிலை பொருட்களின் பயன்பாடும் அத்துடன் அளவு கடந்த மதுபான நுகர்ச்சியுமே இதன் முக்கிய காரணங்கள். இவற்றைக் கட்டுப்படுத்தினாலே இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும். இவை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கப்படுமானால், ஆரம்ப கட்டத்திலேயே எளிதாக சிக்கனமாக இந்த நோயைக் கண்டறியவும் பாதிப்புகளிலிருந்து தடுக்கவும் முடியும் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.



எளிதாக சுலபமாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி வாய்ப்புகளும்,
புகையிலை மதுபானக் கட்டுப்பாடும் இதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

வாய்ப்புற்று நோய் அறுவை சிகிச்சை
1. குறைவான செலவிலும்
2. சிகிச்சை கால அளவு குறைந்திருப்பதும்
3. செயல் திறன் இழப்பை குறைப்பதும்
4. எளிதாக மறு வாழ்வு பெற்று இயல்பு நிலை வாழ்வுக்கு திரும்ப வைப்பதும்

இவை யாவற்றையும்



செய்ய இந்த முன்னேறிய அறுவை சிகிச்சை நிபுணத்துவ‌ மருத்துவ முறைகள் பயனளிக்கின்றன என்பது இந்த ஒரு நாள் பயிலரங்கின் ஆதார சாராம்சம்

இந்த மருத்துவ சிகிச்சை முறைகளில் சென்னை அப்போல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட் வினாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து கையுடன் கை சேர்த்து பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறது



ஆரம்ப நிலையில் ஆங்காங்கே இந்த அறுவை சிகிச்சைகள் நடத்தப் படலாம் என்பதும், அதை மீறிய நிலையில் சென்னை அப்போலோ கேன்சர் இன்ஸ்ட்டிடியூட்டுக்கு அந்த வகையான அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை தெரியப்படுத்தினால் அதை செய்து கொடுக்க நல்ல சிகிச்சை அளிப்பதில் அப்போல்லோ ஆர்வமாக இருக்கிறது என்பதும் இந்த பயிலரங்கு மூலம் தெரிவிக்கப்பட்டது.


இந்த பயிலரங்கிற்கு அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரியின் தலைவர் டாக்டர் என்.மோகன் தலைமை தாங்கினார்..விநாயாகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜா பேபிஜான் வாய் மற்றும் முகத்தாடை அறுவை சிகிச்சைப் பிரிவின் தலைமைப் பேராசிரியர்  டாக்டர் ரீனா ஜான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

பயிலரங்கில் தமிழ் நாடு பொது அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு அமைப்பின் தலைவர் டாக்டர்  ஜி.வி சிவலிங்கம்,மற்றும் செயலாளர் டாக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோரும் வருகை தந்து சிறப்பிக்க , காணொலிக் காட்சிகளுடன் சிறாப்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டன.



பயிலரங்கு பெரிதும் பயனுடையதாக இருந்தது என கலந்து கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் பின்னோட்டத்தில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். வாய் மற்றும் முகத்தாடை சீரமைப்பு பிரிவு டாக்டர் க . சரவணன் நன்றி கூற பயிலரங்கு இனிது நிறைந்தது.

நன்றி:
பி.ல்ஷ்மிபிரியா
மேலாளர்‍ ஹெல்த் கேர் சர்வீஸஸ் &
சர்வீஸ் லைன் மேலாளர் புற்று நோயியல்
அப்போல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட்.

மறுபடியும் பூக்கும் வரை\
கவிஞர் தணிகை.


5 comments: