Monday, April 10, 2017

பல தாரம்: கவிஞர் தணிகை

பல தாரம்: கவிஞர் தணிகை

Related image

அந்த மனிதன் எம்.ஜி.ஆர் போல நல்ல கலர் நல்ல உயரம் அத்தனை அழகு ஒரு வேளை அவன் அழகுதான் அழகுன்னா என்ன நல்ல கலர்தானா? அவனுக்கு நிறைய சொத்து வேறு பாக்குத் தோட்டம் எல்லாம் உண்டு, அவனுக்கு 7 மனைவிகள் எல்லாமே ஒத்துமையாகவே இருந்தார்கள். அவன் சாகும் வரை.முருகனுக்கு வள்ளி தெய்வானை என இருவர், பாஞ்சாலிக்கு 5 கணவர், இராமன் சீதையை சந்தேகப்பட்டான் இராவணன் ஒன்றுமே செய்யவில்லை கடத்தியது தவிர,மோளையனுக்கு ஒரு பெண் குழந்தை கூட‌ உண்டு இருந்தாலும் அவன் மனைவி சரசு குண்டிக்குழன் என்னும் கூளையன் ஒருவன் வீட்டுக்கு குடி புகுந்து விட்டாள் அவன் இருக்கும்போதே...

முகமதியத்தில் எத்தனை மனைவி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாமா? வார்த்தையிலேயே விட்டு விடலாமா கை விட்டு விடலாமா? ஆண்கள் முதியவர்களாகவும் அவர்களின் மனைவி மார் மிக இளையவர்களாகவும் நிறைய பேரை பார்க்க முடிகிறது.

காற்று வெளியிடை போன்ற படங்களும், கடவுள் மறுப்பு சிந்தனையாளரும் இதற்கு எல்லாம் சடங்கு சம்பிரதாயம், தாலி, மணம் என்ற ஏதும் இல்லாமலே ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்றே போதிக்கின்றன.

போதவில்லை, ஒருவனுக்கு ஒருத்தி போதவில்லை எனவே மற்றொன்றா? சரி 7 பெண்கள் எப்படி? தசரதனுக்கு பல ஆயிரம் மனைவியாமே? அதைப் பார்த்து திருந்திய இராமனுக்கு ஒன்றே போதும் என புத்தியா?

ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் குறைந்தே வருகிறது. எப்படி ஏற்கெனவே ஒருத்தி இருக்கும்போது இந்தப் பெண்கள் அதே ஆணை கட்டிக் கொள்கிறார்கள்? அவனை விட்டால் வேறு ஆளே கிடைக்காதா? இல்லையா? எல்லாம் ஏதோ ஒரு சிறு சலனம். மயக்கம்.

முறை வைத்துக் கொண்டு திரௌபதி பஞ்ச பாண்டவரை ஆண்ட போதும் அடுத்தவனை ஏற்கெனவே அந்த மற்றொருவன், இன்னொருவன் செய்ததுதான் நன்றாக இருந்தது என நினைத்தால் நினைத்திருந்தால் அவள் எப்படி பதிவிரதை பத்தினி யாய் இருக்க முடியும் எல்லாம் கதை, ஆனால் அவள் கடவுள் அவளுக்கும் கோவில். அவள் ஒருவனை புணர்ந்தபடி வேறொருவனை புணர்ந்ததை நினைக்கவேயில்லை, நினைத்தாள் என்றெல்லாம் யாரும் சொல்ல முடியாதே...பீமன் தானே அதில் உடல் வலு அதிகம் உள்ளவன், உடல் வலுவுக்கும் புணர்ச்சிக்கும் தொடர்பு என்கிறதே உயலியல் சேர்க்கைகள்...பெண்களில் இப்போதெல்லாம் சினிமாக்களில் நடப்பது போன்று அவன் தம் பேச்சைக் கேட்பவனாயிருக்க வேண்டும் என நினைப்பதோடு சரியல்லவா? மற்றபடி அவன் எப்படி கொலைகாரன், கொள்ளைக்காரன், கெட்ட பழக்கம் நிறைந்தவன், திருடன், குடிகாரன் இது எப்படி இருந்தாலும் அதற்கெல்லாம் கவலைப்படுவதாக இல்லையே...

எவ்வளவு நீளம் என்றெல்லாம் பாலியல் பரிமாற்றத்தில் இணையத்தில் எல்லாம் பெண்கள் எல்லாம் கூட கேட்கிறார்கள் என செய்திகள் இருக்கின்றனவே இதற்கெல்லாம் என்ன சொல்வது? அறிவியல் முன்னேற்றமா? இல்லை உடலியல் பெருமகிழ்வை  அதிக படியாக நுகர்ந்து விடுகிறார்களோ...ஆனால் இது எல்லாம் சிற்றின்பம் , மிருக உணர்ச்சி இதை எல்லாம் தாண்டி வாழ்வதும் பிறர்க்காக வாழ்வதுமே மனிதம் தெய்வீகம் என்னும் வாழ்வும் இருக்கிறதே...இதனிடையில் குடும்பம் பிள்ளை மனைவி என்றெல்லாம் பொறுப்புடன் இந்தியாவில் இன்னும் குடும்ப அமைப்பு அப்படியே நீடிக்கிறதே...இதை எந்த மத வாத, மொழி மாறிய இன மான அமைப்புகள் சாதிய அமைப்புகள் தடை செய்ய முடியும்?

இந்த பல தார மணம் என்பது ஒரு மிகவும் காம்ப்ளிகேட்டட் ஆன சப்ஜெக்ட்.
இது போல முற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். தற்காலத்துக்கும், காலத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய காலத்துக்கும் மனிதர்க்கும் அழகே இல்லையே..

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. பெரும்பான்மையான விலங்குகள் கூட,
    தன் துணையினைவிட்டுவிட்டு, வெரொரு துணையினை நாடுவதில்லை என்று படித்திருக்கிறேன்
    ஆனால், மனிதன்தான் விலங்கினும் கீழாய்.....

    ReplyDelete
  2. thanks for your feedback on this post vanakkam.

    ReplyDelete