Tuesday, April 19, 2016

கவிஞர் தணிகையும் கூட சே குவேரா மாதிரிதான்:கவிஞர் தணிகை

கவிஞர் தணிகையும் கூட சே குவேரா மாதிரிதான்:கவிஞர் தணிகை



இவருடைய வேலை கூட மகாத்மா காந்தி , மதர் தெரஸா போன்றதுதான் என ஒரு காலத்தில் இவரது சேவைப்பணி பற்றி ஒரு மருத்துவர் முகாமுக்கு வந்திருந்தவர் குறிப்பிட்டார். சசிபெருமாள்,சின்ன பையன், தம்பி சிவராம சுப்ரமணியம் ஆகியோரை தமிழக இலட்சியக் குடும்பங்கள் அமைப்பு இழந்து விட்டது.

நாமும் போய் சேர்வதற்குள் நமைப் பற்றிய செய்திகளை சுருக்கமாக பதிவு செய்ய வேண்டுமே என்ற நோக்கத்தில் இந்தப் பதிவு.சேகுவேரா பெரிய ஆள் அவரோடு இவர் தம்மை ஒப்பிட்டுக் கொள்வது சரியா என சிலர் கேட்கலாம். ஆனால் இன்று மஸ்கட்டில் இருக்கும் நண்பர் ஒருவர் இவர் மேட்டூரின் சேகுவேரா என்று அழைத்தார். சில விஷயங்களில் இருவருக்கும் ஒற்றுமை உள்ளது. அதைப் பார்ப்போமே.எல்லாருமே எப்பவுமே இருக்கும் வரை எவரையுமே ஏற்க விரும்புவதில்லை. இல்லாத போது மறைந்த போது ஏகமாக ஆஹா ஓஹோ என்று உலகத்தில் புகழ்வது ஒன்றுதால் உலகோடு ஒட்ட ஒழுகல். ஆனால் இருக்கும்போதே சிலவற்றை சொல்லி செல்லுகிறோம்.

இருவருமே களப்பணியாளர்கள், தலைக்கு தொப்பி அணிபவர்கள்,ஒரு பணி முடிந்ததும் அடுத்த பணிக்கு சென்றுவிடுபவர்கள், இருவரும் மிக நீண்ட பயணங்கள் மேற்கொண்டவர்கள், இருவருமே பதவியையோ, பேரையோ விரும்பாதவர்கள்,சொல்லிக் கொள்ள ஆசைப்படாதவர்கள் நிறைய விதைகளை விதைக்க ஆசைப்பட்ட  சமத்துவ சமுதாயத்தின் வித்துகள் இன்னும் பல.

கல்லூரிப் பருவம் முடித்த அந்த மருத்துவர் உலகப் பயணம் புறப்பட்டார். மறுபடியும் வீடு திரும்பவில்லை.அது போல இல்லாமல் போனாலும் கூட எமது கல்லூரிப் பருவத்தில் முதலாம் ஆண்டில் சீனியர் மாணவர்களால் அரைக்கால் சட்டை போட்டுக் கொள்வதற்கு கேலி செய்யப்பட்டவர், உணவகத்தில் சாப்பிடாமல் ஸ்ட்ரைக் செய்ததற்கும் எதிராக முதலாண்டிலேயே மற்ற சீனியர் மாணவர்களை பகைத்துக்கொண்டு தம் கருத்தை வலியுறுத்தியவர்.முதலாம் ஆண்டில் அப்பாவியாகவே இருந்தவர்.

இரண்டாம் ஆண்டில் காமன் ரூம் இன்சார்ஜ் விளையாட்டு அறைக்கு பொறுப்பாளர் மாத பகுதி நேர ஊழியத்தில் ஊதியம் 100 ரூபாய். ஆனால் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதரவாக மாணவர்களைப் பற்றி கோல் மூட்டுவார், ஆயில் அடிப்பார் என அவர்கள் எதிர்பார்க்க‌
அதெல்லாம் செய்யாமல் அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றியவர்.

மூன்றாம் ஆண்டில் முறையாக நிர்வாகம் மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி நடத்தி இனிப்பு ,காரம், காபி (எஸ்கேசி ‍ ஸ்வீட், காரம், காபி)அவர்களது பணத்தில் கூட  வழங்க மறுத்ததால் மறு நாள் காலைக்குள் நிறுவனத்தின் தாளாளர் வருவதற்குள் மேடையை காலி செய்ததில் பெரும் பங்கு வகிக்க, கல்லூரிக்கும்,விடுதிக்கும் வராமல் மிச்சமுள்ள நாட்களில் வீட்டில் இருந்தே படித்து தேர்வு எழுதலாம் என அனுமதிக்கப்பட்டு மிக அதிகமான கெட்டவர் (மோஸ்ட் நொட்டோரியஸ்) என்ற பேர் பெற்றவ‌ர்

தகுதிக் குறைவான பணி கூட செய்யத் தயாராய் இருந்தபோதும், மேட்டூர் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் ஓசூரில் ஒரு ஆலையிலும் பணி வாய்ப்பு கிடைக்கப் பெறாமல் அலைந்தவர்.

திருச்செங்கோடு ஓ.பி ஏஜன்ஸிஸ் என்ற நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு கணக்கியல் பிரிவுக்கு பணிக்கு அழைக்கப்பட்டு அங்கே கணக்கு ஒரு துளியும் பயிற்சி அளிக்கவோ, பணி செய்யவோ விடாமல் 8 நாளிலேயே பெட்ரோல் பங்குக்கு பணி செய்ய இடம் மாற்றம் செய்யப் பட, அறை நண்பர் கை ஜோதிடம் கேட்டு அந்த நிறுவனத்திலிருந்து விலகி வீட்டுக்கே திரும்பியவர். அப்போதே காதல் வாழையடி வாழை என தன்னை நேசித்த பெண் வீட்டுக்கே பதிவுத் தபால் அனுப்பி சகோதரரும் தாயும் வந்து இது போன்று இனி செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப் பட்டவர்.

1983 வாக்கில் நேரு யுவக் கேந்திராவில் தேசிய சேவைத் தொண்டராக பணியும் பயிற்சியும் பிடல் காஸ்ட்ரோவாக கே.வேலாயுதம்... நிறைய பயிற்சிகள், நிறைய முகாம்கள் சொல்லில் அடங்காமல். அப்போதுதான் காந்தி கிராமத்தில் கிராமிய பல்கலைக்கழகத்தில் பயிற்சி காந்தி வழி நூல்கள் எல்லாம் படித்தது, தில்லையாடி வள்ளியம்மை கல்வி நிறுவனத்தில் முதல் பரிசு ஈட்டியது...

கன்னியாகுமரி விவேகானந்தர் இளையவர் மையத்தில் சேர அழைப்பு வந்திருந்ததை வீட்டார் அனுமதி மறுக்க, அதன் பின் தான் இந்த நேரு யுவக் கேந்திரா பணி. நிறைய பட்டி மன்ற நடுவர் பணிகள், நிறைய கவிதைகள், மக்கள் கலை பண்பாட்டுக்கழக துணைத் தலைவர் பதவியும் பொறுப்பும், இன்குலாப் சந்திப்புடன் கவியரங்க பங்கீடு, பிரிபடாமல் இருந்த சேலம் மாவட்டத்தில் பல பயிற்சிமுகாம்கள் கீழ் சாத்தம்பூர் , கன்னங்குறிச்சி, அமரக்குந்தி என எல்லா இடங்களிலும் வொர்க் கேம்ப், லீடர் சிப் ,இளையவர் முகாம், இராமமூர்த்தி நகர் இப்படி....

சேவை நிறுவனத்தில் பணி புரிய அழைப்பை ஏற்று நாடெங்கும் ஈராண்டுகள் ஒரிஸ்ஸா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா,பிரிபடாத மத்தியப் பிரதேசம் மற்றும் டில்லி வரை பயணங்கள் பணிச் சிறப்புகள் சொல்லி மாளாதவை..இடையே மலேரியா, டைபாய்ட், தொழு நோய்,குடற்புண், மூலம் என பல நோய் சம்பாதிப்பு, தொழு நோய் மருத்துவமனையில் கூட பணியாற்றியது..

.ஆந்திராவில் பயிற்சியின் போது கோழி எச்சங்கள் அருகே படுக்க இடம் கிடைத்ததும், கல்ராயன் மலையில் மாட்டுக் கொட்டகைகளில் படுக்க இடம் கிடைத்ததும், பாறைகளில் கொண்டு சென்ற உணவை பகிர்ந்து கொடுத்து உண்டதும் ‍ஹோசிமின் பாறையின் மேல் படுத்துறங்கியதை நினைவு படுத்த‌

சுமார் 10 ஆண்டுகள் நாட்டின் பின் தங்கிய ஆதி வாசிகள், பழங்குடியினர், மலை வாழ் மக்களுடன் உண்டு உறங்கி அவர்களுக்கு மேம்பட்ட பணிகள், விழிப்புணர்வு மற்றும் பொருளாதாரப் பணிகள் என எண்ணிறந்த மக்களுக்கு நூற்றுக்கணகான கிராமங்களுக்கு இரவு பகல் பாராமல்,ஈடு இணையற்ற உழைப்பு.வீரப்பன் கூட தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வனப்பகுதியில் நடந்தவன் தான், ஆனால் இந்திய வனப்பகுதி முழுதும் வலம் வந்த வாய்ப்பு பெற்றவன் இந்த கவிஞர் தணிகை.

 அப்போதுதான் ஊடகம் எல்லாம் பாராட்ட ஒரு மருத்துவர் இவரது பணியும் மதர் தெரஸா,மகாத்மா பணி போன்றது தான் என்றது. தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் கல்ராயன் மலை, சேர்வராயன் மலை, பால மலைகளில் நிறைய சேவைப்பணிகள். இந்தக் காலக் கட்டத்தில்தான் தமிழ்நாட்டுக்கு பிரதிநிதியாக சென்று ஹைதராபாத்தில் அப்போது நாட்டின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான மேதகு பி.என்.பகவதி அவர்களுடன் ஒரே மேடையில் பேசி, அவருடன் கலந்தளாவி அரை நாள் உண்டு, உலாவி மகிழ்ந்தது..எத்தனை மனிதர்கள்,எத்தனை இடங்கள்,எத்தனை வேறுபாடுகள், எத்தனை இடர்பாடுகள்...ஓ சொல்லில் மாளாமால்...

காந்தி முதலில் காங்கிரஸ் மாநாடு கூடிய இடத்தில் மலம் வாரியது போல பாலமலையில் கிராம சர்வே செய்ததுடன் இராமன் பட்டியில் பள்ளி அருகே, ஊர் அருகே இருந்த அரசு கட்டிய 8 கழிப்பகம் சரியான பயன்பாடு இன்றி நாறி வியாதி பரப்பும் சூழலிலிருந்த போது தமது கரம் கொண்டு சுத்தப்படுத்தி, அந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியது. அது முதல் சிறு கிராம மக்கள் இவருக்கு மனக்கோயில் கட்ட ஆரம்பித்த போது எதிர் ஊடுருவல் சக்திகள் இவருக்கு சமாதி கட்ட முயன்று தப்பி கல்ராயன் மலையில் சென்று பணிகள் ஆரம்பித்தது. உடலில் ஏற்பட்ட தொழு நோய் தொற்றுக்கு மருத்துவம் செய்துகொண்டது...

1992 வாக்கில் இவருக்கும் நிறுவனத்தின் முக்கியஸ்தருக்கும் ஈகோ பிரச்சனை தலையிட பணி துறந்து தன்னிச்சையாக பணி ஆரம்பித்து பின் அதையும் விட்டு தாயின் தாளாமைக்கு ஆறுதல் தரும் பொருட்டு தமது 36 ஆம் வயதில் 1997ல் இந்தியாவின் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் மணம் புரிந்தது. 1998ல் மகன் மணியத்தை பெற்றுக் கொண்டது.11 புத்தகம் எழுதி வெளியிட்டது அப்துல் கலாம் கடிதம் பெற்றது எல்லாம் 2004ல் அப்போதே அந்த தானைத் தலைவர் இந்தியாவின் குடியரசுத் தலைவர். நிறைய தொலைக்காட்சி வாய்ப்புகள், வானொலி வாய்ப்புகள், பத்திரிகைத் தொடர்புகள் எல்லாமே இருந்தன...

அதன் பின் தெய்வா ஆலோசனைமையம், தெய்வா பதிப்பகம், தெய்வா தியானப் பயிற்சி மையம் என்று காலம் கடத்தியது. வலைதளங்களில் 2010 முதல் 3 வலைதளங்கள் நடத்தி வருவது, 153 நாடுகளுக்கு தமது குரலை,எழுத்தை பரப்பியது.அதில் ஒன்றை அரசும் அந்த அமெரிக்க நிறுவனமும் 1350 பதிவுகளுடன் முடக்கியது. பதிலாக மறுபடியும் பூத்தது...



இடையே 3 கோவில்களில் ஆன்மீகப்பணி அதிலும் மனிதர்களுடன் முரண்பட விலகியது...முக்கியமாக சாம்பள்ளி சுடுகாட்டில் கோம்பூராங்காட்டில் கட்டப்பட்டுள்ள‌ கபாலீஸ்வரர் கோவிலுக்கு தமது 18 மாத உழைப்பை பொருளாளராக ஒருங்கிணைப்பாளராக இருந்து அதில் ஈடுபட்ட நபர்களின்  சிறுமை கண்டும் தளராமல், சலிக்காமல் செய்து முடித்தது...கோவில் நெறிகள் தமக்கு எதிரானதாக இருந்தபோதும்....

அப்துல் கலாம் மறைந்த சில மாதங்களில் வந்த அவரது பிறந்த நாளின் போது 15 பள்ளிகளுக்கு அவரது படங்கள் வழங்கி இனிப்பு கொடுத்து அரசு மின் பணி கிடைக்க உதவிய இரண்டு மூத்த குடிமகன்களுக்கு கலாம் நினைவுப் பரிசு வழங்கி... 30 ஆண்டுகளுக்கும் மேல் தியானப் பயிற்சி செய்தும் நாடி வருவோர்க்கு பயிற்சி அளித்தும்...

காலம் போன கடைசியில் மறுபடியும் பூத்து  மகனுக்காகவும், மக்களுக்காகவும், நேரமையான நட்புக்காவும் வினாயகா மிஷன் சங்க‌ராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் முகாம் அலுவலராக (கேம்ப் ஆபிசர்) இணைந்து மக்களுக்காக பணி ஏற்றுள்ளது...அதிலும் நற்சேவை ஆரம்பித்துள்ளது...2016 ஏப்ரல் வரை சொல்லியது சுருங்கச் சொல்லியது இது...

இது ஒரு கவிஞர் தணிகையின் வாழ்க்கைச் சரிதம் அல்ல வாழ்க்கைச் சருக்கம் சுருக்கம்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.





No comments:

Post a Comment