Wednesday, April 20, 2016

திமுக குண்டர்கள் நிறைந்த கட்சி அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் நிறைந்த கட்சி:ஜெயலலிதா சேலத்தில்: கவிஞர் தணிகை

திமுக குண்டர்கள் நிறைந்த கட்சி அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் நிறைந்த கட்சி:ஜெயலலிதா சேலத்தில்: கவிஞர் தணிகை



மகுடஞ்சாவடியில் ஒரு 55 வயது முதியவரான பச்சியண்ணன் வெயில் தாங்காமல் ஜெயலலிதா கூட்டத்திற்கு சென்றவர் சாவடிக்கப்பட்டார்.வெயில் தாங்காமல். ஓட்டு சாவடிக்கு போவதற்குள் இன்னும் எத்தனை இது போன்ற மரணங்களோ? ஏற்கெனவே 3 பேர் இதே போல இறந்தனர் என்பதும் நினைவிற்கு.

இதெல்லாம் ஜெ ஆட்சிக்கு முடிவு என்று கட்டியங் கூறுகின்றன. அவரும் தி.மு.க குண்டர்கள் நிறைந்த கட்சி, தம் கட்சி மட்டுமே தொண்டர்கள் நிறைந்த கட்சி என ஓலம் பாட ஆரம்பித்து விட்டார்.இது அவரின் தோல்வி பயத்தை அப்பட்டமாக காண்பிக்கிறது.

தேர்தலுக்கு முன்பாகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேறு வெளி வந்துவிடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனக்கென்னவோ மகுடஞ்சாவடியில் நடைபெற்ற கூட்டத்திற்கு சேலம்,ஈரோடு, திருப்பூர், நாமக்கல்,நீலகிரி வேட்பாளர்களுடன் கேரளத்து வேட்பாளர்களையும் இவர் அறிமுகம் செய்தது பழையபடி ரிமோட் கன்ட்ரோல் நிகழ்வாகவே புலப்பட்டது.

இவரின் வருகையால் நிறைய நீர் வீணாக்கப்பட்டது. ‍ஹெலிகாப்டர் வந்து இறங்கும்போது ஏறும்போது மண் துகள் பறந்து விடக் கூடாதே என.

மக்கள் ஆடிக்கொண்டும் குடித்துக் கொண்டும் லாரிகளிலே ஏறிக் கொண்டும் சட்டத்துக்கு புறம்பாக திறந்த சரக்கு லாரிகளில் அந்த கடும் கொடும் வெயிலில் ஆடு மாடுகள் போல திரட்டிச் செல்லப்பட்டனர்

அவர்களைப் பார்த்தாலும் தொண்டர்கள், குண்டர்கள் என்றே சொல்லுமளவு இருந்தனர். ஒரு முதல்வர் இப்படி ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே தாக்கிப் பேசியுள்ளது அந்தக் கட்சிதான் இவர் கட்சிக்கு மாற்று என்று உணர்த்துவதாக உள்ளது.

இவர்கள் கட்சியில் இருப்போர் எல்லாம் தொண்டர்கள், பிற கட்சியில் இருப்போர் எல்லாம் குண்டர்கள் என்றால் அவர்கள் திருப்பி சொல்ல எவ்வளவு நேரம் ஆகும்? ஒரு முதல்வர் கண்ணியம் காக்க வேண்டியவரே இவ்வாறு பேசுவது தமிழக அரசியில் தாறுமாறாக ஆகிவிட்டதை காண்பிக்கிறது.தடுமாற்றத்தைக் காண்பிக்கிறது.



இந்த வண்டி வாகனப் போக்குவரத்தால் அந்தப் பகுதியில் இருந்த கல்லூரிகளுக்கு பெரும் இடைஞ்சல். மற்ற சராசரி அன்றாட வாகனங்களுக்கும் பெரும் இடைஞ்சல்.

தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது இவ்வளவு சரக்கு வண்டி லாரி ட்ரக் வண்டிகளில் பாதுகாப்பற்ற முறைகளில் ஆடு மாடுகளாக மக்களை  ஏற்றிச் செல்வது பற்றி?

எமக்கு ஒரு 2 மணி நேரம் இந்த போக்குவரத்து இடைஞ்சலால் பலன் கிடைத்தது வழக்கமாக 3.30 மணிக்கு விடும் கல்லூரி 1.30 மணிக்கே விடப்பட்டது. மாணவர்களுக்கு இடைஞ்சல் போக்குவரத்து இடைஞ்சல் ஏற்பட்டு பாதிப்புகள் நிகழ்ந்து விடக் கூடாதே என....உடனே 3.40 வாக்கில் வீடு வந்து சேர்ந்தோம். ஆபத்திலிருந்து தப்பி. ஒன்று கோடை வெயில் இரண்டு ஜனத் திரளின் வம்பு.

அமர்ந்து கொண்டே இருப்பவர் தரும் விண்ணப்பத்தை நின்று கொண்டே பெறும் நிதிஷ் குமாரும் முதல்வர்தான், சாதாரண வண்டி வாகனம், நடையில் செல்லும் உம்மன் சாண்டியும் முதல்வர்தான், கம்யூனிஸ்ட் தலைவர் அச்சுதானந்தன் ரெயில் நிலையத்தில் சாதாரண‌ பயணியாக வீற்றிருக்கிறார் ஒருவரோடு ஒருவராக பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக அவரும் முதல்வராயிருந்தவர்தான்.ஏன் மமதா கூட எளிமைதான்.ஆனால் இவர்....

.

இவரும் முதல்வர்தான். ஆனால் இந்த வெயிலில் இவ்வளவு இறங்கி வருவார் எனவும் நான் எதிர்பார்க்கவில்லை. தேர்தல் தலைவர்களை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.

வழக்கம் போல் விஜய்காந்தின் அடி,இடி கதை தொடர்கிறது. இந்த முறை இடி வாங்கியவர் அவரது பாதுகாவலரே.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment