Sunday, April 17, 2016

மறுபடியும் அமரக் குந்தியில் பூத்த அரிய மலர்கள்: கவிஞர் தணிகை

மறுபடியும் அமரக் குந்தியில் பூத்த அரிய மலர்கள்: கவிஞர் தணிகை
அமரக் குந்தி வாசகர் வட்டம் வழங்கிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் சென்று சிறப்புரை செய்து வந்தேன். நிகழ்வு காந்தி இளைஞர் நற்பணி மன்றத்துடன் இணைந்த அமர குந்தி வாசகர் வட்டம் வழங்கியது.




தமிழ் புத்தாண்டில் துன்முகி முதல் நாளில் அழைத்தார்கள். நல்ல வேளை அன்று நடப்பதாக இருந்த நிகழ்வு நேற்றைய தேதிக்கு ஒத்திப் போடப் பட்டதால் கொஞ்சம் தப்பினேன் ஏன் எனில் இரவு 10 மணிக்கும் மேல் பேருந்து இணைப்பு இல்லாக் கிராமத்தில் இருந்து எப்படிப் புறப்பட்டு எப்படி மறுநாள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து அலுவலகம் கிளம்புவது என்ற தடுமாற்றத்தை இயற்கை தடுத்து வசதியாக செய்து தந்தது.

16 04 2016 அன்று சனிக்கிழமை நேரம் மிகச் சரியாக 6.55 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் அமரக் குந்தியில் திரு எஸ். செல்வம் அவ்ர்கள் கே.எஸ்பேட்டை அமரக் குந்தி வரவேற்புரை நல்க‌

திரு.எம்.பாலமுருகன், நிவேதிதா எம்.ஏ, பி.எட் ஆசிரிய‌ர், அரசினர் உயர்நிலைப்பள்ளி ,தொப்பூர் தலைமையேற்று நடத்த சிறப்புரை செய்தேன் "விழிப்புணர்வற்ற சமுதாயத்தில் விழிப்படைந்தோரின் பணி" என்ற தலைப்பில். திரு முருகன் கடவுள் துணை ஆட்டோ அமரக் குந்தி வாசகர் வட்டம் நன்றி பாராட்டினார்.


நிகழ்வை எமது அன்பு சகோதரர் சேக்ஸ்பியர் என்கிற விவேகானந்தன் முன் நின்று ஏற்பாடு செய்தார். நல்ல தோழர்கள் குழு அங்கு இன்னும் இருக்கிறது சுமார் 100 பேர் திரள்கிறார்கள்.

இதெல்லாம் இந்தக் காலத்தில் அரிதுதானே. காந்திய நற்பணி மன்றத்தார் அப்படியே இருக்கிறார்கள். அமரக்குந்தி எனக்கொன்றும் புதிதல்ல, நிறைய நிகழ்வுகளில் நான் சிறப்பு செய்திருக்கிறேன். ஏன் தியான வகுப்புப் பயிற்சி கூட கொடுத்துள்ளேன். முகாம்களும் நடத்தியிருக்கிறேன்.

படிப்பது குறைந்து விட்டது என்னும் இந்தக் காலத்தில் இவர்களின் பணி பாரட்டத் தக்கதாயிருந்தது. சிறப்புரை செய்த எமக்கு ஒரு நூலை பரிசாக அளித்தார்கள். மற்றபடி எந்த வித பொருளாதார ஈடுபாடும் இல்லாமல் இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.

அன்புத் தம்பிகள் கனலரசு, மற்றும் மணி வண்ணன் நிகழ்வு 10 மணி வரைத் தொடர்ந்து விட்டதால் பேருந்து இல்லாததால் வீடு வரை இரு சக்கர வாகனத்திலேயே கொண்டு வந்து விட்டுசென்றார்கள் எனது நன்றியை கொண்டு சென்றார்கள்

வந்திருந்த அனைவருக்கும் பயனாகும் வண்ணம் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் விடுமுறைச் சிறப்பு முகாம் பற்றி குறிப்பிட்டதுடன் ஆசிரியர்களுக்கும் வந்திருந்த அனைவருக்கும் சிறப்புக் கட்டணச் சலுகை மற்றும் முன்னுரிமைகளுக்கான அனுமதி அட்டையை வழங்கினேன்.

வாய் சுத்தம், ஆசன வாய் சுத்தம், பற் பாதுகாப்பு,உடல் சுத்தம் பற்றி, விளக்கினேன்.
லோடிங் டோஸ் பற்றி அறிமுகப் படுத்தினேன்.
கோ இல் என்பது ஊரில் தலைமை வீடு என்றும் அங்கு அரசனும் ஆண்டியும் ஒன்றுதான் ஆனால் இப்போது எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பினேன்

உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்....கலையாத கல்வியும் ...பாடல்களின் பெருமை பற்றி எடுத்து சொல்லப்பட்டு அன்றே கோணாத கோல்  வளையாத அரசு பற்றி சொல்லிச் சென்றதைக் குறிப்பிட்டேன்.
அமரர் குந்தி தியானம் செய்த ஊரில் எனக்கும் அதற்கும் உள்ள தொடர்பை விளக்கினேன்



புல்லா,புகையிலை, மதுபோதை புறம் அகம் தூய்மை பற்றியும் ஆக் சன் ஸ்பீக்ஸ் மோர் (தேன்) வேர்ட்ஸ் பற்றி எடுத்தியம்பினேன்.
கலாம் சொன்ன தங்க முக்கோணம் பற்றி பறை சாற்றினேன்.

இது வரை அவதரித்த அத்தனை தலைவர்களுமே பணி செய்தும் விழிப்படையாத சமுதாயமாகவே தமிழ் சமுதாயம், மற்றும் இந்தியா நடந்து கொண்டிருப்பதை குறித்து வெதும்பினேன்.

உலகை திருத்திய உத்தமர்கள் பேரை எல்லாம் உச்சரித்தேன். அடுத்து எல்லா மொழி நூல்களையும் வாசிக்கச் சொன்னேன். வட்டத்தை பெரிது படுத்த சிறகை விரிக்கச் சொன்னேன்.

இதன் பின்னூட்டமாக சுமார் 10 பேர் தமது கருத்துகளுடன் தங்களது கேள்விகளையும் முன் வைத்தார்கள். விளக்கம் சொன்னேன். முன்பு ஆரம்பிக்கும் முன் தமிழ்ப்பண் முடிவில் தேசிய கீதம் இசைத்து விழா இனிது நிறைவு பெற்றது. விழா முடிந்ததும் கூட கலந்து  கொண்ட அன்பர்கள் எனது வலைதள முகவரி மற்றும் எனது புத்தகங்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார்கள்.

அனைவரும் மனமகிழ்ந்து கை குலக்கி தமது மகிழ்வை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். மதியம் அலுவலகத்திலிருந்து 3.15க்கு திரும்பியவன் எண்ணெய்க் குளியல் முடித்து சரியாக 5.15 மணிக்கு
பேருந்து என்று சொன்னதன் பேரில் பேருந்து நிறுத்தத்தில் நின்றால் சரியாக 5.45க்கு பேருந்தில் ஏறும்படியாக இருந்தது.

எந்த வித முன் தயாரிப்புமே இல்லாமல் நாம் அன்றாடம் பேசுவதையே கைக்கொண்டிருந்தேன்.உரை வீச வரவில்லை எமது பழைய குடும்ப நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி மகிழவே வந்தேன் எனக் குறிப்பிட்டேன்.

மது விலக்கு வேட்பாளர் சேலம் வடக்குத் தொகுதியில் கடந்த முறை நின்ற சின்னபையன், கோவன், சசிபெருமாள் இன்னும் தற்கால கட்சி நிலை,தலைவர்கள் நிலை பற்றியும் நல்ல தலைமை இந்தியாவில் இன்னும் ஏற்படாதது பற்றியும் அப்படி இருந்தவர்க்கு அங்கீகாரம் மக்களிடையே இல்லை என்பதும் இந்த நாட்டின் சாபமாக இருக்கிறது. அதை மாற்றும் தலைவர் இந்த நாட்டின் நதி நீர் இணைப்பு செய்து அழியாப் புகழ் அடைவார் என்றும் கட்டியம் கூறினேன்.


 பழனிவேல் நல்லாசிரியர் விருது பெற்றவர், இலட்சுமாயூர் பள்ளித் தலைமை ஆசிரியரும் கூட. அவரும் அவரது நண்பரான மற்ற ஒரு தலைமை ஆசிரியரும் வந்து சிறப்பு செய்தனர். பழனி வேல் ஏற்கெனவே உதவி தொடக்கக்கல்வி அலுவலராக இருந்து அந்தப் பணி வேண்டாம் என தலைமை ஆசிரியாரகவே மறுபடியும் இருந்து  ப‌ணி புரிபவர். இவர்கள் எல்லாம் ஒரு குழுவாக சென்று நமது கலாமை ராஜ் பவனில் சந்திக்கச் சென்றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.



மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment