Tuesday, April 12, 2016

புழுக்கம் : கவிஞர் தணிகை

புழுக்கம் : கவிஞர் தணிகை



ஊர்பேர்காட்டி பலகை நினைவஞ்சலி போஸ்டர் ஒட்ட பயன்படுத்தும்
மக்கள்

அரசியல் தலைவர்கள் சிலைகளை தேர்தல் ஆணையம் மறைக்கச் சொன்னால் திருவள்ளுவர், அம்பேத்கர், அறிஞர் அண்ணா சிலைகளையும் சேர்த்து மறைத்த அரசுப் பணி அறிவாளிகள்

அதி காலை முதலே சினிமாப் பாட்டு காதை அடைக்கும் தனியார் பேருந்துகள் அதில் தினமும் சென்று வந்தும் அதன் மேல் வழக்கு தொடர முடியா ஆதங்கம்

தன் பிரச்சனையை மனோதைரியத்துடன் சந்திப்பதை விட்டு விட்டு அடுத்தவர் வாய்ப்புகள், வாழ்வின் முறைகளை பொறாமையுடன் போட்டுக் கொடுத்து முன்னேற விரும்பும் நிறுவனங்களில் பணி புரிவோரின் சிறுபிள்ளைத்தனம்

அரசியல் என்ற பேரில் பெயர் தெரியாக் கட்சிகள் எல்லாம் தனித்து நிற்கும் இந்தத் தேர்தலில் உத்தி முறைகள்...

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட டாஸ்மாக் வியாபாரிகளாகவும் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர்களாகவும் செயல்படும் செயல்பட்ட‌ கொடுமைகள்

இந்தியக் குடிமகன்கள் போதையின் பிடியில் சாலையில், சாக்கடையில் ,தெருக்களில் விழுந்து கிடக்கும் நிலை கண்டு ஏதும் செய்ய முடியா நிலை....

இந்த நாட்டில் இருந்து கொண்டு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருந்து கொண்டு இதை எல்லாம் ஏதாவது செய்து மாற்றியாக வேண்டும் என்ற புழுக்கத்தை இந்த விரல் எழுத்துகளில் விரட்ட முயற்சிக்கும்...




மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



No comments:

Post a Comment