Monday, February 1, 2016

தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேக் கொசுவும் பழகருப்பையா விசுவும்:கவிஞர் தணிகை.

தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேக் கொசுவும் பழகருப்பையா விசுவும்:
தந்தி TV யின் ரங்கராஜ் பாண்டே எனும் கொசுவுக்குத் தந்தி  Tv தலைமை ஆசிரியர் எனப் பதவி . இவர் நிறைய ஆங்கிலத் தொலைக்காட்சிகளைப் பார்த்து பேட்டி, கேள்வி பதில், நேரடி விவாதம், போன்றவற்றை கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். ஏன் எனில் பிரண்ணாய் ராய், ராஜ் தீப் சார் தேசாய், இன்னும் நிறைய பெண்மணிகள் யாவருமே இவரை விட வல்லமையுடன் நிகழ்ச்சிகளைக் கொடுக்கின்றனர்.

இவர் பிபிசி BBC போன்ற உலகின் மாபெரும் செய்தி ஊடகங்களையும் பார்த்து கற்றுத் தேற வேண்டிய நிலை அவசியம். கேள்வியாளர்கள் அதிகம் பேசாமல், கேள்வியுடன் நின்று, பதில் தருவாரைத்தான் நல்ல ஊடகங்கள் ஒருமுகப்படுத்தும், ஏன் சில ஊடகங்களில் கேள்வியாளர் முகமே தேவைக்கு அதிகாமக காணொளிக்கு வராது




ஊடகங்களில் உள்ள‌ எவருமே கேட்ட கேள்விக்கு பதில் வரும் முன் விருந்தினரை, பேட்டியாளரை கடித்து கடித்து விழுங்க யத்தனிப்பதில்லை.இவருடைய அல்லது தந்தி தொலைக்காட்சியின் அரசு சார்புடைய அல்லது அ.இ.அ.தி.மு.க கருத்து சார்புடைய ஒளிபரப்புகளை எந்த வித தடையுமின்றி ஒளிபரப்பிக் கொள்ளலாம் ஆனால் அதற்காக விருந்தினரை வரவழைத்து அவர்களைப் பேச விடாமல் அவர்கள் கருத்தை தெரிவிக்கவே வாய்ப்பளிக்காமல் ஊடகம் கையில் இருக்கிறது என்கிற திமிரில் மக்களுக்கும் எதிரில் அமர்ந்திருப்பார்க்கும் தமது கருத்து திணிப்பை செய்வதில் இவர் ஏதோ சாதிப்பதாக மகிழ்வடைவது தெரிகிறது.

பழ கருப்பையாவைப் பொறுத்தவரையில் 73 வயது மிக்க முதியவர். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கவர். சுதந்திரப் போரில் ஈடுபட்டவர். உண்மை எல்லாக் கட்சிகளுக்கும் மாறுபவர்தான். தமது திறமையை நம்புபவர். தவறில்லை இவர் அமைச்சர் பதவியே கூட எதிர்பார்த்து ஏமாந்திருந்தாலும்.

இவரின் தற்காலத்தில் பல சம்பவங்கள் ஊடகங்களில் எதிரொலிக்கின்றன. துக்ளக் விழாவில் இவர் கலந்து கொண்டு பேசியதிலிருந்தே தந்தி டிவிக்கு அளித்த கேள்விக்கென்ன பதில் நிகழ்வு வரை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் இவரின் கருத்துகளை கவனித்த பிறகுதான் இந்த அஞ்சல் இடப்படுகிறது இன்று மின்சாரம் எங்கள் ஊரில் பகற்பொழுதில் இல்லாததால் இப்போது வெளியிடப்படுகிறது.

இவர் தந்தி ஸ்டுடியோவிலிருந்து வெளியேறிய பிறகு பாண்டேக் கொசு அது விருப்பத்திற்கு சில கருத்துகளை பதிவு செய்தது அதில் சில: பொதுவுடைமைக் கட்சிகள் இலஞ்ச ஊழலில் குறைவாக செய்தால் இவர் அது போன்ற கட்சியில் இருந்திருக்கலாம், மதுவிலக்கை அமல் படுத்தவே முடியாது, என்றெல்லாம்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்தவே முடியாது என்பது அறிவார்ந்தவர் யாவரும் அறிவார். ஆனால் அதற்காக அரசே மதுவை  அரசுடைமையாக விற்பது சரியா என்பதும் அரசு அதை தடைப்படுத்தினால் குடும்பங்க‌ள் சீரழிவதிலிருந்து காப்பாற்றப்படுமே என சமுதாய ஆர்வலர்கள் பிரதிநிதித்துவம் எழுத்தாக பேச்சாக கருத்து தெரிவிப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

திருட்டை ஒழிக்க முடியவில்லை என்பதற்காக அரசே திருட்டை அங்கீகாரம் செய்து தொழிலாக்கிக் கொள்ளலாமே? பொய் பேசுவதை மனிதகுலம் மாற்றிக் கொள்ள வில்லை அதையும் அரசு மொழியாக அங்கீர்கரித்துக் கொள்ளலாமே எதற்கு சத்யமேவ ஜெயதே, வாய்மையே வெல்லும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அரசின் மொழியாக கொண்டிருக்க வேண்டும்? அடக் கொலை கொள்ளையைக் கூட அங்கீகரித்துக் கொள்ளட்டுமே அரசு, புகையை அனுமதிப்பது போல.

எந்தக் கட்சியுமே சரியில்லைதான். சரியிருக்கும் கட்சிகளுக்கு மக்களுக்கு ஆதரவில்லைதான். எனவே பழ கருப்பைய்யா போன்றோர் முயற்சி செய்து வருவது தவறில்லைதான். வாக்களிப்பு முறையும், தேர்தல் முறையும் துர்ந்து போனதுதான். எனவே துறைமுகம் தொகுதியில் இவர் வென்றதும் கட்சி பாகுபாடுகளுடன் எல்லா தவறான முறைகளும் அதிலும் இருக்கும்தான்.

இவர்கள் செய்தால் சமரசம், ஜெ, அம்மா செய்தால் ஊழலா? என இவர் இந்த அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார். அரசு விளம்பர வருவாய் நிறைய பெறுகிற நிலை இந்த டீவிக்கு இருக்கும் என எண்ணுகிறேன்.

சமரசம் என்பதில் ஆரம்பித்து ஊழலின் சிகரமாய் ஆகிவிட்டது இந்த ஆட்சி, இதன் மையம் அம்மா என தெளிவாகத் தெரியும்போது அதை எதிர்த்து அனைவருமே கருத்து சொல்லலாம் அதற்காக இவர்கள் கல்லால் அடிப்பார்களா?

சமரசமே செய்து கொள்ளாமலிருந்தால் எதுவுமே செய்ய வழியில்லை. ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து கூட வாழ முடியாது. இருவர் இணைந்து ஒரு இடத்துக்கு ஒரு நாளும் செல்ல முடியாது.

ஆனால் அதற்காக நாட்டை கொள்ளை அடித்து நீதியை விலைக்கு வாங்கி, எந்த நிர்வாகமும் செய்யாமல், செய்யும் எல்லாவற்றுக்கும் அம்மா பேர் என வைத்துக் கொண்டு, அரசை அவர்கள் காலடியில் போட்டு மிதித்தபடி, எதிர் கருத்து கொண்டாரை வன்முறை கொண்டு அழிக்க நினைக்கும் ஆட்சியை எவரால் பாராட்ட முடியும்?

அம்மா, எந்த அறிவுடையாரையும் தம் அருகே அனுமதியார், எந்தப் பெரிய பதவியையும் தர மாட்டார். அதெல்லாம் அ.இ.அ.தி.மு.கவில் எம்.ஜி.ஆர் காலத்தோடு போய்விட்டது.இதை யாவரும் அறிவர்.





எனவே பழ கருப்பையா நீக்கப்பட்டதில் எந்த வித புது செய்தியும் இல்லை. விசுவும் அந்த கட்சியில் இருந்து விலகி கூடாரம் காலி என நினைக்கும் பொருட்டு மத்திய ஆளும் கட்சியில் சேர்ந்திருக்கிறார் புத்தி சாலித்தனமாக.சோ அதை துக்ளக் விழாவில் மறைமுகமாக குறிப்பிட்டார்,பழ.கருப்பையா அ.இ.அ.தி.மு.கவில் இருக்கிறார், இருக்கிறார் என தொனி மாற்றி இரண்டு முறை..விளைவு இவரின் மந்திரிகள் பற்றியும் ஆட்சி,நிர்வாகம் பற்றிய அப்பட்டமான பேச்சு இவரை அந்த ஆளும் கட்சி விட்டு வைக்கவில்லை.

 விசு புத்திசாலித்தானமாக மாநில ஆளும் கட்சி மண்ணைக் கவ்வும் இந்தத் தேர்தலில் இன்னும் மத்திய ஆளும் கட்சிக்கு 3 ஆண்டுக்கும் மேல் இருக்கிறது என அந்தக் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

இவர் சன் தொலைக்காட்சி அரட்டை அரங்கம் நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்தியவர், கடந்தத் தேர்தலில் ஜெயாவுக்கும் , அ.இ.அ.தி.முகவுக்கும் மாறியவர். (இரகசிய பரிவர்த்தனை இருந்ததாகவும் கேள்வி) இவரை பாண்டே நேர்முகம் காணலாமே.

இவரின் அரட்டை அரங்கத்தில் பேசி, கடிதத் தொடர்பில் இருந்தவர் என்ற முறையில் சொல்கிறேன் இதே விசுவே தம்மை மீறிப் பேசுவார் என நிறைய முறை எம்மை விட தகுதிக் குறைவான நபர்களையே தேர்வு செய்து கொள்வார். மேலும், இவரது தேர்வில் 3ஆம் சுற்றில் எவருமே தேர்வு செய்வாருடன் விவாதம் செய்யக் கூடாது , மேலும் நடிப்புக்காகவாவது எளிமையுடன் கிழிந்த சட்டை கூட போட்டுக் கொண்டு வந்து பேர் பெற்று உள் நுழையலாம், மேலும் நன்றாக பேசுவாரின் கருத்தை எடுத்துக் கொண்டு இவர்களுக்குப் பிடித்த மற்ற ஒரு நபரை உருவாக்கி அவருடன் உடனிருந்து கூர்ந்து அவரது கருத்துகளை அப்படியே காப்பி அடிக்கச் சொல்லி, ஒரிஜினலாக பேசுவாரை கழட்டி விட்டு காப்பி அடிப்பாரை வைத்துக் கொள்வார்




விசு, ஜெ. இவர்கள் போன்றவர்க்கு எல்லாம் அறிவு படைத்தார் தேவையில்லை சில கைப்பாவைகள் தான் தேவை. எனவே பழ கருப்பைய்யா அங்கு இவ்வளவு நாள் குப்பை கொட்டியதே பெரும் கறை.

இந்த‌ நாட்டில் எல்லாரையும் விலக்க ஆரம்பித்தால் எங்களைப்போன்று செல்லாக் காசாக இருந்து போக வேண்டியதுதான். ஏன் எனில் சசிபெருமாள் போன்றோரை உருவாக்கிய எம் இயக்கம் பற்றி எவருமே அறியார். அவரின் இறுதியாத்திரையை வைகோவும் தொல் திருமாவும் நடத்தி அரசியல் செய்தார்கள் . அவர்கள் குடும்பமும் கடைசிக் காலத்தில் அருள் போன்றோரும் இணைந்து போராடினர் உண்மைதான்.

ஆனால், 30 ஆண்டுகளுக்கும் மேலான இயக்க முறைகளில் அவரை உருவாக்கிய இயக்கம் எங்களுடைய ,நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், காந்திய வழியில் ஊருக்குப் பத்துப் பேர் இயக்கம் , தமிழக இலட்சியக் குடும்பங்கள் எனும் இயக்கம் இதெல்லாம் எவருக்குத்தான் தெரியும்?

இதில் நிறுவனராய் இருந்த சிற்பி.கொ.வேலாயுதம், சமரசம் செய்துகொள்ளும் போக்கில் இருந்தபோதும் கடைசிக்கட்டத்தில் சமரசமே செய்யாத போக்கில் என் போன்றோர் தனியாகி இருக்கிறோம்.

 சசி பெருமாளே சமரசம் செய்து கொண்டு அன்றாடம்  ஊடகத்தில் வர வேண்டி குடிகாரர்களின் காலில் விழுந்ததும், பிச்சை எடுத்துப் போராட்ட முறைகளை கொச்சைப்படுத்தியதும், செல்பேசி கோபுரத்தில் ஏறியதும் எமது இயக்க முறைகளால் அவ்வப்போது இடித்துரைக்கப்பட்டதே.

எனினும் இந்த நாட்டில் இன்னும் எந்த உண்மைக்கும் மதிப்பில்லை. கண்ணதாசன் கருணாநிதி இருவருமே தேர்தல் பணி புரிந்தபோதும் கருணாநிதி கொடுத்து மேடையில் அறிஞர் அண்ணாவிடம் போட்டுக்கொண்ட மோதிரத்துக்கு ஒரு மதிப்பு வந்தது . கண்ணதாசனை அவர் தமது குயுக்தியால் அன்று வெற்றி கண்டார்.

ஆனால் கலைஞர் கருணாநிதியை பழ கருப்பையா தோலுரித்து காண்பித்து துக்ளக் 46 ஆம் ஆண்டு விழாவில் பேசி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, வீட்டின் மேல், காரின் மேல் கல் வீசப்பட்ட போதும் கலைஞர் கருணாந்தி அதை கண்டனம் செய்து பழகருப்பையாவுக்கு ஆதரவாக நிற்கிறார்.

விஜய்காந்த் போன்றோரை பாண்டே போன்றோர் பேட்டி எடுக்கட்டுமே நிலை எப்படி இருக்கும் என கற்பனை செய்துகொள்ளுங்கள்.

இந்த பாண்டே போன்றோர் ஜெவின் அரசுக்கு துதி பாடியாக இருந்து கொண்டு, தங்களது ஊடகத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த இல்லாத அசிங்கங்களை எல்லாம் எடுத்து அப்பிக் கொள்கிறார்.

இவர் சொல்வது போல அனைவருமே செயல்பட்டால் எந்தக் கட்சியிலுமே எவருமே இருக்க வழியில்லை. ஆனால் இங்கு நடப்பது மக்களுக்கான ஆட்சியோ, மக்களுக்கான கட்சியோ அல்ல.
நேர்மையாய் உண்மையாய் பாடுபடுவார் வெளிச்சத்துக்கே வராமல் சென்று சேர்வது இன்றல்ல தியாகிகள் சுதந்திரப்போரின் போதிருந்து இருந்து வரும் நிகழ்வுதான்.

சிக்கு எடுக்க முடியாத சிக்கலில் ஆட்சியும் கட்சியும், மக்களும் இருக்கிறார்கள். உண்மைதான் பெரும்பாலும் வாக்குகள் விலை பேசப் படுகின்றன பணம், மது, சாதி, மதம், பதவி, ஆட்சிக்கு வந்த பின் செய்து தருகிறோம் இந்தப் பணி என ஏதாவது ஒரு விலைக்கு வாக்குகள் வாங்கப்படுகின்றன விற்கப்படுகின்றன. இதை ரங்கராஜ் பாண்டே போன்ற கொசுக்கள் அறிந்தும் அறியாதது போல தங்களது சுய நல ஏகபோக வாழ்வுக்காக மறைக்கின்றன என்பதுதான் உண்மை.

சொல்லில் வருவது பாதி .நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

2 comments:

  1. தெளிந்த விவரமான பதிவு. அறியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். பல வருடங்களுக்கு முன்பு அரட்டை அரங்கத்தில் பேச நேரிடை போட்டி என்று அறிந்து அங்கே நடக்கும் கூத்துகளை பார்த்துவிட்டு அடித்து பிடித்து ஓடி வந்தது தான் நினைவிற்கு வருகின்றது.

    //சொல்லில் வருவது பாதி .நெஞ்சில் தூங்கிக் கிடப்பது மீதி//

    இப்படி சொல்லிவிட்டால் எப்படி.. மீதியையும் சொல்ல வேண்டாமா?

    ReplyDelete
    Replies
    1. dear VisuAWESOME thanks for your feedback to this post. vanakkam. please keep contact.Watch this site time by time my message will occurs and pour in its day to day writing.Due to eye operation I have not opened my writings more than a month. I think from coming days everything will be normal.

      Delete