Thursday, February 4, 2016

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத்தின் இறுதிச் சுற்று: கவிஞர் தணிகை

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத்தின் இறுதிச் சுற்று: கவிஞர் தணிகை
அ.இ.அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர் போல சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பத் பேர் கறுப்பு, வெள்ளை சிவப்பில் போஸ்டர்களில் அச்சடிக்கப்பட்டிருந்தது பற்றி முதல் சர்ச்சை

இவர் அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்கிறது என்று செய்தி ஊடகங்களில் பதிந்தது இரண்டாம் சர்ச்சை

இவர் உருவத்தைப் பார்த்தாலே இவர் வைத்திருக்கும் விபூதியும் அதனடியில் இருக்கும் சிவப்பும் நெற்றியில் ஒரு கட்சிக்காரரைப் போல இருப்பதை அறிய முடியும்.




இவரைப் போல எந்த மாவட்ட ஆட்சித் தலைவருமே (In their busy schedule) சினிமா பார்த்து சிக்கியது கிடையாது. இறுதிச் சுற்று இவருக்கு சேலம் மாவட்டமாக இருக்கும் என நம்பலாம். ஏன் எனில் இவர் ஆத்தூர் சென்று பயணியர் விடுதியில் தமது வாகனத்தை நிறுத்தி விட்டு, ஆத்தூர் நகராட்சி ஆணையர் இராமகிருஷ்ணன் என்பவரும் இருந்திருக்கிறார்.

இவர் அடையாளம் காட்டியதால்  காலைக்கதிர் நிருபர் தமிழ் செல்வன் என்பவர் தமது செல்பேசியுடன் ஒரு சாலையோரக் கடையில் காத்திருந்து இந்த செய்தியை பரப்ப முனைந்திருப்பதைக் கண்டு "நான் கலக்டர்டா,எங்கிட்டேயாடா, என மிகவும் கீழ்த் தரமான வீதிச் சண்டைக்காரர் போல மற்றவர் செல்பேசியை கொடு என பேசிக் கொண்டிருக்க இவர் அந்த நிருபரை அடித்து பிடுங்கி விட்டதாகவும், அதன் பின் அந்த நிருபர் எவ்வளவோ முயன்றும் அந்த செல்பேசி இவர் கைக்கு கிடக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மானக் கேடு என்ன வெனில் இவர் ஆளும் கட்சிக்காரர்களின் அரவணைப்பில் எப்போதும் இருப்பதால் இவரை எவரும் எதுவும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் நடந்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் மிகவும் பிரபலமான சிறந்த நிர்வாகிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களாக கொண்ட மிகப்பெரிய மாவட்டமாக இருந்திருக்கிறது அதற்கு இந்நாளில் இப்படியும் ஒரு ஆட்சித் தலைவர்

கருப்பன், எம்.எஃப்.பாருக்கி போன்ற சேலத்துக்கு நிறைய நன்மைகள் செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நல்ல பேரை உருவாக்கி மாவட்டத்துக்கும் நல்லது செய்தார்கள்.

இந்த முறை இந்த  மாவட்ட ஆட்சித் தலைவர் வந்த புதிதில் செல்பேசி  எண் எல்லாம் கொடுத்து சிறப்பாக பணி செய்வதாக பாவ்லா காட்டி விட்டார். அனைவரும் நம்பினோம். இவர் ஒரு நல்முகமாக விளங்குவார் என. ஆனால் இவ்வளவு கீழ்த் தரமான மாவட்ட ஆட்சித் தலைவரை பெற்றதற்காக சேலம் மாவட்டத்தில் மரியாதை உள்ள ஒவ்வொரு மனிதரும் வெட்கப்படுகிறோம்.

 தனிப்பட்ட முறையில் எந்த ஒரு தனிமனிதருக்கும் அகம் புறம் என வாழ்வு இருவகை.இதில் இவர் நினைத்திருந்தால் இறுதிச் சுற்று திரைப்படத்தை இவருக்கு ஒதுக்கப் பட்டிருக்கும் பங்களாவில் தனிப்பட்ட முறையில் பார்த்து களித்திருந்தால் இப்படி சந்தி, நாடு, ஏடு ஊடகம் யாவும் சிரித்திருக்காது

அப்படியே பொது இடத்துக்கு வந்தால் இவர் போன்றவர் எல்லாம் ஒரு பந்தா காட்டுவார் பாருங்கள் 24 மணியும் போதாது போல...அனைவரும் ,மெய் வாய் பொத்தி காத்திருக்கவேண்டும்...இவர்களை தரிசிக்க‌

இங்கிலாந்தின் அதே முறைகளில் இன்னும் இந்த நாடு கலெக்டர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த முறை எல்லாம் இனி தேவையில்லை. இந்த அமைப்பு நிர்வாக முறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் நாட்டில் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

இந்த ஊழல் மன்னர்களும், மந்திரி கட்சிப் பிரமுகர்களும் இணைந்துதான் நாட்டை கொள்ளை அடித்து வருகிறார்கள். அதில் இன்று நாட்டில் தமிழக அரசு சொல்லி இருக்கும் இலஞ்ச ஊழல் செய்வாரை அரசு அனுமதி பெற்றுத்தான் நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் என்பது இந்த ஆட்சிகளின் உச்சம், எல்லாம் எச்சம்.

இந்த மாவட்ட ஆட்சித் தலைவர்  ஒரு பத்திரிகையாளரின் செல்பேசியை பிடுங்கிக் கொண்டு சென்றதோடு மட்டுமல்லாமல் அதை திரும்பவும் கொடுக்காத இழி செயலை நமது தளம் வன்மையாக  கண்டிக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

செய்தி ஆதாரம்:
webdunia
Nakkeeran publication
One India Tamil.

No comments:

Post a Comment