Tuesday, February 23, 2016

உறங்கா இரவின் ஒரு துணைப் பாடல்,

உறங்கா இரவின் ஒரு துணைப் பாடல்,
தனிப்பாடல்




வாலும் நூலும்
அறுந்த பட்டமென
அப்படியே கீழே கிடக்கிறேன்.

மேல் காற்று அடித்துக் கொண்டுதான்
இருக்கிறது
ஆனாலும்
மேல் எழும்பவில்லை

காலம்
54 ஆண்டுகளாய்
வளர்த்(ந்)து வந்த
காலம்
கீழே அழுந்தியபடி கிடக்கிறது
அழுத்தியபடி கிடக்கிறது

மணிகள் கடக்கின்றன
விழிகள் சுரக்கின்றன

இன்னும் மூன்றில் ஒரு பங்கு
பறக்க வேண்டும்
பின் ஒரேயடியாக இறக்க வேண்டும்

ஒரேயடியாக எல்லாவற்றையும்
மறக்க வேண்டும்

ஆம் உண்மைதான்
முடியாத கதையை
யாரும் விரும்புவதில்லை

சாகாவரம் என்பது சாபம்தான்

விடியா(த) பொழுது என்று எதுவுமில்லை

விடியாத பொழுதை
ஒரு நொடி கூட விடாமல்
அளந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்

எல்லாத் துளிகளையும்
வாழ்ந்து முடிப்பதற்கு

கரைந்து தீர்ப்பதற்கு
கரைத்து விடுவதற்கு!
  - கவிஞர் தணிகை.


மறுபடியும் பூக்கும் வரை



No comments:

Post a Comment