Saturday, October 4, 2025

அறிவியல் அவசியம் ஆன்மீகம் மனிதத்துக்கு அத்தியாவசியம்:கவிஞர் தணிகை

 அறிவோம் ஹரி ஓம் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஹே ராம் சிவா வாசி வாசிவா: கவிஞர் தணிகை



ராம என்ற இரண்டு எழுத்து மந்திரம் என்கிறார்.இந்த ராம என்ற நாமத்துக்கான இரண்டு எழுத்தையும் "ஓம் நமோ நாராயணாய என்ற பேரில் எடுப்பாகத் தெரியும் உச்சரிப்பான‌ ரா என்ற எழுத்தையும் " ஓம் நமசிவாய" என்ற பேரில் எடுப்பான‌ உச்சரிப்பாக‌ இருக்கும் "ம" என்ற எழுத்தையும் சேர்த்து பெயரிட்டார்கள் என்ற செய்தியைப் படித்திருக்கிறேன் அது அதே சமயத்தில் சைவம் வைணவம் இரண்டும் சேர்ந்த ஒன்றே என்பதைக் குறிப்பதாகவும் அதை கையாள்வதாக சொல்லி இருக்கின்றனர்...


எனக்கெப்படி யதேச்சையாக் காந்தி, தெரஸா, கலாம் என்ற மூவரும் வழிகாட்டியாக இருக்கும் நேரத்தில் மூவரும் மூன்று மதத்தை சார்ந்தாராக வாழ்ந்து வந்து அமைந்ததும். இருப்பது போல...


அறிவோம் என்பதில் ஹரி ஓம் என்ற உச்சரிப்பை சற்றே மாற்றினால் இரண்டும் ஒன்றாக‌ இருப்பதாக எனக்குப் படுகிறது.


கம்பராமாயணத்தில் மிகச் சிறந்த பாடல்களில் சில:


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே "ராம" என்ற இரண்டெழுத்தினால்...


மும்மை சால் உலகெக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்  

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே

இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை 

ராம எனும் செம்மை சேர் நாமம்.


ஜயது ஜயது மந்திரம் ஜன்ம சாபல்ய மந்திரம்

ஜனன மரண விச்சேத பேத கிலேச மந்திரம்

சகல நிகம மந்திரம் சர்வ சாஸ்த்ரைக மந்திரம்

ரகுபதி நிஜ மந்திரம் ராமம் ராமேதி மந்திரம்


என்று சொல்லும் கம்பர்...


நதியின் பிழையன்று நறும்புனலின்மையற்றே

பதியின் பிழைய‌ன்று பயந்து நமைப் புரந்தாள்

மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த‌

விதியின் பிழை நீ இதற்கெனை வெகுண்டதென்றான்..


என்று சீதையை இராவணன் தூக்கிச் சென்ற பின் இலக்குவன் சகோதரன் ராமனைப் பார்த்து கடிந்து கொண்ட போது ராமன் சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.


இன்று பிரதோஷம்...சிவனுக்கும், இன்று மூன்றாம் ( புரட்டாசி ) சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானுக்கும் ஒரு சேர வந்துள்ளதால் சைவமும் வைணவமும் வணங்கும் சிறப்பு நாள் எனப்படுகிறது.

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவபந்தனாத் ம்ருத்யுர் முச்ய மாம்ருதாத்...என்னும் உயிர் வழங்கும் மந்திரத்தை சிவபெருமானை விபத்துகளில் இருந்து காக்கவும் எல்லா செல்வ வளங்களையும் வழங்க வேண்டி தினமும் வெளியே செல்லும் முன் சொல்லிச் செல்ல வேண்டும் என்ற கருத்து அறிவுரைகளும் உள்ளன...


வாசி என்றால் மனித உடலில் உள் செல்லும் மூச்சுக் காற்று... வாசி அடக்கல் என்பது தியான வழியில் பிராணாயமத்தில் வருகிறது. வாசி வாசி என வேகமாக உச்சரித்துப் பாருங்கள் அது "சிவா" என்று வரும்...சிவம்

உருவமற்றது, வாசி என்றால் குதிரை என்ற பொருளும்  இருக்கிறது தமிழில்: காசினி


காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி யெங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்

வாசியேழுடைய தேர்மேல் ஏறி மஹாகிரி வலம் வந்த‌

தேசிகா எனை இரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி போற்றி

 என்ற ஒரு கதிரை வணங்கும் பாடல் உண்டு. பொருளும் அறிவியலும் இதன் முரண்கள் சொல்லியபோதும்...


நேற்றைய செய்தி: அறிவியல் மனித உடலின் தோல் செல்களை எடுத்து சினைமுட்டையில் இணைத்து கருவுறுதல் செய்திருப்பதாக குழந்தையை அப்படி உண்டு பண்ண முடியும் அதற்கு இனி கணவன், மனைவி காமுறுதல், இணைதல் எல்லாம் தேவை இல்லை இது 10 ஆண்டுகளில் வந்தமையும் என செய்தி...


பிரம்மாவின் தொழிலை மனிதம் எடுத்துக் கொண்டதா?

காக்கும் கடவுள்...அழிக்கும் கடவுள் பற்றி எல்லாம் விரிவாக எழுத வேண்டும் என்ற அவா உண்டு...ஆனல் மனிதம் தமது உடலென்னும் விந்தையான அதிசயத்தையே முழுதும் உணர்ந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் உயிர் பிரிதல் ஆன்மீக முறை பற்றி ஆர்வமுறாமல் செவ்வாய் கோளில் நிலம் வாங்க முயற்சித்து நீர் அடையாளத்தை ஆய்ந்து வருகிறது...


அறிவியல் அவசியம் ஆன்மீகம்  மனிதத்துக்கு அத்தியாவசியம் என்பதை நடந்த‌ நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன‌


ஹே ராம் என காந்தி கோட்ஸேவால் சுடப்பட்டு உயிர் விடும் முன் முன‌கியதாக உள்ள செய்திகளில் முரண் உள்ளன ஆனல் ஹே ராம் படத்தை எடுத்த  கலை ஞானி அவரது கொள்கையான மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்றதையும், அரை மணி சர்வாதிகாரியாக வாய்ப்பு இருந்தால் இந்தியாவின் எல்லா மதுக்கடைகளையும் மூடுவேன் என்ற தேசப் பிதாவின் கொள்கைக்காகவும் நிறைவேற்ற‌ எந்த முயற்சியும் செய்ததாக யாமறியோம். அறிந்தது அவரது தந்தை கூட மது,மாது, புகை போன்றவற்றை தொடக்கூடாது என்று சினிமாத்துறைக்கு சென்ற போது வாக்குறுதி செய்ய வேண்டி கேட்டதாக.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

வாசி: படி...மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே...அகத்தியர்

(சிந்தியுங்கள் சொல்லாத விடயங்களும் புரியும்)



Tuesday, September 30, 2025

பிரார்த்தனையா தியானம் உறக்கமா?: கவிஞர் தணிகை

 பிரார்த்தனையா தியானம் உறக்கமா?



தியானப் பயிற்சியில் ஈடுபடுவோரைத் தவிர வெளிப் பார்வையாளர் இதை பிரார்த்தனை, உறக்கம் என்றும் கூட சொல்வதைக் கேட்டதுண்டு. ஏன் கடவுள் மறுப்பு சிந்தையுடையார் கூட தியானம் கற்கலாம். புத்தர் கடவுள் பற்றிப் பேசவில்லை... வினை தொடரும்...என்பதே அவரது சுருக்கமான தத்துவம்... இன்னும் சொன்னால்  ஆசையே அழிவுக்கு காரணம்...தியான வாழ்வு மேற்கொள்ள உடலை வருத்துவது கூடாது. உடல் ஒரு ஓடம். அதைக் கொண்டுதான் வாழ்வுக் கடலை நாமனைவரும் கடந்தாக வேண்டும்.


எனவே உடல் வளர்த்தோர் உயிர் வளர்த்தோரே...உறக்கம், ஒழுக்கம், உணவு, வாழ்வு எல்லாவற்றையும் உள்ளடக்கியது தியான வாழ்வு முறை. அடுத்த உயிர்க்கு ஊறு செய்யாத நெறிகளும், எல்லா நேரத்திலும் உண்மையைக் கடைப் பிடித்தல் போன்ற நெறிகளும் இதனுள் அடக்கம்...


கோபம், பொய்கள், கவலை, ப‌யம், வெட்கம், வேட்கை யாவற்றில் இருந்தும் மீட்க யமம், நியமம்,ஆசனம், பிரணாயமம், பிரத்யாஹாரம்,தாரனை, தியானம், சமாதி அல்லது உள் அடங்கல் மூலம் மனிதத்தை மேன்மைப் படுத்துவதும் மாட்சிமைப் படுத்திக் கொள்வதும்...


ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ முடியாது...ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும்...இயற்பியல் அடிப்படை விதி...


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

குடிகாரக் கூத்தாடிகள்: க‌விஞர் தணிகை

 குடிகாரக் கூத்தாடிகள்: க‌விஞர் தணிகை



காமராசர்: கூத்தாடிகளிடம் நாட்டைக் கொடுத்தால் கூத்தியாளிடம் கொடுத்து விடுவர்

காந்தி:  நான் சர்வாதிகாரியாக அரை மணி இருக்க நேர்ந்தால்  இந்தியாவில் மதுக் கடைகளை மூடிவிடுவேன்

பாரதி: எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்நாட்டு மன்னர்


க்ளாப்: ரோல் காமிரா ஆக்சன்,கட் இயக்குனர் சொல்லியபடி ஆடும் கைப்பாவைகள்

இயக்குனர், கதை வசனகர்த்தாக்கள், பாடல் எழுதுவார், இசை,பின்னணி, ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு, ஒட்டல் வெட்டல் இப்படி அனைவரும் ஒருங்கிணையும் சினிமாவில் நடிகர்களுக்கு மட்டும் ஊதியம் எதற்கு இவ்வளவு?


பிணம் எரிப்பார்க்கும் அடக்கம் செய்வார்க்கும், தூய்மைப் பணியாளர்க்கும் தானே ஊதியம் அதிகம் இருக்க வேண்டும்?


அரசு விழாவில் மதுவை நுகர்ந்த மாமேதைகளைப் பற்றி கூசாமல் பேசுகிறது தமிழக மேடைகள்... அவர்கள் எல்லாம் மானிடப் பிறவியே அல்ல என்கிற வார்த்தெடுப்புகள், வளர்த்தெடுப்புகள்...


இறந்து போன நம் மண்ணின் மைந்தர்களே அவர்கள் என்ன தேவர்களா? தேவதைகளா? அவர்கள் உடலுக்கும் கழிவு உண்டு, துர்நாற்றம் உண்டு, வியர்வை உண்டு பிறர்க்கு ஊறு விளைவிக்க முயலாதவர் வாழ்வை விட வேறு எந்த வாழ்வும் உயர்ந்ததல்ல. மக்களும், அரசும், கட்சிகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை பின்னிப் பிணைந்தவை.


யாரது கடவுளா? 

கூட்டத்தில் குடிநீர்ப் பாட்டில்களை வீசினால் முண்டியடிக்க மாட்டார்களா என்ற அடிப்படை அறிவற்றார் கூட நமது தலைவர்களா?


மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்ற  மகாத்மாவின் சிலைக்கு சாயம் ஊற்றி அசிங்கப் படுத்தல் பற்றிய‌ நடந்த செய்திகள் இன்றும் வந்திருக்கிறது


சாலை விதிகளை கற்றுத் தரவேண்டிய கல்விச் சாலைகள்

உடல் ஆரோக்கியம் உடல் உறுப்புகளின் பராமரிப்பு, உடற்பயிற்சி, உட் கொள்ளல், கழிவு, வாய் சுகாதாரம், ஆசன வாய் சுகாதாரம், பற்றி எல்லாம் கற்றுத் தரவேண்டிய பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதற்கு கூட்டம், எப்படி கூட்டம்....என்ற கட்டுப் பாட்டையும், எவை சிறந்தவை, எவை தாழ்ந்தவை என்பது பற்றி எல்லாம் சொல்லித் தர வேண்டுமல்லவா? உலகுக்கே வழி காட்டும் ,வழி காட்டிய வள்ளுவம் வாழும் நாட்டில் இது யாவர்க்கும் தலைக் குனிவு.


கட்டுப்பாடு இல்லா விடுதலை, ஒழுக்கம் இல்லா சுதந்திரம், தியாகம் இல்லா சாதனை பயனற்றது என்றார் சர்வ பள்ளி இராதாகிருஷ்ணன், தத்துவ ஞானியும் கூட.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

Sunday, September 14, 2025

பேரறிஞர் அண்ணா (துரை): கவிஞர் தணிகை

  பேரறிஞர் அண்ணா (துரை): கவிஞர் தணிகை



டாக்டர் காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை:

15 செப் 1903 முதல் 03.02.1969


இவரின் பிறந்த நாள் நாளை வருகிறது. அதற்காக ஒரு பதிவு செய்யுங்கள் என என் அன்புத் தம்பி மதியழகன் அவர்கள் கேட்டதற்கிணங்க இந்தப் பதிவு.


அவர் ஒரு திறந்த புத்தகம். அவரைப் பற்றி எவருக்கும் தெரியாத விவரத்தை அடியேன் என்ன சொல்லி விடப் போகிறேன் அவரைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் ஒரு பேரறிஞர்.அவர் உயரம் மனிதத்தின் உச்சம். அவருக்கு பிரதமர், குடியரசுத் தலைமைப் பதவி எல்லாம் கூட கிட்டி இருந்தாலும் அதை விட உயரமான‌ ஒரு படியாகவே இவர் வாழ்வு இருந்திருக்கும் இவை யாவற்றையும் விட பேரறிவு பெற்றவர். சிறந்த நிர்வாகி சிறந்த தம்பிகள் உடையார். இவர் முதல்வராக இருந்த காலத்தில்தாம் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்ற பேர் பெற்றது.

 டாக்டர் சி.என் அண்ணாதுரை அவரது மறைவுக்கு கூடிய மனிதக் கடலின்  உலக சாதனையை இன்னும் வேறு எந்த தலைவராலும் மிஞ்சவே முடியாத மறைவு அவரது புகழ் சொல்லும். மக்கள் குடியரசுத் தலைவராக இருந்த  அப்துல்கலாம் படித்த‌ பள்ளிக்கு சிறுவர்கள்தாமே அழைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் கருதாமல் சென்று அவர் பேசிய பேச்சை கேட்டு உத்வேகம், உற்சாகம் பெற்றதாக மாமனிதர் அப்துல் கலாம் அவர்களே தமது எழுத்துகளில் பதித்து குறிப்பிட்டிருக்கிறார்.


எல்லாவற்றையும் விட தம்பி , தம்பி என எழுதிப் பேசி ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரசியல் தலைவிதியை மாற்றியவர். வெளிப்பாட்டுத் தன்மை உடைய கண்ணியவான். தமது தவறைக் கூட ஏற்றுக் கொள்பவராகவே இருந்தார். எந்த குயுக்தியும், குள்ள நரித் தனத்தையும் தமது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் பொதுவாழ்விலும் துளியும் பயன்படுத்தாதவர். தோல்வி கண்டு துவளாதவர், பள்ளி இறுதித் தேர்வில் தோற்ற இவர்  கல்லூரியில் சென்று இரண்டு முதுகலைப் பட்டம் பெற்றவராக பின்னர் தன்னை மாற்றிக் கொண்டவர்.  நன்கு படித்த மேதை.


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை இந்த பூமிக்கு வழங்கி அதன்படியே வாழ்ந்த மாமேதை. எளிமைக்கு காமராசரைச் சொல்வார்கள் அது போலவே இவர் வாழ்வும் மிக எளிமையானதே. மேலை நாடு போகும் போதுதான் கோட், சூட் அணிந்ததாகவும் அதுவும் அன்புத் தம்பி ஒருவர் செலவை ஏற்று தைத்து தந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.


ஒன்றே குலம் ஒருவனே தேவன் , என உலகெலாம் வாழும் மாந்தர் யாவரும் ஒன்று பட வேண்டும் ஒரே கடவுளைக் கருத வேண்டும் என தமது தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களின் கடவுள் மறுப்பு சிந்தனையிலிருந்து மாறுபட்ட மக்கள் அனைவரும் ஏற்கும் படியான நிலையை எட்டி நாட்டை ஆள பாட்டை போட்டவர்


மேலும் சொல்லிக் கொண்டே போகலாம், நிறைய எழுதியிருக்கிறார். ஒரு சான்று: ஒரே இரவில் ஓர் இரவு என்ற நாடகத்தை எழுதி அது திரைப்படமாகவும் ஆனதெல்லாம் வரலாறு. சூழ்நிலை மறந்து ஆழ்ந்து படிப்பவர் ஒரு அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்தே வேண்டாம் ஒரு புத்தகம் கொடுங்கள் என வாங்கி படித்துக் கொண்டே இருக்க அறுவை சிகிச்சையை முடித்துக் கொண்டார் என்பதும், சென்னை கன்னிமாரா (அப்போது மாபெரும் நூலகம் அதுவே) நூலகத்தின் அத்தனை நூல்களையும் படித்து முடித்தவர் என்பதும் எந்த கருப்பொருளைக் கொடுத்தாலும் எந்தவித தயாரிப்பும் இன்றி மேடையில் பேரூரை நிகழ்த்துவார் என்பதெல்லாம் இவரின் பெருமைக்கு சான்று. கல்கிதான் இவரது உரையைப் பார்த்து இவருக்கு முதலில் அறிஞர் அண்ணா என பட்டம் கொடுத்தார் என்பதும் காலத்தின் பதிவு.


இவரது ஆங்கிலப் புலமையை ஆங்கிலம் மெத்தப் படித்தாரும், ஆங்கிலேயரும் கூட வியந்து பார்த்திருக்கின்றனர் என்பது ஒரு பக்கம். 


பேரறிவு என்பதை ஞானம் என்பார் இவர் தமிழுக்கு கிடைத்த ஞானி.ஆங்கில மொழியை தமது சொற்பொழிவில் ஆட்படுத்தி எழுதி அனைவருக்கும் ஒரு வியப்பை ஏற்படுத்தி விடுபவர் என்பதெல்லாம் சொல்ல சுவையானது.என்ன இவர் அதிக நாட்கள் உயிருடன் இல்லை என்பதும், ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்பதும் இந்த மண்ணின் விதி. நல்ல தலைமைப் பண்பு கொண்ட நல்ல தலைவர். இவரின் ராஜ்யசபை பேருரை ஆங்கிலத்தில் மிக நல்ல நூல் அடியேனும் கூடப் படித்திருக்கிறேன். 

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்கள் இவர் பேச ஆரம்பித்தால் மெய் மறந்து கேட்டுக் கொண்டே இருப்பாராம் பாராளுமன்றத்தில்.எவரையும் தடுக்க அனுமதிக்க மாட்டாரம். தலைமையால் மெச்சத் தக்க பெருந்தலைமை.அறிவு செறிந்தார்க்கு அறிவு செறிந்தாரையே பிடிக்கும். சமய நெறிக்கு விவேகானந்தர் எவ்வளவு பங்களித்தாரோ அதே போல அரசியலில் இவர் பங்களித்திருக்கிறார் மக்கள் வாழ்வு நல்வாழ்வாக மலர தம்மால் ஆனதை எல்லாம் தமது குறுகிய வாழ்நாளில் அரிய உழைப்பால் செய்து சென்று விட்டார்.


பிறந்த நாள் நினைவு நாள் என்பதெல்லாம் இருக்கும் நாம் இவர்களின் சிறப்பு இயல்பை எண்ணிப் பார்ப்பதற்காகத்தானே கொண்டாடுகிறோம் அப்படிப் பார்த்தால் இந்த தமிழகத் தலைவரை உலகெலாம் இவர் தமிழுக்காகவும், ஆங்கிலத்துக்காகவும் கொண்டாடலாம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை




Saturday, September 13, 2025

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா?

 நன்றி: பிபிசி தமிழ்

பூமிக்கு வெளியே உயிரின் முதல் தடயமா? செவ்வாயின் 'சிறுத்தை' தடத்தில் நாசா தீவிர ஆய்வு

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம்,NASA/JPL

படக்குறிப்பு,பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன.
    • எழுதியவர்,ரெபேக்கா மோரல்
    • பதவி,அறிவியல் ஆசிரியர்

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன.

நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன.

இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது.இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள்.

"இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

"நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார்.

"இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே.

நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது.

2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது.

கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள்.

"இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது.

"நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார்.

பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன.

"இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது"

விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர்.

ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை.

"உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார்.

செவ்வாய், சிறுத்தை தடம், உயிர் வாழும் சாத்தியம், நாசா

பட மூலாதாரம்,NASA/JPL

படக்குறிப்பு,பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது.

பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும்.

நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர்.

"இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார்.

"உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார்

.மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Thursday, September 4, 2025

2025 09 05 எப்படி சிறந்தது? இனி திரும்புமா இது போல் ஒரு நாள்: கவிஞர் தணிகை

 2025 09 05 எப்படி சிறந்தது? இனி திரும்புமா இது போல் ஒரு நாள்: கவிஞர் தணிகை



செப்.05 அனைவரும் அறிந்ததே ஆசிரியர் தினம் என்பதும் நமது முன்னால் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆசிரியராக இருந்த இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் என்பதும்,


அன்றே மிலாடி நபி...நபிகளின் பிறந்த நாள் என்று கொண்டாடப் படும் நாள்


அத்துடன் ஓணம் பண்டிகை: மகாபலியை வரவேற்று வாசலில் அத்தப் பூக்கோலம் இட்டுக் கொண்டாடும் நாள்


 செக்கிழுத்த வ.வு.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த  நாள்


மேலும்  அன்னை தெரஸாவின் நினைவு நாள் 


என அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து விழாக் கொண்டாடும் ஒரு நாளாக அமைந்திருக்கிறது மிகவும் ஆச்சரியமானதாக இருக்கிறது.


இது போல் இனி ஒரு நாள் 5 நிகழ்வுகளை உள்ளடக்கி ஆங்கிலத்து 05 செப்டம்பரில் வருமா என காலத்தை பின் தொடர்ந்து கவனிப்போம்.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.




Friday, August 29, 2025

தெரியாமல் இருந்தது:கவிஞர் தணிகை

 


கோள்கள் வேறு மீன்கள் வேறு எனத் தெரியாமல் இருந்தது

பலப் பல நிலாக்கள் உண்டென்பது தெரியாமல் இருந்தது

நிலா ஒரு கோள் அல்ல துணைக் கோள் தான் எனத் தெரியாமல் இருந்தது

சூரியன் ஒரு விண்மீன் தான் எனத் தெரியாமல் இருந்தது


தொலைவிருப்பது அருகே செல்ல வேறாய் இருப்பது தெரியாமல் இருந்தது

நெருக்கமான உறவு வெறுப்பாகவும் வெறுப்பாக இருந்த உறவு

நெருக்கமாகவும் ஆகலாம் என்பது தெரியாமல் இருந்தது


திசைகள் யாவும் கற்பிதமே என்பது தெரியாமல் இருந்தது

உயிர்கள் என்றால் அது போகும் என்பது தெரியாமல் இருந்தது

நாமும் இருக்க மாட்டோம் என்பது தெளிவாகத் தெரிந்தே இருக்கிறது

                   .....மறுபடியும் பூக்கும் வரை

                         கவிஞர் தணிகை


தெரியாமல் இருந்தது: கவிஞர் தணிகை