Saturday, December 13, 2025

3 கோடி சூரியன்களுக்கு நிகரான பிரமாண்ட கருந்துளை வெடிப்பு

 நன்றி: பிபிசி தமிழ்



ஒரு பிரமாண்ட கருந்துளையில் இருந்து வெளிப்பட்ட, இதற்கு முன் பார்த்திராத அளவிலான பெரும் ஆற்றல் வெடிப்பை, வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கருந்துளை 3 கோடி சூரியன்களுக்கு நிகரான அளவைக் கொண்டது.

திடீரென ஒரு பிரகாசமான எக்ஸ்ரே ஒளி வெடித்துச் சிதறியதையும், வெளிப்பட்ட உடனே அந்த ஒளி மிக வேகமாகப் பலவீனமடைந்ததையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அந்த எக்ஸ்ரே ஒளி மங்கிய பிறகு, கருந்துளை தன்னில் இருந்து சில பொருட்களை, விநாடிக்கு 60,000கி.மீ என்ற அதீத வேகத்தில் விண்வெளியில் வீசியது.

கருந்துளையில் ஏற்பட்ட இந்த எக்ஸ்ரே ஒளி வெடிப்பும், அதன் விளைவாக உருவாக்கப்பட்ட வேகமான காற்றும், சூரியனில் நிகழ்வதை ஒத்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும், இது பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலதிகமாக அறிவதற்கு உதவக்கூடும் என்றும் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின் முழு விவரமும், அஸ்ட்ரானமி & அஸ்ட்ரோஃபிசிக்ஸ் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது

கருந்துளை என்றால் என்ன?

கருந்துளை என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், அவை துளைகள் இல்லை. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, மிகச் சிறிய இடத்திற்குள் மிகப்பெரிய அளவிலான பொருள்களை கருந்துளைகள் கொண்டுள்ளன. அவை மிகவும் அடர்த்தியானவை. அதாவது, அவற்றிடம் இருந்து ஒளி உள்பட எதுவுமே தப்பிக்க முடியாத அளவுக்கு அடர்த்தி மிகுந்தவை.

பேரண்டத்தில் உள்ள மிகவும் மர்மமான வான்பொருட்களில் ஒன்றாக கருந்துளைகள் இருக்கின்றன.

இவற்றில், மிகப்பெரிய, பிரமாண்ட கருந்துளைகள் சில நேரங்களில் சூரியனைவிட பல்லாயிரம் மடங்கு அல்லது பல பில்லியன் மடங்கு அதிக நிறையைக் கொண்டுள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய விண்மீன் மண்டலத்தின்(galaxy) மையத்திலும் இவை காணப்படுகின்றன.

அவற்றைச் சுற்றி, வாயு, தூசு வடிவங்களில் இருக்கும் வான்பொருட்களால் ஆன சுழலும் வட்டுகள் உள்ளன. அந்தப் பொருட்கள் கருந்துளையின் அதிதீவிர ஈர்ப்புவிசை காரணமாக அதற்குள் இழுக்கப்படலாம்.

அப்படி, கருந்துளைகள் தம்மைச் சுற்றியுள்ள வட்டுகளில் இருக்கும் வான்பொருட்களை "விழுங்கும்போது", அந்த வட்டுகள் நம்ப முடியாத அளவுக்குத் தீவிரமாக வெப்பமடைந்து எக்ஸ் கதிர்கள் உள்பட வெவ்வேறு அலைநீளங்களைக் கொண்ட பிரகாசமான ஒளி வெடிப்பை வெளியிடுகின்றன.இரண்டு தொலைநோக்கி

மேலும் இதன்போது, கருந்துளைகள் அதிவேகமாக வாயுக்களை வெளியேற்றுகின்றன. விண்வெளியில் ஏற்படும் தீவிர காற்று போல் இருக்கும் அந்தக் காற்றில் மின்னூட்டம் மிக்க சிறு துகள்களும் இருக்கும்.

இந்தக் காற்று விண்மீன் மண்டலத்தின் வழியாக வீசும்போது, புதிய நட்சத்திரங்களின் தோற்றத்தில்கூட அவை தாக்கம் செலுத்தக்கூடும்.

"ஒரு கருந்துளை இவ்வளவு வேகமாக வெளிப்படும் காற்றை உருவாக்குவதை நாங்கள் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்று நெதர்லாந்து விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முதன்மை விஞ்ஞானி லியி கு கூறுகிறார்.

ஆய்வு செய்யப்படும் இந்த பிரமாண்ட கருந்துளை, பூமியில் இருந்து சுமார் 13 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள ஒரு சுழல் விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது.

இந்தத் தனித்துவமான விண்வெளி நிகழ்வைக் கண்டறிய, ஒன்றிணைந்து இயங்கிய இரண்டு தொலைநோக்கிகளை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.

அதில் ஒன்று, பிரபஞ்சம் முழுவதும் எக்ஸ்ரே மூலங்களை ஆய்வு செய்யும் ஐரோப்பிய விண்வெளி நிலையத்தின் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கி.

மற்றொன்று, ஐரோப்பிய விண்வெளி நிலையம் மற்றும் நாசாவின் ஆதரவுடன் செயல்பட்ட ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தலைமையிலான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷன் (கருந்துளையைச் சுற்றியுள்ள மிகவும் பிரகாசமான பகுதி ஆக்டிவ் கேலக்டிக் நியூக்ளியஸ் (AGN) என்று அழைக்கப்படுகிறது.

ஒரு ரப்பர் பேண்ட் பல முறை முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படுவதைப் போல, ஏ.ஜி.என் பகுதியிலுள்ள காந்தப்புலம் முறுக்கப்பட்டு, பின்னர் திடீரென விடுவிக்கப்பட்டபோது, "அது பெரியளவிலான ஆற்றலை வெளியிட்டு, பலத்த காற்றை உருவாக்கியது. இது கிட்டத்தட்ட சூரியனில் நிகழ்வதைப் போலவே இருந்தாலும், கருந்துளையில் சூரியனில் நடப்பதைவிடப் பல மடங்கு, அதாவது கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாத அளவுக்கு, பெரிய அளவில் நிகழ்கிறது" என்று ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்ரே இமேஜிங் அண்ட் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மிஷனின் திட்ட விஞ்ஞானியும், இந்தக் கண்டுபிடிப்பின் இணை ஆசிரியருமான மத்தேயோ குவைநாஸி விளக்கினார்.

இந்த ஆய்வுக் குழுவில் ஒருவரும், ஐரோப்பிய விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவருமான கமில் டியெஸ், இந்த ஏ.ஜி.என்-கள் அவை இருக்கும் விண்மீன் மண்டலங்கள் காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்கின்றன என்பதில் "பெருமளவு பங்கு வகிப்பதாக" கூறுகிறார்.

மேலும், "அவை மிகவும் செல்வாக்கு மிக்கவையாக இருப்பதால், ஏ.ஜி.என்.களின் காந்தத்தன்மை மற்றும் அவை எவ்வாறு காற்றை உருவாக்குகின்றன என்பதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது, பிரபஞ்சம் முழுவதும் உள்ள விண்மீன் மண்டலங்களின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாக இருக்கலாம்," என்றும் அவர் தெரிவித்தார்.

.பேரண்டத்தின் ரகசியங்கள்

கருந்துளையில் காணப்பட்ட இந்த ஆற்றல் வெடிப்பு, சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகளை ஒத்திருப்பதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சூரியனில் ஏற்படும் பெரிய ஆற்றல் வெடிப்புகள் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் (Coronal Mass Ejection) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் வெடிப்பின்போது, சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டப்பட்ட துகள்கள் பெருமளவில் வெளியேறுகிறது. இந்த நிகழ்வு பூமியிலும் தாக்கம் செலுத்தக்கூடும்.

சூரியனில், காந்தப்புலங்கள் முறுக்கப்பட்டு திடீரென விடுவிக்கப்படும்போது வெளிப்படும் ஆற்றலின் விளைவாக சூரியப் பிழம்புகள்(Solar Flare) என்றழைக்கப்படும் பிரகாசமான ஒளி வெடிப்பு நிகழ்வு நடக்கும். மேலும், அது நடக்கும் அதே நேரத்தில்தான் கொரோனல் மாஸ் எஜெக்‌ஷன் என்றழைக்கப்படும் வெடிப்பும் நிகழ்கிறது.

அதேபோலத்தான் இந்த பிரமாண்ட கருந்துளையிலும், "முறுக்கப்பட்ட காந்தப்புலங்கள் விடுவிக்கப்படும்போது", ஆற்றல் வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து பெரும் காற்று உருவாக்கப்படுவது நடக்கிறது.

ஐரோப்பிய விண்வெளி நிலையத்தில் எக்ஸ்.எம்.எம்-நியூட்டன் தொலைநோக்கியின் திட்ட விஞ்ஞானியாக இருக்கும் எரிக் குல்கர்ஸ், இரண்டு விண்வெளித் தொலைநோக்கிகளும் இணைந்து "நாம் இதுவரை பார்த்திராத, புதிய ஒன்றைக் கண்டுள்ளதாக" கூறுகிறார். "கருந்துளையில் இருந்து வெளிப்படும் மிக வேகமான காற்று, ஆற்றல் வெடிப்பால் உருவாக்கப்பட்டது. இது சூரியனில் நிகழ்வதை ஒத்திருக்கின்றது."

மேலும் பேசிய அவர், "இதில் மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், சூரியனில் நிகழும் அதேபோன்ற இயற்பியல் செயல்முறைகள், ஆச்சர்யமளிக்கும் வகையில், பேரண்டத்தில் உள்ள மிகப்பெரிய கருந்துகளைகளுக்கு அருகிலும் நிகழக்கூடும் என்பதை இது காட்டுகிறது" என்றும் தெரிவித்தார்.

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Sunday, November 30, 2025

MILITARY REMINISCENCES BY JAMES WELSHமிலிட்டரி ரெமினிசென்ஸஸ் பை ஜேம்ஸ் வெல்ஸ் (ஆங்கிலம்): கவிஞர் தணிகை

 மிலிட்டரி ரெமினிசென்ஸஸ் பை ஜேம்ஸ் வெல்ஸ் (ஆங்கிலம்): கவிஞர் தணிகை



ஜேம்ஸ் வெல்ஸ் என்ற போர் வீரர் சுமார் 40 ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனியில் அடி மட்டப் போர் வீரராக தம் வாழ்வைத் துவங்கி லெப்டினன்ட் கர்னல், மேஜர் ஜெனரல் போன்ற உத்தியோக உயர்வுகள் பெற்று போர் குழுக்களுக்குத் தலைமை தாங்கி பணி புரிவதுடன் அல்லாமல் போர் புரிந்த சாகசங்கள் அல்லது வாழ்ந்த உயிர் போய் நழுவி விடாமல் தமது அனுபவங்களை நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார் 1790 முதல் 1828 வரை.


இந்த நூல் 2 பாகங்களாக அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை அப்படியே எவ்விதக் கலப்புமின்றி தந்திருக்கிறது.அதில் இந்திய இரத்தம் நிறைய சிந்தியது பற்றிய விவரங்கள் உள்ளன எனவே அது நமது கவனத்திற்கும் உள்ளாகி உள்ளது. மற்றபடி தனிப்பட்ட ஒரு வெள்ளைக்கார போர் வீரரின் சுய வாழ்வு மட்டுமெனில் இது அத்தனை பெருமை பெற்றிருக்காது.


முதல் பாகம் சுமார்:354 பக்கங்கள், இரண்டாம் பாகம் சுமார் 347 பக்கம் எமது கணினி வழியில் 384 பி.டி.எப் பக்கங்கள். எனதருமை பிரவீன்குமார் முதல் பாகத்தை வாங்கி நான் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தினார், அதன் தொடர்ச்சியாக நான் எனது முயற்சியை தொடர்ந்து இந்த எழுத்துகளை முழுமையாக உள் வாங்க முயற்சித்தேன்.


பொதுவாக நான், எனது, என்னுடைய என்ற நடையில் இலக்கியம் இருப்பின் அவை பெரிதாக பாதிப்பலைகள் ஏற்படுத்துவதில்லை என்ற கருத்துக்கு மாறாக இந்த நூலின் வடிவம் எல்லாமே இவரது சுய விவரக் குறிப்புகளாகவே நான் எனது என்ற அழகியலாகவே எழுதப்பட்டிருக்கிறது.


இந்த நூலின் எல்லா விவரங்களையும் தருவது இந்தப் பதிவின் பகிர்வின் நோக்கமல்ல, அது முடியவும் முடியாது. ஏன் எனில் 18- 19 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆங்கில வார்த்தைகள் பிரயோகம் சற்று கடினமானதாகவே தெரிந்து கொண்டு படிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. மொழி நூற்றாண்டுகளில் மாறி விடுகிறது இல்லையா? ஏன் நமது தமிழே கூட 1960க்குப் பின் பிறந்த நம்மிடையே அதன் பின் மாற்றமடைந்து லை, வை, போன்ற உயிர்மெய் மாறியதை குறிப்பிட வேண்டுமல்லவா அது போல அந்த ஆங்கிலம் சற்று கரடு முரடாக இருக்கிறது என்றாலும் மொழி மூலம் என்பது மொழி பெயர்ப்பை விட உயர்ந்தது என்பதாலேயே இந்த நூலை ஆங்கில வழியில்  படிப்பதுவே படிக்கும் ஆர்வமுடையார்க்கு ஏற்றது.


காலம் எவ்வளவு விரைவாக செல்கிறது அதன் கதை சொல்கிறது...480 கோடி ஆண்டுகளாக சுழன்று வரும் புவிச் சுற்றுடன்  பத்தாயிரம் ஆண்டுகளாக உறங்கிக் கிடந்த எரித்ரியா எத்தியோப்பியா எரிமலை இப்போது வெடித்து 4000 கி.மீக்கு மேல் அதன் துகள்கள் கண்டம் விட்டு கண்டம் 25,000 அடிக்கும் மேல் பறந்து வருகிறது என்ற காலப் பதிவை எல்லாம் கவனித்தால் நமது வாழ்வு அதில் எங்கே என்று கேட்கத் தோன்றும்.


இந்த வெள்ளைக்கார ஆங்கிலேய மனிதர் நமது எல்லாத் தரப்பு மக்களிடையேயும் ஊடுருவி நேயம் காட்டி வாழ்ந்த புதிர்கள் இதில் உள்ளன, சின்ன மருதுவுடன் நெருங்கி பழகியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.அந்த வம்சத்தின் தொரசாமி பற்றி பதிவு இருக்கிறது.


கொல்கொத்தா , சென்னை என்ற துறைமுகப் பட்டணங்களில் கால் பதித்ததில் இருந்து திரும்பி பணி அல்லது இவரது ஓய்வு ஆரம்பித்து மீண்டும் கொல்கொத்தா துறைமுகத்தில் கப்பல் ஏறி திரும்பி செல்வது வரை இயற்கை , செயற்கை, போர், மரணம், போன்றவற்றில் இருந்து இவரும் இவர், இவரது , குடும்பம், உறவு, நட்பு, சூழல் எல்லாம் உயிருடன்  பயணம் செய்துள்ளன என்பவை நிறைய முரண்களுடன் பதிவு செய்யப் பட்டுள்ளன.


பர்மா, இலங்கை,சீனா, சீனா  உள்ளடங்கிய இந்த ஆங்கில ஏகாதிபத்தியத்தில்  எல்லா இடங்களிலும் இவர் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியராக கிழக்கு மேற்காக வடக்கு தெற்காக வாழ்ந்திருக்கிறார். அதில் தெற்கே ஓமலூர், சங்கரி துர்க், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெருந்துறை, ஈரோடு, சேலம் COIMBATORE இப்படி எல்லா இடங்களிலும் இவரது பயணம் நடந்திருக்கிறது. அப்போது மேட்டூர் அணையும் மேட்டூர் என்ற ஊருமே இல்லை. காவிரி நதியும் வெள்ளமும் இருந்திருக்கிறது.


கலிலியோவை அறிவியலில் தந்தை என்பார், அவரை ஐசக் நியூட்டன் சீடராகத் தொடர்ந்தார் என நாடு வேறான போதும், காலம், நூற்றாண்டுகள் வாழ்ந்த காலம் வேறான போதும் முயற்சிகள் தொடர்ந்தன என்பது போல இந்த நபரை நான் தொடர்ந்திருக்கிறேன்.


இது இராமகிருஷ்ணர்,விவேகானந்தர்,நிவேதிதா,பாரதி,பாரதிதாசன்,சுரதா, பட்டுக்கோட்டை போன்ற குரு சீடர் போன்ற தொடர் வாழ்வல்ல பாரம்பரியம் அல்ல. இது வேறு.நானும் அந்த மனிதர் பயணம் செய்த இடங்களில் ஒரு துளி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே இந்தியாவில் எனது இளமைப் பருவத்தில் சில இடங்களைத் தொட்டு இயற்கை வாரி இறைத்த இன்ப, துன்ப நிகழ்வுகளில் அனுபவித்த காரணத்தால் இந்த வாழ்வை படிக்க நேர்ந்ததோ என்ற எண்ணம் என்னுள் எழுவதை தடுக்க முடியவில்லை. ஆனால் அது வேறு எனது வாழ்வு வேறு. அதன் ஒப்பீடு துளியும் பொருந்தாது என்றாலும்...


இதை எப்படி படிக்க நேர்ந்தது எனில்: ஊமைத்துரை வரலாறு, அதைக் கண்டு வியந்த மனம், கெட்டி பொம்மு எதிரியை அவர் தம் இடத்திலேயே சென்று சந்தித்து போர் புரிந்து அதன் விளைவை சந்திக்க, அந்த சந்ததியின் ஊமைத்துரை, மருது சகோதரர்கள் எப்படி எதிர்களை எதிர் கொள்கிறார்கள் என்பதில் இருந்தே ஆரம்பித்தது.


இடது உள்ளங் கையில் பதர்களை வைத்து வலது உள்ளங்கை வைத்து அதை தேய்த்து காண்பித்து வாயில் ஒரு விசில் ஒலியை அனுப்பி எதிரிகளை ஊதித் தள்ளுங்கள் என தமது சுற்றத்திற்கு கட்டளை பிறப்பித்த ஊமைத்துரையின் ஆணையை ஏற்று எதிர்களை களம் கண்ட பதிவு, நமது மண்ணிலேயே நம்மை வீழ்த்த எதிரிகளுக்குத் துணை செய்யும் மனிதர்கள் அக்குள் மயிர்களுக்கு சமம் என்ற  பதிவு, ஏன் எப்படி ஒரு பாளையக்காரர் இறப்பான் தெரியுமா என ஒரு முதிய பாளையக்காரரை இறக்கும் தருவாயில் ஒரு பலகையில் வைத்து தூக்கிச் சென்று எதிரிகளிடம் காண்பிக்கையில் தமது இருபக்க மீசையை முறுக்கிக் காட்டிக் கொண்டு இப்படித்தான் வீரமாக சாவான் என்று செத்தும் சாகும்போதும் வீரமாக சாவது...இப்படிப் பட்ட சம்பவங்கள்...


சுமார் மார்ச் இறுதியில் இருந்து மே வரை ஊமைத்துரையை வேட்டையாடிய வரலாறு பதிந்துள்ளது... அந்த வீரியத்துக்காகவே இதைப் படிக்க முனைகையில் அது போன்ற நிகழ்வுகளை முன்னெடுத்த இந்த நூல் அதன் பின் இந்த ஜேம்ஸ் வெல்ஸ் நாட்குறிப்புகளில் அவரது பார்வையில் தனிப்பட்ட பாதையில் புகுந்து செல்கிறது. வேட்டையாடுதல், பல்வேறுபட்ட இயற்கைச் சீற்றம், நோய்கள்,பிணிகள், நட்பு, இப்படி போய்க் கொண்டே இருக்கிறது. கடைசியில் கிழக்கிந்தியக் கம்பெனி உலகின் மிக உயர்ந்த கம்பெனி நான் பணி புரிந்தது பெரிய வாய்ப்பு என்றபடி இந்த எழுத்தாளர் முடிவில் சொல்லிச் சென்றுள்ளார்.  James Welsh (12 March 1775 – 24 January 1861) was a Madras Army officer.[1] 85 ஆண்டுகள் வாழ்வில் சுமார் 40 ஆண்டுகள் இந்தியாவில். தமது 58 ஆண்டு கால பணியில்.


நிறைய குறு நில மன்னர்களை சந்திக்கிறார், அவர்களுடைய சுத்தம், சுகாதரமின்மை பற்றி எல்லாம் குறிப்பிட்டு உள்ளார், மேலும் ஒரு குறிப்பிட்ட இனப் பெண்கள் தாம் போட்ட துணியை அவர்களின் உடல் பாகங்கள் கன்றிப் போகும் வரை கழட்டுவதே இல்லை அவ்வளவு அழுக்குடன் நாற்றத்துடன் வாழ்கிறார் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார் அதைப் பற்றி எல்லாம் இப்போது அப்பட்டமாக சொன்னால் அவை மதத் துவேசம் என்ற பட்டியல் கீழ் கொண்டு வரப்பட்டு பெரிய பிரச்சனை கூட ஏற்பட்டு விடலாம் எனவே இந்நூலை படிக்க வேண்டிய நூல் தாம் என்ற ஒரே காரணம் பற்றியே இங்கு பதிவு செய்து பகிர்ந்துள்ளேன். ஒரு நல்ல அனுபவம் நல்ல நூல்தாமே.


பி.கு: புலியை, கரடியை,மான்களை , பறவைகளை வேட்டையாடுவது, ஒரே குண்டில் இரு பாம்புகளைக் கொல்வது, இப்படி ஏராளமான நிகழ்வுகள் சொல்லப் பட்டுள்ளன அவை பற்றி படிக்க விரும்புவோர் படிக்கலாம்.மொத்தத்தில் இதில் இந்திய விடுதலைப் போரில் உயிர் நீத்த, நாடு கடத்தப்பட்ட வரலாறுகளின் இடங்களும் இருக்கிறது என்பது தவிர மற்றபடி முழுவதுமான ஒரு வெள்ளைக்கார மனிதரின் வாழ்வுக் குறிப்புகள். படிக்கத் தக்கதுதான். ஆனால் பாரட்டப் பட வேண்டுமானால் இவர் நம் மனிதர் மேல் கொண்டிருந்த நட்பு பற்றியும் எல்லா நடப்புகளையும் சுய விருப்பப் படி மாற்றாமல் அப்படியே காலப் பதிவு செய்ய வேண்டும் போன்றவற்றிற்காக்த்தான்.


அன்றைய தமிழ்க் குடி செய்த வேல்கம்பு 20 அடி முதல் 30 அடி வரை நீண்டிருந்ததும், அதை எதிரியின் உடலை துளைத்து துருவி சென்று மாய்த்த வரலாறு பற்றி படிக்கும் போது 6 அடி கடப்பாரையையே நம்மால் தூக்க முடியவில்லையே இவர்கள் எப்படி இப்படி என எண்ணிக் கொண்டே ஜாவ்லின் த்ரோ, ஈட்டி எறிதல் போட்டி விளையாட்டு பற்றி எல்லாம் நினைவு செல்ல...ஒரு பதிவை முற்றுப் பெறாமலே முடித்துக் கொள்கிறேன்...ஏன் எனில் எண்ணங்கள் நிறைய எழ, எழுதுவது அவை பற்றி எல்லாம் இயலாதது என்பதால்...வாழ்வில் எப்படி எப்படி எல்லாமோ நாளும் நேரமும் செல்கிறது, ஒரு முறை இதைப் படிக்கவும் நேரம் செலவிடுங்கள் அது உங்கள் வாழ்வில் ஒரு நல் அனுபவத்தை ஏற்படுத்தும்...


நான் இதைப் படித்து முடித்ததும்  ஒரு பைத்தியக்கார மனநிலையில் சென்று இன்பம் அடைந்ததாக எமது துணை க் குறிப்பிட்டதும் அதை அப்படியே அதே மனநிலையுடன் இதை யாம் அனுபவிக்க காரணமாக இருந்த மற்றொரு துணைக்கு நான் செய்தி பகிர்ந்து கொண்ட நினவலைகளுடன்....



மறுபடியும் பூக்கும் வரை 

கவிஞர் தணிகை

P:s: In their Military strength STARTS with  warriors  in hundreds, grows in many thousands and ends in lakhs The Military contains Native...Local or Indian sipoys, musselmans,Arabs, English with cavalry, artillery, infantry even with Elephants etc.Selfishness, Money making mind,Poverty,Lot of small kingdoms, India's wealth, and plundering...All makes this history and lot of English men or East Indian company men or England men are also killed in  many thousands  and lakhs...these are also reasons before Gandhi appearance in our Liberation fight  against Whites to  Quit our nation. we lost our sacrificed souls in many crores of numbers to this achievement to make our country free from them ...




Saturday, November 22, 2025

திருமண வாழ்த்து மடல்: கவிஞர் தணிகை

 

திருமண வாழ்த்து மடல்: கவிஞர் தணிகை

 

நாள்: 30.11.2025 ஞாயிறு இடம்: கந்தி குப்பம் விண்ணரசி ஆலயம்

மணமகன்: பொறி:P.சுனில் ஜெரோம்M.E           மரு.A.பிலோமின் பிரிசில்லா.M.B.B.S,

 

கண்டேன் ஒரு நல்மனிதரை அன்றொரு நாள்

 சேலம் குகை  ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்

கலாம் மாமனிதர் பேர் சொல்லி முதல் சந்திப்பிலேயே

ஆயிரக்கணக்கான பள்ளிச் சிறார்களுக்கு எனது உரையை

வழங்கச் செய்தார்.

 

இவரும் சாதரண மனிதரல்ல பள்ளியை விரிவுபடுத்தி

ஆயுளை ஆன்மாவை விதைத்தவர், அன்று முதல்

இன்று வரை அவருடன் கலந்த அந்த மணி நேரங்கள்

என்றும் பசுமையுடன்.

 

நல் ஆசிரியர் விருதைப் பெற தகுதியான இவர் என்றும்

எனது உறவைத் தொடர்வதே எனக்குப் பெருமைஇவர்

நல் ஆசிரியர் விருதைப் பெற்றதால் ஆசிரியர் குலத்துக்கு(ம்) பெருமை

முகாம் நடத்த முகம் சுளிக்காமல் தன்னால் இயன்றதை

செய்த பெரிய உள்ளம் அவர்தான் பனிமேதாஸ் எனும் மேதை.

 

M.பனி மேதாஸ் M.Sc,M.Phil,M.Ed, இணையர் :A எமிலி ஜோன் ஆப் ஆர்க் M.A,Phil,B.Ed

இருவரின் இளைய புதல்வன் பொறியாளர்: சுனில் ஜெரோம்

மருத்துவர் பிலோமின் பிரிசில்லா  இணையவிருக்கும்

திரு நாளில் ஒரு நாளாய் ஞாயிறு வருகிறது.

 

தெய்வம் போற்றுதும், செம்மழை போற்றுதும்

ஞாயிறு போற்றுதும், நானிலம் போற்றுதும்

மதங்களைக் கடந்து அரிய உள்ளங்களை மனித நேயத்துடன்

அரவணைத்து வாழ்த்தை  என்றும் கோர்க்கிறோம்

எமது குடும்பத்தின் மனமலர்களின் மணமாக....


 

அன்பு மனங்கள்

கவிஞர் தணிகை

இணையர்: .சண்முகவடிவு

புதல்வர்:T.G.R.S  மணியம்.B.E,

திருமண(ம்) 01.12,2025 வாழ்த்து : கவிஞர் தணிகை

  

திருமண(ம்)  01.12,2025 வாழ்த்து மடல்

தாரமங்கள கைலாய நாதர் ஆலயம் & கரிகால் நகர்     மண்டபம்

மணமகன்: ரிஷி விக்ரம் B.E,     மணமகள்:  நவீனாB.Tech


 

எனது சுவர் எழுத்துகளை தவறாமல் பெரியவர் ஒருவர் படிப்பார்

அவரும் நானும்  பேசியதாக நினைவில்லை...அவர் S.M.  தனபால்

 

அவரது பெயரன் ரிஷி விக்ரம் நவீனா கரம் கோர்க்கும்

திருமண விழாவிற்கு மகன் நந்தகுமார்

வாழ்த்த அழைக்கும் நேரம் பல சுற்றமும் சூழமும் வந்திணையும் நேரம்

 

உரிய நேரத்தில் கிடைக்கும் சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனி

என்கிறது விவிலியம்.

அல்லா கொடுக்க நினைப்பதை எவராலும் தடுக்க முடியாது என்கிறது முகமதியம்

பதினாறும் பெற்று பெருவாழ்வு  வாழச் சொல்கிறது  எமது ஆன்மிகம்

 

மணமக்கள் மன ஒருமைப்பாட்டுடன் ஈருடலும் ஓருயிருமாய் காலமெலாம்

வாழையாக, அருகாக, ஆலாக,மூங்கிலாகஎன்றும் வாழ வாழ்த்துகிறோம்

 

என்றும்

கவிஞர் தணிகை

T.S.வடிவு

T.G.R.S.மணியம் குடும்பத்தார்.


திருமண(ம் )வாழ்த்து மடல் 27.11.2025 தாரமங்களம்

 

திருமண(ம்) வாழ்த்து மடல்

27.11.2025  தாரமங்களம்

கைலாய நாதர் ஆலயம் &  ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி குமரப்ப முதலியார் வகையறா சமுதாயக் கூடம்


 

புவனேஷ்C.A.inter               மகாலட்சுமி/ சுவேதா B.A, B.Ed.

 

அலைகளில் அகடும் முகடும் அடிக்கடி வருவதுதான்  விழுவதுதான் எழுவதுதான்

எம் குடும்ப வாழ்வின் அலைகளில் ஓர் அலையின் அகட்டில் இருந்தோம் தொய்வுடன்

 

எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நானென்றான் இங்கிவனை நான் பெறவே

என்ன தவம் செய்து விட்டேன்.இன்றிவன் உள் வட்டத்தில் வந்து நிற்க

சகோதரன் சங்கரலிங்கம் இணைத்து வைத்தான் அன்றிவனை.

 

பெயரே அப்போதுதான் எனக்கு அறிமுகமானது கழுமலை நாதன்

அப்பெயரில் கடவுள் தென்முகத்தில் உண்டென்றார்

அவரின் செல்வ மகன் புவனேஷ் சுவேதா வாழ்வில்

வந்திணையும் நேரத்துடன் எனது நேரமும் இணைந்து கொள்கிறது இணையத்தில்

 

புவி இருக்கும் வரை அந்த அலை கடல் இருக்கும் வரை

புவனேஷ் சுவேதா தம்பதியரின் வாரிசுகள் கழுமலைநாதன் கோமதி பேர் சொல்லி

வாழ்க வளமுடன்  வாழ்க வையத்தில் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ

எம் வாழ்த்துகள்

என்றும்

கவிஞர் சுப்ரமணியம் தணிகாசலம்

. சண்முக வடிவு

..ரா.சு. மணியம் குடும்பத்தார்

Friday, November 7, 2025

என் வீட்டுத் தோட்ட‌த்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை

  என் வீட்டுத் தோட்ட‌த்தில் இறந்து போன கொடி: கவிஞர் தணிகை



அந்தப் பீர்க்கங்காய் கொடி எப்படி மண்ணிலிருந்து பிய்ந்து போனதோ தெரியவில்லை,இலைகள் எல்லாம் வாடிக் கொண்டிருந்தன, ஒரு 4 மணி நேரம் அடியேனும் துணைவியாரும் வெளியில் சென்று வந்து திரும்பவும் பார்த்த போது அவர் பார்த்து அதை என்னிடம் தெரிவிக்க, பார்த்தேன்.


இராமலிங்க வள்ளலார் போல வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் மனம் மிக வாடினேன், வாடிக் கொண்டிருக்கிறேன் எனவே இந்தப் பதிவு.


அதை மண்ணில் மறுபடியும் பதித்து வைத்துப் பார்த்தேன் வீண் முயற்சி என்று தெரிந்த போதும்.


வெற்றுப் பூக்களாகவே பூத்துக் காய்ந்து விழுந்து கொண்டிருந்த போதும் அது பலனளிக்கும் என்று பெரிதும் நம்பிக் கொண்டிருந்தேன். கடைசியில் ஒரு பிஞ்சு ஒரு அடிக்கும் குறைவான‌ நீளம் இருக்கும் விட்டிருந்தது. அது இனி பெரிதாக வாய்ப்பில்லை. எனவே அதைப் பறித்து விட்டேன்.


கொத்து அவரைக்காய் (கொத்தவரங்காய்), அவரைக்காய் போன்ற‌ செடிகள் என் வீட்டுத் தோட்டத்தில் பலன் தருகின்றன பலம் தருகின்றன.செடிகளோடு கொடிகளோடு சேர்ந்து நிறைய கண்ணுக்குத் தெரியும் கண்ணுக்குத் தெரியா நிறைய பூச்சி இனம் மற்றும் களைகள் யாவும் பயிர்த் தொழில் எவ்வளவு கடினமானது என எனக்கு விளக்கி வருகிறது.


வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் சொல்லியபடி சுண்டைக்காய் இலைகளை நிறைய எடுத்து அரைத்துப் பிழிந்து சாறு எடுத்து எல்லா செடிகள் கொடிகள் மேல் எல்லாம் தெளித்தேன், உண்மை, அவர் சொல்லியிருந்தபடி அவரைக்காய்களை சிதைத்துக் கொண்டிருந்த அஸ்வினிப் பூச்சிகள் எல்லாம் அறவே இல்லை.


இரு முறை களைச்செடிகளை சுத்தம் செய்யும் போது எனக்குக் கிடைத்த பரிசாக கையில் முழுதும் மூன்று புள்ளிகளுடன் ஏதோ பூச்சி கடித்து வலது கை முழுதும் நமைச்சல், அரிப்புடன் தழும்புகள் கை நிறைய‌ தொடராக விளைந்து தொல்லை தர ஆரம்பித்து விட்டன ஆனாலும் பயிர்த் தொழிலை செய்யவே ஆர்வம் ஆனால் அது ஆர்வக் கோளாறே.


இரத்தம் உடல் உயிர் உடமை குடும்பம் யாவற்றையும் தியாகம் செய்த எண்ணற்ற இந்திய விடுதலை வீரர்கள் பற்றியோ 78 ஆண்டுகளுக்கும் மேலாக சென்று கொண்டிருக்கும் இன்றைய அரசியல் பற்றியோ இந்தப் பதிவில் 

 அடியேன் எதையுமே குறிப்பிடவே இல்லை. ஆற்றாமையால் வந்த பதிவு இது இல்லை. ஆற்றியமையால் வந்த பதிவு.


மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை


Friday, October 31, 2025

திருமணமும் வரவேற்பும்( நவம்பர் 02 & 03 -2025) வாழ்த்து(ம்) மடல்

                                                          மணமிகு மலர்கள்

S.G.குமரன் B.E, P. ஹரிணி பிரியாB.E கரம் கோர்க்கும்

கோபால் கனகம் வீட்டுக் குடும்ப விழாவில்

வாழ்த்தமைத்து அதை விண்வெளி

மண் வழி அனைவர்க்கும் சேர்க்க

ஒரு கருவியாக இந்த இணையம்

நமை இணைத்திருக்கிற வேளை

நற்பொழுது .

 

நடைப் பயிற்சி நண்பர்

கோபால் ஒரு மனிதத்தின் மிகச் சரியான பிரதிநிதி

காலா காலத்தில் தவறாது எல்லாவற்றையும் செய்ய

இயற்கையும் குடும்பமும் அவர் முயற்சியுடன்

உறு துணையாகி இருக்கிறது

 

அவருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும்

மணமக்களுக்கும் எல்லா வளங்களையும்

வழங்கி இயற்கை அருள் புரியட்டும்

பிரார்த்தனையுடன் வாழ்த்தையும் இணைக்கிறேன்

அன்புடன் என்றும்

கவிஞர் தணிகை

..வடிவு

..ரா.சு. மணியம்.