அறிவோம் ஹரி ஓம் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ ராம் ஹே ராம் சிவா வாசி வாசிவா: கவிஞர் தணிகை
ராம என்ற இரண்டு எழுத்து மந்திரம் என்கிறார்.இந்த ராம என்ற நாமத்துக்கான இரண்டு எழுத்தையும் "ஓம் நமோ நாராயணாய என்ற பேரில் எடுப்பாகத் தெரியும் உச்சரிப்பான ரா என்ற எழுத்தையும் " ஓம் நமசிவாய" என்ற பேரில் எடுப்பான உச்சரிப்பாக இருக்கும் "ம" என்ற எழுத்தையும் சேர்த்து பெயரிட்டார்கள் என்ற செய்தியைப் படித்திருக்கிறேன் அது அதே சமயத்தில் சைவம் வைணவம் இரண்டும் சேர்ந்த ஒன்றே என்பதைக் குறிப்பதாகவும் அதை கையாள்வதாக சொல்லி இருக்கின்றனர்...
எனக்கெப்படி யதேச்சையாக் காந்தி, தெரஸா, கலாம் என்ற மூவரும் வழிகாட்டியாக இருக்கும் நேரத்தில் மூவரும் மூன்று மதத்தை சார்ந்தாராக வாழ்ந்து வந்து அமைந்ததும். இருப்பது போல...
அறிவோம் என்பதில் ஹரி ஓம் என்ற உச்சரிப்பை சற்றே மாற்றினால் இரண்டும் ஒன்றாக இருப்பதாக எனக்குப் படுகிறது.
கம்பராமாயணத்தில் மிகச் சிறந்த பாடல்களில் சில:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம" என்ற இரண்டெழுத்தினால்...
மும்மை சால் உலகெக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை
ராம எனும் செம்மை சேர் நாமம்.
ஜயது ஜயது மந்திரம் ஜன்ம சாபல்ய மந்திரம்
ஜனன மரண விச்சேத பேத கிலேச மந்திரம்
சகல நிகம மந்திரம் சர்வ சாஸ்த்ரைக மந்திரம்
ரகுபதி நிஜ மந்திரம் ராமம் ராமேதி மந்திரம்
என்று சொல்லும் கம்பர்...
நதியின் பிழையன்று நறும்புனலின்மையற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று மைந்த
விதியின் பிழை நீ இதற்கெனை வெகுண்டதென்றான்..
என்று சீதையை இராவணன் தூக்கிச் சென்ற பின் இலக்குவன் சகோதரன் ராமனைப் பார்த்து கடிந்து கொண்ட போது ராமன் சொல்வதாக பாடல் அமைந்துள்ளது.
இன்று பிரதோஷம்...சிவனுக்கும், இன்று மூன்றாம் ( புரட்டாசி ) சனிக்கிழமை திருப்பதி ஏழுமலையானுக்கும் ஒரு சேர வந்துள்ளதால் சைவமும் வைணவமும் வணங்கும் சிறப்பு நாள் எனப்படுகிறது.
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவபந்தனாத் ம்ருத்யுர் முச்ய மாம்ருதாத்...என்னும் உயிர் வழங்கும் மந்திரத்தை சிவபெருமானை விபத்துகளில் இருந்து காக்கவும் எல்லா செல்வ வளங்களையும் வழங்க வேண்டி தினமும் வெளியே செல்லும் முன் சொல்லிச் செல்ல வேண்டும் என்ற கருத்து அறிவுரைகளும் உள்ளன...
வாசி என்றால் மனித உடலில் உள் செல்லும் மூச்சுக் காற்று... வாசி அடக்கல் என்பது தியான வழியில் பிராணாயமத்தில் வருகிறது. வாசி வாசி என வேகமாக உச்சரித்துப் பாருங்கள் அது "சிவா" என்று வரும்...சிவம்
உருவமற்றது, வாசி என்றால் குதிரை என்ற பொருளும் இருக்கிறது தமிழில்: காசினி
காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி யெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசியேழுடைய தேர்மேல் ஏறி மஹாகிரி வலம் வந்த
தேசிகா எனை இரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி போற்றி
என்ற ஒரு கதிரை வணங்கும் பாடல் உண்டு. பொருளும் அறிவியலும் இதன் முரண்கள் சொல்லியபோதும்...
நேற்றைய செய்தி: அறிவியல் மனித உடலின் தோல் செல்களை எடுத்து சினைமுட்டையில் இணைத்து கருவுறுதல் செய்திருப்பதாக குழந்தையை அப்படி உண்டு பண்ண முடியும் அதற்கு இனி கணவன், மனைவி காமுறுதல், இணைதல் எல்லாம் தேவை இல்லை இது 10 ஆண்டுகளில் வந்தமையும் என செய்தி...
பிரம்மாவின் தொழிலை மனிதம் எடுத்துக் கொண்டதா?
காக்கும் கடவுள்...அழிக்கும் கடவுள் பற்றி எல்லாம் விரிவாக எழுத வேண்டும் என்ற அவா உண்டு...ஆனல் மனிதம் தமது உடலென்னும் விந்தையான அதிசயத்தையே முழுதும் உணர்ந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல் உயிர் பிரிதல் ஆன்மீக முறை பற்றி ஆர்வமுறாமல் செவ்வாய் கோளில் நிலம் வாங்க முயற்சித்து நீர் அடையாளத்தை ஆய்ந்து வருகிறது...
அறிவியல் அவசியம் ஆன்மீகம் மனிதத்துக்கு அத்தியாவசியம் என்பதை நடந்த நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன
ஹே ராம் என காந்தி கோட்ஸேவால் சுடப்பட்டு உயிர் விடும் முன் முனகியதாக உள்ள செய்திகளில் முரண் உள்ளன ஆனல் ஹே ராம் படத்தை எடுத்த கலை ஞானி அவரது கொள்கையான மதுவே எல்லா பாவங்களுக்கும் அடிப்படை என்றதையும், அரை மணி சர்வாதிகாரியாக வாய்ப்பு இருந்தால் இந்தியாவின் எல்லா மதுக்கடைகளையும் மூடுவேன் என்ற தேசப் பிதாவின் கொள்கைக்காகவும் நிறைவேற்ற எந்த முயற்சியும் செய்ததாக யாமறியோம். அறிந்தது அவரது தந்தை கூட மது,மாது, புகை போன்றவற்றை தொடக்கூடாது என்று சினிமாத்துறைக்கு சென்ற போது வாக்குறுதி செய்ய வேண்டி கேட்டதாக.
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை
வாசி: படி...மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே...அகத்தியர்
(சிந்தியுங்கள் சொல்லாத விடயங்களும் புரியும்)