Sunday, January 1, 2017

ஆங்கிலப் புத்தாண்டான 2017: கவிஞர் தணிகை

ஆங்கிலப் புத்தாண்டான 2017: கவிஞர் தணிகை

Image result for english new year 2017


வாழ்த்துகள். வணக்கங்கள்,நன்றிகள். சென்ற வருடத்திற்கும் இன்று முதல் நாளில் அடி எடுத்து வைத்துள்ள 2017ம் ஆண்டுக்கும் அதில் எல்லாம் வேறுபாடு இல்லை. ஆனால் இது கிரிகோரியன் ஆண்டு, கிரேக்க ஆண்டு, ரோமானிய ஆண்டு இப்படி பல வகையிலும் படிப்படியாக காலப் போக்கில் திருத்தங்கள் செய்யப்பட்டு மனித குலத்தின் கணக்கிற்காக‌ விளங்கி இப்போது பெரும்பான்மையான மக்களால் ஆங்கிலப் புத்தாண்டு என அழைக்கப்படுகிறது.

 இதில் உள்ள ஜூலை மாதம் ஜீலியஸ் சீசரைக் குறிப்பது,ஆகஸ்ட் அகஸ்டஸ் சீசரைக் குறிப்பது,இப்படி ஒவ்வொரு மாதங்களின் பேருமே ஒரு காரணம் கொண்டிருப்பது. பிப்ரவரி மாதம் 28 29 என லீப்பாக்கியது யாவும் மனிதக் கணக்கீட்டிற்கு, மேலும் இந்த ஆண்டு ஒரு வினாடி தாமதமாக பிறந்தது என்ற கணக்குகளும்...வாரத்தின் நாட்கள் சூரியக் குடும்பத்தின் கோள்களை நினைவில் கொண்டு இருப்பதும் யாவருக்கும் தெரியும் எனவே இனி இதை ஆங்கிலப் புத்தாண்டு எனச் சொல்வதெல்லாம் சரியா?

சரியாக தெரியாதோர் மேலை நாடு என்றாலே அந்தக் காலத்தில் ஆங்கிலேயர் என்றே நினைத்து விட்டார்கள். ஆனால் தமிழ் பாரம்பரியம் வழி வழியாக யவனம், கிரேக்கம், போர்ச்சுகீசியம், ஆங்கிலம், டச்சு, இப்படி பலவித வர்த்தக போக்குவரத்து நிலைகளைக் கொண்டிருந்தது.

ஆனால் ஐரோப்பியத்தில் எண்ணற்ற நாடுகள் ஐரோப்பிய யூனியனாக யூரோவை தற்போது நாணயமாகக் கொண்டு அதில் தான் எத்தனை நாடுகள் ஜெர்மானியம், நார்வே ஸ்வீடன், டச்சு எனப்படும் நெதர்லாந்து, பிரிட்டிஷ் எனப்படும் இங்கிலாந்து,பிரெஞ்சுக்காரர் எனப்படும் பிரான்ஸ் தேசத்தார் இப்படி ஆனால் இந்த இங்கிலாந்து நாட்டார் பெரும்பாலான நாடுகளை தமது அடிமை நாடுகளாய் காலனி ஆதிக்கமாய் கொண்டிருந்ததும் சூரியன் எமைக் கேட்டுத்தான் எழும் விழும் என்றதும் துப்பாக்கி வெடிமருந்து கலாச்சார யுக்திகளைக் கொண்டும் பிரித்தாளும் சூழ்ச்சி குயுக்தி கொண்டும் ஆண்டு வந்தது.

அதன் பின் அமெரிக்கா, ஆஸ்திரேலீயா ஆகிய நாடுகளிலும் கிளை விரித்தது.ஆனால் காலப் போக்கில் அந்த அந்த நாடுகள் தமரது மண்ணின் மணத்துடன் மாறிக் கொண்டனர்.

இந்த ஆங்கில தேசம் மட்டும் ஆரம்பத்தில் இருந்து தாம்தாம் உலகுக்கே சட்டாம்பிள்ளை என எண்ணிக் கொண்டிருந்ததை உலகப் போர்கள் மாற்றின. ரஷியா, சீனா , ஜப்பான், எல்லாம் முன்னணி நாடுகள் என வந்து விட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகள் உலகின் சட்டாம்பிள்ளை நாடாகி விட்டது.

சுப்ரமணிய சிவாவை சிறையில் வைத்து தொழு நோயாளியாக்கிய‌
கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனாரை செக்கிழுக்க வைத்த
பாரதியை புதுச்சேரிக்கு ஓடி ஒளிய வைத்த
திருப்பூர் குமரனை தலையில் அடித்து இரத்த வெள்ளத்தில் வீழ்த்திய

காந்தி நேரு படேல் போன்ற எண்ணற்ற தலைவர்களை வெஞ்சிறையில் வாட்டிய
பகத் போன்றவர்களை தூக்கிலிட்ட
ஜாலியன் வாலா பாக் பஞ்சாப் படுகொலை நடத்திய
இந்தியாவும் பாகிஸ்தானும் என்றுமே ஒன்றாகிடக் கூடாது என  கபட‌ வஞ்சக நாடமாடிய கொடுங்கோல் இனம் நிற வெறிபிடித்த இனம் இந்த ஆங்கிலேய இனம்.

இன்னும் கூட அவர்களைத் தவிர வேறு யாரும் செல்லக் கூடாது என பொது இடங்களில் கிளப்கள் நடத்தும் இனம் அவர்களுடையது

பள்ளிகள், கோயில்கள், ரெயில்வேக்கள் போன்ற நூதனம் எல்லாம் அவர்கள் வழி கிடைத்தது எனவே அவர்கள் நன்றிக்குரியவர்கள் என்ற வாதம் உண்டு...ஆனால் அவை ஏற்படுத்தப் பட்டவை எல்லாமே அவர்கள் வசதிக்காக அவர்கள் சுலபமாக இந்த நாட்டை ஆளவேண்டும் இந்த மக்களை வழிப்படுத்த வேண்டும், தமது நாட்டுக்கு கொள்ளை கொண்ட பொற்குவியலை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற பிரதான நோக்கத்திற்காக...

உலகெலாம் உலக மாந்தரெல்லாம் மானுட குலத்திற்காக தமது இன்னுயிரை மாண்பு மிகு ஆயுளை அற்பணித்தார்கள் பல்வேறு துறைகளில் அதெல்லாமே ஆங்கில இனம் என தப்புக் கணக்கு போடுவது போல...இதுவும் ஆங்கில புத்தாண்டு என்பது...கலிலியோ ஆங்கில அறிவியலாளர் அல்ல, நோபெல் ஸ்வீடன் நாட்டார்..இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

எனவே இந்த நாள் ஒரு நாள் விடுமுறை தரும் என்ற முறையில் எனக்கும் மகிழ்வே ஆனால் அதுவும் இந்த முறை வழக்கமான வார விடுமுறை ஞாயிறன்று வந்திருக்கிறது...விடுமுறை அதற்கென தனியாக இல்லாமல்.

கிராமங்களில் வீடுகள் கூட இல்லாமல் சாலையாக இருக்கும் இடத்தில் எல்லாம் ஒலிபெருக்கி அலறுகிறது...மின் செலவு...

ஜெ இல்லாமலும் தமிழகத்தில் ஆங்கிலப் புத்தாண்டு இங்கு நடத்தப் படுவது பற்றி மகிழ்வே...

எங்கள் ஊர்களில் இது இம்முறை அதிக இறைச்சல் இல்லாதது பற்றியும் மகிழ்வே...

Related image


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

பி.கு: எனக்கு வாழ்த்து சொன்னவர்க்கு திரும்ப வாழ்த்து சொன்ன நாகரிகத்துடன் சில அரிய மனிதர்களுடன் பேசிய நிகழ்வுகளுடன் எனது புத்தாண்டு தொடங்கியுள்ளது... இரவு தி கிரீன் மைல் படம் பார்த்து நெகிழ்ந்தபடி கண்ணீர் விட்டு அழுத படி...


Saturday, December 31, 2016

விநாயகா பல் மருத்துவக் கல்லூரியும் வேம்படிதாளம் அரசுப் பொது மருத்துவ மனையும்:கவிஞர் தணிகை

விநாயகா பல் மருத்துவக் கல்லூரியும் வேம்படிதாளம் அரசுப் பொது மருத்துவ மனையும்:கவிஞர் தணிகை

Related image


வேம்படி தாளம் அதிகம் நெசவுத் தொழிசல் செய்யும் மக்கள் நிரம்பிய ஊர். இங்கு ஒரு தாலூகா அளவில் இருக்கும் பொது மருத்துவ மனை நல்ல முறையில் மக்களுக்கு மருத்துவம் செய்து வருகிறது.இதில் விநாயகா சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவப் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

இது பற்றி ஏன் குறிப்பிட வேண்டுமெனில் எனக்கும் இந்த இடத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு சுமார் 9 மாதங்கள் நிறைவு பெறுகிறது. இந்த பொது மருத்துவ மனையை பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது 1967ல் திறந்து வைத்திருக்கிறார். வேம்பு அடி தாளம்...வேப்ப மரத்தின் அடி விழுதுகளில் அமைந்த ஊர் இது என ஊர் பேர் காரணப் பெயராக அமைந்துள்ளது

பொதுவாகவே அரசுப் பொது மருத்துவமனைகள் என்றாலே மக்களுக்கு சென்று பார்க்க ஒரு அச்சம், வெறுப்பு, அருவெருப்பு, இருக்கும். ஆனால் இங்கு அப்படி எல்லாம் இல்லை. இப்போது இதன் மருத்துவ அலுவலராக மருத்துவர் நவீன் பணியாற்றுகிறார். அத்துடன் மரு.ராஜன்,குழந்தைகள் மருத்துவர்: ரவி, சித்த மருத்துவர் ரவி,மருத்துவர் லதா, ஆகியோருடன் தாதியர்: சங்கீதா, இன்னும் எனக்கு பேர் தெரியாத 3 நர்ஸ்கள், திருநிறைச் செல்வி, லாவண்யா என்னும் சிட்டுக் குருவிகளைப் போல சுறு சுறுப்புடன் பணி புரியும் பொதுமக்களுடன் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் சிறு நீர் சர்க்கரை, இரத்த அளவில் உள்ள சர்க்கரை அறிந்து ஆய்ந்து சொல்லும் சிறு பெண்கள், சித்தமருத்துவ பார்மஸிஸ்ட் கலாவதி இப்படி அனைவரும் நட்பு முறையில் பணியாற்றி வருகின்றனர். டைட்டன் உதவியாளராக இருந்து பணி புரிய கம்பவுண்டர் மற்றும் தாஸ், அம்பிகாபதி உதவியாளர்கள் பம்பரமாக சுழழ...

சேலத்தில் இருந்து கூட இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுமளவு நன்றாக செயல்படும் இந்த மையத்தில் பல பிரிவுகள் நன்கு செயல்பாட்டில் உள்ளன. குழந்தைகள்  , பொது மருத்துவம், சித்த மருத்துவம், பிரசவம், பல் மருத்துவ பிரிவு ஆகிய தனிப் பட்ட சிறப்புப் பிரிவுகளும் உண்டு. சர்க்கரை நோய்க்கு சிறப்பாக உடல் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டு அதற்கும் மருத்துவம், நாய்க்கடி, அவசர சிகிச்சை இப்படி எல்லாம். நலமும் பேணப்பட்டு வருகின்றன.

Image result for vinayaga dental college salem

நாங்கள் விநாயகா பல் மருத்துவக் கல்லூரியின் சமுதாய மருத்துவப் பிரிவின் கீழ் பிரதி வாரம் செவ்வாய், வியாழன் ஆகிய இரு நாட்களிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒரு5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினராக சென்று அங்கு முகாம் செய்து பல் பரிசோதனை, வாய் தாடை, ஈறு  தொடர்பான நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் பல் எடுத்து மருந்துகளும் தருகிறோம்... அதற்காக ஒரு மருத்துவர், இரண்டு பயிற்சி மருத்துவர்கள், ஒரு நர்ஸ் ஆகியோருடன் முகாம் அலுவலராக அடியேனும் சென்று பணிச்சேவை செய்து வருகிறோம். இதற்கென ஒரு வாகனம், அதற்கு ஒரு ஓட்டுனர், எரிபொருள் ஆகியவற்றை விநாயகா பல் மருத்துவக் கல்லூரி வழங்கி செயலாற்றி வருகிறது.

இந்த பணிகள் சிறக்க எமது கல்லூரி முதல்வர் : ஜா.பேபிஜான், சமுதாய மருத்துவப் பிரிவுத் தலைவர் மருத்துவர்: என்.சரவணன் ஆகியோர் உறுதுணையாக இருந்து வழிகாட்டி வருகின்றனர்.

இது மட்டுமின்றி : விநாயகா பல் மருத்துவ சிறப்பு முகாம்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார், மற்றும் அரசுப் பள்ளிகள், பல்வேறுபட்ட வேண்டுகோளுடன் பல நிறுவனங்களுக்கும் சேவையாற்றி வருகிறது. இந்த முகாம் நோயாளிகளுக்கு கல்லூரி வளாகத்திலும் இலவச மருத்துவம் செய்யப் படுகிறது.

இது மட்டுமின்றி;: வேம்படிதாளம், பாலமலை, அன்பு இல்லம் சேலம் ஆகிய இடங்கலிலும் ரெகுலர் முகாம்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வேம்படிதாளத்தில் வாரம் இருமுறை, அன்பு இல்லத்தில் வாரம் ஒரு முறை புதன் கிழமை, பாலமலையில் பிலச்சிங்க் யூத் மிஷன் அமைப்புடன் சேர்ந்து ஒவ்வொர் மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அங்கு சிறப்பு முகாம் செய்து பல் சிகிச்சை செய்யப்படுகிறது.

காலத்தின் முன் இதை எல்லாம் அவசியம் பதிவு செய்ய அவசியமாகிறது. இதை எல்லாம் ஒருங்கிணைக்கும் பணியை அடியேன் 2016ல் பெற்றமைக்கு கல்லூரியின் முதல்வர் ஜா.பேபி ஜானும், நிர்வாக அலுவலர்: நடராஜன் அவர்களும் முன் காரணமாக அமைந்தனர். இந்தக் கல்லூரிக்கு நானும் பல் மருத்துவம் செய்து கொள்ளவே சென்றேன். நிர்வாக அலுவலர் : 1. பாபு முரளியே எமக்கு முதல்வர் பற்றிச் சொல்ல...அவரை நான் சந்திக்க...பாதை 2016ல் மறுபடியும் மக்கள் பணியில் இணைந்து இப்போது 2017க்கு எமை , நமை எடுத்து சென்றபடி இருக்கிறது..

காலத்தின் வல்லமைக்கு முன் சிரம் தாழ்த்தி கரம் கூப்பியபடி வணங்கி நிற்கிறோம். சேவையை நாம் விட்டபோதிலும் அது நம்மை விடாமல் தொடர்வதற்கு இயற்கையை வணங்கி நிற்கிறோம்

பி.கு: கல்லூரியில் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு பல் மருத்துவம் இலவசமாக வழங்க முதல்வர், நிர்வாக அலுவலர்கள்,அடியேன் ஆகியோர் முயற்சி எடுத்துக் கொண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி அனைவரின் ஒப்புதலும் பெற்று இலவச மருத்துவம் வழங்கி வருகிறோம்.இச் சமுதாயம் பயன்பெறவே. இளைய சமுதாயம் பற்கள் உறுதியாகவே வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இதைப் பார்ப்பார், படிப்பார் அனைவரும் இதை தேவைப்படுவார்க்கு அறிவுறுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொண்டு

இந்த 2016டன் பழையன கழிதலும் வரும் 2017ல் புதியன புகுதலுமாய் அனைவரின் வாழ்விலும் ஒளி உருவாகிட வாழ்த்துகள் சொல்லி
மகிழ்கிறேன். வணக்கம். நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எனது 1350 பதிவுகளுடன் marubadiyumpookkum.wordpress.com வேர்ட்.பிரஸ்.டாட்.காம் முடக்கப்பட்டது

முடியவே முடியாது
என்ற
களங்களில் தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது...

பூக்களை உதிர்த்துவிட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது
மறுபடியும் பூக்கும்


 marubadiyumpookkum.blogspot.com என இப்போது பிலாக்.ஸ்பாட்.டாட்.காமில் வலைய வருகிறது. எப்போதும்போல காலப்போக்கில் இந்த தளமும் உங்கள் அனைவருடன் இணையும் என நம்புகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


ஒன்றே குலம் ஒருவனே தேவன்:‍ அம்மாவே தெய்வம்: கவிஞர் தணிகை

ஒன்றே குலம் ஒருவனே தேவன்:‍ அம்மாவே தெய்வம்: கவிஞர் தணிகை

Image result for periyar anna


கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் திராவிடர் கழகம் சுய மரியாதைக் கட்சியிடமிருந்து பிரிந்தது,அவை எல்லாமே காங்கிரஸ் கட்சியுள் இருந்தன ஒரு காலத்தில்.மணியம்மை வந்த பின் கண்ணீர்த் துளிகள் என பெரியாரால் பரிகாசம் செய்யப் பட்ட அண்ணாவும் தம்பிகளும் திராவிட முன்னேற்றக் கழகம் அதன் தலையாய கொள்கை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் தம்பிகளாய் மக்கள் சேவையே மகேசன் சேவை என தேர்தலில் பங்கெடுத்து ஆட்சியைக் கைப்பற்றினர். காமராசரை பின் தள்ளி.

Related image

இந்த நாட்டுக்கு ஒரு சாபக் கேடு அது தமிழகம் மாநிலம், இந்திய மத்தியம் இரண்டுக்குமே நல்லவர்கள், மக்கள் சிந்தனை உள்ளார் அதிக ஆயுளுடன் ஆண்டது கிடையாது. அங்கே லால் பகதூர், இங்கே அறிஞர் அண்ணா.குறுகிய கால நல்ல ஆட்சியாளர்கள்.

கலைஞர் எம்.ஜி.ஆரை துணைக்கொண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், மதியழகன் போன்றவர் வரிசையில் அடுத்திருந்தவர் ஆட்சிக் கட்டில் ஏறி விட்டார் முதல்வராக... இன்னும் உயிர் வாழ்கிறார் நிறைய பேரை எடுத்து விழுங்கி விட்டு ஆயுள் 94ம் கடக்க...இவர் குயுக்தியில் அன்றைய தி.மு.கழக பொருளாளர் நட்சத்திர அந்தஸ்தில் இருந்த எம்.ஜி.ஆரை துணைக்கொண்டு முதல்வராகிறார் அதிலிருந்து தமிழகத்திற்கு பிடித்தது சனி.

ஒரு குடும்ப ஆட்சி, அவர் குடும்பமே கட்சி, தலைவர் இல்லாத கழகத்திற்கு தலிவர், செயலாளர், பொருளார் அல்லாமே அவருடைய குடும்பத்துள் இருக்க வேண்டுமென எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்குகிறார் வைகோவை நீக்கியது போல...எம்.ஜி.ஆர் மக்கள் செல்வாக்குடன் உருவெடுக்கிறார் அவர் இருக்கும் வரை கலைஞர் இருக்கும் இடம் கட்சியில் மட்டும் தெரிய பொது வாழ்க்கை அதாவது ஆட்சி அந்தஸ்து ஏதும் இல்லாமல் இலக்கியப் பணி கலைப்பணி சன்டிவியின் மாலைகளிடம் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார். அவருக்கு பல குடும்பங்கள் எனவே பொழுதெல்லாம் நன்றாகவே போகிறது.

அவருக்கும் பின் ஸ்டாலினை உருவாக்கி, அடம் பிடிக்கும் அழகிரியிடம் சமாதானம் செய்ய முடியாமல் இன்னும் தலிவராகவே இருக்கிறார். மக்கல் இவர் முதல்வராக இருக்கும்போது உயிர் பிரிவார் என எதிர்பார்க்க, இவர் தி.மு.க தலீவராகவே இருந்து வரும் ஆண்டுகளில் சென்றடைவார்.ஒரு ஸ்லிப்: இவர் முதல்வராக இருந்தபோதே கடைசி இரண்டாண்டு அல்லது ஓராண்டு ஸ்டாலினை முதல்வராக்கி அழகு பார்த்திருக்கலாம்.ஆனால் இன்னும் ஸ்டாலின் தம் மகனே ஆனாலும் பதவியை விட்டுத் தரத் தயாரில்லை. ஆவியானாலும் அவரது ஆவி தி.மு.க தலைமைப் பதவியை விடவே விடாது...ஆனால் அறிஞர் அண்ணா பெரியார் மட்டுமே இயக்கத்துக்கு தலைவர் என இருக்கையை காலியாகவே வைத்து பொதுச்செயலாளர் பதவியை மட்டுமே ஏற்பதாகச் சொன்னார் ஒரு குரு மரியாதை...அதிலிருந்து அந்த பாணியுடன் அ.இ.அ.தி.மு.க....எம்.ஜி.ஆருடன்...

நிலை இப்படி இருக்க எம்.ஜி.ஆரின் லீலைகளை அறிந்த அம்மணி, கொ.ப.செவாக உள் புகுந்து போராடி வென்று எடுத்து அடுத்துள்ளவரை, உதவி செய்தாரை எல்லாம் களை எடுத்து.களம் கொண்டு என்றும் தெய்வம், நிரந்தர முதல்வர் என்றெல்லாம் சொல்லப் பட்டு, புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதாவாக பெட்டியில் இட்டு எம்.ஜி.ஆர் சமாதி அருகே பெட்டியில் வைக்கப் பட்ட ஜெ முதலவராக இருந்து மறைந்தார்

ஆனால் அவருக்கு கால்கள் இருந்தனவா , பல் பிடுங்கப்பட்டதா, அவரது பிணத்தை தோண்டி எடுக்கவா, நோண்டி எடுக்கவா என்றெல்லாம் பட்டி மண்டபங்களும், எம்.ஜி.ஆர் கழகத்தை கட்டிக் காத்த அம்மா ஜெவா, சின்னம்மா வி.கே.சசி சிறந்தவரா என கருத்தரங்கங்களும், மேலும் பல வழக்குகள் போடப்பட்டாலும் அவை முதல்வராகி விட்டால் நெருங்க முடியாது நொறுக்கி விடலாம் என முதல்வராக அவரே என கட்சி, குடிகார மக்கலால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து எம்.எல்.ஏக்களும் விரும்ப...

அந்த 75 நாட்கள் என மர்ம முடிச்சுகள் நிறைந்த வரலாற்றுப் புத்தகங்கள் இன்னும் சில காலத்தில் கைக்கு கிடைக்கலாம். இவர் தமிழக அரசுப் பள்ளிப்பாடப் புத்தகத்தில் அச்சடித்த சில கலைஞரின் வாசகத்தை நினைவுறுத்தும் இடங்களை எல்லாம் அடித்து மாற்றி, எடுத்து கிழித்து, பக்கங்களை மாற்றி ஒட்டி, இன்னும் எப்படி எல்லாமோ செய்தவர், எங்கு பார்த்தாலும் அம்மா மயம் எனச் சொல்ல வைத்தவர்...கட்டப்பட்ட சட்டசபையை ஏற்காமல் அறிஞர் அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்க வழக்கு அரசு சார்பாக நடத்தி...

ரெயில் நிலையத்திலும் பேருந்து நிலையத்திலும் அடி மட்ட அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள், ஐ மீன் எம்.ஜி.ஆர், ஜெ இரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள் இது உட்கட்சி சனநாயகமின்றி நடக்கிறது என...

எந்தக் காலத்தில் அந்தக் கட்சியில் சனநாயகம் இருந்தது? எம்.ஜி.ஆர் காலத்திலா, அம்மா ஜெ காலத்திலா, அப்படி இருந்தால்: மாநிலம் எங்கும் உள்ள கிளைகளில் எல்லாம் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு முறைக்கு விடப்பட்டல்லவா பொதுச் செயலாளர் தேர்வு செய்யப் பட்டிருக்கக் கூடும், எல்லாம் நியமனமே, கட்சி பொதுச் செயலாளர் ஆக 5 ஆண்டு உறுப்பினர் ஆக இருக்க வேண்டுமாமே...ஊ ஹூம் அதெல்லாம் உங்களுக்கு அம்மாவுக்கு, சின்ன அம்மாவுக்கு அதெல்லாம் தேவையில்லை....

செல்வியை அம்மா என்றார்கள், 60 வயதுடைய சசியை இப்போது சின்னம்மா என்று சொல்லிவிட்டார்கள். இப்படி எல்லாம் வாய்ப்புகள் இருக்க, நாங்கள் ஐ மீன் நாங்கள் என்றால் சசி பெருமாள், வேலாயுதம், தணிகை ,செம்முனி, இராமலிங்கம், சின்ன பையன், மணி போன்ற இயக்க வரலாறு உள்ள நாங்கள் எல்லாம் வாழ்நாளை சேவை, மக்கட் பணி, மதுவிலக்கு, கிராம முன்னேற்றம், ஆக்கபூர்வமான வளர்ச்சி, காந்திய வழியில் ஊருக்குப் பத்து பேர் இயக்க, நவ இந்திய நிர்மாணிகள் இயக்கம், தமிழக இலட்சியக் குடும்பம் என்றெல்லாம் விரயம் செய்து விட்டோமா?

29 வயதிலிருந்து அம்மாவுடன் இருந்து தற்போது 54 வயதாகும் சின்னம்மா கட்சியின் பொதுச்செயலாளர், பொன்னையன் , செம்மலை, எல்லாம் மோடியின் கீழ் இருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோசி, ராஜ்நாத் சிங் போல...எளிய வழி, சுலபமான வழி ...

கட்சியில் எப்படி மேல போகணும் எப்படி கட்சியை வளர்க்கணும்னு தெரியுனும்னா அது சசியின் வழி தனி வழி ....அடிச்சதய்யா யோகம்...இனிமே பார்க்கலாம் தமிழகத்தின் நல்லாட்சியை பொற்கால மாட்சியை...ரஜினி காந்த் படம் வருகையில் அடிக்கும் ஸ்டன்ட் போல...நல்ல நல்ல திருப்பங்கள், விருப்பங்கள்...


Related image

ஒன்றே குலம் ஒருவனே தேவன், மக்கள் சேவையே மகேசன் சேவை, அம்மாவே தெய்வம், அம்மாவே நிரந்தர முதல்வர் போய் சின்னம்மாவே தெய்வம், சின்னம்மாவே நிரந்தர முதல்வர் , யானை மாலை போட்டது போய், சிங்கம் கண்டு ஒடுங்க..சின்னம்மா ஜிந்தாபாத். நமக்கென்ன ஓ.பி ஆண்டால் என்ன சின்னம்மா ...என்ன...மோடி ஆட்சி, மோடி மஸ்தான் ஆட்சி,....இதோ பாருங்கள் கூட்டமே பாம்புக்கும் கீரிக்கும் சண்டை உடப் போறேன்..பாருங்க..பாருங்க...நல்லா பாருங்க....

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, December 27, 2016

அமீர்கானின் டங்கல்(யுத்தம்) தமிழில் அவசியம் பாருங்கள்: கவிஞர் தணிகை

அமீர்கானின் டங்கல்(யுத்தம்) தமிழில் அவசியம் பாருங்கள்: கவிஞர் தணிகை


Image result for dangal


நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல அரிய படம்.குடும்பத்துடன் அமர்ந்து இரசிக்க வேண்டிய படம்.இது போன்ற கதையமைப்பு ஏன் கமலுக்கு கிடைப்பதில்லை எனக் கேட்கத் தோன்றும் படம். ஆணுக்கு பெண் நிகர் சரி சமானமாய் வைப்போம் என்ற சொல்லை அடி நாதமாகக் கொண்டு இருக்கும் படம்.

எனக்கும் கூட குத்துச் சண்டை பிடிக்குமளவு மல்யுத்தம் பிடிக்காது.ஆனால் இந்தப் படத்தைப் பார்த்தால் பிடிக்கிறது. ஒலிம்பிக் பதக்கம் வெல்ல முடியாமல் போன இந்திய மல்யுத்த வீரர் மஹா வீர் தமது வாரிசாய் ஒருவரையாவது உருவாக்கி அவரது கனவான ஒலிம்பிக் அனுப்பி தங்கம் வெல்ல வேண்டும் என முயற்சிக்கிறார். அந்த முயற்சிக்கு ஏற்படும் முட்டுக்கட்டைகள் அதை அவர் எப்படி தகர்த்தெறிந்து குறிக்கோளை எட்டுகிறார்  என்பதே கதை. எனக்கு இவரது படமான லகான் நினைவுக்கு வருகிறது

அதில் கிரிக்கெட். ஆங்கிலேயருடன் இதில் மல்யுத்தம் பெண் ஆண்களுடன்.முதலில் தமக்கு ஒரு மகன் பிறப்பான் அவனை உருவாக்கலாம் என எல்லா பயிற்சிகளுடன் தயாராக இருந்தும் அடுத்தடுத்து இவருக்கு நாலும் பெண் பிள்ளைகளாகவே போக மற்றவர் எல்லாம் வந்து மகன் பிறந்திருக்கிறான் மஹாவீர், ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லும்போது மஹாவீர் அந்த லட்டை பிட்டு தமக்கு இரு புறமும் வரும் தம் பெண்களுக்கு கொடுக்கிறார். யாரையும் கண்ணியக் குறைவாக நடத்த விரும்பாத நாகரீக மனிதராய் வாழ்கிறார்.

தம் இரு பெண்களையும் பாடாக படுத்தி விடுகிறார். முதலில் அவை ஒத்துழைக்க மறுத்தாலும் ஒரு தோழியின் திருமண வைபவத்தன்று அந்த தோழி இவரது தந்தையின் கரிசனத்தை விளக்க முற்பட அப்போதுதான் இவர்களுக்கு ஒர் தெளிவு ஏற்படுகிறது. அது முதல் தந்தை தரும் பயிற்சிக்கு ஒத்துழைக்கிறார்கள். ஆனால் அதற்காக அதற்குள் நிறைய இழக்கிறார்கள், கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறார்கள். தமது நேசமிகு  கூந்தலை இழக்கிறார்கள். உணவை, உறக்கத்தை, உடையை யாவற்றையும் இழந்து ஒரு முனைப்பாக கல்வியை விட இந்த பயிற்சியையே உயிராக பயிரக்குகிறார் மஹாவீர்.

ஊர் எதிர்க்கிறது, கேலி பேசுகிறது, தாயும் மனைவியுமானவளே எதிர்த்து பேசுகிறாள். ஏன் அந்தப் பெண்களே கூட தரக்குறைவாய் அப்பாவை எண்ணுகின்றன...ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் இலட்சிய புருஷனாய் வலம் வந்து எல்லா சூழ்ச்சிகளையும் முறியடித்து கடைசியில் காமன்வெல்த் கோல்டு அடிக்குமளவு தமது மூத்த மகளை ஆளாக்கி விடுகிறார்.

Related image


கீதாவாக பபிதாவாக வரும் இளைய வயது பிள்ளைகளும், வளர்ந்த இளமைப்பருவத்தில் இருந்து அப்பாவுக்கு பேர் வாங்கித் தருவாராக நடித்திருப்பாரும் தமது ரோலை நன்குணர்ந்து செய்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் டிசம்பர் 21லும் இந்தியாவில் 23லும் வெளியான இந்தப் படத்தை மஹாவீர் சிங் பொகாட் என்னும் உண்மையான மல்யுத்த வீரரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள்.70 கோடி முதலீட்டில் உருவான இந்தப் படம் 4 நாளில் 245 கோடி வசூலித்து விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியில் ஒரு இன்டர்நேஷனல் லெவல் போட்டியை நாம் ஆர்வமாக பார்க்க நேர்வதாக படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்கள். தயாரிப்பு அமீர்கான் குழுவினரே.

மஹாவீர் பொகட்டை பெரியப்பாவாக கொண்டிருக்கும் ஒரு சிறுவன் சொல்வதாக ஆரம்பத்தில் நகரும் கதை, நகைச்சுவையை நாசூக்காக கொண்டிருக்கிறது நல்ல இரசிக்கும்படியான சம்பவங்கள் நல்ல முறையில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

என்றாலும் நான் விரும்பாத ஒரு காட்சி உண்டென்றால் அது மகனும் அதாவது தம்பி மகனும் பெரியப்பாவான மஹாவீரும் சேர்ந்து மது அருந்தும் ஒரு காட்சி மட்டுமே. அதை நீக்கி விட்டால் மேலும் நன்றாக இருக்கும்.

எப்போதும் கிளைமாக்ஸில் கதாநாயகன் அடித்து துவம்சம் செய்து அநியாயத்தை தட்டிக்கேட்டு நமக்குள் சூடேற்றுவார், ஆனால் இதில் அமைதியாக தந்திரமாக தம்மை உள் வைத்து பூட்டப்பட்ட அறையில் உள்ள தந்தையும் குருவுமான மஹாவீர் கதவை உடைக்க முயன்று தோல்வியுற்று அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார் அல்லது பிரார்த்தனையில் ஈடுபடுகிறார் போட்டி முடிந்து இந்திய தேசிய கீதம் ஒலிக்கிறது அதைக் கேட்டு தமது குறிக்கோள் நிறைவேறியதைக் காணாமலே கண்டு பெரிதும் மகிழ்கிறார். இது வித்தியாசமான கதை நகர்வு.

நல்ல கிராமிய சூழ்நிலையில் அருமையான பதிவுகளை நமக்குத் தருகிறது.
தவற விடக் கூடாத படங்களுள் இதுவும் இடம் பிடிக்கிறது. இதன் வெற்றி பேசப்படும்... துணிச்சலான முயற்சி. அனைவரும் பாராட்ட வேண்டும் பார்க்க வேண்டும்.

தாரளமாக நூற்றுக்கு அறுபது கொடுக்கலாம்.தமிழில் உடனே மொழிபெயர்ப்புடன் கொண்டு வந்திருக்கிறார்கள் அதற்காக நாம் நன்றி சொல்லவும் வேண்டும்

Image result for dangal poster


அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான‌ ஆழமான பாத்திரம், நிறைகுடம் ததும்பாது என அமீர்கான் மஹாவீர் பொகாட்டாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.எளிமையாக அனைவரையும் கவர்ந்து விடுகிறார்.

இன்னும் நிறைய இது பற்றிப் பேசிக் கொண்டே இருக்கலாம் ஆனாலும் அது நீங்கள் பார்த்து மகிழும் நிறைவை அளிக்காது என இத்துடன் முடிக்கிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, December 25, 2016

பிடித்த‌ பணத்தை எல்லாம் மக்களுக்கு திருப்பி விடலாமே?: ‍ கவிஞர் தணிகை

 பிடித்த‌ பணத்தை எல்லாம் மக்களுக்கு திருப்பி விடலாமே?: ‍ கவிஞர் தணிகை

இந்தியாவில் குடியரசுத் தலைவர் தவிர பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி,படைத்தளபதிகள், மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர்கள் தொடங்கி ஊராட்சி உறுப்பினர் வரை ஏன் வாக்குக்கு மதுப்புட்டி,பிரியாணி,200ரூபாய் இலஞ்சம் வாங்கும் குடிமக்கள் வரை யாவுமே ஊழல் மயமான நிலையில் அரசு என்ற ஒன்று அவசியமா?


Image result for Rajendra Prasad

ஏன் குடியரசுத் தலைவரில் கூட கண்ணாடி போட்ட பிரதீபா பட்டேல் என்னும் பாட்டியம்மா சினிமா பார்ப்பதற்கே மக்கள் பணத்தை எண்ணிலடங்காமல் வாரிவிட்டு செலவு செய்து தியேட்டரை இராஜ்பவனில் அமைத்திருந்ததும் உண்டு என்று செய்திகள் உண்டு.ஆக அடி முதல் நுனி வரை அத்தனையும் இங்கு ஊழல் மயமே...இதில் மோடி மிகவும் யோக்கியசாலி என ராகுல் காந்தி போன்றோர் சஹாரா,பிர்லா, அம்பானி மார் கதை எல்லாம் வெட்டி வெளிச்சமாக்கி  விடப்படுகிறது. இவர் மக்களுக்கு நல்லது செய்கிறாராம். முதலில் இவரது கட்சியின் அத்வானி போன்ற முதியவருக்கு நன்மை செய்திருக்கிறாரா என்று பாருங்கள்...

பழைய நோட்டைப் பிடிக்கிறேன் கள்ளப்பணத்தை கறுப்புப் பணத்தை என ஒருத் திட்டம் ஆனால் அச்சடித்த பணத்தில் முக்கால் வாசி இந்த ஆண்டைகளுக்கே ரிசர்வ் பாங்கிலிருந்து நேரடியாக சப்ளை ஆகிவிட்டது. வங்கி முன் வரிசையில் நிறபவர்கள் நின்று கொண்டே இருக்கிறார்கள் 50 நாளாக.. இதில் டிஜிட்டல் இண்டியா, கோடிக்கணக்கில் ஏப்ரல் பரிசு ஏப்ரல் ஃபூல்...
Image result for Sarvepalli Radhakrishnan



நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அங்கே இவ்வளவும், இங்கே அவ்வளவும், அவரிடம் ,இவரிடம் என செய்திகள் வந்த வண்ணமே உள்ளன, இது இப்படி இருக்குமானால் அதில் வங்கி மேலான்மையும், அரசியல் பிரபலங்களும், ஆட்சி அதிகாரிகளும் (இவர்களை அலுவலர்கள் என்று சொன்னால் நிறைய பேருக்குப் பிடிக்காது)சிவில் சர்வன்ட்களும் மந்திரிமார்களும் எல்லாமே உடந்தைதான். இதைபற்றிய செய்திகளே தினமும் பாதிக்கும் மேல் மாதக் கணக்கில்...

ரெயில்வே நிலையம், மின்வாரியம், பி.எஸ்.என்.எல் எந்த மத்திய மாநில அரசு அலுவலகங்களிலுமே ஸ்வைப் இல்லை இது வரை. தனியார் கேக் கடைக்காரர் வைத்துள்ளார். இதில் எல்லா மக்களும் மாறுக மாறுக மாற்றுக என மறுபடியும் ஒரு மங்கி பாத். எல்லா வியாபாரமும் படுத்துவிட்டன. மக்கள் வாங்கும் சக்தி இற்றுப் போய் விட்டனர்.

பணம் பிடிப்பதில் வேறு பாலிடிக்ஸ், இவர் ஆளும் கட்சியா அவர் வேண்டாம், இங்கு தமிழகத்தில் பிஜேபி எப்படி கால் பதிப்பது அதைப்பார்த்து காய் நகர்த்து என மோடி பிலான்...

அம்பானிகளுக்கு ஆதரவாக ஒரு நாடே ஒரு இந்திய அரசே இயங்குகிறது என்பது கண்கூடு.

Image result for A. P. J. Abdul Kalam


இங்கே இருக்கும் சிறு வியாபாரிகளும், குறு வியாபாரிகளும், பாதிக்கப் பட,நமது கோயம்பேடு சென்னை காய்கறி மார்க்கட் வியாபாரம் 7ல் 1 பங்காக சுருங்கி விட்டதாம். அதாவது தினமும் சுமார் 7 கோடி அளவுக்கு வியாபாரம் ஆவது 1 கோடி கூட ஆவதில்லை எனச் செய்திகள். நடுத்தர மக்களும், சிறிய தொழில் முனைவோரும், கணக்கில் வராத அனைவரும் கணக்கில் வரவேண்டும் , தணிக்கையில் வரவேண்டும், வருமானவரிக் கோட்டுக்குள் கோட்டைக்குள் வரவேண்டும் ஆனால் இந்த உச்சியில் உள்ள பிணந்தின்னிக் கழுகுகள் மட்டும் அப்படியே வாழ வேண்டும். என்னே மோடியின் திட்டம்...

கடைசியாக: இந்த பிடிக்கும் பணத்தை எல்லாம் கீழ் தட்டுக்கு வந்து சேரும் வண்ணம் எல்லா வங்கிகளுக்கும் அனுப்பி எல்லா மக்களுக்கும் சமமாக பங்கிட்டுக் கொடுக்க மடை மாற்றி திருப்பி விட்டாவது குறை தீர்க்கலாமே..செய்யுமா இந்த மாடி அரசு மோடி ஆட்சி...
Image result for A. P. J. Abdul Kalam

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, December 24, 2016

INDIA AND ME:மறு சுழற்சியின் முதற் புள்ளியில்: கவிஞர் தணிகை.

மறு சுழற்சியின் முதற் புள்ளியில்: கவிஞர் தணிகை.
Image result for RE CYCLE STARTS...



டி மானிடேசன் என்ற மோடியின் வித்தையால்,காய் கறி வியாபாரம் ஆகவில்லை என வியாபாரிகள் கவலைப்பட, விலை வீழ்ச்சிக்குப் பின்னும் காசில்லாமல் எவருமே வாங்காமல் நுகர்வோர் பணமின்றி அவதிப்பட ஒரு மனிதன் கேட்கிறான் என்னிடம் நடைப்பயிற்சியின் வீட்டு முன் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு இறந்து போகட்டுமா என்று. அவன் ஒரு மது அடிமை.இன்று நுகர்வோர் தினம் என்று ராம்விலாஸ் பாஸ்வான் மத்திய மந்திரி அனுப்பியதாக குறுஞ்செய்தி ஒன்று எனது பேஸிக் மொபைல் செல்லுக்கும்.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடைகளை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஜெ இருக்கும்போதே பல முறை சொன்னது என்றாலும் எந்த செயல்பாடும் இல்லை. இப்போதுகூட எடுக்கிறோம், ஆனால் எடுத்து ஊருக்குள் மாற்றி வைத்துக் கொள்கிறோம் என்கிறார்கள். எந்த வித டி மானிட்டேஷன் ஆனாலும் சரி இந்த மதுக்குடி வியாபாரம் மட்டும் அப்படியே குறையாமல் நடந்து கொண்டே இருக்கிறது காய் கறி வியாபாரிகள் கூட வியாபாரம் ஆக வில்லையே என சலித்துக்கொண்டிருக்கும்போதும்....அது எப்படி என்றுதான் விளங்கவே இல்லை.

Related image

ஒரு சமுதாய மறுமலர்ச்சியை சீரழித்த பெருமை இரு கழக கலக ஆட்சிகளுக்குமே உண்டு. மதுவை இவர்கள் அனுமதித்திருக்கவே கூடாது.
ஒரு மது அடிமை அவனது வீட்டில் அவனுக்கென்று இப்போது எவருமே கிடையாது ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்த‌ வயோதிக தந்தையும் இறந்த பின்னே இவன் தனிமனிதனாகவே வாழ்க்கை நடத்தியபடி இருக்கிறான் வயது 30 முதல் 40 வரை இருக்கலாம்.

எனது நடைப்பயிற்சியின் போது நெடு நாள் கழித்து சில நாளுக்கும் முன் அந்த வழியே சென்ற என்னைப் பிடித்துக் கொண்டு ஒரு அடி கூட முன்னேறிச் செல்ல விடாமல் அவன் புராணம் பாடினான். தற்போது மூன்றாம் பாகம் ஆரம்பித்து விட்டது என் வாழ்விலும் பணி பொருட்டு முன் போல அதிகமாக எமது வழக்கமான பாதையில் நடைப்பயிற்சியில் ஈடுபடச் செல்ல முடியவில்லை. சேலத்து ரயில்பாதை நடைமேடையில் நடைப்பயிற்சி முடிந்து போகிறது . ஆனால் அது எனக்கு முழுதாக நிறைவளிக்காது...பல உடற்பணிகள் சில உடற்பிணிகள், தளர்வு இப்படியாக நமக்கிருக்க..
Related image


விடுமுறை எடுத்துக் கொண்டு நாம் அந்த பழகிய பாதையில் செல்ல, இவன் வந்து முதலில் சார், சொல்லுங்கள், நான் முன்னால் இருக்கும் வேப்ப மரத்தில் தூக்கு போட்டு செத்துப் போகலாம் என நினைக்கிறேன் சார் என்றான்.

வேண்டாம், நீ இப்போதே குடித்து, குடித்து பாதி இறந்து விட்டாய், இன்னும் மீதமிருக்கும் நாட்களை எப்படியாவது கழித்து விடு. இயல்பாக இற.எல்லோருக்கும் இறப்பு வரும் அது என்றும் மாறாது.அதுவரை நமது வாழ்வை நாம் தொடர்ந்தேயாக வேண்டும், இல்லாவிட்டால் நீ உடலை இழந்தும் ஆவியாகி அப்போதும் நிம்மதி இல்லாமல் அலைந்து அடுத்தவரை தொந்தரவு  செய்வாய், உனது சகோதரி குழந்தைகளுக்கு உன்னால் முடிந்தால் ஏதாவது உனது வருவாயில் இருந்து நல்லதை செய், தேவைப்படும் குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்,என்று கூறினேன்.

ஓ! அப்படியா சொல்கிறீர்கள், சரி என்று சொல்லி இருக்கிறான். சொந்த வீடும் வாசலில் சில மரங்களும், ஒரு குடி நீர் குழாய் இணைப்பும் அவனது சொத்து, மற்றபடி மது இல்லாமல் அவனால் வாழ முடியாது, எப்போதாவது கூலி வேலைக்கும், அல்லது லாரித் தொழிலில் கிளீனராகவும் பணி புரியச் செல்வான் அவன்...
Related image

பி.எஸ்.என். எல் எவருமே இல்லையென்றாலும், மதியம் 1.30 முதல் 2.30 வரை சாப்பாட்டு இடைவேளை என கறாராக கடைப் பிடிக்க, ரிலையன்ஸ் பையன் மார்ச் வரை இலவசம் ஆதார் எண் மற்றும் 4ஆம் அலைக்கற்றை செல்பேசியின் அடையாள எண் இருந்தால் போதும் சிம் இலவசம் என எப்போதும் கூவிக் கூவி அழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறான் அவனுக்கு எந்தவித மதிய உணவு இடைவேளை இருப்பதாகவும் தெரியவில்லை.

நேற்று சேலத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் திருமண மண்டபத்தருகே ஒரு வேலையாக செல்ல வேண்டி இருந்தது. அங்கே கூட்டம், 64 முக்கியபணியாளர்களை முடக்கி, வங்கியின் தலைமையகத்தில் புதுக் கற்றை புது நோட்டு, புதுக் கணக்கு பரிசோதனை, இளங்கோ என்பவர் நமது சேலத்து மந்திரிக்கு மிக நெருங்கிய சொந்தமாம், 150 கோடி, 70 கோடி என்று பேச்சு அடிபட‌ செய்தியாகிறது அந்த சோதனை அங்கு 3 ஆம் நாளில் நடைபெறுகிறதாம்.

எல்லாம் உருகுகிறார்கள், ஆனால் வரலாறு என்ன சொல்கிறது எனில் ஜெவுக்கு சசியை அறிமுகப் படுத்திய சந்திரகலாவின் முகத்தில் ஆசிட்டும், தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த  டி.என் சேஷனை ஓட்டலில் புகுந்து அடிக்க யத்தனித்ததும், இந்து ராம் பயந்து பெங்களூர் ஓடியதும், தி.மு.க பன்னீர் செல்வம் என்ற வழக்கறிஞர் குற்றுயிரும் கொலையுயிருமாக படுக்கையில் கிடக்க காரணமாக இருந்ததும், மணி சங்கர அய்யரை சட்டை கிழிய அடித்து விரட்டியதும்,திருநாவுக்கரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஒருவர் அவரைக் காப்பாற்றியபோதும் அவர்களை வெளியேற்றி கே.கே.எஸ். எஸ்.ஆர் முகத்தின் மேல் ஆசிட் வீச்சு நடந்ததும், நெடுஞ்செழியன் போன்ற சிலர் விலகியபோது உதிர்ந்த ரோமம் என்றதும், கலைஞர் கருணாநிதியை, முரசொலி மாறனை டி.ஆர். பாலுவை நள்ளிரவில் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று சிறையில் அடைத்ததும்,அட நம்ம ட்ராபிக் இராமசாமியை போஸ்டரை கிழித்தார் எனச் சொல்லி அதிகாலையில் சிறைக்கு அனுப்பியதும்,

கோவனை மதுவிலக்குக் கோரி பாடினார் என சிறை செய்ததும், சசி பெருமாள் என்ன செய்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் ஒரு வார்த்தை கூட இறந்தபோதும் கூட பேசாமல் இருந்ததும், சென்னையும், கடலூரும் வெள்ளத்தில் மூழ்கியபோதும் ஒன்றுமே செய்யாமல் பொது நல ஆர்வலர்கள் கொடுத்த தான தர்மத்திலும் அம்மா ஸ்டிக்கர்தான் இருக்க வேண்டும் எனப் பண்ணியதும்...

Related image

இப்படியாக ஏராளமாக சொல்லிக் கொண்டே போகலாம். இதில் அரசின் நடவடிக்கையாக அரசாங்க நடவடிக்கையாக ஒரு நியாயத்துடன் இவை நடந்திருந்தால் அனைவருமே ஏதும் சொல்ல வழி இல்லை. எல்லாமே தாம் என்ற கர்வ ஆணவ உணர்ச்சியால் விளைந்தபடியால் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

நாம் யார் யார் எல்லாம் நமக்கு பெரிய எதிரி என நினைக்கிறோமோ அவர் எல்லாம் பெரிய எதிரியே அல்ல. உண்மையில் எதிரியே அல்ல. அவர்கள் எல்லாமே உனது மரணத்தில் வந்து தமது சோகத்தை சொல்லிச் சென்றார்கள். உண்மையில் அவரவர்க்கு அவரவர் குணாம்சங்கள், அவரவர் உடல்நிலைகள், அவரவர் எண்ண அலைகளே பெரிய எதிரி. அவரவர் ஒழுக்க நெறிகளே அல்லது ஒழுக்கமின்மையே பெரும் எதிரிகள் அதைத்தானே நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என கணியன் பூங்குன்றனார் வரிகள் செப்பின.


சிவாஜி சிலையும், கண்ணகி சிலையும், அண்ணா பெரு நூலகமும், இடம் மாறி இருக்க வேண்டிய சட்டசபை வளாகமும் அனைவர்க்கும் தேவைப்படும் உழவர் சந்தையும் ஒரு தனிமனித விருப்பு வெறுப்பின் முன் நாட்டின் ஆட்சி முறைமைகளாகி சின்னா பின்னப்பட்டன...அந்த தமிழக ஆண்டுகள் முடிவுக்கு வந்து விட்டன...

மற்றொரு சுழற்சியின் முதற் புள்ளி ஆரம்பமாகிவிட்டது. இனியாவது தமிழகத்தின் தலைவிதி நன்றாக ஆட்சி செய்வோரின் வசம் ஆகட்டும்...

அப்பல்லோவும், சசியும் சேர்ந்து ஆடிய நாடகத்தை உலகறியும், இதில் மோடியும் உள்ளடக்கம், 11.30க்கு செய்தியாக அறிவிக்க ஜெவின் மரணச் செய்தி 11.09க்கு மோடி இறந்த வருத்தத்தை தெரிவித்ததாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன. அப்பல்லோவில் இருந்த ஒரு நர்ஸ் ஒரு துண்டுக் காகிதம் அதில் ஒரு மாத்திரை அல்லது மருந்து பெயர் எழுதி கீழே கிடந்ததாக கொண்டு சென்று நிர்வாகத்திடம் கொடுத்ததால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஆக மூன்றாம் தளத்தில் இரும்பு ஷட்டருடன் தமிழகத்தில் முதல்வராக இருந்த ஒருவர் எவருக்கும் தெரியக்கூடாது என்ற நிலையில் உள் வைக்கப்பட்டு, கவர்னர் மத்திய மந்திரிகள் வரை எல்லாமே தரை தளம், முதல் தளம் வரை வந்து சென்று அம்மா உப்புமா சாப்பிட்டார், நல்லா தண்ணீர் குடித்தார், மருத்துவரிடம் நகைச்சுவையாக பேசினார், கொடநாட்டு டீ தருகிறேன் எமது போயஸ் வாருங்கள் என எம்பால்மிங் முறையில் இருந்த ஒரு உடலை வைத்துக் கொண்டு ஆடிய நாடகம் இமாலயம்....எந்த உலகிலும் இல்லாதது.அடுக்காதது...

தமிழகமும், இந்தியாவும் அடுத்த சுழற்சிக்கு தயாராகிறது...எனது வயதும் உடலும் கூட...

Related image

அனைவர்க்கும் கிறிஸ்மஸ் சீசனல் புத்தாண்டு வாழ்த்துகளை உலகெங்கும் இருந்து இந்த வலைதளத்தை படிப்பார்க்கு மறுபடியும் பூக்கும் வலைப்பூவின் சார்பாக உரித்தாக்குகிறேன்.

 பி.கு: ஜெவின் மரணம் பற்றி தமிழச்சி ஒருவர்தான் முன்பே சொன்னார் ஒரு காவல்துறையின் நண்பர் வழியாக செய்தி கசிந்ததாக பயமின்றி அந்த நபர் ஒருவர்தான் சரியான பதிவராக செய்தியாளராக இருந்திருக்கிறார்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



Wednesday, December 21, 2016

தமிழக அரசைக் கலைத்து விட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்: கவிஞர் தணிகை

தமிழக அரசைக் கலைத்து விட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்: கவிஞர் தணிகை
Image result for chief secretary ram mohan rao


மோடியின் ஆட்சியின் வண்டவாளம் வெளியில் வர ஆரம்பித்து விட்ட நிலையில் அவர் கம்பி கட்டி அதில் ஆடி வரும் தமிழக ஆட்சியும் ஜெவுடன் செத்து விட்டது. எனவே நடைபெறும் இந்த ஆட்சி துளியும் மக்களுக்கு தொடர்புடையதல்ல... ஜெ அப்பல்லோவின் மரணத்தருவாய் இருந்த நிலையில் மருத்துவமனை லீலைகளை கடசி வரை வெளியிடாமல் வெளிப்படைத் தன்மை இல்லாத ஒன்றே போதும் இது ஆட்சி அல்ல என்பதற்கு அதற்கும் மேலாக தலைமைச்  செயலகத்திலும், தலைமைச் செயலரின் வீட்டிலும் புகுந்த சி.பி.ஐ சோதனையும் அதன் வெளிச்சமும் அதை பட்ட வர்த்தனமாக தெளிவு படுத்தி விட்டது.இராம் மோகன் ராவின் மகனே முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.மேலும் கிரானைட் ஊழலும் மணல் ஊழலும் இப்படியாக தொடர்ந்திடும் தொடர்கதை மிக அதிகம். ஆள இவர்களுக்கு எல்லாம் ஒரு தகுதியும் இல்லை.

 ஜெவுக்கும் எம்ஜிஆருக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் தான் மக்கள் வாக்களித்தனர். இப்போது ஜெ இல்லாத நிலையில் இந்த ஆட்சிக்கு அந்தக் கட்சியைச் சார்ந்தார் சொந்தம் கொண்டாடுவதும் முறையல்ல. சரியான அணுகுமுறையாக இருந்தால் அவர்கள் தாமாகவே சேர்ந்து அம்மா இல்லாத நிலையில் ஆட்சி , பதவி, எல்லாம் வேண்டாம் என வெளியேறி ஆட்சி துறந்து மறு தேர்தலுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.ஜெ இல்லாவிட்டால் தாமும் செத்து விடுவோம் என்றோர் எல்லாம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அடுத்து சசிகலாவை நிரந்தர முதல்வர் , சின்ன அம்மா இது மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இளைய மகனையும் குறிக்கும் சொல்லாக சக்திகள் கருத இப்போது இந்த சின்ன அம்மா தமது தெய்வம் என காலில் விழுந்து கும்பிடுவது, அவரை முதல்வர், பொதுச்செய்லாளர் என ஜெவின் சிம்மாசனத்தில் வைத்துள்ளனர். அம்மாவிடம் பால்குடி மறவாத உண்மையான மகவுகள் தமிழகத்தில் எண்ணற்ற கணக்கில் உண்டு. பாலுக்கு பதில் பீர் குடித்த மகன்கள் அல்லவா? அதையும் அம்மாதானே அனைவர்க்கும் தாராளமாக்கினார்.

அது மட்டுமின்றி இவர்கள் ஆட்சியின் தெளிவை நாம் இவர்களின் தலைவரை வைத்து தெரிந்து கொள்ளலாம். மேலும் மோடியின் காவலர்கள் சொல்கிறார்கள் இராகுல் இராபர்ட் வடேராவைப் பற்றி பேசாதிருந்தவர் இப்போது மோடியை பிர்லாவிடம், சகரா குழுமத்திடம் பெற்ற நிதி விவரங்களை புள்ளி விவரங்களை தருகிறார். இந்தக் குழந்தை இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் அதை இதை ஏன் இவர் பேசுகிறார் என்கிறார்கள் இவரை பகுதி நேர அரசியல்வாதி என்றெல்லாம் கேலி செய்தபடி...ஏன் அப்போது பேசாதிருந்தவர் இப்போது பேசினால் என்ன? பேசுவது உண்மையா பொய்யா என்று சொல்வதை விட்டு விட்டு தேவையில்லாமல் தனி மனித கேலியும் நக்கல்களுக்கும் என்ன அவசியம்?

எனவே தமிழக அரசு இன்றிருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி கூட இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அதுவும் மோடி ஆட்சி ஆகிவிடும். மக்கள் ஆட்சி ஆகாது எனவே உடனே விரைந்து மறுபடியும் ஒரு மாநில அரசு அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதுதான் சரியாக இருக்கும்.

மோடி பிர்லா, அம்பானி, சகாரா கூட்டுக் கொள்ளை பற்றி சொல்லப் போனால அவர்களும் ஆட்சியில் இருக்கக் கூடாதாவர்தான் ஆனால் இப்படியேதான் எல்லாம் இருக்கின்றனர் அப்படிப் பார்த்தால் இங்கு எவருக்குமே ஆள அருகதை இல்லை. நல்ல மனிதரை தேடிப் பிடியுங்கள்.

ஆனால் இந்த நாட்டு அரசியலமைப்பில் அப்படி திடீரென ஒரு எழுச்சி ஏற்பட்டு புதியவர்கள், நல்லவர்கள், தியாகிகள் ஆட்சிக்கு வருவார்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியும் புதிராகவும் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.