Wednesday, December 21, 2016

தமிழக அரசைக் கலைத்து விட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்: கவிஞர் தணிகை

தமிழக அரசைக் கலைத்து விட்டு புதியதாக தேர்தல் நடத்த வேண்டும்: கவிஞர் தணிகை
Image result for chief secretary ram mohan rao


மோடியின் ஆட்சியின் வண்டவாளம் வெளியில் வர ஆரம்பித்து விட்ட நிலையில் அவர் கம்பி கட்டி அதில் ஆடி வரும் தமிழக ஆட்சியும் ஜெவுடன் செத்து விட்டது. எனவே நடைபெறும் இந்த ஆட்சி துளியும் மக்களுக்கு தொடர்புடையதல்ல... ஜெ அப்பல்லோவின் மரணத்தருவாய் இருந்த நிலையில் மருத்துவமனை லீலைகளை கடசி வரை வெளியிடாமல் வெளிப்படைத் தன்மை இல்லாத ஒன்றே போதும் இது ஆட்சி அல்ல என்பதற்கு அதற்கும் மேலாக தலைமைச்  செயலகத்திலும், தலைமைச் செயலரின் வீட்டிலும் புகுந்த சி.பி.ஐ சோதனையும் அதன் வெளிச்சமும் அதை பட்ட வர்த்தனமாக தெளிவு படுத்தி விட்டது.இராம் மோகன் ராவின் மகனே முறைகேடுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.மேலும் கிரானைட் ஊழலும் மணல் ஊழலும் இப்படியாக தொடர்ந்திடும் தொடர்கதை மிக அதிகம். ஆள இவர்களுக்கு எல்லாம் ஒரு தகுதியும் இல்லை.

 ஜெவுக்கும் எம்ஜிஆருக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் தான் மக்கள் வாக்களித்தனர். இப்போது ஜெ இல்லாத நிலையில் இந்த ஆட்சிக்கு அந்தக் கட்சியைச் சார்ந்தார் சொந்தம் கொண்டாடுவதும் முறையல்ல. சரியான அணுகுமுறையாக இருந்தால் அவர்கள் தாமாகவே சேர்ந்து அம்மா இல்லாத நிலையில் ஆட்சி , பதவி, எல்லாம் வேண்டாம் என வெளியேறி ஆட்சி துறந்து மறு தேர்தலுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.ஜெ இல்லாவிட்டால் தாமும் செத்து விடுவோம் என்றோர் எல்லாம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அடுத்து சசிகலாவை நிரந்தர முதல்வர் , சின்ன அம்மா இது மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் இளைய மகனையும் குறிக்கும் சொல்லாக சக்திகள் கருத இப்போது இந்த சின்ன அம்மா தமது தெய்வம் என காலில் விழுந்து கும்பிடுவது, அவரை முதல்வர், பொதுச்செய்லாளர் என ஜெவின் சிம்மாசனத்தில் வைத்துள்ளனர். அம்மாவிடம் பால்குடி மறவாத உண்மையான மகவுகள் தமிழகத்தில் எண்ணற்ற கணக்கில் உண்டு. பாலுக்கு பதில் பீர் குடித்த மகன்கள் அல்லவா? அதையும் அம்மாதானே அனைவர்க்கும் தாராளமாக்கினார்.

அது மட்டுமின்றி இவர்கள் ஆட்சியின் தெளிவை நாம் இவர்களின் தலைவரை வைத்து தெரிந்து கொள்ளலாம். மேலும் மோடியின் காவலர்கள் சொல்கிறார்கள் இராகுல் இராபர்ட் வடேராவைப் பற்றி பேசாதிருந்தவர் இப்போது மோடியை பிர்லாவிடம், சகரா குழுமத்திடம் பெற்ற நிதி விவரங்களை புள்ளி விவரங்களை தருகிறார். இந்தக் குழந்தை இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் அதை இதை ஏன் இவர் பேசுகிறார் என்கிறார்கள் இவரை பகுதி நேர அரசியல்வாதி என்றெல்லாம் கேலி செய்தபடி...ஏன் அப்போது பேசாதிருந்தவர் இப்போது பேசினால் என்ன? பேசுவது உண்மையா பொய்யா என்று சொல்வதை விட்டு விட்டு தேவையில்லாமல் தனி மனித கேலியும் நக்கல்களுக்கும் என்ன அவசியம்?

எனவே தமிழக அரசு இன்றிருக்கும் நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சி கூட இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அதுவும் மோடி ஆட்சி ஆகிவிடும். மக்கள் ஆட்சி ஆகாது எனவே உடனே விரைந்து மறுபடியும் ஒரு மாநில அரசு அமைப்பதற்கான தேர்தலை நடத்துவதுதான் சரியாக இருக்கும்.

மோடி பிர்லா, அம்பானி, சகாரா கூட்டுக் கொள்ளை பற்றி சொல்லப் போனால அவர்களும் ஆட்சியில் இருக்கக் கூடாதாவர்தான் ஆனால் இப்படியேதான் எல்லாம் இருக்கின்றனர் அப்படிப் பார்த்தால் இங்கு எவருக்குமே ஆள அருகதை இல்லை. நல்ல மனிதரை தேடிப் பிடியுங்கள்.

ஆனால் இந்த நாட்டு அரசியலமைப்பில் அப்படி திடீரென ஒரு எழுச்சி ஏற்பட்டு புதியவர்கள், நல்லவர்கள், தியாகிகள் ஆட்சிக்கு வருவார்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியும் புதிராகவும் இருக்கிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

No comments:

Post a Comment