Saturday, December 31, 2016

விநாயகா பல் மருத்துவக் கல்லூரியும் வேம்படிதாளம் அரசுப் பொது மருத்துவ மனையும்:கவிஞர் தணிகை

விநாயகா பல் மருத்துவக் கல்லூரியும் வேம்படிதாளம் அரசுப் பொது மருத்துவ மனையும்:கவிஞர் தணிகை

Related image


வேம்படி தாளம் அதிகம் நெசவுத் தொழிசல் செய்யும் மக்கள் நிரம்பிய ஊர். இங்கு ஒரு தாலூகா அளவில் இருக்கும் பொது மருத்துவ மனை நல்ல முறையில் மக்களுக்கு மருத்துவம் செய்து வருகிறது.இதில் விநாயகா சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் மருத்துவப் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

இது பற்றி ஏன் குறிப்பிட வேண்டுமெனில் எனக்கும் இந்த இடத்திற்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டு சுமார் 9 மாதங்கள் நிறைவு பெறுகிறது. இந்த பொது மருத்துவ மனையை பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது 1967ல் திறந்து வைத்திருக்கிறார். வேம்பு அடி தாளம்...வேப்ப மரத்தின் அடி விழுதுகளில் அமைந்த ஊர் இது என ஊர் பேர் காரணப் பெயராக அமைந்துள்ளது

பொதுவாகவே அரசுப் பொது மருத்துவமனைகள் என்றாலே மக்களுக்கு சென்று பார்க்க ஒரு அச்சம், வெறுப்பு, அருவெருப்பு, இருக்கும். ஆனால் இங்கு அப்படி எல்லாம் இல்லை. இப்போது இதன் மருத்துவ அலுவலராக மருத்துவர் நவீன் பணியாற்றுகிறார். அத்துடன் மரு.ராஜன்,குழந்தைகள் மருத்துவர்: ரவி, சித்த மருத்துவர் ரவி,மருத்துவர் லதா, ஆகியோருடன் தாதியர்: சங்கீதா, இன்னும் எனக்கு பேர் தெரியாத 3 நர்ஸ்கள், திருநிறைச் செல்வி, லாவண்யா என்னும் சிட்டுக் குருவிகளைப் போல சுறு சுறுப்புடன் பணி புரியும் பொதுமக்களுடன் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வரும் சிறு நீர் சர்க்கரை, இரத்த அளவில் உள்ள சர்க்கரை அறிந்து ஆய்ந்து சொல்லும் சிறு பெண்கள், சித்தமருத்துவ பார்மஸிஸ்ட் கலாவதி இப்படி அனைவரும் நட்பு முறையில் பணியாற்றி வருகின்றனர். டைட்டன் உதவியாளராக இருந்து பணி புரிய கம்பவுண்டர் மற்றும் தாஸ், அம்பிகாபதி உதவியாளர்கள் பம்பரமாக சுழழ...

சேலத்தில் இருந்து கூட இங்கு வந்து மருத்துவம் பார்த்து செல்லுமளவு நன்றாக செயல்படும் இந்த மையத்தில் பல பிரிவுகள் நன்கு செயல்பாட்டில் உள்ளன. குழந்தைகள்  , பொது மருத்துவம், சித்த மருத்துவம், பிரசவம், பல் மருத்துவ பிரிவு ஆகிய தனிப் பட்ட சிறப்புப் பிரிவுகளும் உண்டு. சர்க்கரை நோய்க்கு சிறப்பாக உடல் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டு அதற்கும் மருத்துவம், நாய்க்கடி, அவசர சிகிச்சை இப்படி எல்லாம். நலமும் பேணப்பட்டு வருகின்றன.

Image result for vinayaga dental college salem

நாங்கள் விநாயகா பல் மருத்துவக் கல்லூரியின் சமுதாய மருத்துவப் பிரிவின் கீழ் பிரதி வாரம் செவ்வாய், வியாழன் ஆகிய இரு நாட்களிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒரு5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினராக சென்று அங்கு முகாம் செய்து பல் பரிசோதனை, வாய் தாடை, ஈறு  தொடர்பான நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன் பல் எடுத்து மருந்துகளும் தருகிறோம்... அதற்காக ஒரு மருத்துவர், இரண்டு பயிற்சி மருத்துவர்கள், ஒரு நர்ஸ் ஆகியோருடன் முகாம் அலுவலராக அடியேனும் சென்று பணிச்சேவை செய்து வருகிறோம். இதற்கென ஒரு வாகனம், அதற்கு ஒரு ஓட்டுனர், எரிபொருள் ஆகியவற்றை விநாயகா பல் மருத்துவக் கல்லூரி வழங்கி செயலாற்றி வருகிறது.

இந்த பணிகள் சிறக்க எமது கல்லூரி முதல்வர் : ஜா.பேபிஜான், சமுதாய மருத்துவப் பிரிவுத் தலைவர் மருத்துவர்: என்.சரவணன் ஆகியோர் உறுதுணையாக இருந்து வழிகாட்டி வருகின்றனர்.

இது மட்டுமின்றி : விநாயகா பல் மருத்துவ சிறப்பு முகாம்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார், மற்றும் அரசுப் பள்ளிகள், பல்வேறுபட்ட வேண்டுகோளுடன் பல நிறுவனங்களுக்கும் சேவையாற்றி வருகிறது. இந்த முகாம் நோயாளிகளுக்கு கல்லூரி வளாகத்திலும் இலவச மருத்துவம் செய்யப் படுகிறது.

இது மட்டுமின்றி;: வேம்படிதாளம், பாலமலை, அன்பு இல்லம் சேலம் ஆகிய இடங்கலிலும் ரெகுலர் முகாம்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வேம்படிதாளத்தில் வாரம் இருமுறை, அன்பு இல்லத்தில் வாரம் ஒரு முறை புதன் கிழமை, பாலமலையில் பிலச்சிங்க் யூத் மிஷன் அமைப்புடன் சேர்ந்து ஒவ்வொர் மாதமும் கடைசி ஞாயிற்றுக் கிழமை அங்கு சிறப்பு முகாம் செய்து பல் சிகிச்சை செய்யப்படுகிறது.

காலத்தின் முன் இதை எல்லாம் அவசியம் பதிவு செய்ய அவசியமாகிறது. இதை எல்லாம் ஒருங்கிணைக்கும் பணியை அடியேன் 2016ல் பெற்றமைக்கு கல்லூரியின் முதல்வர் ஜா.பேபி ஜானும், நிர்வாக அலுவலர்: நடராஜன் அவர்களும் முன் காரணமாக அமைந்தனர். இந்தக் கல்லூரிக்கு நானும் பல் மருத்துவம் செய்து கொள்ளவே சென்றேன். நிர்வாக அலுவலர் : 1. பாபு முரளியே எமக்கு முதல்வர் பற்றிச் சொல்ல...அவரை நான் சந்திக்க...பாதை 2016ல் மறுபடியும் மக்கள் பணியில் இணைந்து இப்போது 2017க்கு எமை , நமை எடுத்து சென்றபடி இருக்கிறது..

காலத்தின் வல்லமைக்கு முன் சிரம் தாழ்த்தி கரம் கூப்பியபடி வணங்கி நிற்கிறோம். சேவையை நாம் விட்டபோதிலும் அது நம்மை விடாமல் தொடர்வதற்கு இயற்கையை வணங்கி நிற்கிறோம்

பி.கு: கல்லூரியில் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்கள் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு பல் மருத்துவம் இலவசமாக வழங்க முதல்வர், நிர்வாக அலுவலர்கள்,அடியேன் ஆகியோர் முயற்சி எடுத்துக் கொண்டு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி அனைவரின் ஒப்புதலும் பெற்று இலவச மருத்துவம் வழங்கி வருகிறோம்.இச் சமுதாயம் பயன்பெறவே. இளைய சமுதாயம் பற்கள் உறுதியாகவே வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். இதைப் பார்ப்பார், படிப்பார் அனைவரும் இதை தேவைப்படுவார்க்கு அறிவுறுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொண்டு

இந்த 2016டன் பழையன கழிதலும் வரும் 2017ல் புதியன புகுதலுமாய் அனைவரின் வாழ்விலும் ஒளி உருவாகிட வாழ்த்துகள் சொல்லி
மகிழ்கிறேன். வணக்கம். நன்றி.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எனது 1350 பதிவுகளுடன் marubadiyumpookkum.wordpress.com வேர்ட்.பிரஸ்.டாட்.காம் முடக்கப்பட்டது

முடியவே முடியாது
என்ற
களங்களில் தான்
என் வெற்றியே நிகழ்ந்திருக்கிறது...

பூக்களை உதிர்த்துவிட்டாலும்
செடி காத்திருக்கிறது
அது
மறுபடியும் பூக்கும்


 marubadiyumpookkum.blogspot.com என இப்போது பிலாக்.ஸ்பாட்.டாட்.காமில் வலைய வருகிறது. எப்போதும்போல காலப்போக்கில் இந்த தளமும் உங்கள் அனைவருடன் இணையும் என நம்புகிறேன்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.


No comments:

Post a Comment