Friday, October 28, 2016

ஒரே இடத்தில் இரு வேறு நேரில் கண்ட சாலை விபத்தும் பால் குட விளைவுகளும்: கவிஞர் தணிகை

 ஒரே இடத்தில் இரு வேறு நேரில் கண்ட சாலை விபத்தும் பால் குட விளைவுகளும்: கவிஞர் தணிகை

Image result for yesterday accident in front of vinayaka bike and car on highway


வேம்படிதாளம் மருத்துவ மனை முகாம் பணி முடித்து சுமார் 12 மணிக்கு எங்களது வாகனம் கல்லூரி வளாகத்துள் நுழைய முனைகையில் இடி இடித்தது போன்ற ஒரு பெரும் சத்தம்.வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு பின் சென்று பார்த்தோம்.ஒரு ஆடி கார் சாலையில் முன்புறம் சேதமாகி கண்ணாடி எல்லாம் உடைந்து, இரு சக்கர வாகனம் முன்னால் பறக்க, பின்னால் அந்த வண்டியில் வந்த இருவரும் பின்னால் சாலை செடிகளிடை வீழ்ந்து கிடக்க...

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இந்த 7 மாதத்தில் பல விபத்துகளை கல்லூரியின் எதிரே வீரபாண்டி நெடுஞ்சாலையில் கண்டு விட்டேன். விநாயகா தலைமை அலுவலகத்தின் எதிரே என்றும் சொல்லலாம். ஆனால் இன்று பார்த்தது மிகவும் சினிமா பாணியில் வண்டியும் விபத்தில் சிக்கிய பைக்கின் 2 நபர்களும் சுமார் 10 அடி உயரே எழும்பி சாலையின் வலப்புறம் உள்ள செடிகள் நிரம்பியிருக்கும் குழிப்பகுதியில் விழுந்துள்ளனர். இவர்களின் பைக் முன்னால் சென்று விழுந்து கிடந்தது.இருவருக்குமே மண்டையில் நல்ல அடி காயம், இரத்தம் வழிந்து ஓட... வேகம் , வேகம் , ஒரே வேகம். தடையில்லா வேகம். பெரும் சோகம்.

Image result for ariyanoor highway at vinayaga dental college

ஒருவர் காலமாகிவிட்டார் மற்றொருவர் நிலையோ கவலைக்கிடம்.கேரளாவிலிருந்து மாண்ட் போர்ட் ஏற்காடு பள்ளிக்கு வந்து தமது பிள்ளைகளை தீபாவளி விடுமுறைக்கு அழைத்து செல்ல வந்த ஆடி கார் வெகு வேகமாக வர, குறுக்கே பாய்ந்த இந்த பைக் தூக்கி விசிறி எறியப்பட்டது.

காரில் இருந்தவர்களுக்கு ஒரு சேதமும் இல்லை. ஆனால் அந்த பைக்கில் வந்தவர்கள் இனி வாழ்வதே கூட அரிதுதான். முன்பே சொன்னபடி ஒருவர் அங்கேயே...மற்றொருவர் மிகவும் மோசமான நிலையில்..

108ஐ அழைத்தோம். முதல் உதவி இல்லாத வண்டி வந்து சேர்ந்து , அதில் இரு நபரையும் தூக்கி சென்று போட்டோம்.

அதை வேடிக்கை பார்த்த கூட்டம் சேரச் சேர ஒரு கார் திடீரென்று பிரேக் போட ஒரு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த கர்ப்பிணிப் பெண் அந்த வண்டியில் மோதி கீழ் விழுந்து இரத்தக் கசிவு...
Image result for yesterday accident in front of vinayaka bike and car on highway


நிலை இப்படி எல்லாம் இருக்க நெய்காரப்பட்டியில் உள்ள ஒரு கோயிலில் இதன் முதல் நாளில் அம்மாவுக்காக பால்குடம் ஏந்திய கூட்டத்தில் ஒரு 55 வயது மதிக்கத் தக்க மனிதர் ஒருவர் கீழே விழுந்து இறந்து விட்டார்.

அந்த இடத்திலும் நாங்கள் அன்று சென்றபடியும் வந்தபடியும் இருந்தோம். நவம்பர் 14 குழந்தைகள் தினவிழாவிற்கு பள்ளிகளுக்கு அழைப்பிதசழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது.கேள்விப்பட்டது வேறு. . ஒரு குடம், சேலை,ஒரு மதிய உணவு, 200 ரூபாய் என கூட்டம் சேர்த்தி டெம்போவில் பிற பகுதிகளில் இருந்தும் ஆள் அழைத்து வரப்பட்டனர் அப்படி வந்தவருள் ஒருவரே அப்போது இறந்தவர்.ஒரு நாளைக்கு ஆசைப்பட்டு இறப்பை அடைந்தவர் இது போல் எத்தனையோ?

இந்த 2 சம்பவங்களுமே தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் விளைந்த விபத்துகள். ஆபத்து தவிர்க்க எச்சரிக்கை அவசியம், ஒரு மயிரிழையில், ஒரு சிறுக் கீற்றுப் பொழுதில் மரணத்தை தழுவிடும் ஆபத்துகள் இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமல்ல சாலையில் சென்றாலே நல்ல கவனத்துடன் சென்று செல்ல வேண்டிய ஊருக்கு சென்றடைவீராக.

சில நாளுக்கும் முன் எமது ஊர் இளைஞர் ஒருவர் கூட இரு சக்கர வாகனத்தில் சென்றவர் புளிய மரத்தில் அடித்து கண்கள் வெளித் தெறித்து ஓட மாண்டது...மற்றொரு விபத்தில் பாதை இருளில் புலப்படாமல் வண்டி மரத்தில் அடித்து வண்டி ஒரு புறமும், ஓட்டிச் சென்ற இளைஞர் மறுபக்கமும் விழுந்து கிடந்து அப்பாவுக்கு விபத்தாகிவிட்டது என செல்பேசியில் சொல்லி விட்டு யாருமற்ற ஆளரவமற்ற புதரில் அரை மணிக்கும் மேல் கிடந்து உயிர் இழந்த மனிதர் இப்படி நிறைய விபத்தாய் கேள்விப்படுகிறோம். பார்க்கிறோம்.

சாலையை கவனத்துடன் கையாளவும். நமது உயிர் நமது கையில். காலனின் பையில் அல்ல.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Thursday, October 27, 2016

வேள்வித் தவம்.

துளித் துளியாய்

வாசனைத் திரவியம்

தீர்ந்து கொண்டிருக்கிறது

தணிகை வாழ்வு(ம்)



Image result for life shortens day by day





மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

Image result for life shortens day by day


Image result for life shortens day by day


Wednesday, October 26, 2016

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு குழந்தைகள் தினம் நவம்பர் 14ல்: கவிஞர் தணிகை

பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு குழந்தைகள் தினம் நவம்பர் 14ல்: கவிஞர் தணிகை


Image result for november 14 childrens day

விநாயகா மிஷன் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரி வரும் நவம்பர் 14 அன்று அன்றைய தினம் பல்மருத்துவ சிறார் தினமாகவும் இருக்கிறபடியால் மிகவும் அரியதொரு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறது.

அது சமயம்:பல போட்டிகளை பள்ளிப் பிள்ளைகளுக்கு முதலாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை நடத்துகிறது.

சேலம் மாவட்டம் சேலம் அருகே உள்ள அரியானூரில் உள்ள விநாயாகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியில் இந்த விழா நடைபெறுகிறது.

ஆர்வமுள்ள பள்ளிகளின் பிள்ளைகள் , பள்ளிகள் வழியாகவும், தாமாகவும், தமது பெற்றோர் உடனும் வந்து கலந்து கொள்ளலாம்.

1. சிறந்த சிரிப்புக்கான பரிசு

2. பேச்சுப் போட்டி

3. வினாடி வினா

4. ஓவியம் வரைதல்

5. பொருத்தமான விடையைத் தேர்வு செய்தல்

போன்ற அறிவு சார் மற்றும் உடல் திறன் சார் போட்டிகளும் நடத்த உள்ளது. அது சமயம் அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிப் பிள்ளைகளையும் கலந்து கொள்ள அழைக்கிறோம். போட்டிகளில் வெற்றி பெறுவோர்க்கு சிறப்பான பரிசுகளும், கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் மதிய உணவும் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கலந்து கொள்வோர் அனைவர்க்கும் பல் பரிசோதனை, பராமரிப்பு, பாதுகாப்பு ஆலோசனைகள் இலவசமாகவே வழங்கப்படும் என்பதை கல்லூரி நிர்வாகம் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Image result for father of dental science

நிகழ்ச்சி கல்லூரியின் சிறார் பல் மருத்துவத் துறை சார்பாக கல்லூரி முதல்வர் பேபி ஜான் அவர்களின் சீரிய அனுமதியுடன் துறைத்தலைவர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களின் வழிகாட்டுதலுடன்
நடைபெறுகிறது. நிகழ்ச்சியை மருத்துவப் பேராசிரியர் ரமேஷ் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்த மருத்துவ ஆசிரியர் ஸ்டீபன், மற்றும் பேராசிரியர் வினோலா, ஆகியோருடன் டாக்டர்: ராஜ்குமார்,டாக்டர்கள் பிரதீப் டேனியல், சூரஜ், மல்லிகா, மற்றுமுள்ள மருத்துவர்கள் குழு போட்டிகளை நடத்துகிறது.

நீங்கள் அந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியருடன் கல்லூரியின் தொடர்பு எண்: 04298‍ ~ 247773 என்ற எண்ணிலும் ராஜ்குமார் : 9894855919 என்ற எண்ணிலும் 8015584566  என்ற எனது எண்ணிலும் கூட தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்:


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Tuesday, October 25, 2016

இளம்பிள்ளை,பெருமாக் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை.

இளம்பிள்ளை,பெருமாக் கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பல் மருத்துவ முகாம்: கவிஞர் தணிகை.

Displaying IMG_20161025_103831.jpg

விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் பல் பரிசோதனை முகாம் அக்டோபர் 20,25 ஆகிய நாட்களில் இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும், பெருமாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியிலும் சிறப்பாக நடைபெற்றது.766 சிறுவர் சிறுமியரும் மற்றும் பல ஆசிரியர்களும் பலனடைந்தனர்.
Displaying IMG_20161025_111740.jpg


தமிழக அரசின் அரசுப்பள்ளிகளில் அதுவும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் 455,311 பிள்ளைகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை இடம் பெற்று காணப் படுவதென்பது மிகவும் அரிது இக்காலத்தில்.

அப்படிப்பட்ட பெருமையை உடையதாக இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும், பெருமாக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும் விளங்குகிறது.

ஏற்கெனவே நாங்கள் ஒரு முறை இந்தப் பள்ளிப் பிள்ளைகளுக்காக பற்களின் பரிசோதனை முகாம் நடத்த திட்டமிட்டோம். ஆனால் சில காரணங்களால் அது ஒத்தி வைக்கப் பட்டது. ஒத்தி வைக்கப் படுகிறது என்றாலே நமது அகராதியில் அது மேலும் சிறப்பாக, செம்மையாக, ஆழமாக ஊடுருவி செய்யப் படும் என்பதே.

Displaying IMG-20161021-WA0002.jpg

இளம்பிள்ளை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாதேஸ்வரி , பெருமாக்கவுண்டம்பட்டி தலைமை ஆசிரியர் கலாராணி மற்றும் அங்கிருந்த கணினி ஆசிரியர் முதற்கொண்டு அனைத்து ஆசிரியப் பெருமக்களும் நன்கு ஒத்துழைத்தனர்

எமது விநாயகா பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபிஜான் அவர்கள் அனுமதித்ததன் பேரில், சமுதாயத் துறைத் தலைவர் டாக்டர்.என்.சரவணன் அவர்களின் வழிகாட்டுதலுடன் நாங்கள் சிறந்த 15 மருத்துவர்கள் கொண்ட குழுவினருடன்  அந்தப் பள்ளிகளுக்கு 2 நாள் சென்று இந்த முகாமை நிறைவு செய்தோம்.


Displaying IMG_20161025_103902.jpg

பள்ளிப் பிள்ளைகளுக்கு பற்கள் பரிசோதனை செய்யப்பட்டதுடன், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் சிறுவர் சிறுமியர்க்கு:டாக்டர் துர்கா, டாக்டர் துளசிமணி மற்றும் டாக்டர்கள் அஜின்ஸ், வீரமணிகண்டன்,விநீஸ்,கீர்த்தனா,அனுபமா,அபிதா, அனிதா, அஞ்சலி,மற்றும் சிறுவர் பிரிவை சார்ந்த 2 மருத்துவர்கள் ஆகியோர் அக்கறையுடன் சேவைப்பணி செய்தனர்.

Displaying IMG_20161025_103843.jpg

டாக்டர் அபிதா, டாக்டர் துளஸிமணி ஆகியோர் பிள்ளைகளுக்கு பற் பாதுகாப்பு பராமரிப்பு ஆலோசனைகளும் வழங்கினர்.மேலும் சுமார் 125 குழந்தைகளை தேர்வு செய்து உடனடி மருத்துவம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வழியாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பெருமாக்கவுண்டம்பட்டி பள்ளியில் வரும் குழந்தைகள் தினத்தன்று கல்லூரி, அழகான சிரிப்பு, வினாடிவினா, பேச்சுப்போட்டி, ஓவியம் வரைதல்,பொருத்தமான விடை தேர்வு செய்தல் இன்னபிற போட்டிகளை நடத்துகிறது அதில் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பும் விடுக்கப்பட்டது முகாம் அலுவலர் மூலம்.
Displaying IMG_20161025_103851.jpg



மேலும் இது போன்ற சேவைப் பணி தொடர ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வரும் முதல்வரைப் பற்றியும் , துறைத்தலைவர் பற்றியும் மற்றும் கலந்து கொண்ட அத்தனை மருத்துவர்களின் சேவைப்பணி பற்றியும் பாராட்டி நிகழ்வை ஒருங்கிணைத்தேன் வாய்ப்பளித்த ஆசிரியர்களுக்கு சில சொற்களில் நன்றி செய்தும்...


Displaying IMG-20161021-WA0001.jpg

முகாம் அறிக்கையாக இந்தப் பதிவு இருக்கிறது

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எப்போதோ எழுதியதன் மீட்சி

ஒரு ஆசை:
‍‍‍‍____________
மருத்துவ மனைகள்

மதுபானக் கடைகள்

சினிமாக் கொட்டகைகள்

காவல் நிலையங்கள்

காலி செய்யப்பட வேண்டுமென்று!


Image result for want

ஒரு கனா:
___________

செலவின்றி
தாமதமின்றி
நீதிமன்றங்களில்
ஏழைக்கு
நீதி நியாயம்
கிடைக்குமென்று!

Image result for dream


ஒரு வினா:
_______________

இந்தியாவில்
எப்போது
ஊழலற்ற‌
மக்களாட்சி மலருமென!
Image result for dream

ஒரே பதில்
___________

வீண் கற்பனை
போதும் நிறுத்து.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எப்போதோ எழுதியதன் மீட்சி


Image result for dream




Sunday, October 23, 2016

மைக்கேல் டி ஜோசப் குன்ஹாவிற்கு இழைக்கப் பட்ட அநீதி: கவிஞர் தணிகை

மைக்கேல் டி ஜோசப் குன்ஹாவிற்கு இழைக்கப் பட்ட அநீதி: கவிஞர் தணிகை

Image result for kunha

மிகவும் அரிதான உழைப்புடன் ஒரு தீர்ப்பை முன் வைத்தார். அது சில வாரங்களில் முறிந்து போனது ஒரு 2 நிமிட தீர்ப்பால். குமாரசாமி என்ற நீதிபதி எனச் சொல்லிக் கொண்ட நபரால் , அவருக்கும் அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் நட்பூ இருந்தது என அன்று ஊடகங்கள் எழுதின.

இந்த தீர்ப்பு முரண்கள் உச்ச நீதிமன்றத்திடம் இறுதிக்காக வைக்கப் பட்டன. இதோ இதோ என்றார்கள், என்கிறார்கள். ஆனால் 20 ஆண்டுகளுக்கும் மேலான பின்னும் இன்னும் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கவில்லை. பன்னாட்டு நீதிமன்றம் தி ஹேக் இடம் விடப்பட்டிருந்தாலும் கூட ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் எனத் தோன்றுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மாண்பு மிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் ஒரு மாதத்துக்கும் மேல் அப்பல்லோவில் இருக்கிறார் உடல்நிலை 95 சதவீதம் தேறிய நிலையில். என செய்திகள்.இந்தப் பதிவு அம்மாவின் உடல் நிலைக்கு எந்த வகையிலும் தொடர்புடையதாக கருதி விடாதீர். இது முற்றிலும் இந்திய நீதி பரிபாலனம் பற்றியதே.

இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலீவர் அம்மையாரின் ஒரு வானொலிப் பேட்டி காதில் விழுந்தது. இந்த நாட்டின் தீண்டாமை இன்னும் நிலவ காங்கிரஸ் அரசே காரணம் , அது சுதந்திரம் அடைந்த பின் 70 ஆண்டுகளில் பெரும்பாலும் அதுவே ஆட்சியில் இருந்தது என்றும், ஸ்டாலின் தி.மு.க கூட்டும் காவிரி நீர் பிரச்சனை தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் உறுதி பட அறிவித்திருக்கிறார்.

கர்நாடகாவின் ஒற்றுமையும், தமிழ் நாட்டின் வேற்றுமையும் இதிலிருந்து தெரிந்து கொள்க.

இவர்களின் தற்கால  மத்திய அரசின் ஆட்சியில் எப்போது எப்படி இந்த தீர்ப்பு வரும் என எவரும் கேட்கப் போவதில்லை. இந்த கருத்துக்குள் புகவே போவதில்லை. ஏழைக்கும் பாளைக்கும் சட்டம் , நீதி எல்லாம் கயிற்று சுருக்காகும். ஆண்டவர்களுக்கும்,ஆள்பவர்களுக்கும் இவை கழட்டிய செருப்பாகும்.

Image result for kunha

எல்லாவற்றையும் ஆம் எல்லாவற்றையுமே நிதியால் வாங்கிட முடியும் நிரந்தர முதல்வர்களால்...காலத்தை வாங்கிட முடியுமோ? எல்லாம் மனித உயிர்கள்தானே? உயிருள்ள எல்லாவற்றுக்குமே முடிவு ஒன்று என்பது உண்டுதானே? இந்திய சரித நீதியை விட இயற்கை நீதியும், நியதியும் சீற்றமுடையவை.எப்போதும் போல் இருக்க முடியுமா? திரும்பவும் நாம் சராசரி நாட்களுக்கு திரும்ப முடியுமா? திரும்பவும் சிறுவர் சிறுமியாக ஓடி ஆடத்தான் முடியுமா? அல்லது பாடத்தான் முடியுமா? எனவேதான் சித்தர் சொல்லியபடி நாடாறுமாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்த தோண்டியை கவனமாக கையாண்டு சற்று இந்த பூவுலகில் உடல் நலச் சிறப்புடன் புன்னகை விரிப்புடன் சற்றே நீட்சி பெற்று சென்று சேர வேண்டுமாய், பதினாறும் பெற்று பெரு வாழ்வு பெரு வியாதி வாழ்வல்ல, வாழ வேண்டுமாய் இந்தப் பதிவு அனைவரிடமும் பிரார்த்திக்கிறது.

நல்ல மனிதர் செய்யும் உழைப்பை சிறப்பிக்காவிட்டாலும், சிறுமைப்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறது. அந்த மனிதர் செய்த உழைப்பை இந்த நாடு அவமானப்படுத்தி இருக்கிறது. உழைப்பை நேசிப்பவர்க்குத்தான் தெரியும் அந்த அவமானத்தின் வலி எத்தகையதென்று. சகாயத்தைக் கேட்டுப்பார்த்தாலும் அவருக்கும் அந்த வலி தெரியும். ஆயிரம் வழிகள் அனைவர்க்கும் தெரியும் அழிந்து போக.., உழைப்பு என்ற ஒரே வழிதான் உண்டு உயர்ந்து போக...

Image result for kunha

what about the apex court's verdict? regarding with all political related cases dealt with all political parties in India....?

Image result for kunha

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Saturday, October 22, 2016

பெர்முடா முக்கோணப்புதிர் கூட தெரிந்து விட்டது எங்க அம்மா உடல் நிலை புதிர் புதிராகவே: கவிஞர் தணிகை.

தமிழக முதல்வர் உடல்நிலை குறித்த செய்திகளில் ஏன் இத்தனை முரண்கள்: கவிஞர் தணிகை
Image result for bermuda triangle


டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் கவர்னர் வித்யாசாகர் ராவ் முதல்வர் இருக்கும் வார்டுக்கே சென்று பார்த்ததாகவும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அதன் பின் வழக்கப்படி மந்திரி பிரதானிகளை சந்தித்ததாகவும் செய்தி வெளியிட்டிருக்கிறது

Image result for bermuda triangle


சமயம் என்ற ஒரு கேள்விப்படாத நாளேட்டில் : வார்டுக்கே சென்று பார்த்தேன் நன்றாக பேசி வருகிறார்,அவரது உடல்நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி தெரிவித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாதத்துக்கும் மேலான நிலையில் தினமணி என்ன சொல்லி இருக்கிறது எனில்: சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் சுமார் 25 நிமிடம் சந்தித்துப் பேசியதாகவும், உடல் நிலை பற்றி கேட்டறிந்ததாகவும் ஆனால் செய்தியாளர்களை சந்திக்கவில்லை இது அவரின் 2 ஆம் வருகை என்று மட்டுமே குறிப்பிடுகிறது

தினத்தந்தி: ஒய்.எஸ். சவுத்ரி என்ற மத்திய மந்திரி சந்திர பாபு நாயுடு சார்பில் முதல்வரின் உடல் நிலை குறித்து விசாரிக்க வந்ததாகவும் அப்பல்லோகாருவையும், தம்பிதுரையுடன் பேசியதாகவும் 95 சதம் உடல் நிலை தேறிவிட்டதாகவும் சொல்லி உள்ளார்.

இப்படியாக...

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

செய்திகள் வழியே ஊடகத்தின் வழியே ஒன்றும் புரிந்து கொள்ளவோ விளங்கவோ இல்லையே...தானைத் தமிழகமே...
Image result for bermuda triangle

பெர்முடா முக்கோணப்புதிர் கூட தெரிந்து விட்டது எங்க அம்மா உடல் நிலை புதிர் புதிராகவே: கவிஞர் தணிகை.