Sunday, October 16, 2016

டாக்டர்.ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.அந்த நாள் நேற்று போல...கவிஞர் தணிகை.

கலாம் போல் யாமறிந்த மனிதரிலே இனிதாவது ஒருவர் எங்கும் காணோம்: கவிஞர் தணிகை

Image result for apj abdul kalam


விரும்பியவாறே நீ இறந்தாய் தலைவா!
யமனையும் உன் செயல் அழகால்
மயங்கச் செய்தாய்!

1931 அக்.15 முதல் 2015 ஜூலை 27 வரை
ஏகப்பட்ட சம்பவங்கள்
உன் வாழ்வில் விதம் விதமாய்
விதை விதையாய்...
வகைப்படுத்த...

என்றாலும் ஒன்று சொல்லலாம்...

நீ மறுபடியும்
நிற்க மாட்டேன்
என தமிழ்க் கலைஞரால்,
இந்தியக் கட்சிகளால்
இடறி விழுந்ததை சொல்லலாம்.

மேடையிலேயே கைத்தடி
தடுக்கி கீழே விழுந்தாற்போல...

உழைப்பில் அந்த உடல்
ஓய்ந்தது அய்யா!
பிற பிரபலங்கள் போல
நீ பிழைக்க அது ஓயவில்லை

நீ மண்ணில் நிலைக்க
அது உனை ஊன்றி சாய்த்து
என்றும் நீ இருக்க உதவியது...

நீ பள்ளி கல்லூரிகளை நேசித்தாய்.
நீ செய்ததை
சட்டத்துக்கு மீறிய புரட்சி அல்ல
 என்பார் எல்லாம்
உனை புரிந்து கொள்ளாமல்...

எங்கிருந்து அது ஆரம்பிக்க வேண்டும்
தெள்ளத் தெளிவாக தெரிந்ததால்;-அது
அங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் -என
புதிய விதைகளை  அங்கே விதைத்தாய்
எண்ணத்தை அள்ளி அங்கே தெளித்தாய்,
புரட்சிக்காரர் பற்றி கவலைப்படாமல்..

நீ வாசித்த வீணை
படித்த நூல்கள்
பிடித்த குறள்கள்
பேசிய சொற்கள்
எழுதிய எழுத்துகள்
எல்லாம் ஒளி பெற...

85th birth day 
மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.






Thursday, October 13, 2016

முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாமே அங்கு அப்படித்தான்: கவிஞர் தணிகை

முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி எல்லாமே அங்கு அப்படித்தான்: கவிஞர் தணிகை

சாதாரணமாக எளிமையான‌ முதல்வராக இருந்தவர் வரிசையில் காமராசர், அறிஞர் அண்ணா,ஜோதிபாசு,இப்படி நிறைய பேர் இந்தியாவில். அதில் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி போன்றோர் கேரளாவில் பெயர் பெறுகிறார்கள். அதைப் பற்றிய செய்தி அடிக்கடி வருகிறது. அச்சுதானந்தன் ரெயில்நிலையத்தில் சாதரணமாக காத்திருந்தது, உம்மன் சாண்டி பேருந்திலும் , ரயிலிலும் போவது என...

சாதாரண பயணியைப் போல் ரெயில் பயணம் செய்த கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி


கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ரெயிலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 160 கி.மீ தூரம் சாதாரண பயணியைப் போல் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ரெயிலில் எந்தவித பாதுகாப்பும் இன்றி 160 கி.மீ தூரம் சாதாரண பயணியைப் போல் ரெயிலில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே உம்மன் சாண்டி தான் ரெயில் பயணத்தையே அதிகம் விரும்புவதாகவும், இது போன்ற பயணங்களின் போது தான் மக்களிடையே நெருக்கமாக பழக முடியும் என்றும் கூறியிருந்தார்.

இதற்கு முன் கடந்த மே மாதம் ரெயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்று பஸ்ஸில் பயணம் செய்து ஒரு முக்கியமான அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டவர் சாண்டி.



இவர்கள் முதல்வர்கள்:முதல்வராக இருக்கத் தகுதி படைத்தவர்கள். நமது முதல்வரைப் பற்றி நான் ஏதும் சொல்லவில்லை.அவர் நிரந்தரமுதல்வராகவே இருக்கட்டும். வாழ்த்துகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை

நன்றி : மாலை மலர்

Wednesday, October 12, 2016

தேவி ரெமோ றெக்க: கவிஞர் தணிகை

தேவி ரெமோ றெக்க: கவிஞர் தணிகை

7 ஆம் தேதி வெளியான இந்த 3 படங்களையும் 8 அல்லது 9 ஆம் தேதிக்குள் பார்த்து முடித்து விட்டேன் உங்களுக்காக. ஆனால் அதை எழுதி பதிவிடத் தான் இன்று தான் நேரம் கிடைத்தது. இந்த 3 படங்களிலுமே முன் வரிசையில் சொன்னபடி தேவி முதலாம் இடம், ரெமோ இரண்டாம் இடம் றெக்க மூன்றாம் இடம் எனத் தெளிவாகச் சொல்லலாம்.

தேவி:
ஜென்டில்மேன் சிக்கு புக்கு ரயிலே பாடல் நினைவூட்ட அதே போல் ரயில் காடி, சல்மார் எனப் பாடல்கள் இன்றைய கல்லூரி மாணவர்கள் பாடித்திரிகிறார்கள்.

Image result for devi film prabhu deva


நல்ல மாடர்னான மனைவி வேண்டும் என்னும் மும்பையில் பணிபுரியும் கிருஷ்ணாவுக்கு தந்தை சொல்லை மீற தைரியம் எப்போதும் இல்லாததுடன் நிரம்ப‌ மரியாதை வேறு . விளைவு. கிராமத்துப் பெண்ணை தேவியை மணந்து ஆவிப் பெண்ணான ரூபியுடன் இணைந்து நன்றாக ஆடுகிறார். இரு ரோலும் தமன்னாவுக்கு நன்றாகவே இருக்கிறது.

படம் படு லைட்டாக இருப்பதாலும் இப்படி ஆவி அறைகளில் , வீடுகளில்,விடுதிகளில் இருப்பதை எல்லாம் மறுக்க முடியாத கருத்துகள் உள்ளதாலும் எதையும் போலி,பொய் என்று சொல்ல முடியாமல் சினிமாடிக்காக விளையாடி இருக்கிறார்கள். நடிகர்கள் நமக்கு இயல்பான பாத்திரங்களாக மாறாமலே.ஆமாம் ஆனாலும் இரசிக்க முடிகிறது.

நகைச்சுவையுடன் தமன்னாவும் பிரபுதேவாவும் நன்றாக செய்துள்ளார்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழித் தயாரிப்பு.ஆவிகள் நல்லதும் செய்யும் அதைப் பேய், பிசாசு என ஒதுக்கத் தேவையில்லை. பிரபு தேவா கிருஷ்ணா ரூபி ஆவியுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம், உறுதி மொழி நன்றாக உள்ளது. ஆனால் பொதுவாகவே ஆவிகள் நிறைய ஏமாற்றம் இயல்பு கொண்டவை. நல்ல ஆத்மாக்கள் சிலவே நன்மை செய்து மனிதர்க்கு வழிகாட்டுபவை. அப்படிப் பார்த்தால் ரூபி தனது இச்சையை தேவியை வைத்து நிறைவேற்றியும் கொள்கிறார் யாருக்கும் பெரிதான தீமை செய்யாமலே.

ஜாலியாக என்டர்டெய்ன்மென்டுக்காக பார்க்கலாம் வேறு சில பழைய படங்களை நினைவூட்டினாலும். பழைய கள் புதிய மொந்தையில்.

ரெமோ: ரெஜினா மோத்வானி:

Image result for remo

அடிப்படையில் எந்த வாழ்க்கை ஏணிகளையும் எட்டாத ஒரு இளைஞராக இருக்கும் எஸ்கே, ரெமோவாக , முதியவராக எல்லாம் செய்து டாக்டர் காவ்யாவை மணமுடிக்கத் தீர்மானிக்கும் கதை. காதல் அஸ்திரம் பயன்படுத்தி. இந்த டாக்டர் காவ்யாவுக்கு ஏற்கெனவே மணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் இல்லாத தகிடுதத்தம் எல்லாம் செய்து கடைசியில் குறிக்கோளை எட்டுவதாக கதை. நன்றாக வசூல் செய்வதாகவும் செய்தி. ஆனால் போலித்தனமான நம்பிக்கை ஏற்படுத்தும் சினிமா.

இது போன்ற சினிமாக்கள் இன்றைய இளைஞர்களை தவறான பாதைக்கே வழிகாட்டும். எதுவுமே இல்லாமலே எதுவுமே செய்யாமலே எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அடைந்து விடலாம் வேஷம் போட்டு என்பதான கதை. அதற்கு குரல் மாற்றிப் பேசுவதை வேண்டுமானால் உழைப்பு என்று சொல்லிக் கொள்ளலாமா? பொருளாதார பலத்தில் படு வீக்காக இருக்கும் இந்த ரெமோவுக்கு காதலிக்கு பிறந்த நாளுக்கு மட்டும் செலவு செய்து ஊரே வியப்படைய வைக்குமளவு வாண வேடிக்கை வான வேடிக்கையாக செய்ய முடிவதும் , குழந்தைகளுக்கு பெரிய மருத்துவ ஆறுதலாக இருப்பதும், நர்ஸ் பயிற்சி இல்லாமலே பிரதாப் போத்தன் என்னும் மருத்துவ மனையின் நிர்வாகியை ஏமாற்றி வேலைக்கு சேர்வதும் எல்லாமே அபத்தமாக இந்தக் கால இளைஞர்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதான தவறான நம்பிக்கை ஏமாற்றம் கொடுக்கும் என்ற சிற்றறிவுக்கு கூட எட்டாமல் பொழுது போக்கு என்ற பேரில் அவ்வை சண்முகி, (அதுவே ஆங்கில படத்தின் தழுவல் அது போல இது ஒன்று)

டாக்டர் காவ்யா எப்படி இந்த ரெமோ நர்ஸின் பேச்சைக் கேட்டு தமது வாழ்க்கையில் தடுமாறுகிறார். பேசி முடிக்கப் பட்ட திருமணத்திலிருந்து வெளியே வந்து காதல் என்ற ஒரே பிடிப்பல்லாத மரக்கலம் ஏறுகிறார் என்பதை நகைச்சுவையாக பொழுது போக்காக சொல்லி இருக்கின்றனர். சினிமாவாக பார்க்கலாம். துளியும் வாழ்க்கைக்கு அருகே வர முடியாத படம்.

பெண் வேடம் ரெமோவாக சிவகார்த்திகேயனுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதே போல எல்லா நடிகர்களும் பெண்ணாக நடிப்பதும், எல்லா நடிகைகளும் ஆணாக நடிப்பதும், பேய்க்கதைகள் தொடர்ந்து வருவதும் தமிழ் சினிமாவின் சுழற்சி முறையை காட்டுகிறது.

றெக்க:
விஜய் சேதுபதியை மக்கள் நாயகனாக ரஜினிகாந்தாக‌ பார்க்க மக்கள் ஆவலாக இருப்பதாக எண்ணி எடுக்கப் பட்ட சண்டைப்படம். காதலன் காதலியை சேர்த்து வைக்க திருமணத்தை நிறுத்தி கூட எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளும் பாத்திரம் சிவா என்னும் விஜய் சேதுபதிக்கு. அது அவருக்கு பெரும் எதிரிகளையும் பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி கடைசியில் மந்திரி மகள் பாரதி என்னும் லெட்சுமி மேனனையும் தூக்கி வரச் செய்து விடுகிறது. வழக்கம் போல நிறைய உள் கதைகள் தனித் தனிக் கதைகளாக பல படங்கள் எடுக்குமளவு.


Image result for rekka movie

செல்வமாக கிஷோர், சிஜா ரோஸ் என்னும் சினேகாவாக ஒரு நடிகை,சிவாவின் இளம்பருவ பள்ளிப் பருவத்தின் கதை,கண்ணம்மா என்னும் பாடல் 2 இடங்களில் இமான் இசையில் நெஞ்சுருக வைக்கிறது.நன்றாக இருக்கிறது.

கடைசியில் ஒரு கிரிக்கெட் பேட்டுடன் நூற்றுக்கணக்கானவர்களை இந்த சிவா அடித்து வீழ்த்த வருவதுடன் படம் நிறைகிறது. அதற்கும் முன்பே....எவ்வளவோ சொல்ல முடியாத சண்டைக்காட்சிகள். இதில் இருந்து நடிகர்களும் தமிழ் சினிமாவும் என்று வெளிவருவார்களோ என்று தர்ம சங்கடத்தை ஏற்படுத்துமளவு.

இலட்சுமி மேனன் அதாங்க நம்ம கும்கி நாயகி உடல் எடையில் கவனிக்க வில்லை. நன்றாக புசு புசு வென ஊதி இருக்கிறார். அதில் வேறு இவருக்கு நவீன உடை எல்லாம் பொருத்தமே இல்லாமல் ஏற்கெனவே நமது சினிமா உலகு இவரை நாட்டுப்புற அழகியாகவே வெளிக்காட்டி விட்டதால் எடுபடவில்லை.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.



In our tamil Cinema industry Diwali films releases are waiting for that moment on 28th.Oct.

Tuesday, October 4, 2016

ஊடகங்களின் கேடு கெட்ட ஊமைத்தனமும் ட்ராபிக் இராமசாமியின் துணிச்சலும்: கவிஞர் தணிகை

ஊடகங்களின் கேடு கெட்ட ஊமைத்தனமும் ட்ராபிக் இராமசாமியின் துணிச்சலும்: கவிஞர் தணிகை

Image result for media fails


இந்த பி.பி.சி, என்.டி.டி.வி, போன்ற சிறந்த ஊடகங்கள் கூட வாய் மூடி ஊமையாக தமிழக முதல்வரின் உடல் நிலையை தெளிவு படுத்தாமல் இருப்பது ஊடகங்களின் பெரும் வெட்கக் கேடு.இந்த அப்பல்லோ மருத்துவமனையை ஊடுருவி செய்தி தராத ஊடகங்களான சன் டிவி, புதிய தலைமுறை, இன்ன பிற தொலைக்காட்சி நிறுவனங்கள் எல்லாம் முதுகெலும்பற்றவை.

Image result for traffic ramaswamy


ஆட்சி என்றால் மக்களாட்சி என்றால், ஜனநாயக நாடு என்றால் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படவேண்டும். செயல்பட விட வேண்டும்.இங்கு உடல் நிலை கெட்ட தமிழக முதல்வரின் ஒரு படமோ காட்சிப் பேழையோ 13 நாட்களாகியும் ஒன்றுமே வெளிவரவில்லை.

எம்.ஜி.ஆரை விட பெரும் புகழ் படைத்தவரல்ல இந்த அம்மா. ஆனால் எதற்காக இப்படி இவரது உடல் நலம் கெட்ட‌ செய்தியை வராமல் தடைப்படுத்த வேண்டும் என மக்கள் ஐயப்பட்டுக் கொண்டு வெளியில் நடமாடவே யோசித்து வருகிறார்கள்.

உயர் நீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை டிசம்பருக்கு ஒத்தி வைத்திருப்பது ஒரு நல்ல செய்தி. தமிழக ஆளும் கட்சிக்கும், தமிழக ஆட்சிக்கும் ஒரு பின்னடைவு.

Image result for media fails


இந்நிலையில் உச்ச நீதிமன்ற சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு அருகாமைக்கு வந்து விட்டது ( அது வரும் 7 ஆம் தேதியாக இருக்கலாம் என்றும் பேச்சு இருக்கிறது .இந்தியாவில் தமிழகத்தில் எதுவும் நடக்கலாம், எதுவும் நடக்காமலும் இருக்கலாம், எதுவும் நடந்தால்தான் நிஜம்.) போலியாக செய்தி பரப்பியே உண்மை பிரச்சனையை சென்னை கடலூர் வெள்ளப் பிரச்சனைகளை மறக்கடித்தார்களே அப்படி  இப்படி என அந்த தீர்ப்புக்காகத்தான், அதற்காகத் தான் நாடகம் என அவர்கள் கட்சிக்காரர்களே பேசிக் கொள்கிறார்கள். இது மத்திய உள் துறை அமைச்சரின் இரகசிய பேச்சு வார்த்தையால் விளைந்தது என்றும் வதந்திகள் நிலவுகின்ற நிலையில் பெரும்பாலானோர் இவர் வென்டிலேட்டர் ‍ செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாக மருத்துவ மனை தெரிவித்த நிலையில், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும், மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் நிலவுகின்றன.
Image result for traffic ramaswamy


எப்படி இருந்தாலும் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் அப்பல்லோ சென்னை மருத்துவமனைக்கு ஒர் கண்டம் இருக்கிறது. இவர்களின் பாதுகாப்பை உடைத்து சென்று செய்தி கொடுக்காத, சசிகலாவின் காப்பு வளையத்தை உடைத்து உள் புகாத தொலைக்காட்சிகளும், செய்தி ஊடகங்களும் வேஸ்ட்.

மேலை நாடாக இருந்திருந்தால் இந்த வேலையை விடாமல் செய்திருப்பார்கள் தனிமனிதராக அல்லாமல் அமைப்பு ரீதியாகவும்.

இந்நிலையில் ட்ராபிக் இராமசாமி ஒருவர்தான் முதல்வர் நிலை என்ன? முதல்வருக்கு பணி செய்ய மாற்று ஏற்பாடு செய்து வேறு ஒருவரை நியமியுங்கள் என நீதிமன்றம் வரை சென்றுள்ளார். இவர்தான் ஒரு ஜனநாயக நாட்டின் உண்மையான துணிச்சலான மனிதராகத் தெரிகிறார். வேறு அனைவரும் என்னையும் சேர்த்துத்தான் செய்ய வேண்டியதை செய்யாதவர்கள் பட்டியலில்தாம் இருக்கிறோம்

Image result for traffic ramaswamy



முதல்வர் அம்மா, அறிஞர் அண்ணா, காமராசர், கக்கன் போல அரசு மருத்துவ மனையில் அல்லவா இருக்க வேண்டும் எதற்கு இந்த அப்பல்லோ அப்பாலோ என...எல்லாமே இந்த அம்மாவின் வாழ்வில்  மர்ம முடிச்சுகளே. ஸ்டேட் பேங்க் பணம் பிடிபட்டதும், இந்த அம்மா இருப்பிடத்துக்கு கன்டெய்னர் லாரிகள் இரவில் இருந்து பகலில் போன இடம் தெரியாமல் மறைந்து விட்டதும்...சசிகலாவின் வீடியோக் கடை விவகாரங்கள் முற்றி தமிழ்நாட்டிற்கே ஒரு முக்கிய கரும்புள்ளியாக மாறியதுமாக...

இப்படியாக நிலை இருக்கும்போது முதல்வருக்கு அடுத்த முதல்வர் யார் என மக்கள் பேசி விவாதித்து வருகிறார்கள். தற்போது ஷீலா பாலகிருஷ்ணன் வயது 62 ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற்றவர்தான் நாட்டை ஆண்டு வருகிறார் அங்கே மத்திய அரசே திடீர் பல்டி அடித்து கர்நாடகாவுக்கு சாதகமாக மேலாண்மை வாரியம் அமைக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் காவிரி வழக்கில் ஓடிக் கொண்டிருக்க‌


Image result for media fails


கவர்னருக்கு இல்லாத சக்தி இந்த தமிழ்நாட்டில் சசிகலா என்ற எந்தவகையிலும் அரசுக்கு அரசு பதவிக்கு சாராத ஒரு பெண்ணுக்கு இருக்கிறது என்பதுதான் பெரும் வேடிக்கையான வெட்கக் கேடு.

இந்நிலையில் உயர் நீதிமன்றமே வியழனுக்கும் முதல்வர் பற்றி அறிக்கை தரவேண்டும் என தமிழக அரசைக் கோரியிருக்கிறது. நிலை எப்படி எனப் பார்க்கலாம்...

Image result for traffic ramaswamy

வழக்கு தீர்ப்புக்காக ஒளிந்து கொண்டதா இந்த நண்டு அல்லது இது போய் பல நாள் ஆகிவிட்டதா என பொறுத்திருந்து பார்ப்போம்...தமிழச்சி சொல்லியபடி மத்திய ஆளும் கட்சியின் பிடிக்குள் முடங்கி விட்டதா இந்த வாழ்வு, அல்லது பதுங்கி பாயுமா என்பது எல்லாம் சில நாளில் வெளிச்சம். பூஜா ‍ஹாலிடேஸ் நல்ல முறையில் தமிழகத்தில் இருக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.


Image result for traffic ramaswamy

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, October 2, 2016

காந்தி ஜெயந்தி கொண்டாட்டமா திண்டாட்டமா? கவிஞர் தணிகை

காந்தி ஜெயந்தி கொண்டாட்டமா திண்டாட்டமா? கவிஞர் தணிகை


Image result for mahatma gandhi
மகாத்மாவின் 148 வது பிறந்த தினம். மை லைப் ஈஸ் மை மெசேஜ், பாவர்ட்டி ஈஸ் ஒர்ஸ்ட் பார்ம் ஆஃப்  வாய்லன்ஸ்: எனது வாழ்வுதான் நான் தரும் செய்தி, ஏழ்மை என்பதுவே வன்முறைகளில் மிகவும் கீழ்த்தரமானது.என்றெல்லாம் சொல்லியவர் எந்த செயலும் கீழ்த் தட்டு மனிதர்க்கு பயனிளிக்கிறதா என்ற கவனத்துடன் செய்யப்பட வேண்டும் என்ற மகான்.

இந்தியாவில் பணத் தாள்களில் மட்டுமே மகாத்மா இருக்கிறார்.எதுக்கு இந்த சாங்கியம் சடங்கு என்பதுதான் தெரியவில்லை. இன்று கிராம சபைக் கூட்டம் கலந்து கொள்ளுங்கள் என பிரதமர் அலுவலகத்திலிருந்து, கிராம அபிவிருத்தி அமைச்சகத்திலிருந்து செல்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப் பட்டு உள்ளது.

ஒரு முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு இப்படித்தான் நானும் எனது நண்பர்களில் சிலரும் சென்றோம். பங்கெடுத்துக் கொண்டு எங்களது கருத்துகளை தெரிவித்து வந்தோம். பயனில்லை.

நாடு குடிமக்களை தட்டி விடுகிற கடமையை சரிவரச் செய்கிறது.ஆனால் பொதுமக்களாகிய நாம்தான் எதற்குமே அதற்கெலாம் தயாராகவில்லை.

ஏன் எனில் எதற்கும் தயாராக இருக்க வேண்டியவர்கள்தாம் ஒரு இடத்திற்கு சென்று துணிச்சலுடன் தமது கருத்துகளை சொல்லி வர முடிகிறது. ஏன் எனில் எல்லாமே கட்சிகளுடன், ஆளும் கட்சியுடன்
பிணைந்தபடி இருக்கிறது. ஒரு கருத்து துணிச்சலுடன் வெளிப்படையாக தெரியப்படுத்த ஆரம்பித்தால் அவர் சமுதாயத்தில் எதிரியாக சித்தரிக்கப் படுகிறார். முரண்பாடுகள் வேறுபாடுகள் இருப்பார் கூட நண்பராக இருக்க முடியும் என்ற சிறிதளவுடனான நாகரீகம் கூட இங்கு நிலவாத போது, இங்கு என்ன செய்ய முடியும்?



ஒரு நாட்டின் பிரதமராக இருந்த தூங்கு மூஞ்சி பிரதேச உணர்வுடையாரை எல்லாம் சேர்த்துக் கொண்டு உண்ணாநோன்பு என்ற பேரில் நடிக்கிறது காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக...மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எவருமே அந்த மாநிலத்தில் மதிக்கவில்லை.

Image result for mahatma gandhi

இந்நிலையில் எமது முதல்வர் செயலற்று இருக்கிறார். இவர் உண்மயிலேயே இருக்கிறாரா இல்லையா என்றெல்லாம் பேச்சு நிலவுகிறது. 1,உச்ச நீதிமன்ற சொத்து சேர்த்த வழக்கின் இறுதித் தீர்ப்பு ஒரு புறம், 2, உள்ளாட்சி தேர்தல் மறுபுறம், 3. காவிரி பிரச்சனை ஒரு புறம் என பலவாரியான பிரச்சனை அனைத்துக்கும் ஒரே தீர்வாக உடல் நிலை சரியில்லை என்ற காரணம் பதிலாக இவை எல்லாம் ஒரு வழியான பின்னே ஆமாம் ஒரு வழியான பின்னே நாட்டின் நிலை திரும்பும். எல்லாம் ஒரு வழிப்பாதைதானே? எல்லாருக்கும் மரணம் வரும்தானே...

Image result for mahatma gandhi



வேறு நாளில் இந்த அக்.2, தியாகிகள் தினம் வந்திருந்தால் ஒரு நாளாவது விடுமுறையாவது கிடைத்திருக்கும் என ஒரு அலுவலக தோழர்கள் சலித்துக் கொள்வதும் காதில் விழாமல் இல்லை.

ஒரு மாநிலத்திலிருந்து பக்கத்து மாநிலத்துக்கு எவரும் சென்று வரமுடியவில்லை இந்த சுதந்திர நாட்டில்.கட்டுப் படுத்த முடியாது இனியும் என வெள்ளையர் ஆட்சியை கொடுத்து விட்டு சென்ற நிலையில் பக்குவத்துக்கு வரா மனிதர்களால் நாடு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது ஒழுக்கம் இல்லாமலிருப்பார் எல்லாம் வெற்றி வாகை சூட எத்தகைய சூட்சுமங்கள் எல்லாம் கையளலாம் என  திட்டமிட்டு மக்கள் ஆட்சியை கட்சிகள் என்ற பேரில் கைப்பற்றிக் கொள்கிறார்கள்


Image result for mahatma gandhi

ஜனநாயகம் கேலிக் கூத்தாக இருக்கிறது .இதைப்பற்றி எல்லாம் நேர்மையாக எழுதவும் பேசவும் முடிவதில்லை.வெறும் சடங்காக இருக்கும் மக்களாட்சியில் வாக்குகள் விலைக்கு அல்லது கட்சி சார்ப்பாக போய் நல்லாட்சி வழங்கும் எவருக்கும் வாக்குகள் கிடைப்பதில்லை ஏன் அப்படிப் பட்டார் தேர்தலில் வேட்பாளராக நிற்கும் நிலையே இல்லை.

இந்நிலையில் இந்த சடங்குகள் எல்லாம் சலித்து அலுத்துப் போய்விட்டன.

அடுத்து கலாமின் 85 வது பிறந்த தினம் அக்டோபர் 15ல் வருகிறது உலக மாணவர் தினமாக ஐ.நா குறிப்பிட்டபடி...

எல்லாமே சடங்காக மாறும் முன் ஏதாவது செய்தாக வேண்டும்...ஆனால் எங்கள் ஈனஸ்வரம் வெறும் வயிற்றுக்காக , அல்லது குடும்பம் பேண அடங்கி வருகிறது...

எனவே இந்த காந்தியம் வெளி நாடுகளில் கூட சற்று கவனிப்பில் இருக்கிறது . இந்த நாட்டில் சிறு துளியிலும் கவனிப்பில் இல்லை என்பதுதான் கவலைக்குரிய நிலை.
Image result for mahatma gandhi


தொடர்பற்று போன ஒரு தத்துவத்துக்கு இனி தங்குமிடம் தேவையா? விழாக்கள் அவசியமா என்பதுதான் எமது கேள்விகள்.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

எம்.எஸ்.தோனி தமிழில்: கவிஞர் தணிகை.

எம்.எஸ்.தோனி தமிழில்: கவிஞர் தணிகை.

Image result for ms dhoni

3 மணி நேரத்துக்கும் மேல் இந்தப் படம் ஓடிக்கொண்டிருப்பதை இன்னும் சிறிது அந்தக் காதல் காட்சிகள்,பாடல் காட்சிகளை இறுக்கி இருந்திருந்தால் இன்னும் சிறந்த படமாகி இருக்கும்.

எம்.எஸ்.தோனியின் வாழ்வு இத்தகையதா என்னும் வியப்படைய வைக்கிறது. கால் பந்து கோல் கீப்பராக விளையாடுவதைப் பார்த்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அவனை மட்டைப் பந்துக்கு அதாங்க கிரிக்கெட்டுக்கு ஆட இன்னொரு பையனை அனுப்பி தாஜா செய்வதில் ஆரம்பிக்கிறது படம்...இவரின் வாழ்வில் இவரை நேசிக்கும் அனைவருமே இவரது வெற்றியில் வேதனையில் முன்னேற்றத்தில் சோதனையில் பங்கு கொள்கிறார்கள் படத்தின் இறுதி வரை அனைவருமே தொடரும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதே இதன் வெற்றிக்கு ஒரு அடையாளமாகக் கொள்ளலாம்
Image result for msdhoni movie


நல்ல அப்பாவாக அனுபம் கெர், குடியிருப்புக்கும், கிரிக்கெட் ஆடுகளத்திற்கும் நீர் விநியோகிக்க வேண்டிய வேலையில். இப்படி சாதாரண குடும்பத்தில் அன்பே உருவான தாய் கடவுள் பக்தி நிரம்பியவள், ஒரு அரிய சகோதரி பூமிகா... நல்ல நண்பர்கள் நல்ல‌
ஆசிரியப் பெருமக்கள் இப்படி எல்லாமே நன்றாக இருந்தும் காலம் இவரை நல்ல வாய்ப்புகள் கிடைப்பதிலிருந்து உயரத் தூக்கிப் பிடித்து அந்த வாய்ப்புகள் எத்தகையவை அதற்கு நீ எவ்வளவு தகுதி படைத்தவன் என்று போராட வைத்திருக்கிறது.

சச்சின் டென்டுல்கரிடம் ஆட்டோகிராப் பெற்று தமக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு கொடுக்கும் நிலையில் இருந்த தோனி சச்சினையும் உள்ளடக்கிய இந்திய அணிக்கு எப்படி தலைமை ஏற்று உலகக் கோப்பை வெல்கிறார் என்பது கதை.

சாரி கதையல்ல வாழ்க்கை...அதற்குள் எத்தனை தாக்கங்கள், ஏற்றங்கள் இறக்கங்கள்...எந்த வாய்ப்பும் கிடைக்காமல் ரெயில்வேத் துறையில் டிக்கட் கலெக்டராக பணி புரிவது பின் அதை உதறிவிட்டு தமக்கு உகந்த துறை கிரிக்கெட் தாம் என வீட்டுக்கு வந்து தந்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது, அதே தந்தை இவரின் வெற்றிக்குப் பிறகு தமது முடிவு எவ்வளவு தவறானது என தம்மை திருத்திய நிலையில் மகனின் வெற்றி கண்டு புளகாங்கிதமடைவது...

எவ்வளவோ முயன்றும் ஒரு முக்கிய போட்டியில் கலந்து கொள்ள விமான நிலையம் வரை சென்று விமானம் சென்று விட அதிகாலை ஆரம்பிக்கும் ஒரு போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தோல்வி விரக்தியில் துவள்வது...

ஒரு காதலியைப் பெற்று வீறு கொண்டு எழுந்து  தமது அடையாளம் பெற்று காதலியைத் தேட காதலி இறந்திருப்பது தெரிய வர அது பங்களாதேசத்திடம் தோல்வியாய் வெளித் தெரிய காரணமாவது...அதன் பின் தம்மை நிரூபித்து காப்டனாகி அணியை தமது வழிக்குத் திருப்ப கிரிக்கெட் போர்டை கிரிக்கெட் வாரியத்தை பணிய வைத்து தம் வழிக்கு கொண்டு வருவது...

அதன் பின் ஒரு பெண்ணை மணந்து கொள்வது... இப்படி தனிப்பட்ட வாழ்வும் கிரிக்கெட் பொது வாழ்வும் அதில் கிடைக்கும் ஏராளமான புகழும் வெற்றியும், வலியும், வேதனையும், சோதனையும், எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய் நன்றாகவே படம் செல்கிறது.

இந்த தோனி, கணித மேதை இராமானுஜன் போன்ற படங்கள் சினிமாத்துறைக்கே நல்ல வரவுகள். நல்ல அறிகுறிகள். இது போன்ற படங்கள் சினிமாத் துறையின் ஆழம், நீளம், அகலத்தை மாற்ற வேண்டும், மாரியப்பன் தங்கவேல் பற்றி கூட தமிழர் எவராவது படம் எடுக்க முன் வர வேண்டும். எனக்கு அந்த வாய்ப்பிருந்தால் செய்து விடுவேன். மகிழ்வேன். இது போன்ற படங்களை எல்லாம் அனைவரும் காணச் செய்ய வேண்டும். தேர்தலுக்கு குவார்ட்டரும் கோழி பிர்யாணியும் 500ம் ஆயிரமும் தருவதற்கு பதிலாக நாட்டில் இலவசமாக காணச் செய்ய கட்சிகளும் அரசுகளும் முன் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்ச கட்டணத்தில் ஏன் இலவசமாகவும் கூட.

Image result for msdhoni movie

எம்.எஸ். தோனியை ஒரு டாக்குமென்டரி படமாக இன்றி ஒரு பொழுதுபோக்கும் படமாக அனைவருக்கும் பிடிக்கும் விதமாக வியாபாரப் படமாக இதை கொண்டு வந்ததே பெரும் வெற்றி எனச் சொல்லலாம்.

இந்த படம் 50+ பெறலாம் இதை சொன்ன விதத்திற்காகவும் அனைத்து இளைஞர்க்கும் பயன்படும் என்பதற்காகவும், மது போன்ற விஷயத்தை நீக்கி நல்ல இளைஞரை உருவாக்க உதவுவதற்காகவும் ஆனால் கிரிக்கெட் மட்டுமே இந்தியாவின் விளையாட்டு அல்ல என இதன் நாயகனே ஷட்டில் ஆடுவதையும், கால்பந்து ஆடுவதையும் காட்டுவது அனைத்து விளையாட்டுக்கும் அவர் ஆதரவானவர் எனத்தெரிவதால் முடிவில் சில செயல் நடவடிக்களை இவர் மேற்கொண்டு அனைத்து விளையாட்டுக்கும் நல்லது செய்வது போல முடித்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும்.

மேலும் வாழும் ஒரு விளையாட்டு வீரரின் சரிதம் இப்படிப்பட்ட சரித்திர சினிமாக மாற்றம் பெற்றிருப்பது ஒரு ஆரோக்யமான விஷயம் மட்டுமல்ல வரவேற்கத் தக்க மாற்றம்.வெற்றியும் பெற்ற படமாக இது இருக்கிறது. துணிச்சலான நல்ல முயற்சி. தோனியைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

ஒரு விக்கெட் கீப்பராக பயிற்சி பெறுபவர் எப்படி ஒர் பேட்ஸ்மேனாக ஒரு காப்டனாக, உலகக்கோப்பை வெல்லும் நாயகனாக மாறுகிறார் என்ற வாழ்க்கைக் கதை. சொல்லப் போனால் கபில் தேவை விட முன்னேறிய கிரிக்கெட்டில் கபிலுக்கும் பின்னால் மீண்டும் ஒரு ஒரு நாள் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த நாயகனை அனைவரும் பாராட்டுகிறார்கள். பாராட்டத்தான் வேண்டும் . நாமும் செய்கிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி(இராமானுஜம்) தமிழ்: கவிஞர் தணிகை

தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி(இராமானுஜம்) தமிழ்: கவிஞர் தணிகை

Image result for srinivasa ramanujan

காலத்தின் பதிவாக சரித்திரத்தை சினிமா சில நேரங்களில் குறுகிய காலத்தில் சிறந்த பதிப்பாக பாதிப்படையும் வண்ணம் செதுக்கி விடுகிறது. அப்படி ஒரு அருமையான அரிய பதிவுதான் இந்த தி மேன் ஹூ ந்யூ இன்பினிட்டி என்ற கணித மேதை இராமானுஜர் பற்றிய சினிமாவும்.

Image result for srinivasa ramanujan

இதை தமிழில் சுமார் 1 மணி 48 நிமிடம் பார்க்க 2 நாள் முயற்சி செய்து பார்த்தே முடித்து விட்டேன். பாதிப்பிலிருந்து அதன் அதிர்வலைகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா மீடியம் சில நேரங்களில் இப்படிப் பட்ட பெருநன்மைகளையும் செய்து விடுகிறது என்னதான் இலக்கிய வடிவில் புத்தகமாக படித்தாலும் கிடைக்காத உணர்வை இந்த உயிரோட்டமுள்ள சினிமா ஏற்படுத்த முடிகிறது.  சில நொடிகளில் கூட சிறந்த பதிவை உணர்வை வெளிப்படுத்த சினிமாவில் முடிகிறது.



ஹார்டி என்ற கணித மேதை சென்றிணையும் வரை அவரது தமிழக வாழ்க்கை அல்லது இந்திய வாழ்க்கை. அம்மா அவனை நாடு கடந்து செல்லக் கூடாது என அழிச்சாட்டியம் செய்கிறார். நாமகிரி அம்மன் கோவிலில் கற் தரைகளில் பார்முலாக்களை எழுதி சரி பார்த்து வரும் இராமானுஜர், மனைவியை 22 ஆம் வயதில் சேர்த்துக் கொண்டு சென்னைக்கு வேலைக்குச் செல்கிறார். அதன் பின் அங்கிருந்து இலண்டன் செல்கிறார். அங்கே போராட்டம். ஹார்டி பெரிதும் துணையாய் இருக்க இலண்டனின் ராயல் பெல்லோசிப் மற்றும் டிரினிட்டி காலேஜின் பெல்லோ சிப் இரண்டையும் பெறுகிறார். ஆனால் அதைப் பெறுவதற்குள் சரியாக சாப்பாடு கூட இல்லாமல் போராடுகிறார். அடி உதை படுகிறார். உலக யுத்தம் ஆரம்பம். உடன் பிணி காச நோய், அதாவது டி.பி தாக்குகிறது அதை எலும்புருக்கி நோய் என்றும் சொல்வார்கள்.
Image result for the man who knew infinity



அவருக்கு அப்போது உரிய வைத்தியம் கிடைக்கவில்லை. அப்போது காசநோய்க்கு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கவே இல்லை. இவர் சொல்லியபடி எல்லாமே ஏற்கெனவே இருக்கிறது அதை விஞ்ஞானிகள் கண்டு அறிகிறார்கள், கண்டு கொள்கிறார்கள், கண்டு பிடிப்பதில்லை என்ற முடிவு படத்தில் ஹார்டி மூலம் இராமானுஜம் இறந்த பிறகு சொல்லப் படுகிறது.

உங்களின் பார்முலாக்களை எப்படி டிரைவ் செய்தீர்கள், எவிடன்ஸ் இல்லாமல் அதை நிரூபிக்க முடியாது, பிரசுரிக்கவும் முடியாது என்னும் ஹார்டிக்கு இவரின் அறிவாற்றல் திகைக்க வைக்கிறது .நோயால் பாதிக்கப்பட்ட இராமானுஜம் நண்பரிடம் எல்லாம் நாமகிரி அம்மாள் எனக்கு காட்டும் வழி, அவள்தான் இரவில் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார் ஒன்று கனவாக வந்து விடை தருகிறாள், அல்லது நேரிடையாக வந்து சொல்லிச் செல்கிறாள் என கணிதப் பதங்கள் எழுதிய தாள்களை எடுத்துத் தந்து திருமணமாகாத கடவுள் நம்பிக்கை இல்லாத தம் நண்பரின் நீண்ட நாளைய தொடர்ந்த கேள்விக்கு விடை தருகிறார்.

இரண்டு பெல்லோசிப் பெற்ற பிறகு ஒரு ஆண்டு ஊர் திரும்பி அதன் பின் பணிக்கு இலண்டன் வருவதாக வாக்களித்த அவர் திரும்பி செல்லவே இல்லை 32 வயதுள் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

உயிராய் இருக்கும் துணையை சொல்வதா, கடிதம் சென்றால் நாடு திரும்ப சீக்கிரம் வரமாட்டான் என்னும்  தாய் மனைவியின் கடிதங்களை எல்லாம் வாங்கி பெட்டியில் போட்டு இரகசியமாக மறைப்பதை சொல்வதா...அப்படி அவரின் செயலைப் பார்த்த நாம் கோபம் கொள்கிறோம். தாயை வெறுக்குமளவு. ஏன் எனில் இவர் வெளி நாடு போக முன்னேற்பாடு செய்யும்போது அதை அனுமதிக்காத தாய் அவர் வெற்றி பெற்ற செய்தியை எல்லாரிடமும் காட்டி குதூகலிக்கிறார் இராமானுஜரின் மனைவியை தமது மருமகளை  சிறுமைப் படுத்தி. சராசரி பார்ப்பனக் குடும்பத்தில் நடக்கும் சிறுமைப்பாடுகள். கதை நடப்பது 1900 ஆண்டுகளில். எனவே அவை இயல்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

Image result for the man who knew infinity

டேவ் ஆனந்த் ஸ்லம் டாக் மில்லியனிரில் நடித்த அந்த நாயகன் இதில் இராமானுஜராக வாழ்ந்துள்ளார். படம் படு சீரியஸான போக்கு நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் என்னை வெகுவாக பாதித்த படம்.

இது போன்ற படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். நமது பள்ளி மாணவர்களுக்கு இவை அவசியம் பயன்படும் கல்லூரி மாணவர்களுக்கும் சாதிக்கத் துடிக்கும் அனைவர்க்கும் ஒரு பாடம் தரும். அவரின் வாழ்க்கைப் படிகளில் பல மனிதர்கள் உதவி செய்கிறார்கள் அவர்களை எல்லாம் நன்கு அறிமுகப் படுத்துகிறது.

பார்ட்டிசன் என்றும் இன்ஃபினிட்டி பற்றியும் அறிந்த இந்த மேதை குறுகிய ஆயுளில் வந்த தமது பணி முடிந்ததும் கடவுளிடம் சென்றடைந்து விடுகிறார். கடவுளால் ஆசிர்வாதிக்கப் பட்ட பிள்ளையாய்.வந்த வேலை முடிந்ததும் சில நட்சத்திரங்கள் உதிர்ந்து விடுகின்றன‌

அவசியம் பாருங்கள். வெறும் கதையாக சொல்லி மீள முடியாது. சினிமாவின் முக்கியத்துவம் இது போன்ற நாயகர்களை சரித்திரப் பதிவுகளை தருவதில் முக்கியப் பங்காகிறது.

இந்தப் படத்தைப் பாருங்கள் எனச் சொன்ன எனது இளவல் குவெயித் பிரவீன்குமாருக்கு இந்த பதிவின் மூலம் நன்றி சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.ஆனால் அப்படி நான் நன்றி சொல்வதைக் கூட வேண்டி விரும்பாத‌ உறவு எங்களுடையது....

thanks to the creators of all those who creates this good film. and thanks to Prawin kumar.

Image result for the man who knew infinity


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.