Sunday, October 2, 2016

எம்.எஸ்.தோனி தமிழில்: கவிஞர் தணிகை.

எம்.எஸ்.தோனி தமிழில்: கவிஞர் தணிகை.

Image result for ms dhoni

3 மணி நேரத்துக்கும் மேல் இந்தப் படம் ஓடிக்கொண்டிருப்பதை இன்னும் சிறிது அந்தக் காதல் காட்சிகள்,பாடல் காட்சிகளை இறுக்கி இருந்திருந்தால் இன்னும் சிறந்த படமாகி இருக்கும்.

எம்.எஸ்.தோனியின் வாழ்வு இத்தகையதா என்னும் வியப்படைய வைக்கிறது. கால் பந்து கோல் கீப்பராக விளையாடுவதைப் பார்த்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அவனை மட்டைப் பந்துக்கு அதாங்க கிரிக்கெட்டுக்கு ஆட இன்னொரு பையனை அனுப்பி தாஜா செய்வதில் ஆரம்பிக்கிறது படம்...இவரின் வாழ்வில் இவரை நேசிக்கும் அனைவருமே இவரது வெற்றியில் வேதனையில் முன்னேற்றத்தில் சோதனையில் பங்கு கொள்கிறார்கள் படத்தின் இறுதி வரை அனைவருமே தொடரும் வண்ணம் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதே இதன் வெற்றிக்கு ஒரு அடையாளமாகக் கொள்ளலாம்
Image result for msdhoni movie


நல்ல அப்பாவாக அனுபம் கெர், குடியிருப்புக்கும், கிரிக்கெட் ஆடுகளத்திற்கும் நீர் விநியோகிக்க வேண்டிய வேலையில். இப்படி சாதாரண குடும்பத்தில் அன்பே உருவான தாய் கடவுள் பக்தி நிரம்பியவள், ஒரு அரிய சகோதரி பூமிகா... நல்ல நண்பர்கள் நல்ல‌
ஆசிரியப் பெருமக்கள் இப்படி எல்லாமே நன்றாக இருந்தும் காலம் இவரை நல்ல வாய்ப்புகள் கிடைப்பதிலிருந்து உயரத் தூக்கிப் பிடித்து அந்த வாய்ப்புகள் எத்தகையவை அதற்கு நீ எவ்வளவு தகுதி படைத்தவன் என்று போராட வைத்திருக்கிறது.

சச்சின் டென்டுல்கரிடம் ஆட்டோகிராப் பெற்று தமக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு கொடுக்கும் நிலையில் இருந்த தோனி சச்சினையும் உள்ளடக்கிய இந்திய அணிக்கு எப்படி தலைமை ஏற்று உலகக் கோப்பை வெல்கிறார் என்பது கதை.

சாரி கதையல்ல வாழ்க்கை...அதற்குள் எத்தனை தாக்கங்கள், ஏற்றங்கள் இறக்கங்கள்...எந்த வாய்ப்பும் கிடைக்காமல் ரெயில்வேத் துறையில் டிக்கட் கலெக்டராக பணி புரிவது பின் அதை உதறிவிட்டு தமக்கு உகந்த துறை கிரிக்கெட் தாம் என வீட்டுக்கு வந்து தந்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வது, அதே தந்தை இவரின் வெற்றிக்குப் பிறகு தமது முடிவு எவ்வளவு தவறானது என தம்மை திருத்திய நிலையில் மகனின் வெற்றி கண்டு புளகாங்கிதமடைவது...

எவ்வளவோ முயன்றும் ஒரு முக்கிய போட்டியில் கலந்து கொள்ள விமான நிலையம் வரை சென்று விமானம் சென்று விட அதிகாலை ஆரம்பிக்கும் ஒரு போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் தோல்வி விரக்தியில் துவள்வது...

ஒரு காதலியைப் பெற்று வீறு கொண்டு எழுந்து  தமது அடையாளம் பெற்று காதலியைத் தேட காதலி இறந்திருப்பது தெரிய வர அது பங்களாதேசத்திடம் தோல்வியாய் வெளித் தெரிய காரணமாவது...அதன் பின் தம்மை நிரூபித்து காப்டனாகி அணியை தமது வழிக்குத் திருப்ப கிரிக்கெட் போர்டை கிரிக்கெட் வாரியத்தை பணிய வைத்து தம் வழிக்கு கொண்டு வருவது...

அதன் பின் ஒரு பெண்ணை மணந்து கொள்வது... இப்படி தனிப்பட்ட வாழ்வும் கிரிக்கெட் பொது வாழ்வும் அதில் கிடைக்கும் ஏராளமான புகழும் வெற்றியும், வலியும், வேதனையும், சோதனையும், எதிர்பார்ப்பும் ஏமாற்றமுமாய் நன்றாகவே படம் செல்கிறது.

இந்த தோனி, கணித மேதை இராமானுஜன் போன்ற படங்கள் சினிமாத்துறைக்கே நல்ல வரவுகள். நல்ல அறிகுறிகள். இது போன்ற படங்கள் சினிமாத் துறையின் ஆழம், நீளம், அகலத்தை மாற்ற வேண்டும், மாரியப்பன் தங்கவேல் பற்றி கூட தமிழர் எவராவது படம் எடுக்க முன் வர வேண்டும். எனக்கு அந்த வாய்ப்பிருந்தால் செய்து விடுவேன். மகிழ்வேன். இது போன்ற படங்களை எல்லாம் அனைவரும் காணச் செய்ய வேண்டும். தேர்தலுக்கு குவார்ட்டரும் கோழி பிர்யாணியும் 500ம் ஆயிரமும் தருவதற்கு பதிலாக நாட்டில் இலவசமாக காணச் செய்ய கட்சிகளும் அரசுகளும் முன் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்ச கட்டணத்தில் ஏன் இலவசமாகவும் கூட.

Image result for msdhoni movie

எம்.எஸ். தோனியை ஒரு டாக்குமென்டரி படமாக இன்றி ஒரு பொழுதுபோக்கும் படமாக அனைவருக்கும் பிடிக்கும் விதமாக வியாபாரப் படமாக இதை கொண்டு வந்ததே பெரும் வெற்றி எனச் சொல்லலாம்.

இந்த படம் 50+ பெறலாம் இதை சொன்ன விதத்திற்காகவும் அனைத்து இளைஞர்க்கும் பயன்படும் என்பதற்காகவும், மது போன்ற விஷயத்தை நீக்கி நல்ல இளைஞரை உருவாக்க உதவுவதற்காகவும் ஆனால் கிரிக்கெட் மட்டுமே இந்தியாவின் விளையாட்டு அல்ல என இதன் நாயகனே ஷட்டில் ஆடுவதையும், கால்பந்து ஆடுவதையும் காட்டுவது அனைத்து விளையாட்டுக்கும் அவர் ஆதரவானவர் எனத்தெரிவதால் முடிவில் சில செயல் நடவடிக்களை இவர் மேற்கொண்டு அனைத்து விளையாட்டுக்கும் நல்லது செய்வது போல முடித்திருந்தால் இன்னும் சிறப்பாகவே இருந்திருக்கும்.

மேலும் வாழும் ஒரு விளையாட்டு வீரரின் சரிதம் இப்படிப்பட்ட சரித்திர சினிமாக மாற்றம் பெற்றிருப்பது ஒரு ஆரோக்யமான விஷயம் மட்டுமல்ல வரவேற்கத் தக்க மாற்றம்.வெற்றியும் பெற்ற படமாக இது இருக்கிறது. துணிச்சலான நல்ல முயற்சி. தோனியைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.

ஒரு விக்கெட் கீப்பராக பயிற்சி பெறுபவர் எப்படி ஒர் பேட்ஸ்மேனாக ஒரு காப்டனாக, உலகக்கோப்பை வெல்லும் நாயகனாக மாறுகிறார் என்ற வாழ்க்கைக் கதை. சொல்லப் போனால் கபில் தேவை விட முன்னேறிய கிரிக்கெட்டில் கபிலுக்கும் பின்னால் மீண்டும் ஒரு ஒரு நாள் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த நாயகனை அனைவரும் பாராட்டுகிறார்கள். பாராட்டத்தான் வேண்டும் . நாமும் செய்கிறோம்.

மறுபடியும் பூக்கும் வரை

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை.

தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி(இராமானுஜம்) தமிழ்: கவிஞர் தணிகை

தி மேன் ஹூ நியூ இன்பினிட்டி(இராமானுஜம்) தமிழ்: கவிஞர் தணிகை

Image result for srinivasa ramanujan

காலத்தின் பதிவாக சரித்திரத்தை சினிமா சில நேரங்களில் குறுகிய காலத்தில் சிறந்த பதிப்பாக பாதிப்படையும் வண்ணம் செதுக்கி விடுகிறது. அப்படி ஒரு அருமையான அரிய பதிவுதான் இந்த தி மேன் ஹூ ந்யூ இன்பினிட்டி என்ற கணித மேதை இராமானுஜர் பற்றிய சினிமாவும்.

Image result for srinivasa ramanujan

இதை தமிழில் சுமார் 1 மணி 48 நிமிடம் பார்க்க 2 நாள் முயற்சி செய்து பார்த்தே முடித்து விட்டேன். பாதிப்பிலிருந்து அதன் அதிர்வலைகளில் இருந்து மீளவே முடியவில்லை. சினிமா மீடியம் சில நேரங்களில் இப்படிப் பட்ட பெருநன்மைகளையும் செய்து விடுகிறது என்னதான் இலக்கிய வடிவில் புத்தகமாக படித்தாலும் கிடைக்காத உணர்வை இந்த உயிரோட்டமுள்ள சினிமா ஏற்படுத்த முடிகிறது.  சில நொடிகளில் கூட சிறந்த பதிவை உணர்வை வெளிப்படுத்த சினிமாவில் முடிகிறது.



ஹார்டி என்ற கணித மேதை சென்றிணையும் வரை அவரது தமிழக வாழ்க்கை அல்லது இந்திய வாழ்க்கை. அம்மா அவனை நாடு கடந்து செல்லக் கூடாது என அழிச்சாட்டியம் செய்கிறார். நாமகிரி அம்மன் கோவிலில் கற் தரைகளில் பார்முலாக்களை எழுதி சரி பார்த்து வரும் இராமானுஜர், மனைவியை 22 ஆம் வயதில் சேர்த்துக் கொண்டு சென்னைக்கு வேலைக்குச் செல்கிறார். அதன் பின் அங்கிருந்து இலண்டன் செல்கிறார். அங்கே போராட்டம். ஹார்டி பெரிதும் துணையாய் இருக்க இலண்டனின் ராயல் பெல்லோசிப் மற்றும் டிரினிட்டி காலேஜின் பெல்லோ சிப் இரண்டையும் பெறுகிறார். ஆனால் அதைப் பெறுவதற்குள் சரியாக சாப்பாடு கூட இல்லாமல் போராடுகிறார். அடி உதை படுகிறார். உலக யுத்தம் ஆரம்பம். உடன் பிணி காச நோய், அதாவது டி.பி தாக்குகிறது அதை எலும்புருக்கி நோய் என்றும் சொல்வார்கள்.
Image result for the man who knew infinity



அவருக்கு அப்போது உரிய வைத்தியம் கிடைக்கவில்லை. அப்போது காசநோய்க்கு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கவே இல்லை. இவர் சொல்லியபடி எல்லாமே ஏற்கெனவே இருக்கிறது அதை விஞ்ஞானிகள் கண்டு அறிகிறார்கள், கண்டு கொள்கிறார்கள், கண்டு பிடிப்பதில்லை என்ற முடிவு படத்தில் ஹார்டி மூலம் இராமானுஜம் இறந்த பிறகு சொல்லப் படுகிறது.

உங்களின் பார்முலாக்களை எப்படி டிரைவ் செய்தீர்கள், எவிடன்ஸ் இல்லாமல் அதை நிரூபிக்க முடியாது, பிரசுரிக்கவும் முடியாது என்னும் ஹார்டிக்கு இவரின் அறிவாற்றல் திகைக்க வைக்கிறது .நோயால் பாதிக்கப்பட்ட இராமானுஜம் நண்பரிடம் எல்லாம் நாமகிரி அம்மாள் எனக்கு காட்டும் வழி, அவள்தான் இரவில் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார் ஒன்று கனவாக வந்து விடை தருகிறாள், அல்லது நேரிடையாக வந்து சொல்லிச் செல்கிறாள் என கணிதப் பதங்கள் எழுதிய தாள்களை எடுத்துத் தந்து திருமணமாகாத கடவுள் நம்பிக்கை இல்லாத தம் நண்பரின் நீண்ட நாளைய தொடர்ந்த கேள்விக்கு விடை தருகிறார்.

இரண்டு பெல்லோசிப் பெற்ற பிறகு ஒரு ஆண்டு ஊர் திரும்பி அதன் பின் பணிக்கு இலண்டன் வருவதாக வாக்களித்த அவர் திரும்பி செல்லவே இல்லை 32 வயதுள் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

உயிராய் இருக்கும் துணையை சொல்வதா, கடிதம் சென்றால் நாடு திரும்ப சீக்கிரம் வரமாட்டான் என்னும்  தாய் மனைவியின் கடிதங்களை எல்லாம் வாங்கி பெட்டியில் போட்டு இரகசியமாக மறைப்பதை சொல்வதா...அப்படி அவரின் செயலைப் பார்த்த நாம் கோபம் கொள்கிறோம். தாயை வெறுக்குமளவு. ஏன் எனில் இவர் வெளி நாடு போக முன்னேற்பாடு செய்யும்போது அதை அனுமதிக்காத தாய் அவர் வெற்றி பெற்ற செய்தியை எல்லாரிடமும் காட்டி குதூகலிக்கிறார் இராமானுஜரின் மனைவியை தமது மருமகளை  சிறுமைப் படுத்தி. சராசரி பார்ப்பனக் குடும்பத்தில் நடக்கும் சிறுமைப்பாடுகள். கதை நடப்பது 1900 ஆண்டுகளில். எனவே அவை இயல்பாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

Image result for the man who knew infinity

டேவ் ஆனந்த் ஸ்லம் டாக் மில்லியனிரில் நடித்த அந்த நாயகன் இதில் இராமானுஜராக வாழ்ந்துள்ளார். படம் படு சீரியஸான போக்கு நிறைய பேருக்கு பிடிக்காது. ஆனால் என்னை வெகுவாக பாதித்த படம்.

இது போன்ற படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். நமது பள்ளி மாணவர்களுக்கு இவை அவசியம் பயன்படும் கல்லூரி மாணவர்களுக்கும் சாதிக்கத் துடிக்கும் அனைவர்க்கும் ஒரு பாடம் தரும். அவரின் வாழ்க்கைப் படிகளில் பல மனிதர்கள் உதவி செய்கிறார்கள் அவர்களை எல்லாம் நன்கு அறிமுகப் படுத்துகிறது.

பார்ட்டிசன் என்றும் இன்ஃபினிட்டி பற்றியும் அறிந்த இந்த மேதை குறுகிய ஆயுளில் வந்த தமது பணி முடிந்ததும் கடவுளிடம் சென்றடைந்து விடுகிறார். கடவுளால் ஆசிர்வாதிக்கப் பட்ட பிள்ளையாய்.வந்த வேலை முடிந்ததும் சில நட்சத்திரங்கள் உதிர்ந்து விடுகின்றன‌

அவசியம் பாருங்கள். வெறும் கதையாக சொல்லி மீள முடியாது. சினிமாவின் முக்கியத்துவம் இது போன்ற நாயகர்களை சரித்திரப் பதிவுகளை தருவதில் முக்கியப் பங்காகிறது.

இந்தப் படத்தைப் பாருங்கள் எனச் சொன்ன எனது இளவல் குவெயித் பிரவீன்குமாருக்கு இந்த பதிவின் மூலம் நன்றி சொல்லத்தான் வேண்டியிருக்கிறது.ஆனால் அப்படி நான் நன்றி சொல்வதைக் கூட வேண்டி விரும்பாத‌ உறவு எங்களுடையது....

thanks to the creators of all those who creates this good film. and thanks to Prawin kumar.

Image result for the man who knew infinity


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, September 30, 2016

கும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை

கும்கி பிரபு சாலமனின் தொடரி: கவிஞர் தணிகை


 சொல்லியே ஆக வேண்டும். தொடரி என்ற பெயர் வித்தியாசமாக வைக்கப்பட்டு இருக்கிறது. தூய தமிழில் வாழ்க.
Image result for thodari

தினமும் சேலம் சந்திப்பில் பயணிகள் ரயில் நின்றவுடன் ரயில் பெட்டியிலிருந்து எஞ்சினை பிரித்தெடுப்பதைப் பார்த்து வருவதால் இந்தக் கதை என்னுள் அதன் தோல்வியை அதாவது கடைசியில் படம் கிளைமாக்ஸில் தனுஷ் செய்யும் இந்த எஞ்சின் பெட்டியிலிருந்து பிரிக்கும் வேலையை முதலில் முடித்திருந்தால் படத்துக்கு ஸ்கோப் கதை படம் ஏதும் இல்லாமலே போயிருக்கும் எனவே பொறுத்துக் கொண்டு பார்த்தேன்.

அடுத்த படம் தோனி வந்து விட்ட பிறகு 22 செப்டம்பரில் வெளி வந்த தொடரி பற்றி நான் எழுத வேண்டியுள்ளது. ஏன் எனில் முதல் நாள் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு தூக்கம் தள்ள நேற்று மீதியுள்ள ஒரு மணி 47 நிமிடப் படத்தையும் பார்த்து விட்டதால்...

இப்போதெல்லாம் யார் முதலில் பார்க்கிறார்களோ அவர்கள் சரியாக சொல்லி விடுகிறார்கள். இந்தப் படம் முதல் அரை பாகம் பார்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.

தம்பி இராமைய்யா சோபிக்கத் தவறிவிட்டார் இந்த படத்தில்.கீர்த்தி என்ற பெண் வாயைக் கிழித்து அழுவது பார்க்க முடியவில்லை.அதிகமாக நடித்திருப்பது காரணமாக இருக்கலாம்.

தனுஷ் பற்றி சொல்ல ஒன்றுமில்லை; படம் படு செயற்கையாக இருக்கிறது. இராதா ரவி பரவாயில்லை . கொடுத்த வேடத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.

சின்னி ஜெயந்த் ஏதோ பெரிய இடைவெளிக்கும் பிறகு பெரிய அளவில் பிரேக் கொடுக்க கதை எதிர்பார்ப்பு ஏற்படுத்தி கடைசியில் புஸ் ஆகிவிடுகிறது.

வெங்கடேஷ் இயக்குனர் வழக்கப்படி குதிக்கிறார். கணேஷ் வெங்கட்ராமனுக்கும் சொல்லிக் கொள்ளுமளவு பெரிய அளவில் ஒன்றும் ஸ்கோப் இல்லை.

நன்றாக இருப்பது அரசு, அமைச்சரை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என நினைத்து அந்த லூசுப் பெண்ணை பெரிய பெண் தீவிர வாதியாக கருதுவது, மீடியா முடிவது, மீடியாவில் பட்டமன்ற
இராஜா, மற்றும் தமிழறிஞரை கலாய்க்கும் செல்பேசி உரையாடல் நல்ல நகைச்சுவை...

மேலும் நல்லவையாக சொல்ல வேண்டுமென்றால், படம் அரை இறுதிக்கும் பிறகு இடைவேளைக்கும் பிறகு நல்ல வேகம். ஆங்கில படத்தில் தான் இதுவரை இது போன்ற கதை தேர்வு இருக்கும். இது இப்போது பிரபு சாலமன் படம் மூலம் தமிழுக்கும் வந்து விட்டது.

பெரிய சாதனைப் படமாக இது விளங்காது. மேலும் இந்த படத்தின் நீளம் சுமார் சற்றேறக் குறைய 3 மணி அதாவது 13 நிமிடம் குறைவாக 167 நிமிடம். பழைய படத்தைப் போல மறுபடியும் 3 மணிக்கும் மேல் படம் தந்து அனைவரையும் வெறுப்பேற்றி விடலாம் என்ற எண்ணம் தலைதூக்க விட்டிருக்கும் படம்.

ஆங்கில படத்தைப் போல செய்ய நினைத்தவர்கள், அதன் நேர அனுசரிப்பையும் கவனத்தில் கொண்டிருக்கலாம், பாலம் உடைவதும் கடைசியில் ரயில் நின்று காதலன் காதலி சேர்வதையும் நல்ல முறையில் படம் எடுத்திருப்பதற்கு பாராட்டுகள்.

மீடியா வரும் காட்சிகள் பெரும்பாலும் நல்ல காட்சிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளன.

மற்றபடி பேன்ட்ரி ரயில் சமையல் பெரிய அளவில் இரசிக்கும்படியாக இல்லை. தனுஷ் ஒரு பூச்சியாக அவ்வளவாக ஒட்ட வில்லை. அதற்கு வேறு பொருத்தமாக எவரையாவது தேர்வு செய்திருக்கலாம்.

இராதா ரவி, காவலுக்கு வரும் காவல் துறை எப்படியோ பார்த்து முடித்து விட்டாயிற்று. அடுத்து தோனியை பார்க்க முயற்சிக்கிறேன் உங்களுக்காக. முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனால் முழு வெற்றி பெற முடியவில்லை கும்கி பிரபு சாலமன்.

இசை பெரிய அளவில் பாதிப்பேற்படுத்தவில்லை இமான். மற்றபடி வசனம் நன்றாக இருக்கிறது டெலிவரி சரியாக இல்லாததால் அதுவும் எடுபடவில்லை.சண்டைக்காட்சிகள் கூட சொல்லும்படியில்லை. அவசரகதியில் ரயில்வேகத்தில் எடுத்திருப்பார் போலும். துரிதகதியில் எடுத்திருப்பதாகத் தெரிகிறது ஒரு ரயிலை வைத்து கஷ்டப்பட்டு முயற்சி செய்திருக்கின்றனர். ஒரு முறை பார்க்கலாம்.

Image result for thodari


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Wednesday, September 28, 2016

ஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.

ஆண்டவன் கட்டளை: கவிஞர் தணிகை.


Image result for aandavan kattalai 2016

1. மதுக் குடி விருந்து எதுவும் இல்லாது படம் எடுத்ததற்காகவும்
2. சண்டைக்காட்சிகள் வன்முறை இல்லாததற்காகவும்
3. கதை ஓடிக்கோண்டே நிறைய நிகழ்வுகளால் பின்னப்பட்டிருப்பதற்காகவும்
4. கோர்ட் சீன்கள்,போலி சான்றிதழ் இயக்கங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் போன்றவை தத்ரூபமாக சினிமாத்தனம் இல்லாமல் இருந்ததற்காகவும்

5. வசனம் நன்றாக எழுதப்பட்டு சடையர் என்பார்களே அது போன்ற சாடல்களுடன் நகைச்சுவை கலந்த தாக்குதல்களுடன் எழுதப்பட்டிருப்பதற்காவும் இந்த படத்தை பாராட்டியே ஆகவேண்டும்.

நல்ல டீம் ஒர்க். காக்கா முட்டைக்கு பிறகு  இது ஒரு நல்ல முயற்சி மணிகண்டனுக்கு அவருடன் அன்புச் செழியன், அருள் செழியன் அனுச்சரன் , கே ஆகியோர் தங்கள் பணியை செவ்வனே செய்துள்ளனர்.

நிறைய நிகழ்வுகள். எனவே கதையாக அந்தக் காலத்தில் சொல்வது போல சொல்லவே முடியாது. படம் பார்த்தால் மட்டுமே எல்லாம் விளக்கும் விளங்கும்.

நல்ல கதை நல்ல படமாக மாறும் என்பது இந்த இளைஞர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பாடல்கள் அவ்வளவு பிரபலமாகவில்லை. அது தேவையுமில்லை இந்த படத்துக்கு. மற்றபடி பின்னணி இசையில் ஒன்றும் குறைவில்லை. யார் அந்த கே(ஆங்கில எழுத்து) இசை அமைப்பாளர் என்பது தெரியவில்லை.

செப்டம்பர் 23 இங்கு நம் நாட்டில் வெளியிட்டிருக்க செப்டம்பர் 29ல் உலகெங்கும் வெளிநாடுகளில் வெளியிடுவதாக செய்திகள்

பன்னி மூஞ்சா வாடா வா என்பார்களே அந்த நடிகர் தோற்றத்தில் சினிமா இல்லை கதையில் பாத்திரத்தில் என அந்த குதிரைக்கார நடிகரைப் போல பிரகாசித்துள்ளார். அந்த வினோதினி வைத்தியநாதன் ஜூனியர் வக்கீல் என்ன ஒரு டைமிங்க் காமெடி, அவர் மட்டுமல்ல‌ சில காட்சிகள் மட்டுமே வரும் கார்மேகக் குழலி அதாங்க ரீத்தா சிங் கதாநாயகியின் தாய் பாத்திரம் கூட கன கச்சிதமாக பொருந்தியுள்ளது. கோர்ட் சீன் பின்னி எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட இது சினிமா சூட்டிங்கிற்காக நடந்தது என்பது தெரியாமல்.

ரீத்தா சிங் கார்மேகக் குழலியின் பத்திரிகை நிருபர் பாத்திரமும், அவர் விஜய் சேதுபதியை வார்த்தைகளால் சொல்லாமல் நேசிப்பதை உணர்வுக் குவியலாய் முகத்தை நடிக்க வைத்திருப்பதை நன்கு உணர முடிகிற நுட்பமான நடிப்பு.

விஜய் சேதுபதி காலம் போலும். இப்போதுதான் தர்மதுரையில் ஒரு ஹிட் கொடுத்தார். இப்போது இதில். ஆண்டவன் கட்டளை என்ற உடன் ஏதோ ஆளும் கட்சிக்காரர்கள் கட்டளை விளையாடப் போகிறது என்று எதிர்பார்த்தால் இது உண்மை, பொய் கலந்த சட்ட நெளிவு சுளிவுகளை, சட்டத்தின் ஓட்டைகளை, நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதற்காக இளைஞர்கள் செய்யும் மாய்மாலத்தை, வெளிநாட்டு தூதரகங்களை, வெளி நாட்டுக்கு செல்லும் ஆவலுடன் இருக்கும் இளைஞர்களுக்கு ஏற்படும் இன்னல்களை சுருக்கமாக சொல்லி நிறைய கதை முடிச்சுகளை நிறைய கருக்களை  சொல்லி விட்டு அடுத்து அடுத்து வீடு மாறுவது போல சென்று கொண்டே இருக்கிறது. போலியான கை எழுத்து போட்டு பாஸ்போட் பிராடாக பெறுவது முதல்....பணம் செலவு பண்ணி வெளி நாட்டுக்கு சென்று ஏமாறுவது வரை...

இலங்கை அகதி பாத்திரம் கடைசியாக தனது மனைவி மக்களை சேதுபதியிடம் பார்த்தால் சொல்லுங்கள் என பரிதாபப் பட வைத்து உச்சிக்கு எடுத்துச் செல்கிறது ஊமையாக நடிப்பது செயற்கையாக போலித்தனமாக பிரதிபலிக்க வைத்து உண்மையான குட்டை உடைக்கிறது கால் முடமில்லாமலே முடமாக நடித்து பிச்சை எடுப்பார் போல.

விஜய் சேதுபதி இளைஞராக நடிக்கிறார்...அது இன்னும் கொஞ்ச காலம்தான் தாங்கும் என நினைக்கிறேன். வயதுக்குத் தகுந்த ரோலில் நடித்தால் இன்னும் சூப்பர் ஹிட் கொடுக்கலாம்.

Image result for aandavan kattalai 2016


ஆனால் இவரைப் பற்றி சிறப்பாக சொல்ல பெரிதாக ஏதுமில்லை என்றாலும் இவரின் படங்கள் இயல்பாக இருப்பதால் வெற்றி பெறுகின்றன என்பது இவருக்கு பிளஸ் பாயின்ட்.

வேலையில்லா இளைஞர் போலிக் கை எழுத்துகளுடன், போலியாக மணமாகியதாக ஒரு பெண் பேரை விசா வாங்க  இலண்டன் செல்ல மேற்கொள்ளும் முயற்சியில் தமது நண்பர் எப்படி வெற்றி பெற்று துன்பப் படுகிறார், இவர் தோல்வியடைந்து எப்படி தப்பிக்கிறார் என்பது கதை தப்பிப்பதுடன் தமது வாழ்க்கைத் துணையை எப்படி திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பதற்கு இந்த ஆண்டவன் கட்டளை பிரிந்து போகிறோம் எனச் சொல்லி சொல்லி சேர்ந்து வாழ இயற்கை போடும் அழகான முடிச்சுகளை போட்டு காந்தியையும் கார்மேகக் குழலியையும் இணைக்கும் கதை.

ரித்திகா சிங்க் நல்ல மெறுகேற்றம் இறுதிச் சுற்றுக்கும் பிறகு. நாசருக்கு மறுபடியும் ஒரு அல்வா சாப்பிடுவது போன்ற நல்ல பாத்திரம். வில்லனாக பெரும்பாலும் நடித்த இந்த நடிகர் இப்போது நல்ல குணச் சித்திர நடிகராகவே மிக நீண்ட காலமாக தமிழ் சினிமா இவரை பயன்படுத்த ஆரம்பித்திருப்பது ஒரு நல்ல ஆரோக்யமான நிலை. இராமைய்யா போல. சிங்கம் புலிக்கு சொல்லும்படியான பெரிய ரோல் இல்லை. உடம்பும் ஊதிக் கொண்டிருப்பது தெரிகிறது.
Image result for aandavan kattalai 2016



3 மாசமா ஒரே வேலையில் இருக்கிறாள், என கார்மேகக் குழலியை இவங்க அம்மா பாராட்டுவது போல பாராட்டுகிறார் பாருங்கள் வசனத்தை எடிட்டிங்கை காட்சி அமைப்புகளை நன்றாக செதுக்கியுள்ளார்கள். நன்றாக இரசிக்க முடிகிறது. இரவு 11.11 மணிக்கு பார்த்து முடித்தேன்

Image result for aandavan kattalai 2016

மறுபடியும் பூக்கும் தளம் இந்த படத்திற்கு 55+  மதிப்பெண் தருகிறது.

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Monday, September 26, 2016

வாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.

வாழ்க்கை இலக்கியத்தில்: கவிஞர் தணிகை.

Image result for famous world leaders collage


உணவகத்தில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வயிறு கழுவிய ‍ஹோசிமின் வியட்நாமின் விதியை மாற்றினார் இருள் பாறைகளில் எதிரிகளுக்கு பயந்து படுத்துறங்கி, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா..ஆப்ரகாம் லிங்கன், மார்ட்டின் லூதர் கிங், நேரு, லெனின் சாக்ரடீஸ் இப்படி வாழ்ந்தாரைப் பற்றி நேற்றைய இலக்கிய பயணத்தில் குறிப்பிட மறந்திருந்தேன் காரணம் காலம் எல்லாவற்றையும் சுருக்கச் சொல்லி விடுகிறது.

முள்ளும் மலரும் எழுதிய உமா சந்திரன் பேர் சமயத்தில் நினைவுக்கு எட்டவில்லை கொஞ்ச நேரம். அந்த புத்தகத்தை எவ்வளவு இலயித்துப் படித்திருப்பேன் ஆனால் இந்த தருணத்தில் அது எங்கே? மகேந்திரன்  சினிமா இயக்குனர் அதில் உள்ள காளி பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ரஜினியை வைத்து படம் எடுத்து வெற்றி ஈட்டி விட்டார். ஆனால் அந்தக் கதையும் 2 பாகங்கள் என நினைக்கிறேன். அது இந்த படத்தில் கொஞ்சம் தான் தொடப் பட்டிருந்தது. சினிமாவை விட மிக நீண்ட கதை அதில் காளி ஒரு வில்லன் .

பல நாடுகளையும் அதன் விதிகளையும் மாற்றி எழுதிய நாயகர்கள் பலர் பற்றியும் படித்து இருக்கிறேன் எனினும் இப்போது பசுமையாக நினைவில் இருக்கும் ‍‍ஹோசிமின் ஓர் ஏழை எளிய மனிதர் எப்படி ஒரு நாட்டின் தலைவிதியை மாற்றினார் என நினைத்தால் அது நினைவுக்கு எட்டாமலே இருக்கும்.
Image result for famous world leaders collage


பிடல் காஸ்ட்ரோவும் சேவும் மிக நல்ல நண்பர்கள். ஆனால் பிடலை பிடித்த நண்பர் சே அவர் அளித்த நிதி மந்திரி மற்றும் பணப் பரிவர்த்தக பொறுப்பையும் உதறி விட்டு இறக்கச் செல்கிறார் மறு போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு. பிடல் ஏராளமான முறை கியூபா கிளர்ச்சியில் மரணம் வரை சென்று உயிர் பிழைத்த அதிசயங்களும், அதன் பின் அரசாளும்போது அமெரிக்காவில் கொல்ல அனுப்பப் பட்ட சம்பவங்களில் இருந்து தப்பிய அதிசயங்களும் நம்ப முடியாதவையே....அவர் உயிருடன் இன்னும் இருப்பது அதற்கெலாம் சான்று.

அவரை இலங்கை  தமிழ்ப் போராளிகளை ஆதரிக்காதவர் என எனது நண்பர் ஒருவர் குற்றம் சொல்வார், தெரஸாவை தீவிரவாதிகள் கொடுத்த பணத்தைக் கூட வாங்கிக் கொண்டு செலவு செய்தார் என குற்றம் சொல்வதைப் போல...

தெரஸாவின் வாழ்க்கை வரலாற்றையும், கலாமின் வாழ்க்கையையும் நாம் எப்படி மறக்க முடியும். காந்தி பற்றி எழுதினால் இந்த பதிவு போதாது. பெர்னாட்சா எழுதிய பக்கங்கள் 15000 என்றும்  அவர் ஒரு அறிஞர் என்றும் சொல்வார், ஆனால் காந்தி எழுதிய பக்கங்களோ 60,000 இவரை வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்ந்த காலத்தில் உலகை எல்லாம் ஆள முழுத் தகுதி உடையவர்  யார் என்ற பட்டியல் பார்க்க உலகு விரும்பிய போது அதில் முதல் பேராய் மகாத்மாவையே உலக மாந்தர் தேர்ந்தெடுத்ததான சான்றுகள் உண்டு. 24 மணி நேரம் போதாத மனிதர் ஒரு நாளுக்கு. அத்தனை துறைகள். ஆனால் ஒரு எளிய மனிதர்க்கும் தவறாமல் தம் கைப்பட எழுத முனைந்தவர், பத்திரிகை நடத்தியவர், ஆஸ்ரமம் நடத்தியவர், இராட்டை நூல் நூற்பது, சமையல் செய்வது, நாட்டுக்கு போராட்ட முறையிலான உத்தி தருவது , பஜனைக்கும் பிரார்த்தனைக்கும் நேரம் ஒதுக்குவது, சிகிச்சை முறைகளுக்கு நேரம்
ஒதுக்குவது இப்படி சொல்லிக் கொண்டே போகும் வாழ்க்கை வரலாறுக்கு சொந்தமானவர் இவர் என்றால்

Image result for famous world leaders collage


நேருவின் வாழ்க்கை வரலாறு சாதரணமானதல்ல. மார்ட்டின் லூதர் கிங் உரையை இணையத்தில் புகழ் வாய்ந்த உரைகளை கேட்டுப் பாருங்கள் உங்களது உள் நாடி எழுந்து நிற்கும்.

லெனின், சாக்ரடீஸ், கார்ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் அவர் தம் துணைகள் ஜென்னி, குரூப்ஸ்கயா காதல் வெற்றிகள் பொருளாதாரத் தோல்விகள்...சார்லி சாப்ளின், மைக்கேல் ஜாக்ஸன், பட்டாம்பூச்சி  பாப்பிலோன் என்ற ஒரு ஜெயில் கைதியின் வரலாறு, முகமது அலியின் ஓடிக் கொண்டே இருப்பேன் வாழ்க்கை வரலாறு, அறிஞர் அண்ணாவின் ராஜ்யசபா உரை மற்றும் அவரின் அரிய நூல்கள், பேச்சுத் தொகுப்புகள்,

Image result for famous world leaders collage

தமிழ் இலக்கிய வழியில் வந்த நூல்களும் அதை சார்ந்த கதைகளும்.. இப்படி இன்னும் என்னதான் எப்படிதான் சொல்வது
அவ்வப்போது நினவை எட்டிப் பிடிக்கும்போது எனது நினைவுக் கீற்றலைகளுடன் மீண்டும் மீண்டும் உங்களை இந்த பதிவு சந்திக்கும் என நம்புகிறேன்

மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Sunday, September 25, 2016

இளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை

இளமைக்கால இலக்கியங்கள்: கவிஞர் தணிகை

Image result for tamil writers

எனைப் பாதிப்புக்குட்படுத்திய இப்போது என் நினைவுக்கு எட்டியவரை எனது மலை மறைவுப் பிரதேசத்தில் உள்ள இருட் குகைக்குள் உங்களையும் அழைத்துச் செல்கிறேன். ஆனால் அதில் தான் எவ்வளவு வெளிச்சம்.

எனது நண்பர் ஒருவர் எனை  கிளறி விட்டார். நீறு பூத்த நெருப்பை கிளறி விட அது கனன்று கொண்டே இந்த பதிவாகிறது.அவர் சாதரணமாக ஒரு கேள்வி கேட்டு விட்டு போய் விடுகிறார். ஆனால் அவருக்கு உரிய பதிலை தருவதில் திருப்தியடையா எனது எண்ண ஊற்றுகள் தீயின் நாட்டியங்கள் எழுந்து ஆடவும் ஓடவும் ஆரம்பித்து விடுகின்றன. அந்த திருப்தி அடையா பதிலுடன் இருவரும் இரு வேறு வாழ்வில் பிரிந்து போய் விடுகிறோம் என்றாலும் இந்த எழுத்துகள்  பொதுவாக எங்களுக்குள்
பாலம் இடும் நம்பிக்கை எனக்குண்டு. இனி சூரியக் கீற்றுக்குள்..
மெல்லிய ஒளி ஊடுருவலுக்குள்...என்னால் முழுதாக சொல்ல முடியுமா என்ற நம்பிக்கை இல்லாதபோதும்...

Image result for tamil writers

அவர் கேட்டது இலக்கியம் பற்றி எந்த எழுத்தாளர்களை படித்திருக்கிறீர் என்பது பற்றி, சாண்டில்யன் , கல்கி , பாலகுமாரன் எல்லாம் படித்திருக்கிறீரா என்பது பற்றி...

நான் அவருக்கு சொல்ல விரும்பிய பதில் மீதமிருப்பது இப்படி ஆரம்பிப்பதாக இருந்தது...அதற்குள் நாங்கள் அவரவர் வாழ்வுக்குள் புகுந்து கொண்டோம்...நீங்கள் மாக்ஸிம் கார்கியின் தாய், லியோ டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு , கார்ல் மார்க்ஸின் டாஸ் கேபிடல், தமிழில் சொன்னால் மூலதனம், காந்தி வழி நூல்களின் 17 நூல் தொகுப்பு, சரத் சந்திரரைப் அழாமல் படிக்க முயல்வது... ஹிட்லரின் மெய்ன் கெம்ப் இதை எல்லாம் செய்து பாருங்கள்...என ஆரம்பிக்கலாம் என இருந்தேன்.உலகுக்கே மூலதனம் என்ற அரிய கம்யூனிச தத்துவம் வழங்கிய கார்ல் மார்க்ஸின் மனைவிக்கு போதிய ஊட்டச் சத்து உணவின்றி ஏன் உணவே இன்றி பச்சிளம் குழந்தைக்கு பாலுக்கு பதிலாக தாயின் மார்பிலிருந்து இரத்தம் வந்ததையும் தெரிந்து கொள்ளுங்கள் என ஆரம்பிக்கலாம் என இருந்தேன்....தாய் எழுதிய மாக்ஸிம் கார்க்கி நெடுவழிப்பாதையில் ஒரு பெண்ணுக்கு அந்த பெண்ணின் எதிர்ப்பிற்கிடையே பிரசவம் பார்த்த அனுபவத்தை எல்லாம் பகிர்ந்து கொள்ள விரும்பினேn.
Image result for tamil writers


இதை எல்லாம் எங்கிருந்து ஆரம்பித்தேன் எனில் எனக்கு குரல் வளம் அதிகம் நன்றாக தமிழில் உச்சரிப்பும் இருக்கும் ஆசிரியப் பெருமக்கள் என்னைக் கொண்டாடுவார்கள்....எனவே எனது வயது இருந்தால் 7 அல்லது 8 இருக்கும்..இரண்டாம் வகுப்பு, அல்லது 3 ஆம் வகுப்பு படிக்கும்போதிருந்து வெளிப் படிப்பு ,கதைகள், கவிதைகள், கட்டுரைகள் படிக்க ஆரம்பித்து விட்டேன்.பிறருக்கு கடிதம் எழுதித் தருவது, பிறருக்கு வரும் கடிதத்தை பிரித்து படித்துக் காண்பிப்பது எல்லாம் இருந்தது.ஒரு புத்தகம் ஆரம்பித்தால் அதை முன் அட்டை முதல் கடைசி அட்டை வரை முடிக்கும் வரை வேறு எதிலும் எண்ணம் இலயிக்காது. உணவு, உறக்கம் எல்லாமே அதற்கு இரண்டாம் பட்சம்தான். பாடப் புத்தகங்களிடையே நூல்களை வைத்துக் கொண்டு வீட்டுக் தெரியாமல் படித்த அனுபவங்கள் எல்லாம் இரவில் உண்டு. அம்மாவுக்கு படிக்கத் தெரியாது அப்பா வந்து அதை எல்லாம் பார்க்க வாய்ப்பில்லை என்ற நினைப்பு.ஆனாலும் நிறைய முறை மாட்டிக் கொண்டதுண்டு, தொந்தரவு இருக்கக் கூடாது என எமது வீட்டில் பின்னாளீருந்த புளியமரம், பூவரச மரத்தின் மேல் எல்லாம் அமர்ந்து கொண்டு படித்த அனுபவம் உண்டு.

எது முன் பின் எனத் தெரியாது, எனது தந்தை சுப்ரமணியம் அவர்கள் குமுதம், கல்கண்டு வாங்கி வந்தார் சந்தாதாரராக சில காலம் என நினைக்கிறேன். அதன் பிறகு வறுமையின் காரணமாக அவரால் வாங்க முடியவில்லை. ஆண்டியப்பன் என்னும் ஒரு சிகை அலங்காரக் கடை அல்லது முடி திருத்தக் கடை...பக்கத்தில் ஒரு டைலர் கடை அது எம்.ஜி.ஆர் மன்றமாகவும் செயல்பட்டது அந்த டைலர் பெயர் சுந்தரம்.

இந்த ஆண்டியப்பனின் தந்தை கொஞ்ச காலம் எங்களது வீட்டுக்கே வந்து எங்கள் வீட்டின் ஆண் மக்கள் அல்லது சிறுவர்களாகிய எங்களுக்கு எங்கள் செடிப்பக்கம் (வீட்டின் பின் புறம் புழக்கடை அல்லது தோட்டம் என்றும் சொல்லலாம்) முடி திருத்தம் செய்துவிடுவார். அது கொஞ்ச காலம் தொடர்ந்தது. அதன் பின் ஆண்டியப்பன் கடைக்கு சென்று முடி திருத்தம் செய்து கொள்ள வேண்டியதானது...இதெல்லாம் நடந்த காலம்1968லிருந்து ஆரம்பமாகி இருக்கலாம்...

Image result for tamil writers

அப்போதெல்லாம் தினத்தந்தி பேப்பரும் டீக்கடையும் நாட்டின் தலை எழுத்தை பெரும்பாலும் நிர்ணயித்தன. பொது வாழ்வும் அரசியல் வாழ்வும், நாட்டு நடப்புகளும், ஊரின் முக்கிய சமாச்சாரங்களும் அங்குதான் பெரும்பாலும் அலசப்பட்டன. டீ, குடிக்காமலே தினத்தந்தி செய்தித் தாளை படி படி என்று படித்து சிந்துபாத் கன்னித்தீவை முடியாமலே விட்டது போல படிக்க டீக்கடைக்காரர், சில முடி திருத்தக் கடைக்காரர்களிடம் சலிப்புடன் பேச்சு வாங்கியதும் உண்டு, கட்டிங் பண்றதுக்கு வேற கடைக்கு போறது, பேப்பர் மட்டும் இங்க படிக்க வருவதா? டீ குடிப்பதில்லை பேப்பர் மட்டும் படிக்க வந்து விடுகிறாய் என்பது போல இதெல்லாம் அவ்வப்போதே பெற்ற சிராய்ப்புகள்.

நாம் மத்தியப் பகுதிக்குள் வருவோம்...ஆண்டியப்பன் கடையில் குமுதமும் கல்கண்டும் வாரம் வாரம் தவறாமல் வாங்குவார்.அப்போது இவை பெரும்பாலும் ஞாயிறுகளில் வாரம் தோறும் வரும் என்று சொன்னாலும், சனிக்கிழமை ஏன் சில சமயம் வெள்ளிக் கிழமை மாலைகளில் கூட கடைக்கு வந்து விடும். வரும் பையனிடம் குமுதம் கல்கண்டு கொடுத்தனுப்பவும் என்ற துண்டுச் சீட்டுடன் புத்தகக் கடைக்காரர் எனச் சொல்லப்படும் பீடாக் கடைக்காரரிடம் கொண்டு சென்று கொடுத்து புத்தகங்களை வாங்கி வரும்போதே வழியில் படித்துக் கொண்டே வந்து முதல் ஆளாக படித்து முடித்து விடுவதுண்டு. அதில் தண்டபாணிக்கும் எனக்கும் சில காலம் போட்டி நிலவியதும் உண்டு. (அந்த கல்கண்டின் லேனா தமிழ்வாணன் அவர்களுக்கும் எனக்கும் கடிதத் தொடர்பு எல்லாம் ஏற்பட்டது வேறு கதை.)

Image result for tamil writer sandilyan and kalki


Image result for tamil writer sandilyan and kalki

Image result for tamil writer sandilyan and kalki

அங்கிருந்து ஆரம்பித்தது சாண்டில்யன் கதை, அது இரத்தனம் ஓவிய ஆசிரியர் வழியாக வாரத்தின் 2 ஓவிய வகுப்பில் ஒரு வகுப்பு ஓவியம் ஒரு வகுப்பு கதை...அதுவும் கடல் புறாவும், யவனராணியும்...அப்போது ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு வரை வந்திருந்தோம் என எண்ணுகிறோம். எனவேதான் என் போன்றோர்க்கு ஓவியமே வரவில்லை. கதை புகுந்து கொண்டது.

சாண்டில்யனை  அதாவது இரங்க பாஷ்யம் அய்யங்கார் என்ற சாண்டில்யன் சரித்திரக் கதைகள் யாவற்றையும் முதலில் படித்தேன்,இவரை விட யாரால் எழுத முடியும் அப்படி ஒரு கிக் இருக்கும் எனவே அந்த போதை கல்கி  ‍(ரா.கிருஷ்ணமூர்த்தி)பற்றிய அடுத்த நூலைத் தந்தது அவருடைய நூலை எல்லாம் வாசித்த பிறகு பொன்னியின் செல்வனும் , சிவகாமியின் சபதமும், தியாக பூமியும்  அலை ஓசை, பார்த்திபன் கனவு என அவரது நூல்கள் வேறு ஸ்டைலில் இருப்பது தெரிந்தது...சாண்டில்யன் நூல்களின் ஒரு பாலுணர்வு மயக்கம், கிறக்கம், ஒரு தூண்டு உணர்வு படிப்பாரை மாய வெளிகளில் இட்டுச் செல்ல...கல்கி தென்றலாக மெல்லிய நீரோட்டமாக எந்த வித முடுக்கமும் இன்றி சற்று ஆன்மீகம் கலந்த தெய்வாம்சம் நிறைந்த இயற்கையோடு இயைந்த வாசமாகவே எழுத்துகளை உணர வைத்தார்.

அகிலன், தீபம், நா. பார்த்தசாரதி, இந்திரா பார்த்த சாரதி, கோவி மணிசேகரன், அரு.இராமநாதன், இராஜாஜி,என சரித்திர நூல்கள் எனத் தெரிந்த என்னை சமூக நாவல்கள் எழுத்தாளர்கள் இலஷ்மி,சுஜாதா (இவருக்கு நான்  பெங்களூரில் பெல் நிறுவன விலாசத்துக்கு எனது நூல் வெளியிடும்போதெல்லாம் தவறாமல் அனுப்பியதுண்டு ஒரு சிறு நாவலில் ஒரு நாயக பாத்திரத்துக்கு தணிகை என்ற பெயரை சூட்டியிருந்தார்),ஜெயகாந்தன், ‍ இவரது சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் எனக்கு பள்ளியில் முதல் பரிசாக 1978ல் கொடுக்கப்பட்டது, புதுமைப் பித்தனின் சிறு கதைகள் அனைத்தும் அடங்கிய ஒரே தொகுப்பு தமிழ் இலக்கிய உலகத்துக்கே ஒரு கொடை. அது என் கைக்கும் வந்து சென்றது...மகாக் கவி பாரதியை, நாம் கவிதைக்கு சொன்னால் புதுமைப்பித்தன் தான் சிறுகதை நாயகன்...பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை, நாமக்கல் கவிஞர் , முதல் மு.மேத்தா, வைரமுத்து அப்துல் ரஹ்மான்,
Image result for tamil writers


சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள்...கு. அழகிரிசாமி, தி.ஜா.ரா என்னும் தி.ஜானகி ராமன்,இராஜம் கிருஷ்ணன், வாசந்தி, இந்துமதி, சிவசங்கரி,கரிச்சான் குஞ்சு, மௌனி,நீல பத்மநாபன்,புஷ்பா தங்கதுரை என்னும் ஸ்ரீ வேணுகோபாலன்,ராகி ரங்கராஜன், கு.ப.இராஜகோபாலன்,சு.சமுத்ரம்,க.ந.சுப்ரமணியம்,ஆதவன், கண்ணதாசன், வல்லிக் கண்ணன், எம்.எஸ்.உதய மூர்த்தி,டாக்டர் மு.வ,அசோகமித்ரன்,பாலகுமாரன், லா.ச.ரா, கி.ரா என்னும் கி.இராஜநாரயணன்,அனுராதா இரமணன், இரமணி சந்திரன்,பெரியார்,சா.கந்தசாமி,பிரபஞ்சன்,விக்ரமன், இப்படி கிடைத்த கதை மாந்தர்களையும் கதை எழுதிய எழுத்தாளர்களையும் கட்ந்து கொண்டே இருந்தேன். up to A.P.J.Abdul kalam...

Image result for tamil writers

பிரம்மராஜன் ஊட்டி இவர் வரவில்லை என நினைக்கிறேன், ஜெயமோகன், சாருநிவேதிதா, விக்ரமாதித்தியன் போன்றோருடன் ஒகேனக்கல் கவிதைப் பட்டறையில் கலந்து கொண்டு ஒரு நாளில் அவர்கள் போதை கலப்பு பிடிக்காமல் இரண்டாம் நாள் பட்டறைக்கு போகவே இல்லை. இன்குலாப் போன்ற மக்கள் நாடித்துடிப்பை உணர்ந்த உணர்த்திய கவிஞருடன் கவியரங்கம் செய்துள்ளேன்...

இப்படி தமிழ் எழுத்தாளர்களின் சகவாசம் நிறைய கடந்து  நிறைய பேர்கள் விடுபட்டு இருக்கும் ஆனால் அவை மறுபடியும் தீண்டப்படும்போது நினைவுக்கு தீனி போடும்...அடுத்து மலையாளம், வங்க, குஜராத்திய, இலக்கிய வரிசையில், தாகூர், சரத் சந்திரர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, மலையாளத்தில் மலையாற்றூர் இராமகிருஷ்ணன்,வாசுதேவன் நாயர்,வைக்கம் முகமது பஷீர்,குஞ்சுண்ணி,

இதை அடுத்து மேலை நாட்டு இலக்கிய வரிசை முக்கியமாக உடையாத சோவியத் சோசலிச நாட்டின் ஏராளமான புத்தக வரிசைகள்,அதை எல்லாம் விட சோவியத் நாடு ஆங்கில பதிப்பு, தமிழ் பதிப்பு இரண்டுமே என்னுடன் தொடர்பிலிருந்தது...அந்த கூட்டாட்சிச் குடியரசை யெல்ட்சின் உடைக்கும் வரை கோர்பச்சேவ் அதிபராக இருக்கும் வரை எனக்கு அது சந்தா அடிப்படையில் வந்து கொண்டேதான் இருந்தது. அப்போது சென்னையிலிருந்து தபாலில் வந்து சேரும்...அப்போது சோவியத் நாட்டின் புத்தகப் பிரிவு சென்னையிலிருந்தும் செயல்பாட்டில் இருந்தது. எனவே எப்படிப் பார்த்தாலும் சோவியத் நாடும் இரஷியாவும் இன்னும் எனக்கு சோவியத் லேன்ட் அனுப்பாத கடன் பட்டிருக்கிறது.அலெக்ஸாண்டர் புஷ்கின்,விளாட்மிர் நப்கோவ்,மைக்கேல் புல்காவ், கதைகள் விடுபட்ட வரிசையில் அவாரிய நாட்டு பழமொழிகளும் அடக்கம்.

ஆங்கில இலக்கியத்தில் சேக்ஸ்பியரிலிருந்து, அலிஸ்டர் மாக்லீன், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வேலஸ், சிட்னி செல்டன், நமது ஆர் கே நாரயன், கமலா தேவி, கமலா மார்கண்டேயா, சேதன் பகத், நான்ஸி ப்ரைடே.. இப்படி ஒரு பக்கம்..பொதுவாக‌ சொல்லப் போனால் புதுசாம்பள்ளி, கருமலைக்கூடல், மால்கோ, இப்படி நூலகங்களின் வரிசை எல்லாம் முடித்து சேலம் மத்திய நூலகம் வரை சென்று கொண்டிருந்தது.

அது மட்டுமல்லாமல் மால்கோ நூலகத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட், இந்தியா டுடே, ஆங்கிலம் மற்றும் தமிழ்,  மாதந்திர, வாரந்திர, இருவாரத்துக்கொருமுறை  வாரத்துக்கொருமுறை வரும் அத்தனை புத்தகங்களும் அது அப்போது குங்குமம், தாய், ஆனந்த விகடன், கல்கி , சினிமா எக்ஸ்பிரஸ், மங்கயர் மலர், இப்படி போய்க் கொண்டே இருக்கும் இதன் முடிவில் பகவத் கீதை, பைபிள், குரான், ஜைனம், புத்தம், ஜென் , ஜே.கே, ரஜினீஷ், இராமகிருஸ்ணர், விவேகாநந்தர், இரமணர், அரவிந்தர்  இப்படி ஆன்மீக நூல்களுடன் பயணம்...

Image result for tamil writers

இப்போது நினைவுக்கு எட்டியவரை இந்த பதிவு சொல்கிறது இதை மீறி மேலும் செல்லும்... வாய்ப்பிருந்தால் பதிவோம்...

எனக்கு சீடராக 93 வயதை நிரம்பிய ஒரு மலையாள நண்பர் தமிழில் எழுத முயற்சி செய்தவர் உண்டு அவரை நீண்ட நாளுக்கும் பிறகு இன்று சந்திக்கும் நிகழ்வு இருப்பதால் இன்று இதற்கும் மேல் எழுதும் ஆர்வத்தை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டிய நிலை. these are recorded apart from kamba raamayanam, thirukkural, epics,Raamaayanam, Mahabaratham,silappathikaaram, manimekalai, and other litreatures in tamil.It includes Malayala Manorama and  all books related with universe and space science study about Gali Galilio,Newton,Iynsteen ,up to our venki Ramakrishnan...

ஒவ்வொரு அசைவிலும் ஒரு மாறுதல் நிகழ்கிறது...

மறுபடியும் பூக்கும் வரை


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.

Friday, September 23, 2016

கோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்: கவிஞர் தணிகை

கோபாலபுரம் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் விநாயகா மிஷன்ஸ் சங்கராச்சாரியார் பல் மருத்துவக் கல்லூரியின் முகாம்: கவிஞர் தணிகை


Image result for manjavadi kanavai near karur

கடந்த வாரத்தில் ஒரு நாள், மறக்க முடியாத திருநாள்,அது 19.09.2016 திங்கள் என்றும் மங்காத தங்கத் திங்கள் அது. கல்லூரியிலிருந்து சுமார் 68 கி.மீ தொலைவுப் பயணம். அரூர் செல்லும் வழி மஞ்சவாடிக் கணவாய்ப் பாதை முன்பு போல் இல்லை. பெரும்பகுதி கரைத்து விட்டார்கள். என்றாலும் அந்த காடுகளும் வானரக் குரங்குகளும் அப்படியேதான் இருக்கின்றன வெளியில் போக்குவரத்துப் பாதையில் இருந்து பார்ப்பதற்கு. உள்ளே எப்படி இருக்கிறது எனத் தெரியாத போதும்



அன்பு நண்பர் செம்முனி இமாலயன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் தாளாளர், நிறுவனர் மற்றும் இதன் முதல்வர் பொறுப்புகளில் இருந்து சளைக்காமல் பம்பரமாக சுழன்று வருகிறார். இந்த முகாமை அவர் நடத்தி அது முடிந்த கையுடன் பள்ளி மாணவ மாணவியர்க்கு அவர் விடாமல் தேர்வை எழுதச் சொல்லி நடத்திய விதத்தில் இருந்தே அவரின் பொறுப்புணர்வை நாம் புரிந்து கொள்ள முடியும்



பாதை எங்கும் நல்ல வரவேற்பு போஸ்டர்கள், பள்ளி மாணவர்கள் வேறு வரிசையாக நின்று வரவேற்றதுடன், பாதைக்காக சுண்ணாம்புக் கோடுகள் போடப்பட்டு ஒழுங்கமைவைக் காட்டியது.

முன்னால் அமைச்சரும் இந்நாள் பாப்பிரெட்டிப் பட்டி சட்ட மன்ற உறுப்பினர் பி. பழனியப்பனை குத்து விளக்கேற்றி துவக்க அழைத்திருந்தார். ஆனால் அவர் சென்னைக்கு சென்று விட்டதால் அவர் தவிர அரூர் ஊராட்சி ஒன்றியக் குழு பெருந்தலைவர் சி. தென்னரசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொருளாளர் சி. சின்னதுரை, ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்ட பள்ளிப்பிள்ளைகளுக்கு முகாம் விழாவில் பரிசுகள் வழங்கப் பட்டன.

கல்லூரியின் கைதேர்ந்த 20 மருத்துவர்கள் சுமார் 600 மாணவ மாணவியர்கள் எல்.கே.ஜி. முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்பவர்கள் இந்த முகாமில் பற் பரிசோதனை செய்யப் பட்டனர். மேலும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தொழிலாளர்கள், மற்றும் ஊர்ப் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செம்முனி பெரிய அளவில் போஸ்டர்கள் அடித்து ஆங்காங்கே மாபெரும் கட்டணமில்லாத பல் மருத்துவ முகாம் என்று ஒட்டியிருந்ததுடன் செய்தி நோட்டீஸ்களையும் விநியோகித்திருந்தார்.

பல் மருத்துவக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் துறைத் தலைவர் டாக்டர். என் சரவணன் இந்த முகாமில் பல் ஆரோக்யம் மற்றும் பல் பாதுகாப்பு விரிவுரை செய்தார்.

எனது நிறைவுரையில் பெற்றோர், ஆசிரியர், பள்ளிப் பிள்ளைகள் பற்றிய கலாமின் தங்க முக்கோணமே சமுதாயப் பிணிகளுக்கான தீர்வு என்பதையும்,அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தி மாமனிதமாகுங்கள் என சிறிய மனிதர்களை ஊக்கப்படுத்தினேன்.

நான் இந்த இடத்தில் நிற்கிறேன் எனில் அதற்கு இரண்டு பேர் காரணம், ஒன்று என்னையும் செம்முனியையும் ஒரே களத்தில் இணைத்த சிற்பி.கொ.வேலாயுதம் இரண்டு, பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மதிப்பிற்குரிய ஜா.பேபி ஜான்,இருவரும் இல்லை எனில் நான் இங்கு வந்து உங்கள் முன் வந்து நின்று கொண்டிருக்க முடியாது என சுருக்கமாகக் குறிப்பிட்டேன்.

முகாம் நடைபெற கல்லூரியின் முதல்வர் ஜே.பேபி ஜான் அவர்கள் கொடுத்த அனுமதியும் ஊக்கமும் என்னை மேலும் மேலும் சிறந்த பணிகளை செய்ய வைக்கும் என நம்புகிறேன்.

அந்த முகாமில் கலந்து கொண்டாரில் முக்கியமாக‌ உடனே மருத்துவம் தேவைப்படுவார் என சுமார் 150 மாணவர்கள் அடங்கிய பட்டியலையும் பள்ளித் தாளாளரிடம் வழங்கினோம்.

வந்திருந்த அனைத்து விருந்தினர்க்கும் சைவைம் மற்றும் அசைவ உணவு வழங்கிய ஏற்பாடு சிறப்பாக இருந்தது.



பள்ளி சார்பாக அனைவரையும் வரவேற்ற செம்முனியின் இமாலயன் மெட்ரிக் பள்ளியில் ஏற்கெனவே நானும் எனது நண்பருமான‌ நீதிபதி   கருணாநிதியுடன் சென்று பள்ளிப் பிள்ளைகளுக்கு அறிவுரை மொழிந்தது இன்னும் நினைவிலிருந்து மறையவே இல்லை என்னும்போது இந்த முகாமும் என்றும் நினைவிருக்கும் வண்ணம் சிறந்திருந்து.

பள்ளிப் பிள்ளைகளும் ஆசிரியப் பெருமக்களும் ஒழுக்கம் காத்து இந்த முகாமுக்கு முழு மனதோடு ஒத்துழைத்த விதத்தை மறக்கவே முடியாது.

மறக்க முடியாத ஒரு நல்ல முகாம். வந்திருந்த விருந்தினர் அனைவர்க்கும் பகவத் கீதை நினைவுப் பரிசாக வழங்கி அனைவர்க்கும் விலை மதிப்பு மிக்க பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டன.



Image result for manjavadi kanavai near karur


மறுபடியும் பூக்கும் வரை
கவிஞர் தணிகை.