Thursday, June 18, 2026

வோஜின்யா பாட்டி செல்லம்: கவிஞர் தணிகை

 வோஜின்யா பாட்டி செல்லம்: கவிஞர் தணிகை



அம்மா செல்லம், அப்பா செல்லம், தாத்தா செல்லம் இங்கே ஒரு பாட்டி செல்லம் உலகின் பார்வையைப்  பெற்றிருக்கிறது.துக்கப் பட்டு, துயரப் பட்டு, துன்பப் பட்டு, சித்ரவதைப் படும்போதெல்லாம் தமது பாட்டியிடம் ஆறுதல் தேடிய ஒரு மனிதம் இன்று புகழ் பெற்ற கதைதான் இது.


கேப்வெர்டி இந்த நாட்டை நாம் கேள்விப் பட்டிருக்கவே வாய்ப்பில்லை,1975 ஆம் ஆண்டில் தான் போர்ச்சுகல் நாட்டிடம் இருந்து சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை பெற்ற ஒர் ஆப்பிரிக்க‌ தீவுக் கூட்ட நாட்டிலிருந்து இந்த வோஜின்யா என்ற 40 வயது மனிதன் ( பெயர்:ஜோஸிமர் ஜோஸ் எவரோ டயஸ்) ஸ்பெயின் என்ற நாட்டு கால் பந்து அணியின் 7 கோல்களை தடுத்தாடி அந்த மேட்ச்சை சமன் செய்யும் வரை.எல்லோரும் ஸ்பெயின் தாம் வெல்லப் போகிறது என்று கருதிய நிலையில் ஒரு பெரும் கால் பந்து வீரர் உருவானதாக கால்பந்து விளையாட்டு உலகே கொண்டாடும் இந்த வோஜின்யா என்ற பாட்டி செல்லம் 7 கோல்களை விழாமல் காப்பாற்றி தமது நாட்டுக்கும், தமது அணிக்கும் தமக்கும் பெருமை சேர்த்துக் கொண்டுள்ளார்.


இந்த தடுப்பாட்டத்துக்கும் பின் இவரை கோடிக்கணக்கான நபர்கள் சமூக வலை தளங்களில் பின் பற்றுவோராகி இருக்கின்றார்கள்.இவரது பெயரே பாட்டி செல்லம் என்று செல்லாமாக அழைக்கப் படுகிறதாம் இவரை அறிந்தவர்களால்.


இவரே இந்த அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். 40 வயதில் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் வயதில் இந்த மனிதர் மெஸ்ஸி போன்றோர் அர்ஜென்டினாவுக்காக ஹேட்ரிக் கோல் போட்டு வெற்றி பெற வைத்ததை எல்லாம் பின்னுக்குத் தள்ளி புகழ் அடைந்திருக்கிறார் தமது முதல் ஆட்டத்திலேயே பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு முன் தடுத்தாடி 7 கோல்களை தடுத்து வெற்றி தோல்வி இன்றி ஆடி முடித்ததற்காக.


அட நம்ம டிடி( DD Sports )ஸ்போர்ட்ஸ் கூட இதை நேரலையில் ஒலி ஒளிபரப்பு செய்கிறதாமே...


இனி விடக்கூடாது . பார்த்தாக வேண்டும்...


தனி மனித சாதனைகள் உலகைப் பேச வைக்கும், சில தனி மனித சோதனைகள் உலகையே கூச வைக்கும்.I am noting about our wold crisis between Iran and U.S....

மகாத்மா ஒரு அம்மா செல்லம் உங்களுக்குத் தெரியுமா? அம்மாவுக்காகவே அசைவ உணவைத் தவிர்த்து, பெண்சேரலை  வெளி நாடு செல்கையில் தவிர்த்து,உண்மையையே பேசி சத்யவானாக மகாத்மாவாக‌ உருமாறினார். எனவே செல்லங்கள் சாதனை செய்வார்கள்...

மறுபடியும் பூக்கும் வரை

கவிஞர் தணிகை

No comments:

Post a Comment